
துவர் ஆடை கொண்டு ஞான நீர் அருந்த வேண்டும்
வியாசக
பகவான் பார்த்தனுக்குத் தத்துவப் பொருளாகக் கீதையை உபதேசித்து… கண்ணன் என்று பாரத இதிகாசத்தை உலகினுக்கீந்த சூத்திரதாரியாகச் செயல்பட்ட
அந்த மாமுனிவர் யாரப்பா…?
இயங்கும்
இயக்கம் என்று தத்துவப் பொருள் காட்டிய எத்தனை எத்தனையோ வாழ்க்கை நடைமுறைகள்… அவற்றின் சம்பவங்கள்…
1.ஆத்மா ஐக்கிய நிலை
2.நீதியை நிலைநாட்டும் வேகம்… வேகம் கொண்டிட்ட விவேகம்…
3.இயங்கும் இயக்கமான சம்பவங்களில் நீதியை நிலைநாட்டும் போராட்டம்
4.வாழ்க்கை மோதல் சம்பவங்களின் நன்மை தீமைகளில் இருவினைப் பயனால்
செயல்படுத்திடும் தாந்திரீகங்கள்
5.தாந்திரீகத்தால் வெற்றிக்கு வழி தேடும் போராட்டங்கள்
6.ஒலி உச்சாடனங்கள் என்று கைக்கொள்ளும் வாழ்க்கை நிலைகளில் நடைபெறும் செயலாக
7.வேத விளக்கங்கள் காட்டி “உண்மையின் சக்தியே வெற்றி
பெறும்…” என்றும்
8.சத்தியத்திற்கு ஏற்படும் சோதனையில் வென்று காட்டிடும் வழியாக
9.பேரருள் பெறும் மனத்தின் பக்குவமே “வானவியல் ஞான திருஷ்டி...!”
சத்தியமே
விஸ்வரூபம் காட்டி வினைப் பயன் களைந்திட்ட உபதேசமும்… சத்திய நியாய தர்மத்தை வெறுத்திடும் கலியில் “குருவே
(உயிர்) தர்மத்தை நிலை நாட்டும் தர்ம தேவனாக…” மனப்போராட்டத்தையே வென்று காட்டிடும் ஜீவன் முக்தனாக… ஒவ்வொரு ஆத்மாவும் நன்னிலை பெற்று விட்டால்… மனித
எண்ணத்தின் உயர்வைக் கைக்கொள்ளும் காரியமாக… நன்னெறி
வழிகாட்டிய மகரிஷிகளின்
உயர் தத்துவத்தால் ஆத்ம வலு பெற்றிட வேண்டுமப்பா.
கிருஷ்ண
லீலைகள் என்று காட்டியவற்றை இன்ப ரசம் என்று எண்ணுகின்றான். அனைத்துமே இன்பம் தான். “ஈஸ்வரரின் சொரூபத்தில்”
1.அனைத்து உயிர்களையும் ஒரே பாவனையாகக் காட்டுபவனவற்றில்,
2.எண்ணத்தால் ஆத்ம ஐக்கியம் பெற்றிடும் சம்பவங்களின் கோவையே கோபியர்கள் கொஞ்சிட்ட
லீலைகள்.
“இறை சக்தி” தன்னுள் ஒன்றான தனி சக்தி என்றே…
1.அன்பு மனத்தினோடு நாயகன் நாயகி பாவனையாக
2.ஒன்று கலந்திடும் உயிர் ஆத்ம கலப்பே உயர் ஞானப் பொக்கிஷம்.
கோபியர்களுக்குத்
தீங்கிழைக்க வந்துற்ற எத்தனை அசுரர்களைக் கண்ணன் மாய்த்தான்…? என்று காட்டியவற்றில் மனிதன் பெற்று உயர வேண்டிய ஒளி காந்த சக்தி… ஆத்மாவின் அருள்…
1.பேரருள் செல்வத்திடம் பற்று வைத்திடும் உள்ளமாக
2.காக்கப்பட வேண்டிய நிலைகள்… காக்கும் தன்மைகள்
அனைத்தும் உணர வேண்டும்.
