
யாம் பதிவு செய்வதை எல்லாம்… “உள் உணர்வால்” அறிய வேண்டும் என்ற ஒரு கட்டாயத்திற்கு வாருங்கள்
வானியல்
தத்துவத்தில் 27 நட்சத்திரங்கள்
வெளிப்படுத்தும் சக்திகளில் வெள்ளிக்கோள்
ஒளியான உணர்வுகளை எடுத்துக் கொள்கின்றது. கேதுக் கோள் விஷத்தை எடுத்துக் கொள்கின்றது. கருகிய புகைகளை
ராகுக் கோள் எடுக்கிறது. செவ்வாய்க் கோள் நாதங்களை எடுத்துக் கொள்கின்றது.
இந்த
உணர்வலைகள் பிரபஞ்சத்திற்குள் பரவப்படும் பொழுது அதனதன் சக்தி கொண்டு அதனதன் நிலைகளை எடுத்துக் கொள்கின்றது.
இதைப் போன்று தான் மனிதர்கல் நமக்குள்ளும் ஒரு உணர்வின்
தன்மை உயிருடன் மோதி ரத்தத்தில் கலக்கப்படும் பொழுது இணைகிறது.
1.பித்த
சுரப்பிகள் பித்தத்தைக் கவர்கிறது… விஷத்தன்மைகள்
அனைத்தையுமே அது கவர்கின்றது.
2.நுரையீரல் கல்லீரல் மண்ணீரல் அந்த அணுக்கள் அதைச்
சுவாசித்து அதனின் மலங்களாக அந்தக் கூட்டைக் (உறுப்பு) கட்டுகிறது.
வியாழன்
கோள் சனிக் கோள் போன்று நம் உடலில் உறுப்புகள் எப்படி மாறுகின்றது…? பிரபஞ்சத்தைப் போல உடலுக்கு உயிர் சூரியனாலும் அது
நட்சத்திரம் தான். இந்தப்
பிரபஞ்சத்திற்குச் சூரியன் ஆனாலும் அகண்ட அண்டத்திற்கு அது நட்சத்திரம் தான் என்று குரு காட்டுகின்றார்.
இந்தப் பிரபஞ்சம் எப்படி இயக்குகின்றதோ உடல் ஒரு பிரபஞ்சம். 2000 சூரியக் குடும்பங்கள்
அது ஒவ்வொரு பிரபஞ்சமாக இருக்கின்றதோ ஒவ்வொன்றும் வெளிப்படுத்துவதை ஒன்றுடன் ஒன்று கலவையாகி எடுப்பதும் இப்படி ஒவ்வொன்றும்
எடுத்து வளர்த்துக் கொள்கின்றது.
ஒவ்வொரு
மனிதனை எடுத்துக் கொண்டாலும் அதுவும் ஒவ்வொன்றும் தனிப்
பிரபஞ்சம் தான். அது இயற்கையில் கிரேதா யுகம்.
1.ஆனால் திரேதா யுகம்
(உடலுக்குள்) பிறருடைய உணர்வுகளை நுகரப்படும் பொழுது உணர்வின்
எண்ணங்கள் எப்படி மாறுகின்றது…?
2.உணர்ச்சிகள் உடலுக்குள் எப்படி மாறுகின்றது…?
நட்சத்திரங்கள்
பால்வெளி மண்டலங்களாக மாற்றப்படும்
பொழுது இந்த உணர்வுகளை மாற்றப்பட்டு சூரியன் தெளிவாக எடுத்துக் கொள்கின்றது. இதைப் போல் மனிதனான நாம் நம் ஆறாவது அறிவின் தன்மை கொண்டு பிறரின்
உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து ரத்தத்தில்
கலக்கப்படும் பொழுது ஒவ்வொரு உறுப்புகளும் அந்த விஷத்தின் ஆற்றலை எடுக்கின்றது… அதனதன் உணர்வுகளைப் பிரித்து எடுத்துக் கொள்கிறது.
வெள்ளிக்
கோள் எப்படி ஒளியின் தன்மை
பெறுகின்றதோ இதைப்போல
1.நம் உணர்வின் அறிவின் தன்மையை நமக்குள் அறிவு ஒளி என்று உணர்த்தும்
2..நமது அணுக்களை உருப் பெற
வைக்கும் “சிறுமூளை பாகம்…” அதை இயக்குகின்றது…
3.உணர்வின்
அறிவாக எடுத்து நமக்குத் தெளிவாக்குகின்றது.
சுவாசிப்பது
நுரையீரலுக்கு வரும் பொழுது அதை எப்படிச் சுத்தமாக்குகின்றது…? கல்லீரல் மண்ணீரலுக்கு
வரப்படும் பொழுது பிரபஞ்சத்தைப் போன்று எவ்வாறு சீராக
இயங்குகின்றது...?
சூரியன்
முதலில் வளர்ச்சி ஆவதற்கு முன்… ஒரு
பிரபஞ்சமாக ஆவதற்கு முன்… எப்படி உயிரணு தோன்றிப் புழுவில் இருந்து
மனிதனாக வரும் வரையிலும் ஒவ்வொரு அங்கங்கள் உறுப்புகள் மாறி மாறி… மாறி மாறி… ஒரு பிரபஞ்சம் என்ற நிலைகள் முழுமை அடைகின்றது.
