ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2016

தற்கொலை செய்யும் எண்ணத்திற்குப் பதிலாக உலகையே காத்திடும் அரும் பெரும் சக்தியாக நீங்கள் மாற முடியும்

ஒவ்வொரு குடும்பத்திலும் சந்தர்ப்ப பேதத்தால் வெறுப்போ, வேதனையோ கோபமோ இதைப் போன்ற சந்தர்ப்பம் வந்தால் இன்று பெரும் பகுதி தற்கொலையில் தான் முடிகின்றது.

தற்கொலை செய்த அந்த உணர்வலைகள் படர்ந்தபின்
அந்தக் குடும்பத்திலே பரவி
அதனின் செயல்களைத் தொடர்ந்து
மற்றவர்களையும் வீழ்த்தும் நிலையே வருகின்றது.

தற்கொலை செய்து கொண்ட இந்த ஆன்மாவும் யார் மேல் பற்று கொண்டதோ அவர் மேல் ஊடுருவி அவரையும் வீழ்த்தும். அவர் மேல் பற்று கொண்டிருந்தால் அவரையும் வீழ்த்திவிடும்.

இதைப் போன்ற நிலைகளை அந்த உணர்வின் தன்மையை தாங்காது தற்கொலை செய்துகொள்ளும் உணர்வுகள் அந்தக் குடும்பத்தில் பரவிவிட்டால் இந்த எண்ணங்களே ஓங்கி வளர்ந்துவிடுகின்றது.

ஆக, சிரமம் வரும் பொழுதெல்லாம்
அந்த உணர்வுகளைத் தூண்டி
மனிதன் என்ற நிலையில்லாது உருக்குலையும் நிலைகளையைத் தான் உருவாக்கும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டுமா இல்லையா? பல கோடிச் சரீரங்களில் புழுவிலிருந்து மனிதனாக உருவாக்கிய நம் உயிரை மறந்து மீண்டும் புழுவாகப் பூச்சியாக, மிருகமாகவோ, விஷம் கொண்ட உயிரினங்களாகவோ நாம் செல்லலாமா?

சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

 ஒரு நஞ்சின் தன்மை நம்மைத் தாக்கிவிட்டால் நினைவிழப்பது போல் இன்று நஞ்சு கொண்ட உணர்வாக விளைந்து கொண்டிருக்கும் உணர்வுகளைச் சுவாசித்தவுடன் நம்மையும் (தற்கொலை செய்யும் உணர்வுக்கே) தன்னை அழித்துக் கொள்ளும் சிந்தனைகள் வளர்ந்து விட்டது.

இன்று விஞ்ஞான அறிவால்
உலகில் நஞ்சு கொண்ட காற்று மண்டலமாகப் பரவி
மனிதனின் சிந்தனையை அழித்திடும் உணர்வுகள் விளைந்து
அதிலிருந்து மீளமுடியாத நிலையில் வாழ்ந்து கொண்டுள்ளோம்

உலகில் பேரழிவைத் தேடிக் கொண்டு போய்க் கொண்டிருக்கும்
மனித உருவைச் சீர்குலையச் செய்து கொண்டிருக்கும்
இந்த உணர்விலிருந்து மனிதன் மீள வேண்டும் என்றுதான்
நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் கூறினார்.

இப்பொழுது நான் இதைச் சொன்னாலும் “இவர் கடவுளே இல்லை என்று சொல்கிறார்.., ஊரை ஏமாற்றுகின்றார்..,” என்ற நிலைகளிலும் எம்மைப் பற்றிச் சொல்வோர் சிலர் உண்டு
எத்தனை பேர் ஏளனமாகப் பேசினாலும்
யார் எதைச் சொன்னாலும் அதை நான் எண்ணவில்லை.

ஆகவே, நீங்கள் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற்று தீமைகளிலிருந்து மீள வேண்டும்.
உங்களை அறியாத சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.
மெய்ப் பொருள் காணும் நிலைகள் நீங்கள் பெறவேண்டும்.

உங்கள் பேச்சால் மூச்சால் உலகைக் காத்திடும் உணர்வுகள் உங்களிலே விளைய வேண்டும். இந்தக் காற்று மண்டலமே நச்சுத் தன்மையை நீக்கிடும் உணர்வுகளாக மாறவேண்டும்.

உங்கள் சொல்லைக் கேட்டுணர்ந்தோர் உணர்வுகளிலும் மகரிஷிகளின் அருள் உனர்வுகள் பதிந்திட வேண்டும். அவர்களுக்குள்ளும் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் விளைய வேண்டும்.

இந்த நோக்கத்தில்தான் உங்களிடம் மகரிஷிகளின் அருளாற்றல்களைப்  பரவச் செய்து இந்த உணர்வின் தன்மையை உங்களுக்குள் விளையச் செய்து கொண்டுள்ளோம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் வைராக்கியமாக இதைக் கடைப்பிடிப்பவர்கள் அனைவருக்கும் நீங்கள் போகும் பாதை தெளிவாகத் தெரிய வரும். உங்களுக்குள் மகரிஷிகளின் அருளாற்றல்கள் விளைவதையும் உணர முடியும்.

தன்னை அழித்திடும் நிலைகளிலிருந்து நீங்கள் விடுபட்டு தன்னைக் காத்து, தன் குடும்பத்தைக் காத்து, உலக மக்களைக் காக்கும் அரும் பெரும் சக்தியாக நீங்கள் ஒவ்வொருவரும் மாறுங்கள்.

உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியின் சுடராக மாற்றி,
இந்த மனித உடலுக்குப் பின் - பத்தாவது நிலை
கல்கி என்ற அழியா ஒளிச் சரீரம் பெறுங்கள்.