ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 4, 2022

உயிரான ஈசனை நேசிப்பதா...? உடலான சிவத்தை நேசிப்பதா...?

இயற்கை எவ்வாறு இயங்குகிறது...? என்பதை நாம் தெரிந்து கொள்ளத்தான் சிலைகளை வடித்து அதற்கென்று காரணப் பெயரை அன்று வைத்தார்கள்

உயிரின் இயக்கத்தை ஈசன் என்றும்... இயக்கத்தால் ஏற்படும் வெப்பத்தை விஷ்ணு என்றும்... ஈர்க்கும் காந்தத்தை லட்சுமி என்றும்... உயிர் எப்படி ஓ... என்று இயக்குகின்றதோ அது போல நுகர்ந்த உணர்வுகளும் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும் என்று காட்டுகின்றார்கள்.

உயிரிலே பட்ட பின் ஓ... என்று பிரணவம் ஒலியை எழுப்புகிறது... சப்தத்தைக் கொடுக்கின்றது. அதே போல் நாம் நுகரும் உணர்வுகள் அதே சப்தத்தைக் கொடுக்கும் என்று பொருள்.

ஆகவே பிரணவம் என்ற நிலையில் உயிர் நாம் நுகர்வதை ஜீவ அணுவாக மாற்றுகிறது. இந்த உணர்வின் தன்மை அணுவாகி அதனின் மலம் தான் நம் உடலாக சிவமாகின்றது. ஆனால்
1.உயிரான ஈசன் வெளியிலே சென்று விட்டால் இந்த உடலான சிவம் சவம் தான்.
2.அதற்கு அப்புறம் ஒன்றும் இயக்கம் இல்லை.

நாம் எந்தெந்தக் குணங்களை நுகர்ந்தோமோ அது அணுக்களாக ஆன பின் இந்த உடலை வளர்க்க அவை தான் உதவியது. ஆகவே அந்த அணுக்கள் தான் இந்த உடலை வளர்த்தது.

இருந்தாலும்... உயிர் வெளியில் போன உடனே
1.அந்த அணுக்கள் உயிரணுக்களாக மாறி உடலின் சத்தை எடுத்துப் புழுக்களாக மாறுகிறது
2.எந்தெந்த உறுப்புகளில் அது வளர்ந்ததோ அதையே உணவாகச் சாப்பிடும் (முக்கியமானது)

உணவாகச் சாப்பிட்டு எல்லாம் தீர்ந்த பின் இந்தப் புழு மடிந்து விடுகின்றது. முதலில் அணுவாக இருக்கின்றது உயிர் போன பிற்பாடு உயிரணுவாக மாறிப் புழுவாகின்றது.

உதாரணமாக நமக்கு வேண்டிய ஒருவர் நோயால் மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார். அந்த நோயினாலேயே கடைசியில் மடிந்திருப்பார். அவர் மேல் உள்ள பற்றால் ரொம்பப் பிரியமாக நாம் அதைக் கேட்டறிந்திருப்போம்.

ஆனால் அந்த உடலில் விளைந்தது உயிரணுவாகிப் புழுவான பிற்பாடு பிரியமாக எண்ணிய நம் உடலில் வந்து “ஒட்டிக் கொள்ளும்...”
1.அங்கிருந்து காற்றை உறிஞ்சி உடலில் விளையும்... கொசு மாதிரி கூட சிறு உயிர்களாக அதில் தோன்றும்.
2.இது சரும நோயாக வரும்... உடலுக்குள் சென்றுவிட்டால் சர்க்கரைச் சத்தாக வந்துவிடும்
3.இரத்தத்தைக் குடித்துவிட்டு அதனின் மலத்தை வெளிவிடும் போது சீழாக மாறும்...
4.இருக்கிறதை எல்லாம் தின்று குடைந்து கொண்டே போகும்.

இறந்தவர் உடலில் உருவானது... எதன் வழி வளர்ந்ததோ புழு இறந்து விட்டால் மனிதனாக இருக்கும் நாம் எந்தெந்த உணர்வைக் கேட்டு வளர்த்தோமோ “லபக்...” என்று வந்து இங்கே ஒட்டிக் கொள்ளும். அவருக்கு வந்த நோயை இங்கே உருவாக்கி விடும்.

இதைத்தான் மரபு அணு என்று சொல்வது...!

எதன் வழியில் வளர்ந்ததோ... அந்த உணர்வின் இயக்கமாக மரபணுக்கள் தொடர்ந்து... வந்து கொண்டே இருக்கும். அது மடிவதில்லை

அதனால் தான் “ஒரு அசுரன் இறந்தான் என்றால் பல அசுரர்கள் அதிலிருந்து எழுவார்கள்...!” என்று இராமாயணத்தில் சுத்தமாகவே நமக்குச் சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.

உயிரை ஈசன் என்றும் நுகர்ந்த உணர்வுகள் தான் உடலாகின்றது என்றும் காட்டி
1.இவன் சிவனை நேசிக்கின்றான்... அவன் உயிரை நேசிக்கின்றான்...
2.இந்த இரண்டுக்கும் உண்டான வித்தியாசத்தை இராமாயணத்தில் காட்டியுள்ளார்கள்.

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.