
இச்சை… கிரியை… ஞானம்…!
ரோட்டிலே சண்டை போடுகின்றார்கள்… ஏன் சண்டை போடுகின்றார்கள்…? என்று இச்சைப்படுகின்றோம். நுகர்கின்றீர்கள்… கிரியை ஆகின்றது. பார்
நடு ரோட்டில் சண்டை செய்கின்றான் பார்…! என்பீர்கள்
அப்போது யார் பேசுவது…? அந்த உணர்வு உங்களை இயக்குகின்றது. அது கிரியை ஆகி அதன் ஞானப்படித் தான் நீங்கள் பேச ஆரம்பிக்கின்றீர்கள்.
நான் இங்கே உபதேசம் கொடுத்துக்
கொண்டிருக்கின்றேன்.
1.அந்த அருளைப் பெற வேண்டும் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று பதிவு செய்து விட்டால்
2.இதை நீங்கள் எண்ணும் பொழுது அந்தச் சண்டை போட்ட உணர்வுகள் இயங்காதபடி அதை அமுக்கித் தடைப்படுத்தி
விடும்.
3.துருவ நட்சத்திரத்தின்
சக்தியை இச்சைப்படும் பொழுது இது முதலில்
புகுந்து விடுகின்றது.
போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று யார் முந்திப் புகார் (COMPLAINT) செய்கின்றார்களோ அவர்களுடைய உணர்வுகள் தான் எடுபடும்.
ஆக நம் உயிர் இருக்கும் இடம் போலீஸ் ஸ்டேஷன்…! இவர்கள் உணர்வை உள்ளே விட்ட பின் என்ன ஆகின்றது.
1.உள்ளுக்கே சென்று அந்த உணர்ச்சியைத் தூண்டுவதற்கு முன்னாடி
2.அந்தத்
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று தடுத்து விட்டால்
3.இங்கே உயிரிடம் ரிப்போர்ட் கொடுத்து விடுகின்றோம்.
4.கெட்டது உள்ளே வராதபடி அதை துரத்துகின்றது… உள்ளே போகாதபடி தடுக்கப்படுகிறது.
சொல்வது அர்த்தமாகிறதல்லவா.
உங்கள் நண்பனைக்
காண வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்.
பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் ஆளைக் காணோமே…? எங்கே…? என்று கேட்பீர்கள்.
ஐயோ…! உங்களுக்குத் தெரியாதுங்களா…? அவர் உடல் நிலை சரியில்லாதபடி படுத்திருக்கின்றார் என்று சொல்கிறார்கள்.
இதைக்
கேட்ட பின் பதிவாகின்றது… அந்த உணர்வைச் சுவாசிக்கின்றீர்கள் மூஷிகவாகனா.
1.அடுத்த கணம் நண்பரைப் பார்க்க அந்த உணர்வு இங்கிருந்து நம்மை அழைத்துச் செல்கின்றது.
2.அந்த உணர்வுகள் தான் உணர்ச்சியாக எண்ணங்களாக
சொல்லாக வந்து இழுத்துச் செல்கின்றது.
இச்சை… கிரியை…
ஞானம்…! அவனைக்
காண வேண்டும் என்று ஞானத்தை ஊட்டுகின்றது.
வாழ்க்கையில் இதையெல்லாம் புரிந்து கொள்வதற்குக் காவியங்களைப் படைத்து நம் உடலுக்குள் ஒவ்வொரு உணர்வும் என்ன செய்கின்றது…? நம்மை எப்படி இயக்குகின்றது…? நாம் இந்த வாழ்க்கையில் எப்படிச் செல்ல வேண்டும்…? என்று தான் கோவிலில் வைத்துக்
காட்டுகின்றார்கள்.
அதை நாம் புரிந்து கொள்ள முடியவில்லை.
நண்பனைப்
பார்க்கின்றோம். அவர் என்னால் முடியவில்லை என்று சொல்லும் பொழுது.. பாசத்தால் நாம்
கேட்கப்படும் போது என்ன நடக்கிறது…? அதைக்
கவர்கின்றீர்கள்… இச்சைப்படுகின்றீர்கள்… நீங்களும் சேர்ந்து அழுக ஆரம்பிக்கின்றீர்கள்.
அந்த ஞானத்தின் தன்மை கொண்டு இப்படி ஆகிவிட்டதா…? நேற்று நன்றாகத் தானே இருந்தாய்
இன்று இப்படி ஆகி விட்டாயா…? என்ற ஞானத்தைத் தான் பேசுகின்றது.
ஆகவே இந்த வாழ்க்கையின் நிலைகளில்
1.நம் ஆறாவது அறிவை
வைத்து அந்த மகரிஷிகளின்
அருள் சக்திகளை எடுத்து
2.இதுபோன்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் வரும் தீமைகளை
உடலுக்குள் இயக்கச் சக்தியாக மாறாதபடி நாம் தடுத்துக் கொள்ள
வேண்டும்.