ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 2, 2025

எந்தச் செலவும் செய்யாமல் உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

எந்தச் செலவும் செய்யாமல் உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்


பணத்தை வைத்து வாழ்க்கையில் எதை வேண்டுமென்றாலும் ஜெயிக்கலாம். ஆனால்
1.ஆன்மீகத்தின் மூலம் மனதைப் பெரிதாக வைத்துக் கொண்டால் உயர்ந்த சக்திகளைப் பெற முடியும்.
2.இது மனதார எல்லோருக்கும் கொடுக்கக்கூடிய… கிடைக்கச் செய்யக்கூடிய பெரும் சக்தி.
 
பணத்தாலே செய்யக் கூடியது எதை வேண்டுமென்றாலும் உடனே சுலபமாகப் பெறலாம்.
 
ஒருவருடைய அன்பைப் பெறலாம். அவருக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுத்தால் உடனே நல்லவர் என்று சொல்லிவிடுவார். ஆனால் அடுத்து கொடுக்கவில்லை என்றால் திட்டுவார்கள்.
 
காசைக் கொடுக்கக் கொடுக்க… நல்லவர் என்று போற்றிக் கொண்டே வருவார்கள். காசை மற்றவர்களுக்காகச் செலவழிக்கப்படும் பொழுது நான் தவறு செய்தாலும் கூட அதை ஏற்றுக் கொள்ளும் நிலை வந்து விடும்.
 
காசு கொடுத்து உங்களுக்காகச் செலவழித்துக் கொண்டேயிருக்கின்றேன் இருந்தாலும் தவறைச் செய்கின்றேன். அப்பொழுது நான் செய்வதை எல்லாம் சரி என்று தான் நீங்கள் சொல்ல முடியும்.
 
என்னங்க… இப்படித் தவறு செய்கிறீர்கள்…? என்று மீறிக் கேட்டால் என்னிடமே வாங்கிச் சாப்பிட்டு விட்டு எனக்கே துரோகம் செய்கிறான் பார்…! என்ற நிலை வந்துவிடும். வந்துவிடும் வம்பு…!
1.எந்த வகையில் தருமம் செய்தாலும் இப்படித்தான் வரும்.
2.இதைப் போன்ற நிலையில் இருந்தெல்லாம் நம்மை மீட்டுக் கொள்ள வேண்டும்.
 
காரணம்பணம் என்பது உடலுக்குத் தான் வரும்
 
ஆனால் மெய் ஞானிகளுடைய அருள் உணர்வுகளைக் கூட்டினாலோ வாழ்க்கையில் வரக்கூடிய இருளை மாய்க்க உதவும். இதற்கு நீங்கள் எந்தப் பணமும் செலவழிக்க வேண்டியதில்லை.
 
உங்கள் மனதைப் பண்படுத்தி அந்த ஞானிகள் அருள் பெற வேண்டும் என்னுடைய மூச்சும் பேச்சும் எல்லோருக்கும் நல்லதாக வேண்டும் என்று யாம் சொல்லும் ஆத்ம சுத்தியை எடுத்துக் கொண்டு வந்தால்
1.வியாபாரம் நல்லதாகும்… குடும்பத்திற்குள் சண்டையை நிறுத்தி ஒற்றுமையாக இருக்கச் செய்யும்
2.கேட்போருக்கும் நல்லதாகும் அறியாத வரக்கூடிய பகைமைகளைத் தடுத்து நிறுத்தும்
3.தை வைத்து எத்தனையோ உயர்ந்த நிலைகளைக் கொண்டு வர முடியும்.
4.உங்களுடைய எண்ணங்கள் அண்டவெளி வரை செல்லும்.
 
ஆனால் இவ்வளவு சுலபமாக இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் செய்வதற்கு நேரமில்லை…! இதை யார் செய்வார்கள்…? என்று அலட்சியப்படுத்தி விடுகின்றார்கள்.
 
காசைக் கொடுத்து விட்டு நட்சத்திரத்திற்கு அர்ச்சனை ஆராதனை செய்வதிலே தான் குறியாக இருக்கின்றார்கள். செய்தால் தெய்வம் ஓடி வந்து செய்யும்…! என்ற இந்த நம்பிக்கையில் தான் இருக்கின்றோம்.
 
