ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 18, 2022

குரு வழியில் உருவாகிக் கொண்டிருக்கும் “பெரும் கூட்டமைப்பு...”

ஞானிகள் மகரிஷிகள் வெளிப்படுத்திய உணர்வுகள் இந்தப் பூமி முழுவதும் படர்ந்துள்ளது. அதை எடுத்து நான் (ஞானகுரு) மட்டும் பேசுவதில்லை
1.நீங்கள் எல்லாம் அதைத் தெரிந்து கொள்ள முடியும்... “தெரிந்து கொள்ள வேண்டும்”
2.தெரிந்தால் தான் இந்த நாட்டையும் மக்களையும் விஞ்ஞானத்தின் விஷத்தன்மையிலிருந்து காக்க முடியும்
3.காலத்தால் மறைந்து விட்டது மறைந்த நிலைகளை மீண்டும் கொண்டு வந்து நாம் தப்ப வேண்டும்.

காரணம் சூரியன் அழியும் தருணம் வந்துவிட்டது... சூரியன் அழிவதற்கு முன் பூமிக்குள் உயிரினங்களில் மாற்றங்கள் அதிகரிக்கும்.

மனிதர்களாக இருக்கும் நாம் இன்று நல்ல நினைவு இருக்கும் பொழுதே அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை எடுத்து வளர்த்துக் கொண்டு... உடலை விட்டுச் செல்லும் போது பிறவியில்லா நிலை அடைந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் சென்றடைய வேண்டும்.

இனம் இனத்தைத் தான் வளர்க்கும். நமது குரு உயர்ந்த உணர்வைப் பெற்றார். அந்த இனம் வளர வேண்டும் என்று எனக்குள் (ஞானகுரு) பதிவு செய்தார்.
1.அதே குருவின் உணர்வை உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்
2.குரு வழியில் அருள் ஒளியை நாம் எல்லாம் சேர்க்கப்படும் பொழுது இது பெரும் கூட்டமைப்பாக மாறுகின்றது.

மனித உருவாக ஆன பின் அடுத்து அந்த இறந்த உடலைப் புதைத்தால் அது கரைக்கப்படுகின்றது மீண்டும் மற்றொன்றுக்குத் தான் அது இரையாகின்றது.

அது போல் தான் நம் சூரியனும் தன் செயலை இழந்தால் கரைந்து விடும். மற்றதுக்கு இரையாகிவிடும்.

ஏனென்றால் நம் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித்தனியாக... ஒவ்வொரு சூரியக் குடும்பமாக மாறிக் கொண்டிருக்கின்றது. கார்த்திகை நட்சத்திரம் ரேவதி நட்சத்திரம் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது. மற்ற ஏனைய நட்சத்திரங்களும் இவ்வாறு சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

நம் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கின்றது. அதனால் இது முதுமை அடைந்து விட்டது.
1.27 நட்சத்திரங்களுக்குள் சரி பகுதி தனிச் சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் நம் சூரியனுக்கு இரையில்லை.
2.அப்போது சுழற்சியின் தன்மை சூரியனின் ஈர்ப்பு வட்டம் குறையும்.
3.இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கக்கூடிய நமது பூமியோ அந்தச் சுழலுக்குள் சென்று இதுவும் கரைந்துவிடும்... ஆவியாக மாறும்.
4.27 நட்சத்திரங்களும் சூரியக் குடும்பமாக உருவான நிலைகளுக்குள் இது உணவாகி இதுவும் மாறிவிடும்

2000 சூரியக் குடும்பங்கள் சேர்ந்து ஓர் குடும்பமாக மாறுகின்றது. நமது பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரிய குடும்பமாக மாறினால் இது ஒரு அண்டமாகின்றது... பேரண்டமாகிறது.

இதைப் போன்று வளர்ச்சியின் நிலைகள் மாறி மாறித்தான் தனது பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளர்ந்து வந்தது.

இதை எல்லாம் நான் வெறுமனே சொல்லவில்லை. படிக்காதவன் தான் இதைச் சொல்கின்றேன். படித்திருந்தால் தப்பாகத் தான் சொல்லி இருப்பேன் என்று நினைக்கின்றேன்.

குருநாதர் கொடுத்த அருள் உணர்வின் தன்மையை நினைவு கொண்டு வளர்த்துக் கொண்டேன். வளர்த்துக் கொண்ட உணர்வுகளைத் தான் இங்கே உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.பதிவு செய்தை எண்ணி அந்த உணர்வுகளை நுகர்ந்து நீங்களும் அண்டத்தை அறிய முடியும்
2.உடலான பிண்டத்திற்குள் வளர்க்கவும் செய்யலாம்.

உடலுக்குப் பின் பிறவி இல்லை என்ற நிலையை அடைய முடியும் அதற்குத்தான் இதைச் சொல்கின்றேன் (ஞானகுரு).