ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 20, 2016

துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் உணர்வலைகளை RADIO, TV போன்று பிரித்து எடுக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

ஒரு புத்தகத்தைப் படித்து வாயளவில் சொன்ன பின் டேப்பில் பதிவு செய்து ஒரு இயந்திரத்தின் தன்மை கொண்டு ஒலிக்கற்றைகளை வெளிப்படுத்துகின்றார்கள்.

அப்படி வெளிப்படுத்திய ஒலிக்கற்றைகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்படும்போது இன்ன அலை வரிசையிலிருந்து இது வெளிப்பட்டிருக்கின்றது. என்று சொல்லுகின்றார்கள்.

அலை வரிசை என்றால்
ஒவ்வொன்றுக்கும் ஒரு உணர்வின் உந்து விசைகளை
எலெக்ட்ரிக் எலெக்ட்ரானிக் என்ற நிலைகளில் மாற்றியமைத்து
இந்த ஒலி அலைகளைப் பரப்புகின்றான் விஞ்ஞானி.

அதை சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து நம் பூமியில் தான் வைத்துள்ளது. நம் வீட்டிலிருக்கும் ரேடியோவை அதே அலை வரிசையில் நாம் வைத்தால் அதைக் கவர்ந்து கொடுப்பது ஏரியல்

இதே போல நம் கண் ஏரியல். அன்று கண்ணின் தன்மை கொண்டு உடலில் பதிவு செய்து "விண்ணை இயக்கினான் அகஸ்தியன்".

இன்று இயந்திரத் துணை கொண்டு
இதிலே காந்தப் புலனறிவின் அலைகளை உராயச் செய்து
உள்ளிருக்கும் அந்த ரேடியோவிற்குள் அந்த அலைகளைக் கவருவதற்கு
எந்த அலை வரிசையில் வைக்கின்றானோ இது கவர்ந்து கொடுக்கின்றது.

அது கவர்ந்து கொடுப்பதை இதன் ஒலி அலைகளை
ட்ரான்சாக்சன் (TRANSACTION) இதற்குள் நிறுத்தி
அந்த ஒலி அலைகளைப் பிரித்து
ட்ரான்சாக்சன் மற்றவைகளுக்கு அது செல்லச் செய்து
அதன் உணர்வு கொண்டு ஒலி பெருக்கிக்கும் (SPEAKER) மைக்கிற்கும் (MIC) அது உணர்வுகளைத் தெளிவாக்கக்கூடிய நிலைகளுக்கு விஞ்ஞானி கண்டு கொண்டு செய்துள்ளான்.

இதே போல டி.வி களில் எடுத்துக் கொண்டால் மனித உருவைப் படமாக்குகின்றான். ஒளி அலைகளாகப் பரப்புகின்றான். அதனை எந்த அலை வரிசையில் வைக்கின்றோமோ அதை வைத்து அந்தப் படக் காட்சிகளையும் அவனிடமிருந்து வெளிப்பட்ட சொற்களையும் இன்று பார்க்கின்றோம்.

இதைப் போன்றுதான் மனிதன் ஒரு தெய்வத்தை வழிபட்டு அந்த உணர்வினைத் தனக்குள் பதிவாக்கிக் கொள்கின்றோம். அதாவது
அங்கே கற் சிலை பல வண்ணங்களில் இருப்பதை
நாம் கண்ணால் பார்த்து
உணர்வின் அலைகளாக மாற்றித்தான் நாம் நுகர்ந்தறிகின்றோம்.

இல்லாமல் போனால் அதன் மேல் சூரியனின் ஒளிக்கற்றைகள் பட்டு உணர்வலைகளைக் கவர்ந்து அது எத்தகைய வண்ணங்களோ அந்த அலைகளைக் கவர்ந்து வெளி வருகின்றது.

அதன் உணர்வைத்தான் நம் கருவிழி தனக்குள் இதைப் பதிவாக்குகின்றது.

இந்தக் கருவிழி பதிவாக்கியதை
கண்ணுடன் சேர்ந்த காந்தப்புலன்
சூரியனால் கவரும் இந்த அலைகளைத் தனக்குள் எடுத்து
இந்தப் பூமியில் பரவுவதைக் கவர்ந்து
நமது ஆன்மாவாக மாற்றிவிடுகின்றது.

ஆன்மாவாக மாறியதை நாம் சுவாசிக்கும்போது உயிரில் மோதி இந்த உணர்வின் அலைகளை உடலிலே பரப்பச் செய்துவிடுகின்றது. அதன் உணர்ச்சிகள் எதுவோ அதன் செயலாக்கங்களை நம்மை அறியச் செய்கின்றது.

சாமி, நான் படிக்காதவன் என்னமோ சொல்கிறேன் என்று, “விஞ்ஞானத்தில் எங்கேயோ போய்விட்டார் இவருக்கென்ன தெரியும்? பத்தாம்பசலி...,” என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது என்பதற்குத்தான் இதைச் சொல்கிறேன்.

இன்று விஞ்ஞான அறிவில் எதைச் செய்கிறார்கள்? என்ற நிலைகளை நான் இங்கிருந்து நம் குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய நிலைகள் கொண்டு
இங்கே அலைகள் பரவியிருப்பதை
என்னால் நுகர முடிகின்றது. அறிய முடிகின்றது.

தீமை பயக்கின்றது, தீமைகளிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்பதற்குத்தான் உங்களில் பதிவாக்கி இந்த நினைவு கொண்டு இந்த விஞ்ஞான அழிவினால் வரும் பேரழிவிலிருந்து நீங்கள் உங்களை மீட்டிக் கொள்ள வேண்டும்.

பல அலைகள் வந்தாலும் ரேடியோவும், டி.வியும் பிரித்து எடுத்து நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.

இதே போல சூரியனின் காந்தப் புலனறிவு கவர்ந்து அலைகளாக மாற்றி பூமிக்குள் வரும் துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் அலைகளைப் பிரித்து எடுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

யாம் உபதேசிப்பதை உங்களுக்குள் இப்பொழுது நினைவால் பதிவாக்கிக் கொள்ளுங்கள். பதிவு கொண்ட நினைவினை நீங்கள் வலுக்கூட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

நாளைக்கு எத்தகையை அதிர்வு வந்தாலும் அதைப் பிரித்து
துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை நீங்கள் கவர்ந்து
உங்களைக் காக்க முடியும்.
உங்களைச் சார்ந்துள்ளோரையும் நஞ்சிலிருந்து மீட்க முடியும்.

அந்த நிலைகளை நீங்கள் பெறவேண்டும் என்பதுதான் ஈஸ்வராய குருதேவர் எனக்கிட்ட கட்டளை.