ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 27, 2022

தியானமிருப்பதைக் காட்டிலும் அதை எழுத்திலே எழுதிப் பாருங்கள்

ஒரு சமயம் குருநாதர் பழனியில் ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது என்ன செய்தார்…?

டாக்டரிடம் போய் “நோயாளிகள் எல்லோரும் குணமாக வேண்டும், இல்லையென்றால் சொர்க்கத்துக்கு அனுப்பிவிடுவேன்” என்று சொல்லி சீட்டு எழுதிக் கொடுத்துவிட்டு வாடா...! என்று என்னிடம் (ஞானகுரு) சொல்கிறார் குருநாதர்.

நான் போய்விட்டு வந்தேன். என்னை “உள்ளே வராதே” என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்றேன்.

குருநாதர் என்ன சொல்கிறார். “ஏண்டா.. நீ அங்கே போகவே இல்லை.. என்னிடம் பொய் சொல்கிறாய். போய் நிஜமாகவே சொல்லிக் கொடுத்துவிட்டு வா என்கிறார்.

இவர் சொல்கிற வார்த்தையெல்லாம் அங்கே சொன்னால் என்ன செய்வார்கள்…? நீ டாக்டரா… நான் டாக்டரா…? என்று கேட்கிறார்கள்.

ஆனால் “நான் எல்லா சக்தியையும் பெற்றிருக்கின்றேன்” என்று டாக்டரிடம் போய்ச் சொல்லுடா…! என்கிறார் குருநாதர்.

ஐயோ… அவர் செய்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இப்படியெல்லாம் சொல்லி அடுத்து என்ன செய்தார்…?

1.நீ போய் அவனுக்கு லெட்டர் எழுதிப் போடுடா.
2.லெட்டர் எழுதிப் போட்டு போஸ்ட் ஆபீசில் கொண்டு போய் போடு.
3.உடனே எல்லோருக்கும் நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி ஆண்டவனுக்கு எழுதிப் போடுடா என்கிறார்.

யார்..? ஆண்டவனுக்கு.

சாமி… விலாசம்…? என்று கேட்டேன்.

எழுதுடா… “ஆண்டவன்” என்று எழுதிப் போஸ்ட் ஆஃபீஸில் கொண்டு போய்ப் போடு…! என்று என்னை எழுதச் சொல்லிப் போடச் சொல்கிறார் குருநாதர்.

இந்த மாதிரி பெரிய கூத்தெல்லாம் பண்ணுவார் நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர். அப்புறம் விளக்கமெல்லாம் கொடுப்பார்.

உன்னை ஆள்பவன் யார்…? உன் உயிர் தான்.

“அவனிடத்தில் நீ சொல்லுடா…”
1.அந்த அருள் ஒளி பெற வேண்டும் என்று நீ எண்ணு
2.உன் இருள் போக வேண்டும் என்று இந்த உணர்வின் தன்மையை நீ நினைத்து எழுது.
4.அங்கே எண்ணித்தான் நீ எழுதுகிறாய்.

இந்த லெட்டர் என்ன செய்யும்…? நீ போடு.

ஆக உனக்குள் அந்த அருள் சக்தி வருகின்றது. அதே சமயத்தில் அவர்களும் அங்கே அந்த அருள் சக்தி பெறுகின்றார்கள்.

இப்படியெல்லாம் சுருக்கமாக அந்த இயற்கையின் நிலைகளை
1.உயிரின் இயக்க நிலைகளை
2.எனக்குப் புரியும்படி செய்தார் நமது குருநாதர்.

வேறு ஒன்றும் வேண்டியதில்லை… “தியானம் இருப்பதற்கு பதில்…” அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும். எங்கள் உடல் முழுவதும் அது படர வேண்டும் எங்கள் உடல் நன்றாக ஆக வேண்டும் என்று எழுதிக் கொண்டிருந்தாலே போதும். இந்த உணர்வுகள் அங்கே பாயும்.

1.மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று
2.உடல் நன்றாக வேண்டும் என்று இப்படி எழுதிக் கொண்டேயிருங்கள்.
3.அப்பொழுது அங்கே பாஸாகிக் கொண்டே இருக்கும்
4.உங்கள் எண்ணமே அந்த உணர்வாகும்… மற்ற எண்ணங்கள் கலப்பதில்லை.

என் உடல் நன்றாக வேண்டும். இந்த நோய் நீங்க வேண்டும் என்று சொல்லி நீங்கள் லெட்டர் எழுதுங்கள். அப்படி லெட்டர் எழுதும் பொழுது, ஆண்டவனை இங்கே (உங்கள் உயிருக்குள்) போய்ச் சேருகின்றது.

1.அந்த உணர்வை அங்கே சிந்தித்துத்தான் நீங்கள் எழுதுகின்றீர்கள்.
2.அந்த உணர்வு தான் இங்கே வருகிறது…. அந்த எழுத்து எல்லாம் இங்கே வருகின்றது.

இதையெல்லாம் அங்கே காட்டுவதற்காக குருநாதர் எமக்கு இப்படியெல்லாம் ஒரு வழியைக் காட்டினார்.

ஏனென்றால் இன்றிருக்கக்கூடிய விஷ உலகில் உங்களைக் காக்க “இருந்த இடத்திலிருந்து…” இந்தச் சக்திகளை நீங்கள் பெற முடியும். அந்த அருள் ஞானத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் தீமைகள் புகாது தடுத்துக் கொள்ளுங்கள்.