ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 13, 2015

மனிதனுடைய சிந்தனையையே அழிக்கும் நிலைக்கு இன்று வந்துவிட்டார்கள்

யாம் பல வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கின்றோம். இன்று விஞ்ஞான உலகத்திலே, T.V. பார்க்கும் நிலைகள் அனைத்துமே அவர்கள் எந்தெந்த அலைவரிசையில் அனுப்புகின்றார்களோ
அதன் வழி வரும் அந்தப் பட உணர்வலைகளை
நமக்குள் சேர்த்துக் கொள்கின்றோம்.

எங்கோ இருக்கக்கூடிய ஆற்றலை நாம் இங்கிருந்து பார்க்கின்றோம். அப்படிப் பார்க்கப்படும்போது இங்கு பார்த்தோம், ரசித்தோம் எல்லாம் செய்துவிட்டோம்.

அதேபோசில வீடியோ கதிரியக்கங்களையும், இதைப்போன்ற அலைவரிசையிலேயே அவர்கள் இந்த ரேடியோவினுடைய தன்மையில், T.V. நிலைகளில் ஒளிபரப்பச் செய்கின்றார்கள்.
அதே அலைவரிசையினுடைய நிலைகளில்
அதுவும் நம் உடலுக்குள் பதிவாகின்றது.

அதை நுண்ணிய அலைகள் கொண்டு மனிதனுடைய எண்ணத்திலே அதிர்வுகளைத் தூண்டியபின் காக்கா வலிப்பு போன்றோ, ஜன்னி வருவதைப் போன்றோ நிகழ்ச்சிகளை நிகழ்த்தி சிறிது நேரத்தில் செயலிழக்கச் செய்து விடலாம்.

எந்தக் கருவியையும் இயக்கிவிடாமல் செய்துவிடலாம் என்ற நிலையில் லேசர் LASER கதிரியக்க நிலைகள் கொண்டு எந்தெந்த நிலைகளில் அணுக்கள் செய்திருக்கின்றார்களோ, அதுவும் உலகம் முழுவதும் ஊடுருவிப் படர்ந்து கொண்டிருக்கிறது.

அவர்கள் செய்து வைத்த ஆயுதமெல்லாம் இருக்கின்றன. நாங்கள் செய்து வைத்திருக்கும் அணுகுண்டுகளையெல்லாம் அழித்து விடுகிறோம் என்று வெளிப்படையாகச் சொன்னார்கள்.

ஆனாலும், அந்த அணுகுண்டைக் காட்டிலும் கடினமான ஆயுதங்களை இன்று விஞ்ஞானிகள் கண்டுணர்ந்து அதைச் செயல்படுத்தி, பத்தாம்பசலி என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள்.

காரணம் அவர்கள் இடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு ஆபத்துத்தான். ஏனென்றால் இன்று ரேடியோ அலைவரிசைகளில் எல்லா நிலைகளில் அதைப் பரப்பச் செய்து, ஒரு நிமிடத்தில் அதைச் செயலிழக்கச் செய்வது, அல்லது வெடிக்கச் செய்வது, இருந்த இடத்திலிருந்து ஒரு செயலை ஏக காலத்தில் வெடிக்கச் செய்யும்போது அவர்கள் பதுக்கி வைத்திருந்த அனைத்தும் செயலிழந்துவிடும்.

இனி எந்த விமானத்தையும் நம்பிப் போவதென்றால் கடினம்தான்.

இப்பொழுது எந்தெந்த நிலைகளில் செயல்கள் செய்தாலும், இன்று ராக்கெட்டை அனுப்பிப் பல செய்திகளை அறிந்தாலும், விண்வெளிக்குப் போகும் நிலைகளில் நவீன நிலைகளில் அதைக் காட்டிலும் ADVANCE ஆக வந்துவிட்டார்கள்.

ஏனென்றால், இத்தனை ராக்கெட்டும் விண்ணிலிருந்து ஒருவன் கண்ணுக்கு தெரியாமல் மற்றவற்றை ஏவிக் கண்டுகொள்வதற்குச் செய்தாலும்,
தான் இருந்த இடத்திலிருந்து
மனிதனுடைய சிந்தனைகளை இழக்கச் செய்துவிட்டால்
இத்தகைய போர் ஆயுதங்களும் தேவையில்லை என்ற முடிவில்
இன்றைய விஞ்ஞான அறிவு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஆக இவையெல்லாம் அலைவரிசைதான்.

ஏற்கனவே சொல்லியிருக்கின்றோம். T.V.யும் மற்றவைகளையும் பார்ப்பதனால் நாம் அந்த உணர்வுகளைப் பயன்படுத்தி, அந்த உணர்வுகள் நம் உடலிலே பதிவு செய்துவிட்டால்,
போர்முறை வரும்பொழுது
அவன் ஏதாவது ஒரு அலைவரிசையை அனுப்பினால்,
நம் சித்தத்தைச் சிதறச்செய்து நம்மைச் செயலிழக்கச் செய்து
மனிதனுடைய சிந்தனைகள் அழிக்கப்பட்டு
மனித இனத்தைக் கூண்டுடன் அழிக்கும்நிலை வந்து கொண்டுள்ளது

இதையெல்லாம் நாம் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.