ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 8, 2016

உங்கள் கண்ணின் கருவிழிக்கு விண்ணின் ஆற்றலைக் கவரும் சக்தி கொடுக்கின்றோம் (ANTENNA POWER)

உங்களுக்குள் இருக்கக்கூடிய தீமைகளை நீக்குவதற்கு இப்பொழுது உங்களுக்குள் இந்த உபாயத்தைச் சொல்கிறோம்.

அந்த மகரிஷிகள் காட்டிய உணர்வின் தன்மையை எந்த அளவிற்கு நீங்கள் கூர்ந்து கவனிக்கின்றீர்களோ இது ஊழ்வினையாகப் பதிவாகின்றது.

அதற்கப்புறம் நான் சொல்வது போல எப்பொழுது நீங்கள் தீமையினுடைய நிலைகளைச் சந்திக்க நேர்கின்றதோ அப்பொழுதே ஈஸ்வரா என்று உங்கள் உயிரை வேண்டி எண்ணி நாங்கள் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற
ஏக்க உணர்ச்சியைத் தூண்டப்படும் போது
உயிரான ஈசனிடம் எண்ணி ஏங்கும் போது
நமக்கு முன் இருக்கும் அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை
நாம் சுவாசிக்க நேர்கின்றது.

டி.வி.யில் எவ்வாறு ஆன்டென்னாவின் பவரைக் கூட்டும் போது வெகு தொலைவிலிருந்து வருவதைக் கவர்கின்றது.

அதாவது, இன்று செயற்கைக் கோள் மூலமாக ஈர்க்கப்பட்டு அங்கிருந்து ஒலி/ஒளி பரப்புச் செய்வதை சக்தி வாய்ந்த ஆன்டென்னாவைக் கொண்டு அலைகள் வருவதைக் கவர்ந்து நாம் இங்கே டி.வி.யில் பார்க்கின்றோம்.

இதைப் போன்று அந்த மகா ஞானிகளின் உணர்வை
இப்பொழுது யாம் உபதேசிக்கும் போது கூர்ந்து கவனித்தால்
ஊழ்வினையாக உங்கள் உடலில் பதிவு செய்வதோடு மட்டுமல்லாதபடி
உங்கள் கண்ணுக்குள் இருக்கும் “கருவிழிக்குள்”
நினைவின் ஆற்றல் வளர்ந்து
அதனின் நிலைகள் ஆழமாகப் பதிவான பின்
அந்த நினைவின் அலைகளை எண்ணும்போதே
ஆன்டென்னாவிற்குப் பவர் வந்தது போல
உடலுக்குள் உள்ள உங்கள் - கண் - ஆன்டென்னாவை
மிக சக்தி வாய்ந்ததாக மாற்றவேண்டும்.

ஆகவே இப்பொழுது கேட்டுணரும் போது உங்கள் கண்ணுக்குள் அந்த வலுவின் தன்மை அடைகின்றது. அதே சமயத்தில் யாம் சொல்வதை அதே கண் தான் ஈர்த்து ஊழ்வினையாக உங்களுக்குள் முதலிலே பதிவு செய்கின்றது.

அப்பொழுது, உங்கள் கண்ணுக்குள் இருக்கக்கூடிய
கருவிழிகளுக்குத்
திரை விழிகளுக்கு அனுப்பும்
அது ஒவ்வொரு நுண்ணிய அலைகளிலும்
இது சக்தி வாய்ந்ததாகச் சேர்கின்றது.

பின் நீங்கள் இதை எண்ணும்போது
ஆன்டென்னா பவர் போல
மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று எண்ணினால் அதைக் கவர்ந்து உங்களைச் சுவாசிக்கச் செய்து உங்கள் உடலுக்குள் சென்று அந்தத் தீமையான நிலைகளை நீக்கிட இது உதவும்.

இப்படிச் செய்யாமல், சாமியார் செய்வார், சாமி செய்யும், ஜாதகம் செய்யும் யந்திரம் செய்யும் மந்திரம் செய்யும் என்று எண்ணிக் கொண்டிருந்தால்
நமக்கு நாமே ஏமாந்து
நமக்கு நாமே காலத்தை விரயம் செய்து
நமக்கு நாமே தண்டனை கொடுத்தது போல ஆகும்.
யாகங்களைச் செய்தோ வேள்விகளைச் செய்தோ நிவர்த்திக்க முடியாது.

யாகம் என்பதே, அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் பெறவேண்டும் என்ற இந்த உணர்வை நமக்குள் சேர்த்தால் இதுதான் யாகம். அதுதான் வேள்வி.

அந்த உயர்ந்த ஞானிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தைச் செலுத்தினால் ஒழிய தீமைகளை மாற்ற முடியாது.

நம் உயிர் ஒரு நெருப்பு. நாம் எடுத்துக் கொண்ட உணர்வின் சக்தியை அது இயக்கும்.
நாம் நஞ்சினை நெருப்பிலே போட்டால்
நஞ்சின் வாசனை வரும்.
ஆனால், அதிலே நல்ல மணத்தின் தன்மை போட்டால்
நல்ல மணத்தைக் காணலாம்.

அதே சமயத்தில் நல்ல மணத்தை நம் உயிரில் போடும்போது நல்ல மணமாக எண்ணங்களாக வருகின்றது.

மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நறுமணத்தை ஊட்டும் போது அதிலிருந்து வெளிப்படும் அந்த நஞ்சினை நாம் சுவாசிக்கும் போது நல்ல வாசனை கொண்டதாக வருகின்றது.

ஆனால், நஞ்சான நிலைகளை நாம் நெருப்பிலே இடும் போது அதை நுகர்ந்தால் நாம் மயக்கப்பட்டுக் கீழே விழுந்துவிடுகின்றோம்.

இதைப் போலத்தான் நம் உயிரின் தன்மைகள்.

நாம் எந்த உணர்வின் தன்மை எண்ணுகின்றோமோ இந்த நெருப்புக்குள் அலைகளாக மாறி உடலுக்குள் சென்று அந்தக் குணங்களுக்கொப்ப நம் உடலை இயக்குகின்றது.

அந்த ஞானிகளின் சக்தியை நமக்குள் எடுத்து நம் உடலுக்குள் சென்று தீமையின் நிலைகளை நீக்கி நமக்குள் வலுக் கொண்டதாக மாற்றுவதற்குத்தான் நமது குருநாதர் எமக்கு எவ்வாறு அதைப் பயன்படுத்தினாரோ அதைப் போன்றுதான் உங்களுக்குள்ளும் அதைப் பயன்படுத்தும் நிலைகளுக்குப் பயிற்சியாகக் கொண்டு வருகின்றோம்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறவேண்டும் உங்களை அறியாத இருள்கள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் நீங்கள் காண வேண்டும் என்று யாம் தவமிருக்கின்றோம்.

இருள் நீங்கி நீங்கள் பேசும்போது நீங்கள் வெளிவிடும் உணர்வலைகளை இந்தச் சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவரப்படும் போது அறியாது சேர்ந்த
பிறர் செய்யும் தீமையான உணர்வுகள் சென்றாலும்
நீங்கள் யாருடன் தொடர் கொண்டு பேசினாலும்
உங்களுடைய மூச்சின் அலைகள்
பிறருடைய தீமைகளை நீக்க இது உதவும்.