ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 2, 2026

ஞானகுரு உபதேசிப்பதைப் புரியக்கூடிய முறை

ஞானகுரு உபதேசிப்பதைப் புரியக்கூடிய முறை

நாம் தெரிந்து கொள்வதற்காக ஞானிகள் தத்துவ நிலைகளில் எல்லாவற்றையும் தெளிவாக்கி உள்ளனர். ஞானிகள் சொன்னதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
1.சாமி என்னவோ சொல்கின்றார்… “நமக்குப் புரியவில்லை என்று சொன்னால் புரியாமலே போய்விடும்.
2.அதை நாம் புரியும் சக்தி பெற வேண்டும் என்று ஏங்கிப் பெற்றால்
3.இந்த உணர்வுகள் மீண்டும் உங்கள் நினைவிற்கு வரப்படும் பொழுது
4.அதனின் உண்மையை அறியும் ஆற்றல் பெறுவீர்கள்.
 
ஞானிகள் உணர்த்திய அருள் வழி கொண்டு நாம் மனிதனாகப் பிறந்த வழியைத் தெரிந்து கொண்டால் இந்த மனித வாழ்க்கையில்
1.எதைச் சேர்க்க வேண்டும்…?
2.எதை வளர்க்க வேண்டும்…?
3.எதைச் சுவாசிக்க வேண்டும்…?
4.எதைக் கணங்களுக்கு அதிபதியாக்க வேண்டும்…? என்ற உணர்வுகளை உங்களில் பெற முடியும்.
 
இந்த மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற்று மகிழ்ந்து வாழ்ந்து  முழுமை பெற முடியும்.
 
நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்ந்து வாழச் செய்து மகரிஷிகள் சென்றடைந்த அந்தச் சப்தரிஷி மண்டலத்தை நாம் அனைவரும் அடையலாம். மனிதனாகப் பிறந்ததின் பலனை ஒவ்வொருவரும் அடைய முடியும்.
 
யாம் நிறைய அருள் உபதேசங்களை உங்களுக்குக் கொடுத்திருக்கின்றோம்.  
1.அருள் உணர்வுகளை எப்படி உங்களிடத்தில் இயக்கமாக்க வேண்டும்…?
2.தீமைகளை எப்படித் தடுக்க வேண்டும்…? என்று யாம் அடிக்கடி உங்களுக்கு உபதேசித்திருக்கிறோம்.
3.சாமி சொன்னார்கள்…! ஆனால் மறந்து விட்டது…! என்று இருக்கக் கூடாது. 
 
அருள் உணர்வுகளை உங்களுக்குள்  ஆழமாகப்  பதிவு”  செய்து  கொள்ள வேண்டும். இந்த விளக்கங்களை நாம் தெரிந்து கொண்டால் ஒவ்வொரு நிமிடமும் தீமைகள் வராதபடி தடுக்கலாம்.