ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2022

உங்களுக்கு நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காட்டுவது என்ன…?

ஒரு பயமுறுத்தும் உணர்வை நாம் பதிவாக்கிவிட்டால் என்ன நடக்கிறது…?

இந்த இடத்திலே போனேன்… பார்த்தேன் விபத்தானது என்று ஒருவர் அதை விவரித்துச் சொன்னால் போதும்.
1.நாம் பதிவாக்கிக் கொண்ட பின் அங்கே சென்றாலே இந்த நினைவு வரும்
2.அங்கே சென்று அந்த உணர்வான பின் நம்மை அறியாமலே கிடு…கிடு… என்று நடுக்கம் வரும்.

இதே போன்றுதான் உங்கள் உடலுக்குள் உங்களுக்குத் தெரியாமலே என்ன செய்கிறோம்…?

எனக்கு (ஞானகுரு) என் குருநாதர் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்படி அறிமுகப்படுத்தினாரோ இதே போன்று உங்களுக்குள் அந்த அரும் பெரும் சக்திகளைப் பெற வேண்டும் என்ற நிலைகளிலேயே இதை உணர்த்திக் கொண்டு வருகின்றேன்.

1.காரணம்… இனம் இனத்தைத் தான் பெருக்கும்.
2.அருள் ஒளி பெற்றவர்கள் அதன் வழிகளில் எல்லோரும் அதைப் பெற வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆகவே குரு எனக்கு ஊட்டிய அந்த அருள் வழிகளை உங்கள் உயிரை ஈசன் என்று மதித்து அந்த அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும் உங்கள் உடலிலுள்ள அணுக்களில் இணைய வேண்டுமென்று தான் இதை உணர்த்திக் கொண்டு வருகிறேன்.

“குண்டலினி சக்தி” என்று சொல்லி “இங்கே தட்டி எழுப்புகிறேன்…” என்று செயல்படுத்தும் போது அவர்கள் உணர்வு இங்கே வந்து விடுகிறது. அவர்களின் ஆசையின் உணர்வு இங்கே வரப்படும் பொழுது அவர்கள் சில மந்திரங்களைக் கற்றுக் கொள்வார்கள்.
1.அந்த மந்திரத்தின் உணர்வு இங்கே வந்தபின் ஆக்கினைக்கு நீ இங்கே தொடு என்று காட்டுவார்கள்
2.அப்போது அவர் ஆசையின் உணர்வுகள் இங்கே இயக்கத் தொடங்கும்… மற்ற மனிதர்களுடைய உணர்வுகளும் இயக்கத் தொடங்கிவிடும்.
3.தொட்டவுடன் கிர்ர்ர்… என்று ஏறும்… அந்த உணர்வே தான் அவர்களுக்குப் பழக்கம் வரும்
4.நெற்றி வலிக்க ஆரம்பிக்கும்… பல நிலைகளும் ஆரம்பிக்கும்.

இது அல்ல…!

நான் (ஞானகுரு) இப்பொழுது தொட்டுக் காட்டுவது என்ன…?

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்களுக்குத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளையும் சப்தரிஷி மண்டலத்தின் உணர்வுகளும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அது எப்படி உருவானது என்ற உணர்வுகளைப் பதிவாக்குகின்றோம்.

உங்கள் உடலில் விளைந்த அணுக்களில் அதைத் தான் தொட்டுக் காட்டுகின்றோம்.

நான் பேசும் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பாயும். அந்த உணர்வுகள் வளர்ந்து விட்டால் “நீங்களே உங்கள் எண்ணத்தால் அதைப் பெறக்கூடிய தகுதி பெறுகின்றீர்கள்...!

ஒன்றுமே வேண்டாம்… ஒரு பையனைக் கூப்பிட்டு “இங்கே கரண்டு பாய்கிறதா பார்…” என்று உடலைத் தொட்டவுடன் உடலுடன் இருப்பதெல்லாம் வர ஆரம்பிக்கும். இது எல்லாம் ஒரு மனித உடலில் இருக்கக்கூடிய எண்ணமும் அந்த உணர்வின் தன்மையை மாற்றும் விதமும்.

மூலாதாரம் என்றால்… நமக்குள் வரும் ஒரு உணர்வின் தன்மை
1.எலும்பும் இரத்தங்களும் நரம்பு மண்டலமும் இந்த மூன்றும் சேர்த்து
2.அணுத் தன்மை கருத் தன்மையை ஜீவன் பெற செய்யக்கூடிய நிலைகளாகக் கவர்ந்து
3.விந்துடன் கலக்கும் ஜீவணுக்களாக மாற்றுகின்றது.

இதுதான் மூலம் என்பது… மூலாதாரம் என்பது. அங்கே உயிர் அணுக்கள் தோற்றுவிக்கும் நிலை வருகிறது என்றால் “வைத்திய ரீதியிலே” அன்று அகஸ்தியன் கண்டுபிடித்தான்.

“ஆக்கினை…” என்றால் நாம் எதை நுகர்கின்றோமோ உயிரிளே பட்ட பின் இந்த உணர்வுகள் நமக்குள் இயக்குகிறது. இதைத் தெரிந்து கொண்டால் பரவாயில்லை. ஆகவே ஆக்கினை என்றால் உணர்வின் தன்மை இதிலிருந்து தான் ஆணையிடுகிறது.

மூலாதாரத்தில்… கீழே மாற்றுகிறது என்று உணர்வின் தன்மை தனக்குள் கொண்டு வரப்படும் பொழுது வித்தியாசமான நிலைகளில் சென்று விடுகின்றது.

1.மூலாதாரம் என்றால் நமது உயிர் மூலம்
2.நாம் நுகரும் உணர்வே ஆதாரம்.
3.எந்த உணவின் தன்மையோ அந்த ஆதாரத்தின் வழி கொண்டு தான் நம் உணர்வுகள் இயக்குகிறது என்று
4.சாஸ்திரங்களும் வேதங்களும் தெளிவாக நமக்கு காட்டும் நிலை.