ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 30, 2025

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்

உங்களுக்குப் பவர் கொடுக்கின்றேன்… பயன்படுத்திக் கொள்ளுங்கள்


நாம் பற்ற வேண்டிய முக்கியமானது எது…? இந்த உடல் சீராக இயங்க வேண்டும். உடல் சீராக இயங்கவில்லை என்றால் என்ன ஆகும்.
 
குருநாதர் இமயமலைக்கு என்னை அழைத்துச் செல்கின்றார் நடந்து போய்க் கொண்டிருக்கின்றேன் மலை மாதிரி தெரிந்தது நடந்து சென்றேன் திடீரென்று திரும்பிப் பார்த்தால் திடுதிடு என்று பனிப் பாறைகள் இடிந்து விழுகின்றது.
 
அதைப் பார்த்தவுடன்… “திரும்ப எப்படிச் செல்லப் போகின்றேன்…?” என்ற பயம் வருகின்றது.
1.பயம் வந்தவுடன் பலவீனமான எண்ணங்கள் வருகின்றது
2.குடும்பத்தில் பையன் என்ன செய்வான்…?
3.நாம் போய் விட்டோம் என்றால் என்ன செய்வார்கள்…? என்ற எண்ணம் வருகின்றது.
4.போய்விட்டால் என்ன செய்வது…? என்ற மனம் வரப்படும் பொழுது சிந்தனை குறைகின்றது.
 
வெறும் துண்டும் வேஷ்டியும் தான் கட்டி இருக்கின்றேன். அதைத் தவிர வேறு இல்லை.
 
ஆனால் குருநாதர் சொன்ன முறைப்படி சக்திகளை அணுக்களில் சேர்த்துக் கொண்டிருந்த பொழுது குளிர் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பாதை இடிந்து விழுந்தவுடன் என்ன நடக்கின்றது…?
 
பயங்கரமான ஓசையாக வருகின்றது பயம் வராமல் இருக்குமா…? நான் நிற்கும் இடமும் விழுந்து விடுமோ…! என்ற பயம் வருகின்றது. வீட்டின் ஞாபகம் வருகிறது. கிர்ர்என்று இருதயம் இறைய ஆரம்பித்துவிட்டது.
1.அப்புறம் வீட்டைக் கவனிப்பதா…? பையனை காப்பாற்றுவதா…?
2.சொத்துஇந்த உடலையே காக்க முடியவில்லை என்றால் பின் எதை வைத்துச் செய்வது...?
 
குடும்பத்தில் எல்லாம் தைரியமாகச் செய்கின்றோம். அடிக்கடி கோபமும் வேதனையும் அதிகமாகப் பட்டால் வாத நோய் வருகின்றது கை கால் இழுத்து விடுகின்றது நாம் எதைச் செய்ய முடியும்…?
 
பனிப் பாறையில் வைத்து ருத\யம் இறைத்தவுடன் நினைவுகள் மாறுகின்றதுஅப்படி ஒரு அனுபவத்தைக் கொடுக்கின்றார்.
 
ப்பொழுதுதான் குருநாதர் காட்சி கொடுத்து மனமே இனியாகிலும் மயங்காதே பொல்லா மானிட வாழ்க்கையில் தயங்காதே என்ற பாடலைப் பாடி வருகின்றார். பொன்னடி பொருளும் பூமியில் சுகமோ…? இப்பொழுது நீ போய்விட்டால் நீ எதை காக்கப் போகின்றாய்…!
 
1.கொஞ்ச நேரத்தில் நீ ஆசைப்பட்டதெல்லாம் சென்றுவிடுமே
2.மின்னலைப் போல மறைவதைப் பாராய் உன் ஆசை எல்லாம் மறைந்து விடுகின்றது.
3.எதிலே மடிந்தாயோ அங்கே தான் செல்வாய்.
4.ஆக நீ எண்ண வேண்டியது எது…?
5.அவர்களுக்கு அந்த அருள் பெற வேண்டும் இருள் நீக்கிப் பொருள் காணும் நிலை பெற வேண்டும் என்று நீ எண்ணினால் அங்கே வலுவாகும்.
 
