ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 19, 2022

குருநாதரின் சங்கேத பாஷை

குருநாதர் எந்தெந்த வழிகளில் எல்லாவற்றையும் தெரிந்து இருக்கின்றார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு (ஞானகுரு) அது தெரியவில்லை என்றாலும் அறிய வைக்கின்றார்.

குருநாதர் டெலிஃபோன் கம்பத்தை அடிப்பார்... எலக்ட்ரிக் கம்பத்தை அடிப்பார். அடித்த உடனே
1.இந்த லயன் அந்த லயன்...
2.இந்த லயன் இந்த லைன்...! என்று சொல்லிக் கொண்டே வருவார்.

இப்படி என்னத்தைக் கிரகத்தைச் சொல்லுகின்றாரோ...! பைத்தியம் போன்று பேசிக் கொண்டிருக்கின்றார்...! என்று நான் (ஞானகுரு) நினைப்பேன். அவர் சொல்வது ஒன்றும் புரியாது.

டேய்... மிளகாய் ஒரு லட்சம்...! கோடி... கோடி... என்று சொல்வார். அவர் எல்லா பாஷைகளும் பேசுவார்.

நான் என்ன சொல்வேன்...? கோடி (கோழி) இங்கே இருக்கிறது சாமி...! என்பேன் (தெலுங்கிலே).

அந்தக் கோடி இல்லைடா... “ஈகோடி” என்பார். மிளகாய் கோடி... அந்தக் கோடி... காரம் கோடி... அது... இது... என்று என்னென்னமோ கோடி... கோடி... என்று சொல்வார். எனக்கு அர்த்தம் புரிய மாட்டேன் என்கிறது.

இந்த லைன் அந்த லயன் அந்த லயன் அந்த லைன் என்று சொல்லிக் கொண்டேயிருப்பார். அர்த்தமே புரியாது...!

அப்புறம் அந்த உணர்வுகளை எல்லாம் சொன்ன பிற்பாடு...
1.ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒன்றோடு ஒன்று கலந்து
1.உணர்வுகள் எத்தனை கோடியாக மாறுகின்றது...?
2.எத்தனை உணர்வுகளாக மாறுகின்றது...?
3.எதன் செயலை மாற்றுகின்றது...? - அப்படி என்றால் அந்த லயன்...!

அதாவது நட்சத்திரத்திலிருந்து மின்னலாகப் பாயும் பொழுது
1.இந்த உணர்வுகள் எதனுடன் எப்படிச் சேர்கின்றது...?
2.உணர்வுகள் எப்படி மாறுகின்றது...? என்ற நிலையை உள் உணர்விலே அதை உணர்த்துகின்றார்.

முதலிலே சொல்லிவிடுவார்... பின் புரிய வைப்பார்.

அதே போன்று தான் உங்களிடம் இதைச் சொல்லிப் புரிய வைக்கின்றேன் குருநாதர் எனக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதே போல உங்களிடமும் அதைப் பதிவு செய்கின்றேன்.

சந்தர்ப்பம் வரும்பொழுதெல்லாம் இந்த நினைவுகள் உங்களுக்கு வரும்.

காரணம்... தீமைகளை அகற்றக் கூடிய சக்தி உங்களுக்குள் வளர வேண்டும். இந்த உலகம் விஷத்தன்மையாகப் பரவும் நேரத்திலே விஞ்ஞானத்தால் வந்த விஷத்தை வெல்லக்கூடிய சக்தியை நீங்கள் பெற வேண்டும்.

உங்கள் மூச்சு பிறரைக் காக்கும் சக்தியாகப் பரவ வேண்டும் என்பதற்குத்தான் இந்த நேரத்திலே இதைச் சொல்வது.
1.இதை நான் பேசவில்லை... குருநாதருடைய உணர்வு தான் பேசுகின்றது.
2.அந்த உணர்வு தான் உங்களுக்குள் இப்பொழுது பதிவாக்குகின்றது.

இதை நிலை நிறுத்தி அதைப் பெற வேண்டும் என்று எண்ணினால் உங்களையும் நீங்கள் காக்கின்றீர்கள்... இந்த நாட்டையும் காக்கின்றீர்கள்... மக்களையும் காக்கின்றீர்கள்... இந்தப் பூமியையும் காக்கின்றீர்கள்.

இப்படிப் பல முறை லயன் லயன் லயன் என்று புரியாத உணர்வுகளைச் சொல்லிச் சொல்லித் தான் குருநாதர் கண்டுணர்ந்த எல்லாவற்றையும் என் உடலுக்குள்ளே பதிவு செய்தார்.

குரு வழியில் நான் எதை எதைப் பதிவு செய்தேனோ அதை மீண்டும் நினைவுபடுத்தி உங்களுக்குள்ளும் இப்போது பதிவாக்குகின்றேன்.
1.பதிவு செய்ததை நினைவாக்கி அந்தத் துருவ நட்சத்திரத்தை நீங்கள் எண்ணினால்
2.குருநாதர் எனக்கு உணர்த்தியது அனைத்தும் உங்களுக்குள் நிச்சயம் வரும்... வளரும்.