உயர்
ஞான வளர்ப்பின் சித்து… சித்தன் கண்ட செயலாகக் கொண்ட
எண்ணத்தின் லட்சியம் எதுவோ… அந்த லட்சியத்தை வென்றுவிடும்
திட மனத்தின் சித்தம் எவ்வகையில் செயல் கொண்டிட வேண்டும்…?
என்று விளக்கிட்ட காவிய படைப்பின் ஓர் அங்கமாக…
1.ஞானப்பயிர் வளர்க்க மகான்கள் உபதேசமாக மொழிந்த நிலைகளில் எல்லாம்
2.மனிதன் பஞ்சேந்திரியங்கள் கொண்டு செய்யும் தொழில் “கர்மா” என்று சூட்சுமப் பொருள்படுத்தி
3.செய்கின்ற வினைகளுக்கு உரிய நாயகன் எனும் உயர் சக்தி முயற்சி என்ற
4.ஆய்வில் கருத்தினைச் செலுத்திடும் பாங்கில் கண்ட இலச்சினை (அடையாளம் – LANDMARK)
5.அதுவே லட்சியமாகக் கொள்ளும் மனத்தின் திறன் வளர்க்க
5.மனத்திறன் ஈர்ப்பில் ஆத்ம ஒளிப்பயிர் வளர்க்க
6.வியாச பகவான் பெற்று உயர்ந்த அனுபவ ஞானமே… “அர்ஜுனன்
என்ற விவேகியின் வீரத்தை” ஞானச் செல்வங்கள் பெற்றிட வேண்டுமப்பா.
அர்ஜுனன்
கைக் கொண்ட “காண்டீபம்” (கூர்மை) லட்சியத்தை அடைந்திட…
கருவின் திருவாக உள்ளத்தில் விளைந்தது என்ன…? மரம் தெரிந்ததா…? மரக் கிளைகள் தெரிந்ததா…? கிளைகளில் ஆடும் இலைகள்
தெரிந்ததா…?
1.இலை மறைவு… காய் மறைவு… அன்றோ
அவன் கண்டது…!
2.மகரிஷி புகட்டிடும் உண்மைத் தத்துவம் இலச்சினை கண்டான்… அடைந்திடும் லட்சியம் கொண்டான்.
லட்சியம்
மறைந்திடாத் தன்மையாக அடைய வேண்டிய குறிக்கோள்… அதுவே “உயர் ஞான விழிப்பின் பின் சாந்தம் குடிகொள்ளும் அமைதி…” காப்பிய ரிஷியின் ஒவ்வொரு அனுபவமே “ஆரம் கொண்ட
முத்துக்களப்பா…”
நீர்
தேடிப் பாலையில் அல்லலுற்ற பேய்த்தேர் என்றும் அலகைத் தேர் என்றும்… அன்று காட்டிட்ட கானல் நீரைக் கண்ட பொழுது… உயிர்
வாழப் பதைபதைட்ட “பீமன்”
என்னும் பலவான் ஆகும் மனித மனத்தின் பாங்கு… நீர் பருகிடும் அதி அவசரத்தால்… “பாலையின் நீரைப் பருகிட
முடிந்திடுமோ…?”
1.நகுல மன உத்தியால் நீர் அருந்த… நீரைச் சுவைத்திட
2.சகாதேவனும் துவர் (துறவியின் ஆடை) ஆடை கொண்டு ஞான நீர் அருந்த
3.வென்றது தர்மம் என்று மனத்தின் பாங்கு பலம் பெறுவதே “ஆத்ம பலம் பெற்றிடும் சீரிய சிந்தனை…”
ஆடையில்
நனைத்த நீரினைப் பருகிப் பின்னர் ஆடையை உதறிவிட்டால் பாலையின் ஏடென்ற துர் மணல்
நீங்குமப்பா. “ஞானத்தைக் கூட்டி இதைத் தெரிந்து கொள்…!”