ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 1, 2016

உடலை விட்டுப் பிரிந்தாலும் கணவன் மனைவி இரு உயிரும் விண்ணுலகில் ஒன்றி வாழும் வழிமுறை

உடலை விட்டுக் கணவன் ஆன்மா பிரிந்திருந்தால் இதன் முறைப்படி அந்த ஆன்மா அங்கே செல்ல வேண்டும் என்று எண்ணி அந்த ஆன்மாக்களை உந்திச் செலுத்தி அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்ய வேண்டும்.

அவர் இட்ட மாங்கல்யம் இவர் (மனைவியின்) உடலிலேதான் இருக்க வேண்டும் ஏனென்றால், அவர் இட்ட மாங்கல்யமும் அவருடைய எண்ணங்களும் இங்கே தான் இருக்கின்றது.

என்னுடன் வாழ்ந்தார், வளர்ந்தார்
என்னுடன் ஒன்றி வாழ்ந்தார் என்ற உணர்வினை வளர்த்து
அவர் சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று இந்த உணர்வின்படி தியானத்தால் இந்த உடலை விட்டுச்சென்ற பின் இந்த ஆன்மா அதனுடன் ஐக்கியமாகும்.

இதே போன்று மனைவி இழந்தவர்களும் "என்னுடன் வாழ்ந்தது  வளர்ந்தது உடலை விட்டுச் சென்றது. அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து உடல் பெறும் உணர்வுகள் கரைய வேண்டும். என்று எண்ணி அங்கே உந்திச் செலுத்த வேண்டும்.

.அந்த ஆன்மாவை அவ்வாறு செய்த பின் அது ஒளியின் சரீரம் பெற்றால் இதைப் போன்று அவர்கள் எண்ணுவார்கள் என்றால் இரு உயிரும் அங்கு ஒன்றாகிறது.

ஒன்றிய உணர்வுகள்
ஒன்றியே வாழ்ந்த பின்
உடல் பெறும் உணர்வுகள் கரைந்தால் உயிருடன் ஒன்றிய ஒளியின் தன்மை பெற்ற பின்  தனக்குள் வரும் உணர்வினை ஒளியாக மாற்றும் பருவம் வருகின்றது.

கணவனும் மனைவியும் ஒன்றாக இணைந்து இரு உயிரும் ஒன்றான பின்  ஒளியின் சரீரம் பெறும் தன்மை வரும்.

கணவனைப் பிரிந்தவர்கள் அவர் இட்ட மாங்கல்யம் உங்களில் இருக்கிறது என்று உறுதியுடன் செயல்படுத்துங்கள்.
அவர் உணர்வு உடலிலே உண்டு.
அந்த உணர்வின் துணை கொண்டு
சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்.

ஆனால், இப்பொழுது சாங்கிய சாஸ்திரம் கொண்டு எதைச் செய்கின்றனர்?

கணவனை இழந்துவிட்டால் கணவனை மறந்து விட வேண்டும் என்பதனை ஆதாரமாகக் காட்டி கணவனை இழந்தவள் என்று மற்றவர்கள் அறியச் செய்வதற்கு மாங்கல்யத்தைப் பறிக்கின்றனர்.

அங்கே தான் தவறு செய்கின்றனர்.

தன் கணவன் தன்னுடன் உண்டு என்ற உணர்வினை நினைவு கொண்டு  அந்தக் கணவன் பால் நினைவு கொண்டால் அந்த உணர்வின் சக்தி தவறு செய்ய விடாது.

இந்த மத இனங்களில் இப்படித் தவறான நிலைகளில் செயல்படுத்தப்பட்டு கணவனை இழந்தவள், கணவனை இழந்தவள் என்று இந்த உணர்வின் தன்மை துக்கமும் துயரமும் கொண்டு வேதனையின் உணர்வு கொண்டு அந்த வேதனையால் பேய் மனமாக மாற்றிவிடுகின்றது.

பேய் மனமாக ஆனபின் அந்த உணர்வின் துணை கொண்டு தன் குடும்பத்தின் நிலைகள் கொண்டு செயல்படும்போது அது இறந்த பின் யார் மீது பற்று கொண்டதோ அந்த உடலிலும் பேய் உணர்வுகளைத்தான் ஊட்ட முடியும்.

அந்தப் பாசத்தால் குடும்பத்திற்குத் தீங்கு தான் செய்ய முடியுமே தவிர அது ஒளியின் சரீரம் பெற முடியாது. அதன் வழி செல்லவும் முடியாது.

