
துருவ நட்சத்திரத்தின் சக்தியை மற்றவர்களுக்கும் கிடைக்கச் செய்யும் முறை
வேதனைப்படுபவரை
நாம் சந்தித்தால்… நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை வலுவாக்கி அந்த வேதனைப்படும்
உணர்வைத் தள்ளிவிட்டு
1.அந்த வேதனைப்படுபவர்களுக்கு நல்லதாக வேண்டும் என்ற உணர்வைக் கலந்து எடுத்துச் சொன்னால் இந்த உணர்வு வீரியமடைந்து
2.அவருடைய
செவிகளில் பட்டு காது வழி உணர்ச்சிகளைத்
தூண்டி மூக்கு வழி நுகர்ந்து
3.இந்த உணர்வு உயிரிலே பட்டு உமிழ் நீராக மாறி அவருடைய
நோயைக் குறைக்க உதவும்.
இதை அவர்கள்
பின்பற்றினால் வளர முடியும்.
குருநாதர் காட்டிய வழியில் யாம் உங்களை ஆசிர்வதிக்கும் பொழுது உடனடியாக நோய் இறங்குகின்றது.
அந்த அருள் சக்திகளை நீங்கள் கவர்ந்து உங்களுக்குள் வலுவாக்கிக் கொண்டால் தீமை வராது தடுத்துக் கொள்ள முடியும். நமக்கு
அந்தச் சக்தி உண்டு.
1.ஆகவே
வேதனப்படுவோரிடம் துருவ நட்சத்திரத்தினைப் பற்றிச் சொல்லி…
2.அந்தச்
சக்திகளை அவர்களுக்குப்
பாய்ச்சப்படும் போது அதைப் பெற்றுத் தீமைகளை அவரும் போக்க
முடியும்.
அதற்குத் தான்
கூட்டுத் தியானங்களை அமைத்துக்
கொடுத்துள்ளோம்.
ஒருவருக்கு
மன நோயோ அல்லது கடுமையான உடல் நோயோ இருந்தால் கூட்டுத் தியானங்களில் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருள் பேரொளி அவர்கள் ரத்த நாளங்களில் கலந்து… உடல் முழுவதும் பரவி… உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தச் சக்தி பெற வேண்டும்
என்ற
1.இந்த
உணர்வின் ஒலியை எழுப்பி செவி வழி இந்த உணர்வுகளைத் தூண்டச் செய்யும்
போது
2.அதைப் பெற வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டால் அதை நுகர்ந்து உயிரிலே பட்டு
3.உணர்வுகள்
உமிழ் நீராக மாறி உடலுக்குள் சேர்ந்து நல்ல
அமிலங்களாக மாற்றப்பட்டு
4.அவர் உடலில் இருக்கக்கூடிய நோயை நீக்க இது உதவும்.
அவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்…! நாம் வெறுமனே சொன்னால் பொருள் இல்லை.
யாம் மற்றவருக்கு
ஆசீர்வாதம் கொடுக்கும் போது பாருங்கள். கேட்டுக் கொண்டிருப்பவர்கள்
ஒரு சிலர் வேறு எண்ணத்தில் இருப்பார்கள்.
1.இப்போது
உடலில் மின்சாரம் பாய்வது போல் இருக்கின்றதா…? என்று கேட்டால்
2.இல்லை…! என்று சொல்லிவிடுவார்…
ஒன்றுமே தெரியவில்லை தெரியவில்லை என்று
சொல்வார்கள்.
காரணம்…
ஆசையின் நோக்கம் வேறு…! அதைக்
கேட்கும் நிலை வேறு…!
ஆகவே இது போன்ற
நிலைகளை விடுத்து விட்டு… சொல்லும் போது (காதிலே கேட்கும்
போது) அந்த அருள் சக்திகளை எடுக்கப் பழகும் “ஒரு பயிற்சிக்கு வர வேண்டும்….”
1.நோயால்
வேதனைப்பட்டு அவர் சொல்லும் போது நாம் அதைக்
கேட்டால்
2.அவருடைய வேதனை நம் உடலுக்குள் வருகின்றது… அதனின்
வலிமை நமக்குள் செயல்படுகிறது,
இதைப் போன்று தான் வேதனைகளை நீக்கிய ஞானிகள் உணர்வை
நாம் பெற்று… அதைச் சொல்லாக சொல்லி அவரைக் கேட்க வைத்தால் அந்த நோயை நம்மால் போக்க முடியும்.
தியானத்தைக்
கடைபிடிப்போர்கள் இதைச் சீராகக் கடைப்பிடித்துச் செயலாக்கத்திற்குக்
கொண்டு வர முடியும்.