
அகஸ்தியன் அமர்ந்த இடங்களுக்கெல்லாம் குருநாதர் எம்மை அழைத்துச் சென்று காட்டினார்
1.பாபநாசத்தில் பெரும்பகுதி சுழன்ற இடங்களையும்
2.தலைக்காவிரியில் அகஸ்தியன் சுழற்சி வட்டம் ஜாஸ்தி… அந்த இடங்களையும்
3.இமயமலையில் அவன் சுழன்ற இடங்களையும் அகஸ்தியன் வந்து சென்ற இடங்களையும் குருநாதர் காட்டுகின்றார்.
4.வேகாக்கலை என்ற நிலைகள் கொண்டு அழிந்திடாத நிலைகளாக அவன் வெளிப்படுத்தியது இன்றும் அங்கே உண்டு.
2.வாழ்க்கையில் வரும் நஞ்சான உணவுகள் நல்ல உணர்வுக்குள் கலந்தாலும்
3.அந்த ஞானி விண்ணுலக ஆற்றலை எடுத்து அதன் மேல் “அடுக்கடுக்காகப் பரப்பி…” நஞ்சினை ஒடுக்கி
4.இந்த உணர்வின் தன்மையை மேலோங்கச் செய்து இந்த உணர்வின் ஒளி அலையாகத் தன் உயிருடன் ஒன்றி
5.துருவத்தைக் கண்டுணர்ந்து… துருவம் நுகரும் நஞ்சினைத் தனக்குள் உணவாக உட்கொண்டு
6.அந்த உணர்வின் சக்தியைத் தனக்குள் பரப்பி… அதனின் துணை கொண்டு ஒளியின் சிகரமாகி
7.அகஸ்தியன் துருவத்தை நுகர்ந்து… அந்தத் துருவத்தில் வரும் உணர்வையே ஒளியாக மாற்றி
8.எந்த துருவத்தின் வழியில் ஈர்ப்பாகச் சக்திகளை எடுத்தானோ பூமிக்குள் வரும்… அந்த நஞ்சினை மற்றது விளையாது
9.அதையே தனக்குள் ஒளியின் சிகரமாக மாற்றி அமைத்து இன்றும் சுழன்று கொண்டிருக்கின்றான்…
10.அகஸ்தியன் துருவ மகரிஷியாக… துருவ நட்சத்திரமாக என்று…! இதையெல்லாம் குருநாதர் உணர்த்திக் காட்டுகின்றார்.