ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 30, 2022

“ஆயுள் மெம்பர்கள்” தெரிந்து கொள்ள வேண்டியது

உதாரணமாக… வேகமாக ஒருவர் நம்மை திட்டி விட்டார் என்றால்… “இப்படித் திட்டினான்…” என்று அதை வலுவாகப் பிடித்துக் கொள்கின்றோம்.

ஒரு நல்ல காரியத்தைச் சாந்தமாகச் சொல்லி இருந்தால் அது சந்தோஷத்தை ஊட்டக்கூடியது தான்.
1.இருந்தாலும் அது நினைவில் இருக்காது… கெட்டது நினைவில் இருக்கும்
2.நல்லதைச் சாந்தமாக சொன்னால் இது உடனே மறந்துவிடும்
3.நறுமணம் அதுதான்… அதில் விஷம் பட்டால் அது மறந்து விடுகின்றது… அதனுடைய செயலை இழக்கச் செய்து விடுகின்றது

நாம் நல்ல குணம் கொண்டிருக்கின்றோம். ஒருவர் வெறுப்பு வேதனை சலிப்பு சஞ்சலம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினால்…
1.அதை நாம் கேட்டறிந்தால் நம் நல்ல குணங்களை இது மூடி விடுகின்றது
2.நல்லது செய்வதை மறந்து விடுவதற்கு காரணமே அது தான்
3.இந்த விஷம் எப்பொழுதுமே அதனுடைய வேகத்தை காட்டிக் கொண்டே இருக்கும்.

ஒரு குடம் பாலிலே ஒரு துளி விஷம் பட்டால் அந்த ஒரு குடம் பாலும் பாழாகி விடுகின்றது. ஆனால் அதே சமயத்தில் நூறு குடம் பாலை அதிலே விட்டால்
1.அந்தப் பாலிலே இந்த விஷம் குறைந்து அந்தப் பாலுக்கே ஒரு வீரிய சக்தி உண்டாக்கக்கூடிய சக்தி வருகிறது
2.அதாவது விஷம் அதிகமானால் கொல்கிறது… “விஷம் சிறுத்தால் வீரிய சக்தி உண்டாக்குகின்றது” (முக்கியமானது)

ஏனென்றால் நாம் எப்படி வாழ்கின்றோம்…? எப்படி வாழ வேண்டும் என்பதைக் கூடுமானவரை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்… “ஆயுள் கால மெம்பராக இருப்பதால்…”

உயிர் தீயிலே பட்டால் அழிவதில்லை. ஆகவே உயிரைப் போலவே உணர்வுகளை ஒளியாக மாற்றுவது தான் நம்முடைய குறிக்கோள். ஆகையினால்
1.உயிரோடு சேர்த்து அவன் ஒளியாக இருப்பது போல் ஆயுள் கால மெம்பராக அவனுடன் இணைந்து
2.அந்த உயிரின் இயக்கமாக நாம் மாறுவதுதான் மெம்பராக இருப்பதனுடைய நோக்கம்.

நமக்குள் இருக்கும் இயக்கத்தை… இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை நமக்குள் நாம் அறிந்தாக வேண்டும்.

கெமிக்கல் கலந்த நாடாவில் ஒலி.. ஒளி… என்று பதிவாக்குகின்றார்கள். திருப்பி அதை இயக்கிச் சுழல விடும்பொழுது அந்த உணர்வுகள் வெளி வருகின்றது.

அதே போன்றுதான் இந்த உபதேசக் கருத்துக்களை நீங்கள் இப்பொழுது கூர்ந்து கவனிக்கும் பொழுது… கருவிழி ருக்மணி “ஊழ் வினை” என்ற வித்தாக உங்கள் நெஞ்சின் எலும்புக்குள் பதிவாக்குகிறது.

பதிவாக்கிய பின் கண்ணின் காந்தப் புலனறிவு அதைக் கவர்ந்து அதன் அறிவாக இயக்கும் உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி மீண்டும் உயிரிலே படும் பொழுது அந்த உணர்வுகள் உணர்ச்சியாக இயக்குகின்றது

இந்த உணர்வை வெளிப்படுத்தும் பொழுது அதை நுகர்ந்தோர் உணர்வுகளையும் அதே உணர்ச்சிகள் இயக்கத் தொடங்குகிறது. இதை நாம் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

அதன் வழியிலே தான் அந்த அருள் ஞான வித்தாக உங்களுக்குள் உருவாக்குகின்றேன். எனக்கு குருநாதர் எப்படி உருவாக்கினார்களோ அந்த ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்கி அதை உருவாக்குகின்றேன்.

நமது குருநாதர் காட்டிய வழியில்
1.துருவ தியானத்தில் அதற்குண்டான சத்தைக் கூட்டிக் கொண்டே வந்தால்
2.அருள் ஞானச் சொத்தாக அது உங்களுக்குள் வளர்ந்து கொண்டே வரும்.

அகஸ்தியன் எப்படிப் பெற்றானோ அதே மாதிரி நாமும் இருளை நீக்கி உணர்வுகளை ஒளியாக மாற்ற முடியும் அதற்குத்தான் அருள் ஞான வித்தைக் கருவிழி ருக்மணி மூலம் பதிவாக்குகின்றேன்.
1.நான் (ஞானகுரு) சொன்ன அருள் ஞான உணர்வுகள் இங்கே படர்கிறது.
2.உங்களுக்குள் பதிவாகின்றது… அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது.