ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 28, 2025

விண்ணுலகில் "ஒளிச் சரீரமாக வாழும் நிலை" எப்படிப்பட்டது…?

விண்ணுலகில் "ஒளிச் சரீரமாக வாழும் நிலை" எப்படிப்பட்டது…?

நமது பிரபஞ்சத்தில் 27 நட்சத்திரங்கள் உண்டு. ரேவதி நட்சத்திரத்திலிருந்தும் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்தும் துகள்கள் வரப்படும் பொழுது சூரியன் தன் உணவுக்காக அவைகளை எடுத்துக் கொள்கிறது. டைமறித்து மற்ற கோள்கள் கவர்ந்து அதனின் மாற்றங்கள் ஆகின்றது.

கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிக வலிமை பெற்றது… ஆண்பால். ஆணைக் கண்டு பெண் எப்படி ஒதுங்கிச் செல்கின்றதோ அதைப்போல ஒதுங்கிச் செல்லும் நிலைகள் பெற்றது ரேவதி நட்சத்திரத்தின் நிலைகள்.

இருப்பினும்... இதன் உணர்வின் அழுத்தம் அதிகமான பின் ரேவதி நட்சத்திரத்தின் உணர்வலைகள் விலகிச் செல்கிறது. விலகிச் செல்லும் மார்க்கத்தில் வியாழன் கோளிலிருந்து வெளிப்படக்கூடிய ஆவியின் தன்மை ஊடுருவி விட்டால் சுழற்சியாகி... வேகம் அதிகமாகின்றது.

சுழற்சியின் வேகம் அதிகமாகும் பொழுது இதன் அருகிலே வந்த அந்தக் கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தியை இழுத்து இரண்டும் மோதி விடுகின்றது.

இப்படி மோதி விட்டால்
1.ஆண் பெண் என்ற உணர்வுகளில் ரேவதி நட்சத்திரத்தின் உண்ர்வுகள் அதிகமானால் பெண்பாலை உருவாக்கும் சக்தி வருகின்றது.
2.கார்த்திகை நட்சத்திரத்தின் சக்தி அதிகமானால் ஆண்பாலை உருவாக்கும் சக்தி பெறுகின்றது.
3.ஆகவே… ஆண் பெண் என்ற நிலைகள் கொண்டு தான் உயிரிலே இயக்குகின்றது.

அதைப் போல் இந்த அருள் வழியில் கணவன் மனைவி இருவரும் ஒத்த உணர்வு கொண்டு இயக்கினால் "எதனையும் வெல்லக்கூடிய சக்தி பெறுகின்றது...”
1.இங்கிருந்து நாம் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்த பின்
2.ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொன்று தான்…!

திலே தெளிவாக்கி உணர்வின் தன்மை இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் சக்தி மனித உடலில் பெற்ற பின் ஆறாவது அறிவு ஏழாவது ஒளியாக மாறுகின்றது. து தான் சிருஷ்டித்துக் கொண்டது என்று சொல்வது.


தீமைகளை... கைமைகளை... நஞ்சினைத் தனக்குள் வராதபடி மாற்றியமைக்கும் திறன் மனித உடலில் பெற்றதனால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்ற பின் அதன் ஈர்ப்பு வட்டத்தில் சப்தரிஷி மண்டலத்திற்குச் செல்கின்றோம்.
1.ஆனால் துருவ நட்சத்திரத்தின் இணைப்புடன் வாழ்ந்தால்
2.பூமியில் நண்பர்கள்... உறவினர்கள்... என்று இருந்தாலும் அதை அறிந்து கொள்ளும் நிலை இல்லை.
3.ஆனால் ஒன்று சேர்ந்து வாழும் இயக்கச் சக்தியாக மாறும்.
4.ஒன்றுடன் ஒன்று இணைந்து துருவ நட்சத்திரத்தில் உணர்வைக் கவர்ந்து வாழும் தன்மை வருகிறது.

நமது பிரபஞ்சம் பிற நிலைகளிலிருந்து எடுத்தாலும் சூரியன் எப்படி வளர்கின்றதோ இதைப் போலத் தான் சப்தரிஷி மண்டலங்களில் நாம் இருக்கப்படும் பொழுது "மனிதனுக்கு மனிதன்...” அறிந்திடும் நிலை வராது.

இருளை அகற்றிடும் வலிமை பெறும்... ஏழாவது ஒளி நிலை பெறும். அதை நாம் நுகர்ந்து உடலுக்குள் சேர்த்துக் கொண்டால் பகைமைகளை அகற்றிச் சிந்திக்கும் தன்மை பெறச் செய்யும்.

அதைத்தான் ரிஷியின் மகன் நாரதன் நாராயணனின் அபிமான புத்திரன் நாரதன் என்று சொல்வது. தான் சிருஷ்டித்து கொண்டது தான் ரிஷி.

கணவனும் மனைவியும் இருளை நீக்கி உணர்வினை ஒளியாக மாற்றியது துருவ நட்சத்திரம். அதைப் பின்பற்றிய அனைவரும் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி... சப்தரிஷிகள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்…! ன்று பொருள்... உணர்வின் ஒளி அலைகள் கொண்டு.

வேப்ப மரத்தின் கசப்பை நாம் நுகர்ந்தால் ஓய்... வெளியே வருகின்றது. ரோஜாப் பூவின்ணத்தை நுகர்ந்தால் ஆகா..கா... என்று இணைந்து செயல்படும் உணர்வுகள் வருகின்றது.

