
பிறருக்கு உதவி செய்தாலும்… மறைமுகமாக வரும் தீமையிலிருந்து நம்மைக் காக்க வேண்டும்
குருநாதர் எமக்குச்
சொன்னது…!
வாழ்க்கையில் நீ நல்லதை எண்ணி ஏங்கினாலும் பிறர் செய்யும் தவறைப் பார்க்கப்படும் பொழுது
1.அதற்காக இரக்கப்பட்டோ… பரிவு
கொண்டோ ஏங்கி அதைச் சுவாசித்து
2.ஏராளமான பணங்களைக் கொடுத்து…
உடலைக் காக்க பொருளைக் கொடுத்து நீ உதவி செய்தாலும்
3.உனக்குள் வந்த அவரின் வேதனையான உணர்வின் தன்மையைத் துடைக்கவில்லை என்றால் என்ன ஆகும்…?
இந்த மனித வாழ்க்கையில் புகழ் கிடைக்கும் பேர்
கிடைக்கும் இரக்கமானவர் நல்லவர் என்று போற்றுவார்கள்.
1.ஆனால் அதே சமயத்தில் நலிந்து போகும் பொழுது
யாரும் நம்மைப் பார்க்க மாட்டார்கள்.
2.பின்…
வேதனையான நிலைகள் கொண்டு நான் நல்லதைச் செய்தேன் எனக்கு இப்படி ஆகிவிட்டது…! என்று
3.வேதனைக் குரலைத் தான் எழுப்ப முடியுமே தவிர நல்லதைச் சிந்திக்க முடியாது.
இந்த உணர்வை வளர்த்துக் கொண்ட பின் மனித இனத்தையே வெறுக்கும் நிலை வந்துவிடும்.
ஆனால் மனித உடலுக்குள் மீண்டும் சென்றாலும் அந்த
உடலையும் அழித்து விட்டு வேதனை என்ற விஷத்தை அதிகமாகக்
கூட்டி உடலை விட்டுச்
சென்ற பின்… பரிணாம வளர்ச்சியில் வந்த விஷத்தைத் தாங்கிடும் மற்ற உயிரினங்களின் ஈர்ப்புக்குள் சென்று அந்த உடலாக உயிர் மாற்றிவிடும்.
இதையெல்லாம் குரு இயற்கையாக எனக்குக் காட்டினார்.
அதையெல்லாம் கண்டு தான் இந்த
உண்மைகளை உங்களுக்கு உணர்த்துகிறோம்.
நீங்கள் செய்த நன்மையின் நிலைகள்… உங்களைக் காக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் கூட்டுத்
தியானங்களை வலுப்படுத்தி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஓங்கிச் செலுத்த வேண்டும்.
பின் தியானத்தில்
அமர்ந்திருக்கக்கூடிய அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்
1.அவர்கள் உடல் முழுவதும் அந்த அருள் சக்தி படர வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தில் உள்ள இன்னல்கள் நீங்க வேண்டும்
3.அவர்கள் வாடிக்கையாளர்கள் நலம் பெற வேண்டும்
4.அவர்கள் வாழ்விலே மகிழ்ச்சி பெற வேண்டும்
5.என் பார்வை அவரை நல்லதாக்க வேண்டும் என்ற இந்த உணர்வுகளை உங்களுக்குள்
செலுத்தினீர்கள்
என்றால்
6.இந்த உணர்வின் சக்தி உங்களுக்குள்
பாய்ச்சப்படுகின்றது.
இந்தச் சொல்லின் வாக்கும் உங்களுக்குள் விளைகின்றது. உங்கள் மூச்சு அவரை நலம் பெறச் செய்கின்றது.
இதைத்தான் மனிதர்களுக்குள் பொறுமையாக இருந்து செயல்படுத்த வேண்டும்.
வயலிலே காய்கறிகளை விதைத்த பின் உடனடியாக அதைச் சமைக்க முடிவதில்லை. அது விளைந்த பின் பறிப்பவர் ஒருவர்… கடையில் வியாபாரம் செய்பவர் ஒருவர்… கடைசியில் நாம் கடைக்குச் சென்று அதை வாங்கிச் சமைக்கும் நிலையாக இருக்கின்றது.
இதைப் போல அந்த
உணவைப் பக்குவமாகச் சமைத்துச் சாப்பிடுவது போன்று நாம் எண்ணியதைக் கொண்டு அந்த உணர்வுகளை எல்லாம்
சீர்படுத்திக் கொண்டு வருவது தான் யாம் சொல்லும்
இந்தத் தியானம்.
1.அதற்கு அந்த மெய்ஞானிகள் அருள் சக்திகளைப் பெற்று அதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2.அதுவே நம்மைக் காத்திடும் அரும்பெரும் சக்தியாக அமையும்.