ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2013

நமக்கு முன் இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது?

1. நமக்கு முன் இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது?
விஞ்ஞான அறிவால், விண்ணிலும் அணுக்கதிரியக்க அணுக்களைச் சிதறவிட்டனர். நம் புவிஈர்ப்புக்குள்ளும் பல அணுகதிரியக்க அணுக்களின் சிதறல்கள் இருக்கின்றன. பூமிக்குள்ளும் கதிரியக்கங்கள் சென்றுவிட்டன.

இனி காணாத பிரபஞ்சத்திற்குள் சென்றிருந்தாலும், ஒரு கோளுக்குள் இந்தக் கதிரியக்கங்கள் ஊடுருவச் செய்யப்படும் பொழுது, சிறிது காலத்தில் மனிதனின் எண்ண அலைகள் சிதறுண்டு, இந்தப் பிரபஞ்சமே இருண்ட நிலையில் தடுமாறப் போகின்றது.


அதற்குள் நாம் நமக்கு முன் காட்டிய அந்த துருவ மகரிஷியின் எண்ண ஒலியுடன் கூடிச் செயலாக்கி, அந்த உணர்வின் ஆற்றலைப் பெறுவதற்கு மறந்துவிடாதீர்கள்.
2. மக்களைக் காக்க போகரின் அருள் சக்தியைப் பெறுவோம்
இன்றைய விஞ்ஞானத்தினால் வரும் பேரழிவிலிருந்து,
மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்றும்,
ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும்
தெய்வீக அருள் ஒளி வீசவேண்டும்
என்றும் தியானியுங்கள்.

போகர் எப்படி உலகம் முழுவதும் சுற்றி, தன் உணர்வின் அலையைப் பாய்ச்சினாரோ, அந்த அலைகள் இன்றும் உண்டு. அந்த அலையைத்தான், தொடர் வரிசையாக, அவர் அருளாசி பெற்று, அவருடைய அருளாசியை, உங்கள் ஒவ்வொருவருடைய உணர்வுகளிலும் நல்ல வித்தாகப் பதியச் செய்கின்றோம்.

அந்த வித்தின் சக்தியை நீங்கள் கூட்டிக்கொள்ளவேண்டும் என்றால், உங்களை நீங்கள் நம்பவேண்டும்.

மனிதனாகப் பிறப்பது மிக மிக அபூர்வம். இந்த நிலையில்,  நீங்கள்  ஒவ்வொருவரும் போகமாமகரிஷியின், அருள் ஒளி பெற, ஏங்கித் தியானியுங்கள்.

போகமாமகரிஷியின் அருளைப் பெற்று,
வாழ்க்கையில் வந்த துன்பங்களை நீக்கி,
நம் மூச்சும் பேச்சும் உலக மக்களுக்கு
நன்மை பயக்கும் நிலைகளில்,
நாளைக்கு வரக்கூடிய விஷத்தன்மைகளிலிருந்து நீக்கி,
விஞ்ஞானத்தினால் வரக்கூடிய பெரும் விஷமான நிலைகளிலிருந்து,
பேரழிவிலிருந்து, மக்களைக் காப்போம்,
நம்மை நாம் காப்போம்  என்ற உறுதி கொள்வோம்.

நீங்கள் அனைவரும் இந்த சக்தியைப் பெறவேண்டும் என்று, அந்த போகமாமகரிஷியின் அருள் வித்தை, இப்பொழுது உங்களுக்குள் பதியச் செய்திருக்கின்றது.  இந்த வித்திற்கு நீர் ஊற்றும் முறைதான் நாம் சொல்லும் தியானம்.