ஆனால்நான் சொல்லிக் கொடுத்த உயர்ந்த குணங்களை எடுக்கத் தவறினால் நீ எங்கே செல்கின்றாய்…? ஏனென்றால் அந்த இடத்தில் மன உறுதி கொண்டு வருவதற்காக இப்படி அனுபவத்தைக் கொடுக்கின்றார்.
 
அனுபவித்துப் பெற்ற அந்த உயர்ந்த சக்திகளை நீங்களும் பெற முடியும். குருநாதரிடம் கஷ்டப்பட்டு அனுபவித்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது நிவர்த்திப்பதற்குச் சக்தி கொடுக்கின்றேன். வீட்டிலிருந்தே அதைப் பெற முடியும்..
 
ஆனால் நான் காடு மேடெல்லாம் அலைந்தேன். உங்களுக்குக் கஷ்டம் வரும் பொழுது வீட்டில் இருந்தே அதை நீக்குவதற்கு வழியைச் சொல்லிக் கொடுக்கின்றேன்.
 
கொடுத்தாலும் கூட நானும் தியானம் செய்து கொண்டே தான் இருக்கின்றேன்
1,எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது எனக்கு ஒன்றும் ஆக மாட்டேன் என்கிறது என்று
2.இதையே சொல்லிக் கொண்டிருந்தால் எது வரும்…? அதுதான் ரிமோட் பண்ணிக் கொண்டே இருக்கும்.
 
சிக்னல் கொடுக்கின்றார்கள்கரெக்டாக மாற்றிக் கொடுக்கின்றது. அந்த சிக்னலை நிறுத்தி விட்டால் மறுபடியும் சிவப்பு என்றால் சிவப்பைத்தானே கொடுத்துக் கொண்டேயிருக்கும்.
1.அப்போது நமக்கு அந்த உணர்வு டேஞ்சரான சோர்வான உணர்வைத் தான் ஊட்டும்.
2.இது எல்லாம் நன்றாகத் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும்.
 
மலை மீது வைத்து எனக்கு அனுபவத்தைக் கொடுத்து அதைத் தெளிவாக்குகின்றார்.
1.எப்படி இருக்கின்றது…?
2.அப்போது எடுக்க வேண்டிய முறை எது…?
3.அவர் கொடுத்த சக்தியை ஏன் எடுக்க முடியாமல் போனது…?
4.ஏன் அந்த மாதிரியானது…? ன்று காண்பிக்கின்றார்.
 
இதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறைகள் வந்தால் நீங்கள் அதை நீங்கள் மாற்றப் பழக வேண்டும் அல்லவா உங்களுக்கு இந்தப் பவரை எடுப்பதற்குச் சக்தியைக் கொடுத்திருக்கின்றோம்.
 
அந்தக் கண் கருமணிகளில் பதிவாகி விடுகின்றது. அதன் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சக்திகளைச் செலுத்தும்படி சொல்லுகின்றோம்.
 
ஆனால்
1.சோர்வான எண்ணங்கள் எடுக்கப்படும் பொழுது
2.அந்தச் சோர்வுக்குத் தக்கவாறு சோர்வடைந்து கொண்டே செல்கின்றோம்.
 
பையனுக்குக் குறைபாடு என்றால் அவனுக்கு நல்ல நிலை வரவேண்டும் எண்ணினால் அவனுக்கும்ற்சாகம் வருகின்றது நமக்கும் தெளிவாகின்றது நன்றாக இருக்கின்றோம்.
 
ஆக நமக்குள் காப்பாற்றப்பட வேண்டியது எது?
1.உங்களுக்கு அந்தப் பவரைக் கொடுக்கின்றோம்.
2.அதை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.