சூரியன்
எப்படி நஞ்சைப் பிரித்து நல்ல உணர்வுகளை எடுத்துக்
கொள்கின்றதோ இதைப் போல மனிதனுக்குள் இருக்கும் ஆறாவது அறிவு
நாம் நுகருவதற்குள் இருக்கும் நஞ்சைப் பிளந்து நல்ல உணர்வாக எடுத்துக் கொள்ளும் அறிவாகப்
பெற்றதுதான் இந்த உடல் என்ற நிலையைக் குருநாதர் தெளிவாக்குகின்றார்.
ஒவ்வொரு
மனிதனும் ஒரு பிரபஞ்சம்…! ஒவ்வொரு நட்சத்திரத்தின்
உணர்வு கொண்டு அதன் வழியில் எதிர்நிலையாகி இயக்கிப் பொறிகளை உருவாக்கி அதற்குத் தக்க உடல்களை மாற்றி
மாற்றி வந்தது.
1.யாம் உபதேசிக்கும் அருள் உணர்வுகளை உங்கள் கண் கருவிழி பதிவாக்குகின்றது.
2.அதை நுகரும் தன்மை வரப்படும் பொழுது அதை மீண்டும் எண்ணினால்
3.அதைப் பெற வேண்டும் என்ற உணர்வு எடுக்கப்படும்
பொழுது
4.கண்ணுடன் சேர்ந்த காந்தப்
புலன் அதைக் கவரும் தன்மை வருகின்றது.
5.கவர்ந்த
உணர்வு உயிரிலே படும் போது அந்த உணர்ச்சிகள் தெரியும்.
இதற்கு
முந்தி… மனிதன் எண்ணத்தில் எடுத்துக் கொண்ட
உணர்வு கொண்டு தெய்வங்களை வணங்கப்படும்
பொழுது அது எந்தெந்த உருவத்தைக் கண்டோமோ
அது அலைகளாக மாறுகின்றது.
அதே தெய்வத்தின் உணர்வை எடுக்கப்படும் பொழுது ஒரு
மனிதனில் பெற்ற அந்த உணர்வினைப் பெற்றால் அதே மனித
உணர்வு வரப்படும் பொழுது
1.அவனுக்குள் வளர்த்துக் கொண்ட உணர்வு ஆவியாகவும்
பேயாகவும் தெய்வமாகவும் காட்சி தருகின்றது.
2.இது மனிதனின் உடலில் விளைந்தது.
ஆனால்
இப்போது ஞானிகளால் உருவாக்கப்பட்ட சப்தரிஷி மண்டலங்களின் உணர்வினை அறிவதற்கு உங்களுக்குள் பதிவு செய்கின்றோம். சூரியனால் கவரப்பட்ட சூனியப் பிரதேசத்திலிருந்து
அந்தச் சூரியன் எப்படி வளர்ந்தது…?
என்ற நிலையில் அந்தச் சூனிய மண்டலம் ஆதியிலே எப்படி உருவானது…? என்ற நிலைகளை நீங்கள் அறிய முடியும்.
1.அதை நுகரப்படும் பொழுது அறியும் ஆற்றல் வரும்… அறிய
முயற்சி எடுங்கள்.
2.அகண்ட அண்டத்தின் உணர்வுகளை
உங்களுக்குள் பதிவு செய்கின்றோம்.
அப்படி
பதிவானாலும் சில நேரங்கள் சந்தர்ப்ப பேதங்களில் யாம்
பதிவு செய்த உணர்வுகள் உங்களுக்குள் உண்டு. “அந்தப் பதிவின் துனை
கொண்டு” நீங்கள் மீண்டும் எண்ணி எடுக்க முடியும்.
1.ஆனால் பல விதமான உணர்வுகள் ஆன்மாவிலே சேர்ந்திருக்கும் பொழுது
சேர்க்கப்படும் பொழுது
2.இந்த உணர்வுகள் கலந்த பின் உடலின் ஈர்ப்பு அதிலே அதிகமான பின் பிற மண்டலங்களிலிருந்து வருவதைத் தடுக்கும்.
3.தடுத்தாலும் எப்படியும் பெற வேண்டும் என்று உள் உணர்வைச் செலுத்தி
4.அதை எல்லாம் பெற வேண்டும் என்ற ஏக்கத்தில் இருந்தால்
நிச்சயம் நீங்கள் பெற முடியும்.
5.குருநாதர் எனக்குள் பதிவு செய்தது போன்றே
உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
இதை
நீங்கள் சீக்கிரம் வளர்த்துக் கொண்டால் அகண்ட அண்டம் எப்படி
ஆனது…? என்ற அந்த உண்மையின் இயக்கத்தை
அதில் சூரியக் குடும்பம் ஒரு பிரபஞ்சம் எப்படி உருவானதோ…? இதைப் போன்று பல சூரியக் குடும்பங்கள் எப்படி
உருவானதோ அதை எல்லாம் உங்களுக்குள் உணர்வின் அறிவாக நீங்கள் தெளிவாக இது உதவும்.
1.குருநாதர்
எனக்குக் காண்பித்த முறைப்படி வழிப்படி உங்களுக்குள்ளும் இதைப் பயிற்சியாகக் கொடுக்கின்றேன்.
2.நீங்கள் தியானத்தின் மூலம் நிச்சயம் பெற முடியும்… உணர முடியும்.