ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 9, 2016

எதிர் திசையில் நீந்தி மேலே செல்லும் சுறா மீனுக்குள் (DOLPHIN) இருக்கும் ஆற்றல்

கடல் வாழ் நிலைகளில் மீன் இனங்களில் எல்லாவற்றையும் விழுங்கி விழுங்கி அனைத்து உணர்வின் தன்மைகளையும் அறிந்து அதிக வலு பெற்றது சுறா மீன்.

அதை இன்று விஞ்ஞானிகள் டால்பின் என்று சொல்லுகின்றனர். அன்றைய நிலைகளில் சுறா என்ற நிலைகள் கொண்டு வந்தார்கள்.

ஆகவே, மனிதனின் அறிவு ஒத்த அந்த சுறா மீன்கள் மனித இனத்தைக் காக்கும் நிலைகள் கொண்டது. தன் இனம் என்ற நிலையை உணர்கின்றது.

கடல் வாழ் நிலைகளிலிருந்து
தரை வாழ் நிலைகளுக்குச் சென்று
இங்கே கடல் வாழ் நிலைகளில் மீனின் வளர்ச்சி எவ்வாறோ
இதைப்போல உயிரினங்களில் வளர்ச்சி பெற்றவன் மனிதன்.

தன் இனத்தின் உணர்வின் அறிவு கொண்டது. உணர்வின் மணத்தால் தன்னை அறியும் சக்தி பெற்றது அந்த மீன் இனம்

நூறு மைல்களுக்கு அந்தப் பக்கம் இதற்கு எதிரியான உணர்வுகள் பட்டால் அந்த உணரும் மணத்தை நுகர்ந்து தப்பி ஒடும் .

அதே மாதிரி இதற்குண்டான உணவு இருக்கிறதென்றால் அந்த மணத்தால் நுகர்ந்து அது ஒடித் தனக்கு அந்த ரையை எடுக்கும்.

நீருக்குள் சூரியனின் ஒளிக்கற்றைகள் (காந்த சக்தி) அதிகமாகப் படர்வதினால் அது உடலில் இருக்கக்கூடிய காந்தமும் இதனுடைய நிலைகளில் இழுக்கப்படும்போது மீனுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு.

அதாவது, காந்தத்தில் துருவம் என்ற நிலை வரும்போது ஒரு துருவத்தின் நிலையிலிருந்து ஒளிக்கற்றைகளைத் தள்ளுவதும் மற்றொன்றைத் தன்னுடன் இணைக்கும் நிலைகள் கொண்டது.

இதைப் போன்று  நீர் நிலைகளுக்குள் இருக்கும் காந்தங்களால்தான், அது எதன் வலு கொண்டதோ
எதிர் நிலையில் நீர் வேகமாகச் சென்றாலும்
அதில் உராய்ந்து இந்த மீனின் வேகங்கள் அதிகமாகி
எதிர்த்துப் போவது அதனுடைய பழக்கம்.

காரணம் அதனுடைய காந்தப்புலனறிவின் இதன் வேகத்துடிப்பு வரும்போது அதனுடன் உராய்ந்து அதனுடன் வேகமாகச் செல்லும் தன்மை பெறுகின்றது.

தண்ணீர் அதிகமாக வந்தால் அது நம்மை அடித்துச் சென்றுவிடும். அதை எதிர்த்துப் போகும் வல்லமை  நமக்கு இல்லை.

ஆனால், மீன்களுக்கு உண்டு.

ஆக தண்ணீர் (நீர் வீழ்ச்சி) மேலிருந்து வந்தாலும் இத்தகைய மீன்கள் அந்த நீர் ஒட்டத்தில் உராய்ந்து மேலே கூடச் செல்லும்.

ஒரு மைல் தூரத்தில் மேலே இருந்து தண்ணீர் விழுந்தாலும்
கீழே இருக்கக்கூடிய மீன்கள் அது படர்ந்து
திலுள்ள காந்தப் புலனால் உராய்ந்து
அது மேலே செல்லும் நிலை உண்டு.