ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 10, 2013

இன்று புது வகையான காய்ச்சல், பல நோய்கள் வரக் காரணம் என்ன?

1. விஞ்ஞானிகள் உருவாக்கிய அணு ஆயுதத்தால் வரும் விளைவுகள்
பூமிக்குள் அணுகுண்டுகளை மறைத்து வைத்திருந்தாலும், இன்று விண்ணிலே ஏவும் இந்த ரேடியோ கதிரியக்கச் சக்தியினுடைய நிலைகள்
பூமிக்குள் ஊடுருவி,
எங்கே பதித்திருந்தாலும் துளையிட்டு,
து வெடிக்கும் நிலைகள் வந்துவிட்டது.

ஆக, அணு ஆயுதங்களை முதலிலே ஒழிக்க வேண்டுமென்று ஒப்பந்தம் பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். உலகைக் காப்பதற்காக அல்ல, அவன் தன் நாட்டைக் காப்பதற்காக இந்த வேலையைச் செய்கின்றார்கள்.

ஆனால், இன்றைக்கு அதை அழிப்பது மிகவும் சிரமம், கவனமாக வைத்துக் கொள்லுங்கள். நாம் எந்த நிலையில் இருக்கிறோம்? என்பதைக் கவனித்துப் பார்க்க வேண்டும்.

இதை யாம் ஏற்கனவே 10 வருடத்திற்கு முன்பிருந்தே சொல்லி வந்தோம். (உபதேசித்தது 1989). யாரும் சட்டை செய்யவில்லை. இப்பொழுது பத்திரிக்கையில் போட்ட பின்னர், விஞ்ஞானி சொல்கிறான் என்று அதை நம்புகின்றோம்.

அன்று மெய்ஞானிகள், இந்த உணர்வுகள் இப்படித்தான் இருக்கும் என்று சொன்னதை ஏற்றுக்கொள்வதற்கு ஆள் கிடையாது.
2. இன்று புது வகையான காய்ச்சல், பல நோய்கள் வரக்காரணம் என்ன?
ஏனென்றால், நாம் T.V.ஐப் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.
இதனால் நம்மைப் பைத்தியக்காரனாக்கி,
அந்த நேரத்தில் சிந்தனையை இழக்கச்செய்து,
ஒரே அலைவரிசையில்
விஷத்துகள்களைப் பரப்பி வைத்திருக்கின்றார்கள்,

இந்தக் காற்றலைகளிலே நாம் எதையெல்லாம் பதிவு செய்திருக்கின்றோமோ, அதை நினைவுபடுத்த சில அலைகளை வைத்திருக்கிறான். அது நம்மைத் தூண்டி நினைவுபடுத்தி, இயக்கத் தொடங்கும்.

இப்பொழுது பெரும்பாலானபேருக்கு காய்ச்சல் வரும் பொழுது ஜன்னி வரும். குழந்தைகளானாலும், பெரியவர்களானாலும் நிறைய பேருக்கு ஜன்னி வரும்.

அவர்கள், சந்தர்ப்பத்தால் எடுத்துக்கொண்டு நுகர்ந்த இந்தச் சக்தியாலே வருவதனாலே இவையெல்லாம்
விஷக்காய்ச்சல், அந்தக் காய்ச்சல், இந்தக் காய்ச்சல்
என்று நீங்கள் நினைப்பீர்கள்.

ஆனால், இவையெல்லாம் விஞ்ஞானத்தினாலே வரக்கூடிய சில அழிவுகள். இந்தக் காய்ச்சல் வருவதற்கு முன்னாடி, ஜன்னி போன்று சில உறுப்பு மாற்றங்களெல்லாம் ஏற்பட்டுவிடும்.

இப்பொழுது யாம் சொல்லிக் கொண்டே வருகிறோம். ஏதோ கேட்டோம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள். அந்த மெய்ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதியச் செய்வதற்குத்தான், இதைத் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கின்றோம்.


ஆக, நீங்கள் கவனமாகக் கேட்டுக் கொண்டேயிருந்தால் போதும். தெரிந்து ஒன்றும் எடுக்கப் போவதில்லை. இந்த வித்து உங்களுக்குள் பதிவானபின், “ஓம் ஈஸ்வரா” என்று எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தி பெறும் பொழுது அது உங்களுக்குள் வளரத் தொடங்கும். உங்களைக் காக்க, இந்த உணர்வினுடைய நிலைகள் வளரும்.