ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 1, 2026

“நம் எண்ணத்தின் முகப்பில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே வைத்திருக்க வேண்டும்

“நம் எண்ணத்தின் முகப்பில்” துருவ நட்சத்திரத்தின் சக்தியை எப்போதுமே வைத்திருக்க வேண்டும்


ஒவ்வொரு நேரத்திலும் யாம் உங்களுக்கு உபதேசிக்கும் உணர்வுகள் கொண்டு தீமைகள் வந்தால் தீமைகளைக் கேட்டறிந்தாலும் அடுத்த கணம் அந்தத் தீமை வளராது மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணி விட்டு எல்லோருக்கும் நீங்கள் ஞானத்தைப் போதிக்க முடியும். வர்கள் தீமைகள் உங்களுக்குள் புகாது தடுக்க முடியும்.
 
1.ஒரு கம்ப்யூட்டரில் பதிவாக்கி ஆணையிட்டு அதைச் செயல்படுத்துவது போல்
2.வீட்டை விட்டு நீங்கள் எங்கே சென்றாலும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற வேண்டும் என்று
3.இதை எண்ணி எடுத்துக் கொண்டால் இது நமக்கு முன்னாடி வந்து…” வலிமை பெறுகின்றது.
 
எதிரிலே ஒரு பஸ்ஸோ மற்ற வாகனங்களோ வந்தாலும் இந்தத் துருவ நட்சத்திரத்தின் உணவுகள் அதிலிருந்து உங்களை ஒதுக்கிச் செல்லச் செய்யும்.
 
ஆனால் காலையில் எழுந்து நாம் தினசரி அலுவல்களைச் செயல்படுத்தும் போது பையன் இப்படி எல்லாம் செய்தான் பக்கத்தில் உள்ளவர்கள் தொல்லை செய்கின்றார்கள் வேலை பார்க்கும் இடத்தில் தொல்லையாக இருக்கிறது என்று
1.காலையில் எழுந்திருக்கும் பொழுதே இப்படிச் சோர்வாக எண்ணி இந்த உணர்வுகள் முன்னணியில் வந்து விட்டால்
2.நாம் ரோட்டில் நடந்து சென்றால் முன்னாடி சைக்கிள் வருவதும் தெரியாது அல்லது பஸ் வருவதும் தெரியாது.
3.நம்மை அறியாமலே விபத்தாகிறது.
 
எதன் உணர்வு நம் சிந்தனையைக் குறைக்கச் செய்கிறதோ அந்த உணர்வின் செயலே வாழ்க்கையில் நடந்து விடுகிறது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
 
சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் அது முன்னணியில் வந்து விடுவதால் இவ்வாறு இயக்கி விடுகின்றது.
 
அதையெல்லாம் மாற்றி வாழ்க்கையில் வெளியில் செல்லும் போதெல்லாம் துருவ நட்சத்திரத்தின் வலிமையான உணர்வுகளை எடுத்து முன்னாடி செலுத்திக் கொள்ளுங்கள்.
1.தீமை வந்தால் மற்ற இடர்பாடுகள் வந்தால் விலகி செல்லும் உணர்வுகளாக வரும்.
2.சிந்திக்கும் ஆற்றலும் தெளிந்து வாழக்கூடிய உணர்வுகளை ட்டிக் கொண்டேயிருக்கும்.
 
அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத் தான் பதிவு செய்து கொண்டே இருக்கின்றேன். எழுத்திலே படித்தாலும் புரியவில்லை என்று சென்று விடுவார்கள்.
 
ஆனால்
1.எமது உபதேசத்தைக் கூர்ந்து கவனிக்கும் பொழுது உங்களுக்குள் இது பதிவாகின்றது.
2.அப்படிப் பதிவாக்கி விட்டால் நிச்சயம் உங்களால் நல்ல குணங்களைக் காக்க முடியும்.
3.துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற முடியும்… அதற்கு குரு அருள் உறுதுணையாக இருக்கும்.
 
என்றும் தெளிந்த நிலையினை நீங்கள் பெற முடியும் பெறுவீர்கள் நிச்சயம் பெற்று விடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் தான் இந்த அருள் வாக்குகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன்.