ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2013

நம் உடலுக்குள் பதிவாகி இருக்கும் RADIO,T.V. அலைவரிசைகளைப் பற்றிய உண்மைகள்

நாம் எந்த அளவிற்கு ரேடியோவையும், டீ.வி.யும் பார்க்கின்றோமோ, இந்த உணர்வுகள் அநேகமாக நம் எல்லோருக்குள்ளும் பதிவாகிவிட்டது. மனிதனுடைய மூச்சலைகள் கொண்டு கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்து,
இன்று இராக்கெட்டில் இருக்கக்கூடியவனை
இங்கிருந்து இயக்கச் செய்து,
அவன் உடல்நிலைகளைச் சீராக்கச் செய்து,
அவனுக்கு இங்கிருந்து மருந்தைக் கொடுக்கின்றான், விஞ்ஞானி.

இராக்கெட்டில் உள்ளவனும் அங்கே டீ.வி.யைப் பார்க்க்கின்றான், இவனும் இங்கே டீ.வி.யைப் பார்க்கின்றான். அவனுடைய உடலைப் பார்த்து, பரிசீலித்து, இதே கம்ப்யூட்டர் அலைவரிசையில் அவனுக்கு மருந்தைக் கொடுக்கின்றான். 

ஆக, நாம் இங்கே ரேடியோவையும், டீ.வி, யும் நம் புலனறிவாலே பார்க்கின்றோம், கேட்கின்றோம். இந்த உணர்வலைகளிலே ஆற்றல்மிக்க அலைகளைச் செருகிச் செருகி, கொஞ்ச கொஞ்சமாக நம் உடலில் இன்றைக்கு விஞ்ஞான அறிவு கொண்டு.சேர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் சேர்த்துக் கொண்டபின், இன்றைக்கு ஏதாவது சந்தர்ப்பம் வந்தபின், நம் நினைவுகளையே இழக்கக்கூடிய அளவிற்கு, நம்மை இருள் சூழ வைக்கலாம்.

அதாவது, நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ, அது ஒரு நூல் (மிகச் சிறியளவில்) அதிகமாக மாற்றும் பொழுது, நம்முடைய சிந்தனை சிதைகின்றது. கண் தெரியாமல் போகலாம், காது கேட்காமல் போகலாம்.

கண பார்வையைப் போக்குவதா? ஞாபக சக்தியைப் போக்குவதா என்ற எண்ணங்கள் கொண்டு, அதில் பலவிதமாக இன்று ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள். அப்படிப் போக்கினால், மீண்டும் அதை உருவாக்க முடியுமா? என்று இன்றைக்கு பரிசீலனையில் இருக்கின்றார்கள்.

அதில் சில நிலைகளில், முழுமை பெற்றிருக்கின்றார்கள். ஆனால், அந்த அலைகளை அனுப்பும் பொழுது, இன்றைக்கு கம்ப்யூட்டர் அனைத்தும் தாறுமாறாக இயங்கி, இராக்கெட்டுகளில் பொருத்தி வைத்திருக்கப்பட்டுள்ள, மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கும் அணு ஆயுதங்கள் வெடிக்கலாம். அதைப் போல,
இன்று விஷ ஆலைகளில் உள்ள
ஒவ்வொரு இயந்திரங்களையும் இயக்கி,
அவைகளை ஓட்டிக் கொண்டிருப்பது
அனைத்துமே இந்தக் கம்ப்யூட்டர்கள் தான்,

ஆக, இது தாறுமாறாக இயங்கினால், அனைத்துமே சுக்குநூறாகி நாடே நஞ்சாகக் கூடிய நிலைகள் வந்துவிட்டது. இதையெல்லாம் கண்டுபிடித்ததனாலே, வெளியிட முடியாதபடி பயத்தில் இருக்கின்றார்கள்.

ஏதாவது ஆராய்ச்சியில் தவறுதலான நிலைகளில் வெடித்துவிட்டால், இன்றைக்கு என்ன செய்வது? என்று அணுகுண்டுகளையெல்லாம் ஒழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நன்றாக கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். யாம் சொல்லக்கூடியதெல்லாம் பின்பு வரும். யாம் முன்பு சொன்னது எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டிருக்கின்றது. இப்பொழுது சொல்வதையும், நீங்கள் பின்பு பார்க்கலாம்.

ஆனால், அதற்குள் நீங்கள் அந்த மெய்ஞானிகள் அலைகளுடன் தொடர்பு கொள்ளுங்கள்.அந்த உணர்வின் நினைவு கொண்டு, அதிகாலையில் ஒரு பத்து நிமிடமாவது துருவ தியானம் இருங்கள். அம்மா, அப்பாவை வணங்கி, வாரத்தில் ஒரு நாள் கூட்டுக் குடும்ப தியானம் செய்யுங்கள்.

வீட்டை விட்டு எங்கே வெளியில் சென்றாலும், ஆத்ம சுத்தி செய்துவிட்டுச் செல்லுங்கள். உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

எமது ஆசை, நீங்கள் எல்லாம் நன்றாக இருக்க வேண்டும்.
எமது ஆசை, உங்கள் மூச்சு பிறருக்கு நல்லதாக வேண்டும்.
எமது உபதேசம், உங்கள் கஷ்டத்தைப் போக்கச் செய்ய வேண்டும்.
உங்கள் அனைவரது பேச்சும், மூச்சும்
பிறருக்கு நல்லதை உண்டாக்க வேண்டும்.

ஆகவே, ஓம் ஈஸ்வரா என்று உயிரை புருவ மத்தியில் எண்ணுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று வானை நோக்கி எண்ணுங்கள். அந்த மகரிஷிகளின் அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்துங்கள்.

இதை எடுத்து, நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும். எடுப்பதற்குப் பழக்கம் வந்துவிட்டதென்றால், அப்புறம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. தன்னாலே அது எடுத்துக் கொள்ளும். எமது அருளாசிகள்.