
வான்மீகி ஞானம் பெறக் காரணமான “அதிர்ச்சி வைத்தியம்”
மோகத்தைப் பேரின்ப இலயமாக அனுபவித்தல் என்பதே… அதை வென்று காட்டிடும் மனோ தைரிய வலுவை
வளர்க்கும் செயல்பாடாக… எவ்வளவு வீரியம் பெற்றிருத்தல்
வேண்டும்…?
மோகத்தின் வசமான மனம் கொண்டவன்…
அதிலே ஏமாற்றம் கொண்டிட்டால்
1.அப்போது கனன்று எழும் கோபாக்கினியின்
உணர்வலைகள்
2.மனோ பீஷ்டம் (விருப்பம்) நிறைவேறிடாத அந்த
(தன்) எண்ணமே ஓர் தடைக்கல்.
தடையை அகற்ற முயலும் மனம் “நிதானத்தையும் இழந்து விட்டால்” அறிவுறுத்தும் அனுபவ
ஞான உரையால் என்ன பயன் காட்டும்…?
கனன்று எழும் மனத்தின் கோபக்கனல்…
1.அது சுட்டெரிக்கும் விழிப் பார்வையில் காட்டிடும்
கோபப் புயலாக எண்ணம் கொண்டவுடன்…
2.நாண் ஏற்றும் உத்வேக கோபாக்கினிப் புயல் என்றே… சம்ஹரிக்கத் துடித்திடும் நிலையாக எழும்.
இதனின்
“சூட்சுமம் உணர்ந்து கொள்க…”
மூடனாக அலைந்திடும் வில்வேடனை (வான்மீகி) மோகத்தீயில் மூட்டிய கனல் தகித்தாலும்…
அவனுக்குள் சிந்தனா சக்தியைத் தூண்டப் பெறும் அனுகூலமாக… ஞானத்தின் வழி தொடர… அந்த நல்வழியை உணர்த்திட… அவன் எதிர்கொள்ள வந்துற்ற வினையின் செயல் “ஓர்
அதிர்ச்சி வைத்தியம்…”
பட்சிகளின் நயன பாஷைகளை அறிந்து கொண்டிடாச் செயலில்… இயற்கையின் அரவணைப்பில் குதூகலமிட்டு ஒன்று
கலந்து மகிழ்ச்சியாக இருக்கும் ஆண் பெண் பட்சிகளை வான்மீகி கண்ணுற்றவுடன்… “மோகக்கனல் தகிக்க” இடக்கரம் வில்லை உயர்த்த வலக்கரம் நாணைத் தொடுக்க போடப்பட்டது ஓர் ஏரி
அம்பு.
அக்கினி அஸ்திரம் சுட்டெரிக்கும் ஜுவாலையாக பட்டெனத் தைத்து உயிர்
குடிக்க இணைப் பறவை துடி துடித்து கீழே விழுந்தது.
கண்ணுற்றான் வேடன்.
1.கத்திக் கூக்குரலிட்டு வேதனை ஒலி எழுப்ப…
2.பதறித் துடித்து இணையைச் சுற்றி வரும்
அப்பறவையின் நிலை
3.ஏவப்பட்ட கணையைப் போல…
பன் மடங்கு வேகமாக வில் வேடன் மனதில் தைக்க…
4.அவன் கண்டத்தில் இருந்து எழுந்த குரல் “ஹா…!”
வேதனையுற வைத்துவிட்டான் வான்மீகி… துயர் துடைக்க வழி என்ன…?
இவ்வொலியின் நாதம் வட்டமிட்டுச் சுழன்றிடும் ஒலி வேக நிலையால்… பதிவு கொண்டிடும் செயலாக எழுந்திட்ட வினாவின்
ஏக்கமாக… அதை வென்றிடத் துடித்த அனுபவ ஞான உரையே… “வான்மீகியின் இராம காதை…”
1.அந்த நேரத்தில் வானை நோக்கிய பார்வையின்
ஏக்கம்…
2.கொண்ட மோகத்தை வென்றிடும் மார்க்கம்…
3.தெய்வீக இலட்சண அறிவை ஒலி அணுக்களாக
4.வானெழுந்து பாய்ந்த செயல்… அதை
வெளியிட அனுமதி இல்லையப்பா…!
கடைபிடிக்கும் வழி முறைகள் கொண்டால் அந்தப் பேருண்மைகளை உங்களுக்குள்
உணர்த்தும்.