
எதிர்த்துத் தாக்கும் உணர்வு கொண்டால் நம்மைக் காக்கும் நல்ல உணர்வுகளை இழந்துவிடுவோம்
நாம் எந்தத் தவறும் செய்ய வேண்டியதில்லை. ஒரு குழந்தை தவறிக் கீழே விழுந்து விட்டால் பாசத்தாலே அதை உற்றுப் பார்க்கின்றோம். அவன் அடிபட்டு வேதனைப்பட்டு வெளிப்படுத்தும் மூச்சலைகளைக் கண் கொண்டு பார்க்கும் பொழுது
1.அந்த உணர்வுகளை நம் சுவாசத்தின் வழி இழுத்துக் கொள்ள நேர்கின்றது.
காரணம் அவன் வெளிப்படுத்தும் மூச்சலைகளைச் சூரியனுடைய காந்த சக்தி கவர்கின்றது. நினைவு கொண்டு அதைப் பார்க்கப்படும் பொழுது அந்த உணர்வு எனக்குள் ஊடுருவி வேதனையைத் தூண்டச் செய்து அதைக் காட்டி அவனைக் காக்கும்படிச் செய்கின்றது.
அதே சமயத்தில் அங்கே ஒரு போக்கிரி வருகின்றான் என்று வைத்துக் கொள்வோம்… அவன் அசுர குணங்கள் கொண்டு இந்தக் குழந்தை அடிபட்டதைப் பார்த்தபின் மகிழ்ச்சி அடைகின்றான். இவனுக்கு இப்படித்தான் வேண்டும் என்று சொல்கின்றான். நல்லதைக் காக்கும் எண்ணம் அவனுக்கு இல்லை.
ஆனால் அதைப் போல எண்ணம் கொண்டவன் ரோட்டிலே நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராது திடீரென்று ஒரு பஸ் வேகமாக வருகின்றது. இவனை மோதி விடும் என்ற நிலை வரும் பொழுது
1.இவனுக்குள் இருக்கும் அசுர சக்தி என்ன செய்கின்றது…?
3.ஆனால் அந்த பஸ் இவன் மீது மோதி அடித்த பிற்பாடு தான் இவன் உணர்வான்.
முரட்டு குணத்தின் தன்மை கொண்டு இரக்கமற்ற நிலைகளைச் செய்யும் பொழுது “அந்த இரக்கமற்ற உணர்வு… இவனைக் காக்க அவன் எண்ணமே உதவாது…!”
ஆனால் பாசத்தால் குழந்தையில் பால் இரக்கப்பட்டு அவன் வேதனையைச் சுவாசித்து உதவி செய்தாலோ… வேதனையான சத்து இங்கே உடலுக்குள் வந்து விடுகின்றது.
இந்த உடல் நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்து வரும் விஷத்தை மலமாக மாற்றுகின்றது. கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் சக்தி பெற்றது தான் ஆறாவது அறிவு.
அதைச் செம்மையான நிலைகள் பயன்படுத்துவதற்குத் தான் யாம் சொல்லும் இந்தத் தியானம். மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று ஏங்கி அதை உடலுக்குள் கண்ணின் நினைவு கொண்டு நாம் செலுத்தக்கூடிய நிலைதான் ஆத்ம சுத்தி என்பது.
தியானம் என்பது ஒரு நாளைக்கு பத்து நிமிடம் இருந்தால் கூடப் போதுமானது. ஆனால்
1.எப்பொழுது துன்பம் நேருகின்றதோ அந்தத் துன்பம் உடலுக்குள் புகாதபடி
2.அதை நாம் இந்த வாழ் நாள் முழுவதும் சுத்தி செய்து மகரிஷிகள் உணர்வு கொண்டு அதைத் தடுத்துப் பழக வேண்டும்
நரசிம்ம அவதாரம் என்பது இதுதான்.
துன்பம் வரும் பொழுது அந்தச் சுவாசம் உடலுக்குள் சென்று அது உடலுக்குள் அந்த உணர்ச்சிகளைத் தூண்டும் நிலையைக் குறைப்பதற்கு ஒவ்வொரு நிமிடமும் ஆத்ம சுத்தியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதை உங்களுக்கு வாக்குடன் கூடித்தான் ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எத்தகைய துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கும் பொழுது அந்த உணர்ச்சியைத் தூண்டச் செய்து அதை நீங்கள் சுவாசிக்க நேர்கின்றது.
சுவாசிக்க நேரும் பொழுது சங்கடமான எண்ணம் உடலுக்குள் தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பதை இது ஊடுருவி அதை அமிழ்த்துகின்றது.
அதற்கு இந்த ஆத்ம சுத்தி அவசியம் தேவை.
செடி கொடிகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்திகளை எடுத்துக் கொள்கின்றது. பாக்கி நாள் முழுவதும் காற்றில் இருக்கக்கூடிய தன் இனமான சக்திகளை எடுத்துத் தன் இனமாகப் பெருக்கிக் கொள்கின்றது.
இதைப் போல் தான்
1.அந்த மெய் ஞானிகள் அருள் சக்திகளை ஒவ்வொரு நொடியிலும் பெறுவதற்கு நமக்கு அந்த ஆற்றல் தேவை
2.அந்த ஆற்றலைப் பெறுவதற்குத்தான் இந்த உபதேச வாயிலாகப் பதிவு செய்கின்றோம்.