பணத்தைச் செலவழித்து யாகத்தை வேள்விகளையும் செய்வதற்குப் பதிலாக எந்தச் செலவும் இல்லாமலே…
1.உங்கள் தாய் தந்தையரை எண்ணி மகரிஷிகள் அருள் சக்திகளை எடுத்து அதை உங்கள் உயிரான நெருப்பில் இணைத்துப் பாருங்கள்.
2.உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்களை வைத்து “உங்களிடம் இருக்கும் சக்திகளை” நீங்களே உணர முடியும்.
 
ஏனென்றால் உங்களுக்கு அந்த உயர்ந்த சக்தி கிடைக்க வேண்டும் என்று சதா எண்ணுவது தான் என்னுடைய தியானமே. ஒவ்வொரு மகரிஷியும் ஞானியும் மனிதனைத் தான் தேடி வருகின்றார்கள்.
 
ஆகவே உங்களுக்குள் உங்களையே நீங்கள் தியானம் செய்யுங்கள் அந்த அருள் உணர்வுகள் சேரச் சேர உங்களுக்குள் துன்பத்தை ஊட்டும் சகல உணர்வுகளும் விலகி விடும்.

குரு பலன்

குரு பலன்


கஸ்தியனுக்கு முன் எவரும் விண் செல்லவில்லை. அகஸ்தியன் தான் துருவத்தை அறிகின்றான்.
1.அந்த உணர்வின் தொடர் கொண்டு முதல் மனிதனாக துருவ நட்சத்திரமாக உயிராத்மா ஒளியின் நிலை பெறுகின்றது.
2.பல லட்சம் வருடங்கள் ஆகிவிட்டது இதையெல்லாம் நுகர முடியாது.
3.நமது குருநாதர் அவரின் ஆற்றல்மிக்க சக்தியின் துணை கொண்டு தான் அதை நமக்கு உணர்த்துகின்றார்.
 
விண் செல்லும் அந்த ஆற்றல்களை அவர் நுகர்ந்து அந்த உணர்வின் ஆற்றலைப் பருகிய
1.அந்தச் சக்தியின் திறன் அவர் சொல்லும் உணர்வுளை ஏங்கி எனக்குள் பதிவு செய்து கொண்டதனால்
2.அவரைப் பின்பற்றி அவரின் உணர்வை நினைவு கொள்ளும் பொழுது விண்வெளியின் ஆற்றலை நானும் நுகர முடிகின்றது.
 
ஆனால் குருநாதர் காட்டிய வழியில் அந்த விண்வெளியின் ஆற்றலை நாம் நுகர்ந்து அறிந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் அதைச் சேர்த்துக் கொண்டிருந்தாலும் சாதாரண மக்கள் மத்தியில் பழகும் போது விருப்பு வெறுப்பு உணர்வுகளை நுகர நேர்கின்றது. அது போன்ற ஆயிரக்கணக்கானோர் உணர்வுகளைச் சேர்க்கும் பொழுது அது விஷத்தன்மை கொண்டது.
 
யார் வந்தாலும் என்னிடம் கஷ்டம் துன்பம் என்று சொல்கின்றார்கள் அல்லவா. எனக்குக் கஷ்டமாக இருக்கின்றதுஎன் குடும்பத்தில் துன்பமாக இருக்கின்றது…! என்று சொல்கின்றார்கள்.
 
அதைக் காதிலே கேட்கப்படும் பொழுது அந்த உணர்வுகள் உந்தப்பட்டுத்தான் அதை அறிவாக நான் அறிந்து கொள்ள முடிகிறது.
 
அப்படி வந்தாலும் குரு காட்டிய நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் அருள் உணர்வை எனக்குள் கலந்து நான் சுவாசித்து…
1.ஒவ்வொரு நாளும் தைச் சமப்படுத்தசமப்படுத்த சிறுகச் சிறுக எனக்குள் து சேர்கின்றது.
2.அந்தச் சமப்படுத்தும் உணர்வின் தன்மையை மீண்டும் உங்களுக்கு உபதேசிக்கும் பொழுது
3.இந்த உணர்வின் எண்ண அலைகளைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து கொள்கிறது.
 
