
எந்தச் செலவும் செய்யாமல் உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்
பணத்தை வைத்து வாழ்க்கையில் எதை வேண்டுமென்றாலும்
ஜெயிக்கலாம். ஆனால்
1.ஆன்மீகத்தின் மூலம்
மனதைப் பெரிதாக வைத்துக் கொண்டால் உயர்ந்த சக்திகளைப்
பெற முடியும்.
2.இது மனதார எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய… கிடைக்கச் செய்யக்கூடிய பெரும் சக்தி.
பணத்தாலே செய்யக் கூடியது எதை
வேண்டுமென்றாலும் உடனே சுலபமாகப் பெறலாம்.
ஒருவருடைய அன்பைப் பெறலாம். அவருக்கு வேண்டிய பொருள்களை
வாங்கிக் கொடுத்தால் உடனே நல்லவர் என்று சொல்லிவிடுவார். ஆனால் அடுத்து
கொடுக்கவில்லை என்றால் திட்டுவார்கள்.
காசைக் கொடுக்கக் கொடுக்க…
நல்லவர் என்று போற்றிக் கொண்டே வருவார்கள். காசை மற்றவர்களுக்காகச்
செலவழிக்கப்படும் பொழுது நான் தவறு செய்தாலும் கூட அதை
ஏற்றுக் கொள்ளும் நிலை வந்து விடும்.
காசு கொடுத்து உங்களுக்காகச்
செலவழித்துக் கொண்டேயிருக்கின்றேன் இருந்தாலும் தவறைச்
செய்கின்றேன். அப்பொழுது நான் செய்வதை எல்லாம் சரி என்று தான்
நீங்கள் சொல்ல முடியும்.
என்னங்க… இப்படித் தவறு செய்கிறீர்கள்…? என்று மீறிக் கேட்டால் என்னிடமே வாங்கிச்
சாப்பிட்டு விட்டு எனக்கே துரோகம் செய்கிறான் பார்…! என்ற நிலை வந்துவிடும். வந்துவிடும் வம்பு…!
1.எந்த வகையில் தருமம் செய்தாலும் இப்படித்தான் வரும்.
2.இதைப் போன்ற நிலையில்
இருந்தெல்லாம் நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும்.
காரணம்… பணம் என்பது உடலுக்குத்
தான் வரும்
ஆனால் மெய் ஞானிகளுடைய அருள்
உணர்வுகளைக் கூட்டினாலோ வாழ்க்கையில் வரக்கூடிய இருளை மாய்க்க
உதவும். இதற்கு நீங்கள் எந்தப் பணமும் செலவழிக்க
வேண்டியதில்லை.
உங்கள் மனதைப்
பண்படுத்தி அந்த ஞானிகள் அருள் பெற வேண்டும் என்னுடைய மூச்சும்
பேச்சும் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று யாம்
சொல்லும் ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு வந்தால்
1.வியாபாரம் நல்லதாகும்… குடும்பத்திற்குள்
சண்டையை நிறுத்தி ஒற்றுமையாக இருக்கச் செய்யும்
2.கேட்போருக்கும்
நல்லதாகும் அறியாத வரக்கூடிய பகைமைகளைத்
தடுத்து நிறுத்தும்
3.இதை வைத்து எத்தனையோ
உயர்ந்த நிலைகளைக் கொண்டு வர முடியும்.
4.உங்களுடைய எண்ணங்கள் அண்டவெளி வரை செல்லும்.
ஆனால் இவ்வளவு சுலபமாக இதையெல்லாம் சொல்லிக்
கொடுத்தாலும் செய்வதற்கு நேரமில்லை…! இதை யார் செய்வார்கள்…? என்று அலட்சியப்படுத்தி விடுகின்றார்கள்.
காசைக் கொடுத்து விட்டு நட்சத்திரத்திற்கு அர்ச்சனை ஆராதனை செய்வதிலே தான் குறியாக
இருக்கின்றார்கள். செய்தால் தெய்வம் ஓடி வந்து செய்யும்…! என்ற இந்த நம்பிக்கையில் தான்
இருக்கின்றோம்.
பணத்தைச் செலவழித்து யாகத்தை வேள்விகளையும்
செய்வதற்குப் பதிலாக எந்தச் செலவும் இல்லாமலே…
1.உங்கள் தாய் தந்தையரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்து அதை உங்கள் உயிரான நெருப்பில்
இணைத்துப் பாருங்கள்.
2.உங்களுக்குக் கிடைக்கக்கூடிய
அனுபவங்களை வைத்து “உங்களிடம் இருக்கும் சக்திகளை”
நீங்களே உணர முடியும்.
ஏனென்றால் உங்களுக்கு அந்த உயர்ந்த
சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா எண்ணுவது தான் என்னுடைய தியானமே. ஒவ்வொரு மகரிஷியும்
ஞானியும் மனிதனைத் தான் தேடி வருகின்றார்கள்.
ஆகவே உங்களுக்குள் உங்களையே
நீங்கள் தியானம் செய்யுங்கள் அந்த அருள்
உணர்வுகள் சேரச் சேர… உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சகல உணர்வுகளும்
விலகி விடும்.