ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 12, 2015

உயிரில் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்றி விண் செல்வோம் என்று உறுதிப்படுத்துங்கள்

விஞ்ஞான உலகத்தில் ஒரு SWITCH-ஐ தட்டி விட்டால் நம்முடைய நினைவை இழக்கும் நிலைகள் வந்துவிட்டது.

இன்று இருக்கக்கூடிய விஷத்தின் நிலைகளில்
ஒருவருக்கொருவர் நம்மை அறியாமலேயே
நம்மை நாம் பழித்துக் கொள்கின்றோம்.

இன்றைய உலகில் எந்தப் பொருளையும் அழுத்தத்தின் நிலைகள் கொண்டு ஆவியாக மாற்றிவிடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

அன்று, மந்திரத்தினால் பல உணர்வின் சக்திகளில் அழுத்தத்தைக் கூட்டப்படும்பொழுது
உணர்வின் நிலைகள் ஆவியாக மாறி,
இதே உணர்வின் நிலைகள் கொண்டு
அழுத்தத்தைக் குவிக்கப்படும்போது மீண்டும் உருபெறச் செய்தனர்

இது மந்திரத்தில் மனிதனின் உணர்வின் தன்மையை எடுத்து மனித உடலுக்குள் விளைய வைத்து அன்று செய்தார்கள்.

இதைப் போன்று விஞ்ஞான கருவி கொண்டு உயர் அழுத்தத்தைக் கொடுக்கும் பொழுது ஆவியாக மாற்றலாம். இன்று அணுவின் விஷத்தின் தன்மைகொண்டு பல அணுக்கள் மறைந்திருப்பதை ஒன்று சேர்த்துக் குவித்து அதே அலையை நாம் கதிரியக்கமாகப் பயன்படுத்தலாம்.

பூமிக்குள் படர்ந்திருக்கும் இந்தக் கதிரியக்கச்சக்தியைப் பிரித்து எடுத்தான் இன்றைய மனிதன். இதை ஒன்று சேர்த்து நீருக்குள் அடக்கி வைத்தான்.

அதை மீண்டும் பூமிக்குள் இருக்கும் வெப்ப காந்த அணுக்களுக்குள் வெடிக்கச் செய்யும் பொழுது அதை ஆவியாக மாற்றுகின்றது.
எவ்வளவு பெரிய பொருளானாலும்
அழுத்தத்தின் நிலைகொண்டு ஆவியாக மாற்றுகின்றான்.

இதைப் போன்றுதான் அன்று மெய்ஞானிகள் இதே அழுத்தத்தின் தன்மை கொண்டுதான் தன் மூச்சலைகளைப் பாய்ச்சித் தவமிருந்தார்கள். தன்னைத் தற்காத்துக் கொள்ள தனித்திருந்து தவமிருக்க சில குகைகளை ஏற்படுத்தினார்கள். இதுவும் உண்மைதான்.

இந்தியத் தத்துவத்தின் நிலைகள் அன்று மெய்ஞ்ஞானிகள் கண்டுணர்ந்த நிலைகளை இன்று விஞ்ஞானிகள் எலக்ட்ரானிக் என்ற நிலைகளில் கம்ப்யூட்டர் வைத்து அளந்து இந்த உண்மையின் நிலைகளை அறிந்து கொண்டார்கள்.

இன்று மனிதன் பிரபஞ்சத்திற்குள்ளும் அணு உலைகளை அனுப்பி வைத்தான். நமது பூமிக்குள்ளும் அதை வெடிக்கச் செய்து அணுக் கதிரியக்கங்களை அதிகமாகப் பரப்பிவிட்டான்.

இன்று காற்றுமண்டலத்தில் நச்சுத்தன்மையான நிலைகள் அதிகமாகப் பரவிவிட்டது.

எதிலும் தப்ப முடியாத நிலைகள் வந்துவிட்டது. நம்மை உருவாக்கிய நல்ல உணர்வுகள் அழியும் தன்மை வந்துவிட்டது.
மனிதராக இருக்கும் நாம் அனைவரும்
இனி இறந்தபின் மிருக உடல் பெற்றுத்தான் தீர வேண்டும்.

ஆகவே இந்த மனித உடலில் இருக்கும் பொழுதே குருநாதர் காட்டிய அருள்வழியில் மெய்ஞ்ஞானிகளின் அருள் ஒளியைப் பெற்று,
உயிர் ஒளியாக இருப்பதைப் போன்றே
உயிரில் ஒன்றும் உணர்வுகள் அனைத்தையும் ஒளியாக மாற்றி
விண் செல்வோம் என்று
நமக்குள் உறுதிப்படுத்தி வாழ்வோம்.

அருள் மகரிஷிகளின் அருள்சக்தியை நாம் பெறுவோம். அந்த மகரிஷிகளின் அருள் ஒளியால் மெய் ஒளியின் தன்மையை நாம் பெறுவோம்.

உலக மக்கள் அனைவரும் மகிழ்ந்து வாழ்ந்திட தவமிருப்போம்.