ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 5, 2025

கீழ் நோக்கியது – புவி ஈர்ப்பு நிலை… மேல் நோக்கியது – தெய்வீக நிலை

கீழ் நோக்கியது – புவி ஈர்ப்பு நிலை… மேல் நோக்கியது – தெய்வீக நிலை

 
இயற்கையின் படைப்பில் ஜீவ பிம்ப சரீரம் பெற்ற மனிதன் உலகோதய நடைமுறை நிகழ்த்த பெரும் காரியங்கள் வினைக்கீடாய் (புவி ஈர்ப்பில் சுழலும் நிலை) வினைக்கு ஈடான செயல் கொள்கின்றான்.
 
புவி ஈர்ப்பு நிலை
1.சரீரமும்
2.மூச்சு - ஈர்த்திடும் தன்மையாக மனிதனுக்குக் கீழ்நோக்கிப் பாய்தல்
3.வாய் - உண்டிடும் உண்டி அருந்திடும் நீர் சரீர கதியில் கீழ்நோக்கிப் பாய்தல்
4.அதுவே ஜீவநோத்பவம் பெற்ற பின்பு மலவாய் வழி கீழ்நோக்கிச் செல்கின்றது
5.சிறுநீர் வெளியேறும் வழியும் அத்தகையதே.
 
தெய்வீக நிலை
பூமியின் ஈர்ப்பில் செயல்படும் காரியங்கள் எதுவாக இருந்தாலும்
1.ஒளி நெறியாம் உயர்வெண்ண தியானத்தின் வலுவாகச் செயல்படும் காலத்தே
2. மேல் நோக்கிய சுவாசம் கொண்டு மற்ற புற காரிய செயல் நிகழ்வுகள் உயர்வெண்ண உந்துதல்
3.அதுவே தெய்வீக நிலையாகத் தொழில்படும்.
 
இதையே வேதாள மகரிஷி அலகினால் உணவைக் காட்டிடும் கோழி என்பார். குஞ்சுகளைப் பேணுகின்ற கோழியானது உணவின் தானியங்கள் இருக்கின்ற இடமாகக் கண்டு தனது அலகினால் தானியத்தைக் கொத்திப் பேணுகின்ற செயலாக தன் குஞ்சுகளுக்கும் அந்த ஆகாரத்தைப் பெற்றிடும் வழி காட்டுவதைப் போல்
1.நெறிப்பயிர் ஞான உணவு எடுத்தல் - உயிராத்மா சக்தி பெற்றிடும் செயலில்
2.சரீர உயிரணுக்கள் அனைத்தும் பெற்றுக் கொண்டிடும் போஜனம் (உணவு கொடுக்கும் நிலை) என்று பேணுதல்.
 
இந்நிலை பெறுகின்றவர் நெறிப்பயிர் விளைவாக்கும் கிழார் என்றதில் பெற்றுக் கொண்டிட்டதின் முழுமை விளங்கும்.
 
எண்ணம் கொண்டே மாமகரிஷிகள் காட்டிடும் சூட்சும உணவு பெற்றுக் கொண்டிடும் நியதியில் சுவாசக் காற்று என்பதின் தொடர்பு தூங்காமல் தூங்கி அரிதுயில்எனும் அறிவியல் தத்துவமாக விளக்குவது எது…?
 
பிராண வாயு சுவாசமாக உள் நுழைவதும் கரியமில வாயு வெளியேறிடும் செயலும்
1.இச்சூட்சுமத்தில் பளுவாக இயங்கிடும் இதய கேந்திரங்கள் இலகுவாக
2.உள் நுழைந்திடும் சுவாசம் குறைவு கொண்டு
3.வெளியேற்றிடும் கரியமில வாயு குறைவு கொண்டு
4.மூப்பு அற்ற நிலையைக் காட்டி
5.அரிதுயில் அழகன் எனும் மால்… (“திருமால்”) எனும் தெய்வ வடிவு தாங்கிடும் பேறு பெறுகின்றான்.
 
உயிராத்ம சக்தியை இணைத்துக் கொண்டிடு…!” என உரைப்பதெல்லாம் வேதாள மகரிஷியின் கூற்றாக இணைப்பறவையின் உறும் (பொருந்தும்) கருத்து என்பார்.
 
