
கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள்
அவர்கள் காரை நிறுத்திவிட்டு யாம் இருந்த கடைக்கு வந்து கடையில் இருப்பவரிடம் “டீ கொடுங்கள்…” என்றனர்.
அதற்குப்பின் சாமியார் வேடம் பூண்டவர்கள் “முருகா…! ஏன் உன் பிள்ளையை இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்…? உன் பிள்ளைக்குக் காது கேட்கவை முருகா…” என்றனர்.
அந்தக் கூட்டத்தில் முடக்குவாதம் வந்த ஒருவரைக் கொண்டு வந்து “ஐயா…! நீங்கள் எத்தனையோ பேருக்கு நல்லது செய்கிறீர்கள். ஐந்தாறு வருடங்களாகக் கட்டிலிலேயே படுத்திருக்கிறார். மல ஜலம் எல்லாம் கட்டிலில் துவாரம் போட்டு எடுக்கின்றோம். இப்படியேதான் படுத்திருக்கின்றார்… அவரைக் குணப்படுத்துங்கள்…!” என்று கேட்டனர்.
சாமியார்களாக வந்தவர்கள் விபரங்களைக் கேட்டுவிட்டு “முருகா…! உனக்கு இந்தப் பிள்ளை மேல் கருணை இல்லையா…? இவ்வளவு காலம் வேடிக்கை பார்க்கின்றாயே… முருகா…! அவர் உன்னை நினைக்கவில்லையா…? அய்யா…! நீங்கள் முருகனை நினையுங்கள்…” என்கின்றனர்.
இப்படிச் சொன்னவுடனே முடமானவரும் சடாரென எழுந்திருக்கின்றார்.
கடைசியில் சாமியார் வேடம் தரித்தவர்கள் “நாங்கள் முருகன் கோயில் கட்ட வேண்டும் என்று எங்களுக்கு முருகன் உத்தரவிட்டு இருக்கின்றார்…” நீங்களெல்லாம் முருகன் கோயில் கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும். எல்லா மக்களையும் முருகன் பெருமையை உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உங்களால் இயன்ற பணம் கொடுங்கள் என்று சொன்னார்கள்.
சாமியார் வேடம் பூண்டவர்களும் அனைத்தையும் சுருட்டி கட்டிக் கொண்டனர். “முருகன் கோயில் கட்டி முடிந்ததும் உங்கள் அனைவருக்கும் அழைப்பு வைக்கின்றோம்… அனைவரும் வாருங்கள்…!”
1.இதையெல்லாம் குருநாதர் பார்க்குமாறு சொல்லியதால் பார்த்துக் கொண்டிருந்தோம்.
நகைகளையும் பணத்தையும், அள்ளிக் கொண்டு சாமியார் வேடம் பூண்டவர்கள் காரில் ஏறிப்போன பின் 2 அல்லது 3 மணி நேரம் இருக்கும். முடமாகியிருந்தவர் குணமானதாக நம்பிய நிலையில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
இது எப்படியென்றால் இவையனைத்தும் ஆவி வேலைகள். இத்தகைய ஆவிகளை ஏவினால் குறிப்பிட்ட நேரம் வரை செயல்படுத்தும்.
2.கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.