இதை எல்லாம் ஞானிகள் காட்டிய நிலைகளில் வசிஷ்டரும் அருந்ததி போன்று கவர்ந்து கொண்ட உணர்வுகள் என்றும் மனிதனுக்குள் ஒன்றி வாழ்ந்தால் அருள் ஒளி கணவனுக்கு/மனைவிக்குக் கிடைக்க வேண்டும் என்ற உணர்வுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள்தான் என்றும் பிறவியில்லா நிலைகள் அடைகின்றனர்.

அவரவர்கள் உடல்களில் கருவுற்ற காலங்களில் உணர்வால் தனக்குள் இந்த உடலில் சிறிது காலமே இருப்பினும் அதனை மனைவியின் உணர்வின் வலுகொண்டு அந்தச் சப்தரிஷி மணடலத்துடன் இணைய வேண்டும் என்று வலுவினைச் சேர்த்து விட்டால் அதே நினைவில் விண்ணை நோக்கிச் செல்கின்றது மனைவியின் எண்ணம்.

அந்த உணர்வு கணவன் வாழ்ந்த காலத்தில் எப்படி மகிழ்ந்திருந்ததோ  கனாக்களில் மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கும்.

அண்டத்தில் மிதந்துக்கொண்டிருக்கும் ஒளியாக மாற்றிக் கொண்டு இருக்கும் சப்தரிஷி மண்டலங்களுடன் கணவன் ஆன்மாவை இணையச் செய்தில் வேண்டும்.

அப்பொழுது அவர் அருள் ஒளி சுடர் பெறும் நிலைகள் கொண்டு நமக்குள் இந்தப் புவியின் பற்றுதலை நீக்கிடும் அருள் உணர்வுகள் நமக்குள் தோற்றுவித்து நமக்குள் அந்த எண்ணத்துடன் வாழச்செய்யும். நம் நினைவு நம் மக்களையும் அடுத்து வாழ்த்தச் செய்யும்.

இல்லை என்றால் அந்த மாங்கல்யத்தைப் பறித்து விட்டால்
இழந்து விட்டோம், இழந்து விட்டோம், இழந்து விட்டோம் என்று
சர்வத்தையும் இழந்து விட்டோம் என்ற வேதனை கொண்டு வாழும் நிலை தான் வரும்.

கடந்த காலத்தில் தவறு செய்திருந்தாலும், இனி தவறு செய்யாது இனியாவது உங்களுடன் வாழ்கின்றார் என்ற நினைவு கொண்டு வாழ்ந்தால் அந்த ஆன்மா ஒளியின் சரீரமான அவர் உணர்வு உங்களுடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.

அதன் துணை கொண்டு அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கக்  கற்றுக்கொள்ள வேண்டும். இதை ஒவ்வொருவரும் தலையாயக் கடமையாக வைத்துச் செய்யுங்கள்

 அவர் உங்களுடன் எப்படி ஒன்றினார்களோ அந்நினைவுகள் வந்து கொண்டே இருக்கும். இந்த அணுக்கள் இருந்து கொண்டே இருக்கும்.

அவர் ஒளிச் சரீரம் பெற வேண்டும் என்று எண்ணி அந்த ஆன்மாக்களை சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்து விட்டால் இந்த நினைவு அங்கே செல்லும். நம் உணர்வு இங்கே வளரும் .அடுத்து இன்னொரு உடலுக்குள் செல்லாது தடுக்கும்.
அருள் ஒளிச்சுடராக மாற்ற நமது எண்ணங்கள்
அந்த ஞானிகள் காட்டிய அருள் வழியில் செல்ல முடியும்.

ஆகவே, கணவனை இழந்துள்ளோம் என்று எண்ண வேண்டாம். அவர் உணர்வுகள் உங்களுக்குள்ளே உண்டு.

இதைப்போல இந்த உணர்வின்  வலுகொண்டு  இன்னொரு உடலுக்குள் சென்றிருந்தாலும் அல்லது இங்கே சுழன்று கொண்டிருந்தாலும் அந்த ஆன்மாக்களை நீங்கள் தொடர்ந்து சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்று காலை துருவ தியானங்களில்  செலுத்தினீர்கள் என்றால் அந்த உணர்வுகள் ஒளி நிலை பெறுகிறது.

அந்த உணர்வுடன் மீண்டும் உஙகளுக்கு தொடர்பு ஏற்படுகின்றது. அவர் அருள் ஒளி பெறுகின்றார். ஒளியின் சரீரம் பெறுகின்றார். .அந்த உணர்வு உங்களுக்குள் இருளை அகற்றும் நிலையும் உங்களுடன் ஒன்றி வாழும் உணர்வினை உங்களில் வளர்த்துக் கொள்ளலாம்.