ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 3, 2025

தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம்

தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம்


தியானத்தில் பெறுகின்ற வலு வீரியம் பற்றி வேதாள மகரிஷியினால் வலியுறுத்தி உபதேசமாக உரைக்கப்பட்டது.
 
மனிதச் சரீரத்தினுள் சிவசக்தி நாடிகள் சுழுமுனை நாடியுடன் இணைந்து மூலாதாரத்தில் இருந்து மேல் எழுந்து சிரசின் நெற்றிப் பொட்டு என்ற அறுகோணச் சக்கரத்தினுள் சூலாயுதம் போல் தோன்றும்…”
1.செந்நிற ஒளியும் பொன்னிற ஒளியும் இரு புறம் விளங்க
2.மையத்தில் நீல வண்ண ஒளியாகத் தோன்றிடும் நிலையே அது.
3.உயிர் எனப்படும் குரு இந்நிலை தருகின்ற செயல் எண்ணம் கொண்ட ஜீவன் தான் என்று பெறல் வேண்டும்.
4.மகரிஷிகள் உவந்து ஊட்டுகின்ற சூட்சுமங்களை முயன்று பெற்றிட வேண்டும்.
 
இந்த நிலை எதனுள் அடங்கும்…?
 
சூட்சுமம் அங்கு உள்ளது. செய்கின்ற தொழில் என்பது
1.கர்ம காரியங்கள் ஆயினும் சரி உயர் ஞான சக்தி விளைவாக்கிடும் செயலாயினும் சரி
2.ஒருவர் ஜெபித்து ஒருவருக்கு அளிப்பது அல்ல ஞானம்.
3.செய் தொழில் மேன்மைக்கு தான் தனக்கு ஜெபிக்கின்ற நிலை…!
4.அதுவே சாஸ்வதமாக நிலை பெற்று விளங்கும்.
 
முத்தலை சூலாயுதம் ஒளி வடிவாகச் சிரசினுள் உதிக்கும். இதனையும் கடந்த நிலையே சிவம் சூரியப் பிரகாசமாக உச்சியின் மேல் உதயம் காட்டுதல்.
 
சிவ சூரிய நிலை பெற்று வளர என்னுடைய ஆசிகள் வேதாள மகரிஷி…!