ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2022

இந்த உடலுக்குப் பின்னால் நாம் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது

ஒவ்வொரு நிலைகளிலும்
1.”தீமைகளை அகற்றி விட்டேன்…” என்று நீங்கள் சொன்னால் அதை நான் (ஞானகுரு) கேட்கும் போதெல்லாம் எனக்குச் சந்தோஷம்
2.”சக்தி எடுத்தும் விரயமாகி விட்டது…” என்று நீங்கள் எண்ணினால் எனக்கும் அது கஷ்டம் தான்.

நான் (ஞானகுரு) காடு மேடு எல்லாம் அலைந்து எத்தனையோ சிரமப்பட்டு அருள் ஞானிகள் பெற்ற சக்திகளை உங்களுக்குள் பதிவாக்கியுள்ளேன்.

அதை நீங்கள் எடுத்து வளர்த்துச் சந்தோஷப்பட முடியாதபடி வேதனையாக இருக்கிறது என்று அதை வளர்த்தால் எனக்குள்ளும் அதே உணர்வு வளர்கின்றது. உங்களுக்கு வேதனை நீங்கவில்லையா…? என்ற உணர்வு தான் எனக்கும் வரும்.

ஆனால் நான் அதைத் திருத்திக் கொள்கின்றேன். உங்களுக்குள் அதைத் திருத்த முடிவதில்லை. அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றீர்கள் அதிலிருந்து மீள முடியாத நிலை ஆகி விடுகிறது.

அப்படி இல்லாதபடி…
1.எப்படியும் அந்த அருள் ஒளியைப் பெறுவேன்
2.என் வாழ்க்கையில் வந்த இருளை அகற்றுவேன்
3.மெய் ஒளியை எனக்குள் பெறுவேன்
4.பேரானந்தம் பெறுவேன்… பெரு வீடு என்ற நிலையை அடைவேன்
5.பிறவி இல்லா நிலை அடைவேன்… என்று உறுதிப்படுத்தி இந்தப் பாதையில் நீங்கள் செல்லுங்கள்.

உயிர் என்றுமே அழிவதில்லை…. உணர்வுகள் மாறுகின்றது எதன் உணர்வைப் பெறுகின்றோமோ இந்த உடலுக்குள்… இருண்ட நிலைக்குள் உயிர் ஒளியாக உள்ளே இருக்கின்றது. அருள் ஞானிகள் உணர்வின் தன்மையை எடுத்து ஒளியாக மாற்றுதல் வேண்டும்.

நீங்கள் சீராகத் தியானிக்கும் பொழுது பார்த்தால் உள் ஒளி பெருகும். அப்பொழுது உடலில் இருந்து வெளிச்சம் வரும்.

இதை எல்லாம் பழனியில் ஒருவரிடம் சொல்லும் பொழுது ஆர்வமாகக் கேட்டார்.

கணவன் மனைவி சேர்ந்து இந்தத் தியானத்தைச் செய்தவுடன் அவர் உடலிலிருந்து திடீரென்று பளீர்….ர்ர்… என்று வெளிச்சம் வருகின்றது. வீடே வெளிச்சமாகிறது.

இரண்டு பேரும் அதைப். பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஐய்யய்யோ… ஒளி தெரிகின்றதே… என்னுடைய சந்தோஷம் எல்லாம் போய்விடும் போலத் தெரிகிறதே…! என்று அவர் உடனே மனைவியைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருக்கிறார்.

உடலில் இருந்து ஒளி வருகின்றது… நான் இப்படியே போய் விடுவேனா…? என்ற இந்தப் பயம் அவருக்கு வந்து விட்டது.

“பயப்பட வேண்டியதில்லை…” என்று சாமி (ஞானகுரு) சொல்லி இருக்கின்றாரே என்று மனைவி அவரிடம் சொல்கின்றது. உடலில் இருந்து வெளிச்சம் வருகிறது… எனக்கும் தெரிகிறது…! என்று சொல்கிறது.

இல்லை…! எனக்கு எப்படியோ நடுக்கம் வருகின்றது என்று அதை மாற்றி விட்டு இதை எடுக்கின்றார். பெரும் ஆனந்தம் வந்தாலும் அதை அவரால் எண்ண முடியவில்லை.

வட்டிக்கடை வைத்து அவர் நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பாவம் எல்லாம் எனக்கு வருமே. இதை எல்லாம் எப்படி மாற்றுவது…? என்று சொல்லி என்னிடம் கேட்டார்.

நான் விவரத்தை எல்லாம் அவருக்குச் சொன்னேன். அவருக்குச் சில தத்துவங்களும் தெரிகின்றது… கவிகளையும் பாடுகின்றார்.
1.ஆனால் இந்த ஒளி தெரிந்த பின்
2.உடல் ஆசையைக் கூட்டும் நிலை தான் வருகின்றது.

அடுத்து என்ன செய்கிறார்…?

மந்திரவாதிகளிடம் சென்று இந்தத் தீய நிலைகள் எனக்குள் வராது தடுக்க வேண்டும் என்று கேட்கின்றார் கோழிக்கறியும் சாராயமும் வைத்து நீ சாப்பிடு. தாயத்தை ஒன்றைக் கொடுத்து அதைக் கட்டிக் கொள் என்று மந்திரவாதி சொல்கின்றார்.

கடைசியில் இதற்கு அதற்கும் போராட்டமாகி அவருடைய நிலைகள் மாறிவிட்டது. உடலுக்குள் எதிர்நிலையான பின் நோயாக மாறிவிட்டது

அவருடைய வீட்டிலே தாயும் மற்ற எல்லோரும் சொல்கின்றார்கள். சாமி இவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருக்கின்றார்…! அட நீ என்னப்பா…? என்று.

ஆனால் அவரோ
1.நான் இத்தனையும் அனுபவிக்க வேண்டுமே
2.அதற்கு முன்னாடி நான் ஒளியாகி விட்டால் என் சுகம் எல்லாம் போய்விடுமே
3.இது என்ன பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது…? என்று சொல்கிறார்.

இது நடந்த நிகழ்ச்சி.

இப்படியும் சிலர் சக்தி கிடைத்தும் நழுவி விடுகின்றார்கள். இந்த உடலில் ஆசை வரப்படும் பொழுது இந்த வழியில் சென்று விடுகிறார்கள்
1.இதைப் போன்று இல்லாதபடி பேரானந்த நிலை என்ற நிலையை நீங்கள் அடையக் கற்றுக் கொள்ளுங்கள்.
2.இந்த உடலுக்குப் பின்னால் மீண்டும் பிறவிக்கு வரக்கூடாது.

ஒரு உடலை விட்டு ஆன்மா பிரிந்தால் எங்கே செல்கின்றது…? எப்படி அல்லல்படுகிறது…? என்று ஏற்கனவே பல உபதேசங்களைக் கொடுத்திருக்கின்றோம். இது தான் சாகாக்கலை என்பது.

சாகாக்கலை நீக்கி வேகாநிலை பெற வேண்டும். ஒவ்வொருவரும் அருள் ஞான சக்தியை வளர்த்து இருளை அகற்றும் அருள் ஞானத்தைப் பெறுங்கள். என்றும் பேரின்பப் பெரு வாழ்வு என்ற நிலையை அடையுங்கள்… பிறவி இல்லா நிலை அடைய இந்த உணர்வுகள் உங்களுக்கு உதவும்.