ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2022

உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று உங்கள் உயிரிடம் பேசுகின்றேன்... உங்களிடம் அல்ல...!

உண்மையான யாகம் எது...?

நமது உயிர் ஒரு நெருப்பு...! நாம் எந்த உணர்வின் தன்மையை இங்கே சேர்க்கின்றோமோ அந்த உணர்வலைகளை உயிர் நமக்குள் பரப்பும். உணர்வின் சொல்லாக வரப்படும் பொழுது பிறருடைய நிலைகளை அங்கே இயக்கும்.

1.ஒரு மயக்கப் பொடியைப் போட்டால் சுவாசித்தால் மயங்கி விடுவோம்
2.நல்ல நறுமணத்தைச் சுவாசித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

இதைப் போன்று நல்ல உணர்வின் (நல்ல குணத்தின்) தன்மையானால் உயிரிலே பட்ட பின் அது நமக்குள் சுழல்கின்றது
1.அந்த உணர்வுகள் சொல்லாக வருகின்றது
2.கேட்போர் உணர்வுகளை இனிமைப்படச் செய்கின்றது
3.நட்பு என்ற நிலைகள் அதனால் வளர்கின்றது... பகைமைகளை மாற்றுகின்றது
4.அருள் உணர்வை நமக்குள் கூட்டுகின்றது
5.பேரின்பத்தைப் பெறும் தகுதியை நாம் பெறுகின்றோம்.

ஆகவே ஞானிகள் காட்டிய ஆலயங்களை நாம் ஒவ்வொருவரும் மதித்துப் பழகுதல் வேண்டும். நம் உடல் தான் ஆலயம் ஒவ்வொரு உயிரையும் கடவுளாக மதிக்க வேண்டும்.

இதை எல்லாம் நான் (ஞானகுரு) சொல்கின்றேன் என்றால் உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன் உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன் மனித உடலை உருவாக்கிய நல்ல குணங்களை அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று குரு காட்டிய அருள் வழியில் தான் செயல்படுத்துகின்றேன்.

அந்த மகரிஷிகளின் அருள் ஒளியை நீங்கள் பெற வேண்டும்... உங்கள் ஆன்மா பரிசுத்தமாக வேண்டும்... நல்ல குணங்கள் இங்கே வளர வேண்டும் என்ற அடிப்படையிலே தான் நான் பேசுகின்றேன்
1.உங்களிடம் அல்ல
2.உங்கள் உயிரான ஈசனிடம்.

அப்போது இந்த உணர்வை நீங்கள் நுகர்கின்றீர்கள். அருள் ஒளி இங்கே பெருகுகின்றது. அது பெருக வேண்டும்... நீங்கள் மகிழ்ந்து வாழ வேண்டும் உயிரான ஈசன் வீற்றிருக்கும் இந்த ஆலயம் பரிசுத்தமாக வேண்டும் என்ற உணர்வுடனே நான் பேசுகின்றேன்.

அருள் உணர்வைப் பரப்பி உங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்திடும் நிலையாக செயல்படுகின்றேன். என் ஆன்மாவை நான் தூய்மைப்படுத்திக் கொள்கின்றேன்

நல்லது செய்ய வேண்டும் என்ற நிலையில்
1.நீங்கள் தப்பித் தவறி தவறானதைக் கேட்க நேர்ந்தால் கூட
2.நீங்கள் அதிலிருந்து விடுபட்டு உயர்ந்த நிலை பெற வேண்டும் என்று எண்ணுவதால்
3.அது எனக்குள் வருவதில்லை

சூரியன் பல பல உணர்வுகளை எடுத்தாலும் எல்லாவற்றையும் அது எப்படி ஒளியாக மாற்றுகின்றதோ... அது போல் உயிரணு தோன்றி உணர்வுகளை எல்லாம் ஒளியாக மாற்றிய பின்
1.அகஸ்தியன் துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்
2.அவனைப் பின்பற்றியவர்கள் ஆறாவது அறிவை ஏழாவது ஒளியாக மாற்றி சப்தரிஷி மண்டலமாக உள்ளார்கள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய கலர் ஆறு... உணர்வுகள் மோதும் பொழுது... ஒளி ஏழு. மனிதனின் அறிவு ஆறு... உணர்வின் தன்மை அறிந்து (வெளிச்சம் – ஒளி) எடுப்பது.

அதைத் தான் ஈரேழு லோகத்தையும் வென்றவன் விண் சென்றான் என்று சொல்வது. அந்த நிலையை நாம் அடைய வேண்டும்.