அதைப் போல் நாம் ஒளிச் சரீரம் பெற்று விண்ணிலே வாழும் நிலைகளில்
1.தற்கு மாறான உணர்வுகள் அங்கே சென்றால் இந்த உணர்வைப் பிரித்து விட்டுத் தன் உணர்வினை ஒளி என்று தான் உருவாக்கும்.
2.அங்கே பண்பும் அன்பும் ஒன்று சேர்த்து வாழும் தன்மை வரும்.
3.துருவ நட்சத்திரத்துடன் இணைத்து வாழும் உணர்வுகள் வரும் போது அதைப் பங்கிட்டு ஒளியின் தன்மை பெறும்.
4.விண் சென்ற பின் தன் நண்பன் என்று அறியாது.

ஆக அப்படி அறியக்கூடிய பருவம் வந்தால் மனித நிலைக்குத்தான் வரவேண்டும்.

விண் சென்ற நிலையில்… என்றுமே இருளை நீக்கி ஒளி என்ற உணர்வை ட்டி ஒன்றுபட்டு வாழும் தன்மை வரும். ஒளிக்குள் ஒளியாகும் பொழுது அகத்தின் ஒளியாகும் பொழுது இருளை வெல்லும் தன்மையும் நஞ்சை வெல்லும் தன்மையும் பெறுமே தவிர "அதற்குப் பின் இங்கே (பூமிக்குள்) வர முடியாது...”

என்றும் ஏகாந்த நிலையாக... எதுவுமே பகைமை இல்லாத நிலையும் பகைமையை மாற்றி அமைக்கும் சக்தியை இந்த மனித உடலில் பெற்றுத்தான் நாம் அங்கே செல்ல முடியும். து தான் ஆறாவது அறிவு ஏழாவது ஒளி சப்தரிஷி - சிருஷ்டித்துக் கொண்டது.

கணவன் உயிராக இருந்தாலும் அதற்குள்ளும் பெண்பால் உணர்வுகள் உண்டு. மனைவி என்ற நிலையில் இருந்தாலும் அந்த உயிரில் ஆண்பால் என்ற உணர்வு உண்டு.

செடி கொடி கல்லானாலும் மலையானாலும் இதைப் போன்று நட்சத்திரத்தின் உணர்வுகள் எது கலவையானதோ அதற்குத்தக்க வளர்ச்சி இருக்கும்.

பெண்பால் உணர்வுகள் அதிகமானால் மலைகளில் வளர்ச்சி அதிகமாக இருப்பதும் ஆண்பால் உணர்வுகள் இருந்தால் வளர்ச்சி கம்மியாக இருப்பதும் உண்டு.

வெறும் ண்பால் என்ற உணர்வு வரப்படும் போது தன் இனத்தை விருத்தி செய்துர்க்க முடியாது.

அதே போல் பப்பாளி மரத்தில் ஆண்பால் என்ற உணர்வுகள் செல்லும் பொழுது தான் பெண் பப்பாளி தன் இனத்தை விருத்தி செய்யும் வித்துக்களை உருவாக்குகின்றது. ஆண்பால் என்ற அந்த பப்பாளி மரம் இல்லை என்றால் அந்த அமிலம் படவில்லை என்றால் பப்பாளி மரத்தின் வளர்ச்சி குன்றும்.

இது எல்லாம் இயற்கையின் நியதிகள்.

இதன் உணர்வு கொண்டு சப்தரிஷி மண்டலங்களாக மாற்றப்படும் பொழுது நம் உயிர் அங்கே பகைமை என்ற நிலை இல்லாது ஒருக்கிணைந்த நிலைகளில் வாழ முடியும்.

1.கைமையற்ற நிலைகள் கொண்டு என்றும் ஒளியாக வாழ...
2.ஒன்று சேர்த்த இயக்கத்தை நமக்குள் உயிர் என்ற நிலை இருக்கும் போது
3.உடலுக்குள் இருக்கும் அணுக்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்க்கப்படும் பொழுது தனுசுகோடி.

புழுவில் இருந்து மனிதனாக வரும் வரையிலும் தீமைகளை நீக்கி நீக்கி வந்தது... கோடிக்கரை. ஆகவே அந்த உடல் பெறும் உணர்வுகள் சிவ தனுசு.

ஆனால் அதே சமயத்தில் உயிருடன் ஒன்றி ஒளியின்ரீரம் பெற்ற அந்த உணர்வினை நமக்குள் பெருக்கி விட்டால் தனுசுகோடி. தீமைகளை வென்று உணர்வின் தன்மை ஒன்றாக்கி
1.உயிரைப் போன்ற உணர்வு ஒன்றாக்கப்படும் பொழுது
2."ஒன்றென்ற நிலைகள் இயக்குவது தான்... தனுசுகோடி...” என்று கூறப்படுகின்றது.

பகைமைகளை அகற்றி அருள் உணர்வைக் கூட்டி உயிருடன் ஒன்றி நம் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்படும் பொழுது... கணவன் மனைவியாக அதை உருவாக்கப்படும் போது சப்தரிஷி.

இருளை அகற்றி நல்ல உணர்வினைச் சேர்க்கும் தன்மை… அதாவது "விஷத்தை ஒளியாக மாற்றும் சக்தி பெற்றது...” என்பதனை நாம் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்.