ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 14, 2015

மெய்ஞானிகளால் ஆலயத்தில் காட்டப்பட்டுள்ள அர்ச்சனை எது?

பேரண்டத்தின் உண்மையை உணர்த்திய போகமாமகரிஷி, அகத்தியமாமகரிஷி, கோலமாமகரிஷி இவர்களெல்லாம் பேரண்டத்தின் பேருண்மையினுடைய நிலைகளைத் தான் உணர்ந்தறிந்து எடுத்த அந்த ஸ்தலங்கள்.

ஆனால், அங்கேயும் இன்று ஏமாற்றும் நிலைகள்தான்.
புற நிலைகளில் வேள்விகள் செய்து
உண்மையினுடைய நிலைகள் மறைக்கப்பட்டுள்ளது.

நாம் அனைவருமே பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் மந்திரத்திலே சிக்குண்டு இருப்பவர்கள்

நாம் எந்தெந்த மந்திரங்கள் உய்யப்படுகின்றோமோ, அந்த மந்திரங்கள் நமக்குள் சென்ற பின் நாம் அதிலிருந்து மீளமுடியாத நிலைகளில் இருக்கின்றோம்.

நமக்குள் அனைத்து ஆற்றல்கள் உண்டு என்று சொன்னாலும் இன்றைக்கு எத்தனையோ ஆலயங்களுக்குச் சென்றுதான் திருப்தி பெறவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம்.

ஏனென்றால், ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வ குணங்களையும் நம் மனித உடலுக்குள் உணர்வாக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையைத்தான் அன்று மெய்ஞானிகள் சொன்னார்கள் என்று பலமுறை யாம் சொல்லியிருக்கின்றோம்.

நாம் ஆலயங்களுக்குச் சென்று அந்த ஆலயங்களில் பூஜிக்கும் முறைகளையும் யாம் சொல்லியிருக்கின்றோம். அதையாவது சரியாகச் செய்கின்றார்களா என்றால் இல்லை.

அங்கே சென்று அர்ச்சனைக்குக் காசு கொடுத்துவிட்டு நாமும் எட்டிப்பார்க்கும் நிலைகளில்தான் இருக்கின்றோம்.

அர்ச்சனை என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

நம் குருநாதர் காட்டிய அருள்வழிப்படி நாம் தியானம் செய்து கொண்ட இந்த தியானத்தின் அடிப்படையில், ஒவ்வொரு நிமிடமும் மகரிஷிகளின் அருள்சக்தி நாங்கள் பெறவேண்டும் என்று சுவாசித்து
நமக்குள் செலுத்தும் பொழுது
நம் புருவ மத்தியிலிருக்கும் உயிரான ஈசனிடம் அது படுகிறது

உயிரிலே படும்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தியால் நமக்குள் எண்ணங்கள் வலுப்பெற்று நாம் எத்தகைய நல்ல காரியங்கள் செய்ய வேண்டுமென்று எண்ணுகின்றோமோ
அந்த உணர்வின் சக்தியைச் சுவாசித்து
நம் உயிரான ஈசனிடம் படும்போது
நாம் கோயிலுக்குள் செய்வது போன்று
நம் உயிரான ஈசனுக்குள் அர்ச்சனை ஆகின்றது.

அத்தகைய மணத்தின் தன்மை கொண்டுதான், நம் உடலின் உணர்வலைகள் செயலாக்கி, அந்த அலைவரிசையின் நிலைகள்தான்
கண்களின் பார்வையும் காதின் நிலைகளும்
சொல்லும் செயலும் உடலின் அமைப்பும்
நாம் எடுத்துக்கொண்ட சத்து உடலாக அமையும்.

ஆனால், இந்த விஞ்ஞான உலகத்திலே ஒரு நொடிக்குள், இருக்கக்கூடிய நிலைகளை அழித்துவிடும் இந்தத் தருணத்தில்
நாம் இந்தச் சாமி செய்யும்
இந்த ஜோசியம் செய்யும்
அந்த ஜாதகம் செய்யும்
மந்திரம் செய்யும் இயந்திரம் செய்யும் என்று இருப்போமேயானால் 
அறியாமையிலிருந்து நாம் விடுபடவில்லை என்றுதான் அர்த்தம்.