ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 13, 2013

நமது பிரார்த்தனை எதுவாக இருக்கவேண்டும்?

உங்களை நீங்கள் நம்புங்கள். உயர்ந்த ஆற்றலின் தன்மையை நாம் பெறுவோம் என்று உறுதி கொள்ளுங்கள்.
மகரிஷிகளின் அருள் ஒளியைப் பெறுவோம்.
மனித வாழ்க்கையில் வந்த இருளை நீக்குவோம்.
எங்கள் எண்ணம் அனைத்தும் ஒளி நிலை பெறும்.
எங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும்.
எங்கள் மூச்சும் பேச்சும், எங்களுக்குள் இருக்கும் இருளை மாய்க்கும்
என்ற இந்த உணர்வின் தன்மையை நீங்கள் எடுத்துச் சுவாசியுங்கள்.
நிச்சயம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

நாளை வரும் விஞ்ஞான உணர்வின் தன்மைகள் உங்களைத் தாக்காது. அந்த விஞ்ஞானத்தை உணர்வின் அலைகளை நீங்கள் ஆட்டிப்படைக்கலாம்.

இதை நீங்கள் பெறவேண்டும் என்று உங்களுக்குள் உங்களை ஆண்டுகொண்டிருக்கும் ஈசனான அந்த உயிரை வேண்டி, யாம் சொன்ன இந்த உயர்ந்த உணர்வின் தன்மைகள் அனைத்தும், உங்கள் உடலுக்குள் விளைய வேண்டும் என்று யாம் பிரார்த்திக்கின்றோம்.

அந்த மெய் ஒலியின் அருள் ஒளிகள் உங்களுக்குள் அந்த ஈசனான உணர்வுக்குள் பட்டு, அந்த உணர்வின் அலைகள் அங்கே மகிழ்ந்திடும் நிலைகள் பெறவேண்டுமென்று பிரார்த்திக்கின்றோம்.

இதைப் போன்று உங்கள் உயிரான ஈசனிடம் நீங்களும் இதைப் போன்று வேண்டி, உணர்ந்து, அந்த மகரிஷியின் அருள் ஒளியைப் பெறவேண்டும் என்று,
உங்கள் உயிருக்குள்,
உங்கள் உடலுக்குள்,
நீங்களும் பிரார்த்திக் கொள்ளுங்கள்.

உயிர் அமைத்துக் கொண்ட கோட்டையான, இந்த வீடான, உங்கள் உடலில் அமைந்திருக்கும் நல்ல உணர்வின் தெய்வ குணங்களுடைய நிலையை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இடும் மூச்சலைகள், உங்கள் உடலுக்குள் இருக்கக்கூடிய தெய்வ நிலைகளுக்கு நல்ல ஆராதனையாக ஆகவேண்டும்.

அருள் மகரிஷிகளின் அருள் மணங்களைச் சுவாசித்தவுடனேயே, உங்கள் உடல் மகிழ்கின்றது. அவை நமக்குள் இருக்கக்கூடிய அந்த தெய்வ குணங்களின் மகிழ்ச்சியே ஆகும்.