உபதேசிப்பதைக் கேட்கப்படும் போது அதை நீங்கள்
1.எந்த அளவிற்குக் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்துகின்றீர்களோ
2.எந்த அளவுக்குக் கூர்மையாகக் கவனிக்கின்றீர்களோ
3.எந்த அளவிற்குக் கூர்ந்து பதிவு செய்து கொள்கின்றீர்களோ அந்த அளவுக்கு ஆழமாக உங்களுக்குள் இது பதிவாகின்றது.
 
அப்படிப் பதிவாக்கிய பின்… அதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்து மெய் ஞானிகள் வழிகளிலே நாம் அதைப் பெற வேண்டும் என்ற ஏக்கத்தைக் கூட்டினால் இந்தச் சக்தி உயர்கின்றது.
 
ஒவ்வொரு நிமிடமும் விண்ணை நோக்கி ஏங்கி… மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று விண்ணிலிருந்து அதை ஈர்த்து உங்கள் உடலுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்று நினைவலைகளைச் செலுத்தும் போது உங்களுக்குள் சிறுகச் சிறுக இது சேர்கின்றது.
 
பள்ளிக்கூடத்தில் படிக்கிறோம் என்றால் பாடங்களைச் சொல்லாகஅதாவது அவர்கள் சொன்னதை வெறும் பாடமாகப் படிக்கும் நிலைகள் வேறு…”
 
அதே சமயத்தில்
1.நேரடியாக இன்னன்னது செய்கின்றது என்று அனுபவ நிலைகள் கொண்டு அந்தப் பாடத்துடன் சேர்த்து உணரச் செய்யும் நிலைகள் வேறு...”
2.அனுபவத்துடன் காட்டும் நிலை வரும் பொழுது பொருள் கண்டுணர்ந்து விரயமற்ற நிலைகளில் செயல்படுத்த முடியும்.
 
ஆனால்… புதிதாக நான் ஒன்றை கண்டுணப் போகின்றேன் என்ற நிலை வரும் பொழுது அது குரு அற்ற நிலை…!” வெறும் பாட நிலைகளைக் கண்டுணர்ந்த பின் அதைச் செயலாக்கும் நிலைகளில் “எந்த உணர்வின் தன்மையும் தெரிந்து கொள்ளும் பொழுது பல வியங்கள் ஆகும்…”
 
ஏனென்றால் அதைத் தெளிந்துணர வேண்டிய நிலை தான் வருகின்றது.
 
அது போல்… வாழ்க்கையில் தடைகள் வரும் போது பிறருடைய சோர்வாஎண்ணங்கள் அதில் கலக்கப்படும் பொழுது மெய் ஒளியைக் காணும் திறன் அற்று விடுகின்றது…”
 
ஆனால் குரு பலன் என்பது
1.குருநாதர் காட்டிய அருள் வழிப்படி எண்ணத்திலே எண்ணி நான் அவரை நினைவுக்குக் கொண்டு வந்து”
2.மெய் ஒளியைப் பெற வேண்டும் என்ற க்க உணர்வுகளைக் கூட்டப்படும் பொழுது
3.அவர் வழியினைக் கண்டு… அவர் உபதேசித்த உணர்வின் அலைகளைப் பின் தொடர்ந்து அதை நான் நுகர நேர்கின்றது.
4.அவர் எதைப் பருகினாரோ அவர் உணர்வுடன் ஒன்றி அவர் பருகியதை நானும் பருக முடிகின்றது.
5.அதை நான் பருகப்படும் பொழுது அந்த உணர்வின் எண்ண அலைகள் எனக்குள் குவிகின்றது…”
 
தே உணர்வின் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூரியனுடைய காந்த சக்தி அதைக் கவர்கின்றது. இப்பொழுது நீங்கள் கேட்டுணரும் பொழுது எந்த அளவுக்குக் கூர்மையாக எண்ணுகின்றீர்களோ உங்களுக்குள் பதிவாகின்றது.
 
பதிவை மீண்டும் நினைவாக்கி யாம் சொல்லிக் கொடுத்த ஆத்ம சுத்தியை நீங்கள் அடிக்கடி செய்தாலே போதும்.
1.வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்க முடியும்
2.அருள் ஞானம் பெற முடியும்… உயிருடன் ஒன்றும் உணர்வுகளை ஒளியாக மாற்ற முடியும்.
3.பிறவி இல்லா நிலையும் அடைய முடியும்.