ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 19, 2025

அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்

அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்


ஒவ்வொருவர் உயிரையும் கடவுளாக மதியுங்கள் அவர்கள் உடலையும் கோவிலாக மதியுங்கள். உடலைச் சிவமாக மதியுங்கள் அவருடைய கண்களைக் கண்ணனாக மதியுங்கள்.
 
அவர்களை மதிக்கப்படும் பொழுது நமது கண்ணை மதிக்கின்றோம் நமது உயிரை மதிக்கின்றோம் உடலை சிவம் என்று மதிக்கின்றோம் அருள் ஞானிகள்  உணர்வு நமக்குள் வரும் பொழுது அந்தக் கணங்களைக் கணபதி என்று மெச்சுவோம். ஆறாவது அறிவை முருகன் என்று மதிப்போம்.
 
1.அருள் ஒளி கொண்டு தீமைகளை அகற்றிடும் சக்தி பெற வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்
2.அப்படி நாம் எண்ணினோம் என்றால் ஒரு மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்வை மாற்றிட முடியும்.
3.அவர் மேல் வரும் பகைமைகளைத் தடுத்திட முடியும்
 
ஒவ்வொரு உயிரையும் ஈசனாகவும் கண்ணைக் கண்ணனாகவும் உடலைச் சிவனாகவும் பல கோடிச் சரீரங்களில் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு அந்த வினைக்கு நாயகனாக மனித உடல் என்றும் தீமைகளை அகற்றும் சக்தியாக மனித உடல் பெற்றதை ஆறாவது அறிவை முருகன் என்றும் எண்ணுங்கள்.
 
நம் எண்ணமே இராமன் என்றும் உயிரை ஈசன் என்றும் உயிருக்குள் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும் உயிரால் ஈர்க்கப்படும் காந்தத்தை லட்சுமி என்றும் நாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் பிரம்மம் ஆகின்றது அதன் உணர்வே நமக்குள் வளர்ச்சி பெறுகின்றது என்ற நிலையை
1.வ்வொரு மனிதனையும் அத்தகைய சக்தி வாய்ந்தவர்கள் என்று எண்ணினால் நமக்குள்ளும் அதைப் பெறுகின்றோம்.
2.நீங்கள் வாழ வேண்டும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும்
3.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் பெற வேண்டும் என்று எண்ணும் பொழுது
4.உங்கள் உயிரை மதிக்கின்றேன் உங்கள் உடலைச் சிவமாக மதிக்கின்றேன் உங்கள் கண்ணைக் கண்ணனாக மதிக்கின்றேன்.
5.இப்படி எண்ணும் பொழுது கண்களால் அவர்களைப் பார்க்கப்படும் பொழுது வெறுப்பு வருவதில்லை.
 
ஒருவர் தவறான நிலைகளைச் செய்து விட்டால் நாம்  பார்த்தவுடன் கண்கள் சிவந்து விடுகின்றது. கண்ணனுக்கே நாம் துரோகம் செய்கின்றோம் அந்த உணர்வினை நுகர்ந்து விட்டால் உடலான சிவனுக்குத் துன்பத்தை உருவாக்குகின்றோம்.
 
ஆகவே நம் ஆறாவது அறிவைத் தெளியும் மனதினை வேதனை என்ற உணர்வு எடுக்கப்படும் பொழுது முருகனுக்கே நாம் துன்பத்தை உருவாக்குகின்றோம் என்று நினைவில் வையுங்கள்.
 
அருள் ஞானம் பெற்ற இந்த உணர்வு கொண்டு அண்டம் பிண்டத்திற்குள் உருப்பெற்ற உணர்வின் சக்தியை நீங்கள் தெளிந்து ஒவ்வொரு மனிதனையும் இதைப் போல எண்ணி ஏங்குங்கள். மதம் இருக்காது இனம் இருக்காது மொழி பேதம் இருக்காது
 
1.ஒவ்வொரு நொடியிலும் உங்களை நான் நேசிக்கும் பொழுது என்னை நேசிக்கும் பண்பு வருகின்றது.
2.நான் உங்களைக் கடவுளாக மதிக்கும் பொழுது என்னை நீங்கள் கடவுளாக மதிக்கின்றீர்கள்.
3.கடவுள் என்ற தன்மை வரும் பொழுது பகைமைகள் அகற்றப்படுகின்றது.
 
குறைகளைப் பார்த்தால் மகரிஷிகளின் அருள் சக்தி அங்கே பெற வேண்டும் ஈசன் வீற்றிருக்கும் அந்த ஆலயம் புனிதம் பெற வேண்டும். அந்த உடலின் தன்மை சிவனாக வீற்றிருக்கும் அந்த ஆலயம் நல்ல நிலை அடைய வேண்டும் நல்வழி காட்டும் கண்ணன் மகிழ்ச்சி பெற வேண்டும் என்று எண்ணுங்கள். அந்தச் சக்தி நமக்குள்ளும் பெருகுகின்றது
 
ஆகவே
1.இந்த வாழ்க்கையில் மகரிஷிகளின் அருள் சக்தி பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்.
2.உங்கள் நினைவாற்றல் அனைத்தையும் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் செலுத்துங்கள்
3.பேரின்பப் பெரு வாழ்வு அடையுங்கள்
4.என்றும் பிறவியில்லா நிலை அடைய இந்த வாழ்க்கை அது உதவும்.
5.அருள் ஒளியைப் பெறுங்கள்… அனைவரும் அருள் ஒளி பெற வேண்டும் என்று ஏங்குங்கள்.