அதாவதுமகரிஷிகள் உரைத்திடும் இத்தகைய மறைபொருள் தன்மையில் அநேக விளக்கங்கள் உண்டு.
 
இரு பறவைகள் இருந்ததாம். ஆண் பெண் என்ற அவைகள் கருத்து வேற்றுநிலை பெற்றதாம். உறும் கருத்து வேறுபடின் - மனத்தின் பிரிவு கொண்டதாம்.
 
இருந்தாலும்எந்த நிலை ஆயினும் சக்தியாகிய அந்தப் பெண் பறவை சிவத்தின் நினைவே பிரிவுறா நிலை நினைவால் கொண்டு தான் இருக்கும்.
 
இறை தேடி இயங்குகின்ற அவைகளின் செயலில்
1.ஒன்றினில் ஒன்றாக மனத்தின் பேதம் நீக்கிட சிவத்துவ நிலை கண்டது தான் உயிராத்ம சக்தியையே பறவைகளாகக் காட்டி
2.உலகோதய நாட்டம் காட்டிடுவதை மனத்தின் பேதம் என்றும்
3.இறை தேடும் செயலுக்கு இணைகின்ற சூட்சுமம் ஒன்று கலந்திடும் தன்மையாக
4.பேரருள் செல்வத்தைப் பெற்று உயரும் வழிதனை உரைத்திட்ட செயலே அது.
 
சூட்சுமப் பொருள் காட்டி சித்தின் தொடர்புக்கு எண்ணம் சொல் செயல் மூன்றும் அனுபவ ஞான விசேஷ குணத்தன்மையாகப் பெற்றிட அதற்குண்டான பக்குவத்தைக் கனிந்திடச் செய்ய எல்லோருக்கும் வேதாள மகரிஷி ஆசி வழங்குகின்றார்.
 
தன்னிடத்தில் ஞானத்தை உரைத்திடும் குழந்தை மற்றவரிடம் அதே ஞான வழியாக நடக்கின்றதா…? அன்பு கொண்டு செல்கின்றதா…? மாயையின் வசம் ஆட்பட்டு கோபத்தின் குணமாகப் பெற்றுக் கொண்ட சக்திகளை விரயம் செய்கின்றதா…? என்று ஞானிகள் பரிசோதிப்பார்கள்
 
முகம் காட்டிடும் கண்ணாடிதான் கொண்டிடும் உயர்வெண்ணத்தைக் காட்டுவது எப்படி…?
 
1.சாந்தம் என்ற குணத்தால் அமைவு பெற ஆத்ம ஞானி கொண்ட உயர்வைக் காட்டுவது கண்கள்…”
2.சுவாசத்தின் செயல் சிந்தையைச் சீர்படுத்த உரைப்பது கனிவு…”
3.கேட்கின்ற ஒலிகள் நாராசமாயினும் ஞானி அதனை சங்கீதமாகக் கொள்வான் ஓங்காரமாக…”
4.இல்லத்தில் வீசுகின்ற பாசம் மெய் ஞானிக்கு அன்பின் வசமாக அகில உலகும் பின் தொடரும்…” ஆத்ம பதிவை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும்.
5.கணவன் மனைவி தொடங்கி தன்னைச் சார்ந்தவர் தொடங்கி எல்லோரையும் அரவணைத்திடும் அன்பு
6.அகண்ட வியாபகமாய் (எங்கும் நிறைந்திருக்கும்) பேரருள் செல்வத்தைக் கொணரும்.
7.அத்தகைய ஞானவான் பிரம்மத்தை அறிந்திடும் பிராமணன் ஆகின்றான்.
 
பக்குவங்களை எல்லாம் மகரிஷிகள் வழிகாட்டிட குழந்தை தவழ்ந்து தளிர் நடை பயின்று ஓடியாடி வளர்ந்து இசைவாக எண்ணம் கொண்டு உறுதியின் நிலை நிற்றலை
1.ஞானச் செல்வங்கள் குருதேவருடன் மனம் ஒன்றி வாழ்ந்திடும் அந்த வளர்ப்பு
2.சாஸ்வதம் கொண்டு அனைவருக்கும் அது வழி காட்டும்.
3.இந்தக் குறுகிய கலியில் பிறவியின் தளை விடுத்துப் பேரருள் செல்வத்தில் கலந்திடவே அனைவரையும் அழைக்கின்றோம்…”