ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 17, 2013

மின் உற்பத்தியை நமக்குள் பெருக்கி, ஞானிகளின் ஆற்றல்மிக்க சக்தியை எளிதில் பெறலாம்

நாம் நல்ல நிலைகளில் இருக்கும் பொழுதே, துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெறுவோம். அந்த ஞானியர்கள் மனிதர்களாக வாழ்ந்த காலங்களிலே, இந்தக் காற்றிலே அவர்கள் விட்ட மூச்சலைகள் இங்கே சுழன்று கொண்டிருக்கின்றது.

இதே போன்று, அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலங்களிலே உயிராத்மாவிலே சேர்த்துக் கொண்ட உணர்வின் அணுக்கள், இன்றைக்கும் சப்தரிஷி மண்டலங்களிலிருந்து வந்து கொண்டிருக்கின்றது.
அத்தகைய ஆற்றல்களை நாம் பெற்று, நம் உடலிலே அதை ஈர்த்துக் கொண்டால்தான், நாம் நினைவுபடுத்தும் பொழுது, அந்த ஆற்றல்மிக்க நிலைகள் வரும்.

இப்பொழுது நாம் சைக்கிளில் டைனமோவைச் சுற்றும் பொழுது, அதிலிருக்கக்கூடிய மேகனட்டுக்குத் தகுந்த மாதிரித்தான், கரண்டை அது உற்பத்தி பண்ணுகின்றது.

ஒரு டீசல் இஞ்சினை வைத்து, எந்த அளவுக்கு மேக்னட்டைச் சுழற்றுகின்றோமோ, அதற்குத் தகுந்த மாதிரி பல விளக்குகள் (TUBE LIGHT, etc.) எரிகின்றது.

அதைப் போன்று நீர் மின் நிலையங்களில், நீர் சக்தியினுடைய நிலைகள் அதிகமாக இருக்கும் பொழுது, அதற்குத் தகுந்த மாதிரி
காந்த சக்தி அதிகமாகக் கூடும் பொழுது,
மின் உற்பத்தி அதிகரிக்கின்றது.
அதை வைத்து, பல தொழிற்சாலைகளையும், இயந்திரங்களையும், சக்தி கொண்ட எல்லா மோட்டார்களையும் இயக்க முடிகின்றது.

இதே போல நம் உயிரின் துடிப்பான நிலைகளில் அது இயங்கிக் கொண்டிருந்தாலும், நம் உடலுக்குள் காந்தச் சக்தியைக் கூட்டிக் கொண்டு,
நம் எண்ணத்தைத் துரிதப்படுத்தி
காந்தத்தை உற்பத்தி செய்து கொண்டால்தான்,
சக்தி வாய்ந்த ஞானிகளின் ஆற்றல்மிக்க எண்ண ஒலிகளை நாம் பெறமுடியும்.

வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் நமக்கு எதிர்நிலையான சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றதோ, அந்த நேரத்தில் நம் எண்ணத்தைப் புருவ மத்திக்குக் கொண்டு வந்து, துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி,
உயிர் வழியாகச் சுவாசிக்கும் (இழுக்கும்) பொழுது,
அதை எளிதில் பெறக்கூடிய தகுதியை நாம் பெறுகின்றோம்.