ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

March 7, 2015

மனிதன் விண் செல்லும் நிலையைத் தடைப்படுத்தியவர்கள் அன்று ஆண்ட அரசர்கள்

அன்று ஆண்ட அரசர்கள் அனைவரும் மந்திர சக்தி கொண்டு மனிதனுக்குள் விளையவைத்த உணர்வின் ஆற்றலைப் பிரித்து எடுத்து பல நிலைகளைச் செய்தார்கள்.

இன்று விஞ்ஞானிகள் நாடாக்களில் உணர்வின் நிலைகளைப் பதிவு செய்து,
அந்த அலைகளை வெளியில் அனுப்பப்படும் பொழுது
அதே அலைவரிசையின் தன்மையில் தனக்குள் பிரித்தெடுத்து
அதே உணர்வின் ஆற்றலை இங்கு இயக்குகின்றனர்.

இதைப்போன்றுதான் அன்று அரசர்கள் மெய்ஞ்ஞானிகள் காட்டிய பேருண்மையின் தன்மையை தனக்குள் செயல்படுத்தப்பட்டு தவறான நிலைகளுக்குப் பயன்படுத்தினர்.

மனித உடலில் இருந்தூ வந்ததை அரசர்கள் பல நிலைகளுக்குச் செய்து கூடு விட்டு கூடு பாய்வதும், அதற்காக வேண்டி நாடி சாஸ்திரங்களை எழுதி வைத்தார்கள்.

எந்தத் தத்துவத்தை எடுத்தார்களோ அவர்களுடைய பெயரை முனிவர்களாகவும், ரிஷிகளாகவும் சொல்லி அரசர் காலங்களில் செயல்படுத்தப்பட்டது.

அரசர்கள் முடி துறந்து கடைசிக் காலங்களில் இந்த மந்திரங்களால் ஒன்றும் ஆகவில்லையே என்று எண்ணும் பொழுது மாறுபட்ட நிலைகள் வந்து கூடு விட்டு கூடு பாய்ந்து போர் முறைகளுக்குப் பயன்படுத்தினாலும், போருக்குப்பின் மாற்று அரசர்கள் சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றியபின் அவனும் மந்திர சக்தி பெற்றதனால் அந்த அரசனின் உடலை கூடு விட்டுக் கூடு பாயாதபடி அழித்தனர்.

இதைப்போன்றுதான் முந்தைய காலங்களில் அரச போர் முறைகள் நடந்தன. நாடி சாஸ்திரம், ஜோஸ்யம் இவைகள் எல்லாம் அரச காலங்களில் சிருஷ்டிக்கப்பட்டது.

அதன் வழிகளில் செல்லும் பொழுது எவ்வளவு பெரிய வித்தைகள் கற்றுக்கொண்டாலும், இன்னொரு கூட்டிற்குள் சென்றவுடன் அந்த ஆசை அலைகளுடன் இவருடைய ஆசை அலைகளும் சேர்ந்து இயக்கப்பட்டு,
மாறுபட்ட சுவாசங்கள் ஆகி அந்த உடலிலிருந்து
முழுமை பெறாத நிலையில் சென்ற
ஆத்மாக்கள் எத்தனையோ உண்டு.

 பொருளின் ஆசை கொண்டு மாற்று அரசர்கள் போர் செய்யும் பொழுது தன் உயிராத்மா வெளியில் சென்ற பின் பொருளின் ஆசையினால், தான் அதை அனுபவிக்க வேண்டும் என்ற இச்சை கொண்டு மாற்று உடலுக்குள் புகுந்து சில நிலைகள் செய்தாலும், அந்த உடலில் இருந்து வெளிவராத நிலைகள் வருமொழுது பூத கணங்களும் ராட்சத நிலைகளும் அசுர உணர்வு கொண்ட நிலைகளாக உருபெறுகின்றது.

இதெல்லாம் கடந்த கால அரசர்கள் தன்னை தற்காத்துக் கொள்வதற்கு வேண்டி பல நிலைகளைச் செய்து கொண்டார்கள்.

ஆனால் அவை அனைத்துமே விஷ அலைகளாக மாறி மனிதனுடைய சிந்தனைகள் சீர்குலைந்து மனிதன் விண்செல்லும் நிலைகளைத் தடைபடுத்தி விட்டது.

4000 ஆண்டுகளுக்குமுன் விண் சென்றவர்கள் பலர் உண்டே தவிர இந்த 4000 ஆண்டுகளுக்குள் எந்த மனிதனும் விண் செல்வது சாத்தியமில்லாது போய்விட்டது.

ஆனால், போகர் 5300 ஆண்டுகளுக்கு முன் இயற்கையின் தன்மையை நம் பூமிக்குள் தோன்றிய இயற்கையின் சக்தியைத் தனக்குள் சுவாசித்தார்.

ஒவ்வொரு அணுவின் ஆற்றலும் எவ்வாறு உருவானது என்பதை தனக்குள் சுவாசித்து தன் உணர்வின் அணுக்களுக்குள் ஆற்றல்மிக்கதாக மாற்றி காயகல்ப சக்தியை உருவாக்கினார் போகர்.

தன் உடலுக்குள் அதை உருவாக்கி உடல் அழியா வண்ணம் உருவாக்கினார். தான் இந்தக் கூட்டிலிருந்து பல பாகங்களுக்கும் சென்று பல நிலைகளை அறியக்கூடிய ஆற்றல் பெற்றார்.

சூரியனுடைய காந்த அலைகள் விண்ணில் படர்ந்தாலும் மற்ற கோள்களுடன் தொடர்பு கொண்டு எவ்வாறு அதனுடைய அலைகள் பெருகுகின்றதோ அதைப்போன்றுதான் போக மாமகரிஷி காயகல்ப சித்தியைப் பெற்றார்.

அப்படிப் பெற்று, தன் உணர்வின் அலைகளை காற்றில் கலக்கச் செய்து இந்த உடலில் இருந்தாலும் பல நிலைகளைக் கவர்ந்து சென்று
தன் ஈர்ப்பின் நிலையை
உலகம் முழுவதற்கும் சுழன்று வரும் நிலையை
தனக்குள் உருவாக்கிக் கொண்டார் போகமாமகரிஷி.