ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 3, 2025

உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று காட்டியது “சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்…”

உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்று காட்டியது “சிதம்பரம் என்ற ஸ்தலத்தில் தான்…”


கண்ணன் கீதா உபதேசம் செய்தான்…” என்றால் நாம் ரோட்டில் செல்லும் பொழுது இங்கே பள்ளம் இங்கே மேடு இது தீமையானது இது கெட்டது…! என்று கண்கள் தான் நமக்கு வழி காட்டுகின்றது.
 
இதனால் தான் கீதையிலே கண்ணன் அர்ஜுனனுக்கு வழி காட்டிச் செல்கின்றான் என்று சொன்னது. கண் நமக்கு எப்படி உபதேசம் சொல்கின்றான்…?
 
இங்கே மாடு வருகிறது… இங்கே மனிதன் வருகின்றான்… அவன் தகாத செயலைச் செய்கின்றான்.
 
நாம் காரை ஓட்டிச் செல்லும் பொழுது எத்தனையோ சந்தர்ப்பங்களைப் பார்க்கின்றோம். ஒருவன் குறுக்கே வருகின்றான்… அவன் மேல் மோதிவிடுவோம் என்று இந்தக் கண் தான் நமக்கு உபதேசிக்கின்றது. ஆகையினால் வண்டியை நீ ப்படி ஓட்டு…! அந்த உணர்வின் இயக்கமாக அங்கங்களை இயக்குகிறது.
 
நம்முடைய கண் பார்க்கின்றது அந்த உணர்வை இழுக்கின்றது சுவாசிக்கச் செய்கின்றது. இந்த உணர்வின் தன்மை கொண்டு அங்கங்கள் இயங்குகிறது. நாம் எடுத்துக் கொண்ட உணர்வுகள் அது இயங்கினாலும் இந்த உணர்வுகள் இங்கே வடிகட்டப்படுகின்றது.
 
இதைப் போல அவன் கொடுக்கும் உபதேசத்தின் தன்மையை
1.தன்னைக் காக்கும் உணர்வை எடுக்கப்படும் பொழுது தன்னைக் காத்துக் கொள்ளும் உணர்வுகள் வருகின்றது.
2.ஆனால் ஒருவனைத் தாக்கும் உணர்வை எடுக்கும்போது அவனைத் தாக்கும் நிலைகளுக்கே என்னை அழைத்துச் செல்கின்றது.
3.அந்த நேரத்தில் அழிக்கும் நிலையாக நல்லதைச் சிந்திக்க முடியாதபடி அந்த வேதனையால் என் நல்ல குணங்களையும் அது அழித்து விடுகின்றது.
 
ஆகையினால் கீதையில் சொன்னது நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய். விநாயகர் தத்துவத்தில் நீ அதைச் சுவாசிக்கின்றாய். நீ எதைச் சுவாசிக்கின்றாயோ அதுவாகின்றாய்.
 
இது தான் ருத்ரதாண்டவம்…!
 
தான் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை இங்கே எப்படி அங்கங்கள் துடிக்கின்றதோ இதைப் போல
1.நீ எடுத்துக் கொண்ட சுவாசத்தின் தன்மை அங்கங்கள் எப்படிப் பாசமாக அணைக்கின்றதோ…
2.நீ எடுத்துக் கொண்ட நிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணங்களுக்கு இந்த உணர்வின் தத்துவங்கள் எப்படி…? என்ற நிலையும்
3.நடனத்தைப் பற்றி அபிநயம் - தான் எடுத்துக் கொண்ட இனிமையின் நிலைகளுக்கொப்ப அங்கங்களுடைய அசைவுகள்
4.நரம்பியல்கள் - நாதத்தின் தன்மை கொண்டு எப்படி இயங்குகின்றது…? என்பது தான்.
 
அந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலையும்… ஒரு தாவர இனத்திற்குள் தான் எடுத்துக் கொண்ட மமும் அந்த உணர்வின் தன்மை மோதும் பொழுது இலையின் ரூபங்களும் நாதத்தைப் பற்றி நாதத்தின் இயக்கத்தின் தன்மையைத் திருமூலர் காட்டி இருக்கின்றார் என்றால் ஒலி ஒளி என்பதற்குள் உட்பொருள் எவ்வளவோ அடங்கியுள்ளது…”
 
லியைப் பற்றிப் பல வியாக்கியானங்கள் செய்யலாம் இந்த உணர்வுகள் உயிருக்குள் ஒலி எப்படி இயங்குகின்றது…? என்ற மெய் ஒளியைக் காட்டியது சிதம்பரம் என்ற இந்த ஸ்தலத்தில் தான்…”
 
1.விண்ணிலே தோன்றிய உணர்வுக்குள் விஷத்தன்மை படும் பொழுது
2.அங்கே ஓங்காரமாகிப் பல நிலைகளாகி பல உணர்வின் தன்மை கொண்டு இயங்கினாலும்
3.தாவர இனத்திற்குள் இந்த உணர்வின் தன்மை பட்டவுடன் இலையின் ரூபங்கள் விரிவடைவதும்ணர்வின்ங்களை வெளிப்படுத்துவதும்
4.அதைச் சுவாசிக்கும் உயிரணுக்களுடைய இயக்கமும் அது எடுத்துக் கொண்ட விளைவு கொண்டு உடலின் அமைப்பும்
5.இந்த உணர்வின் ஒலி ஒளி என்ற நிலைகள் கொண்டு உருவமும் உருமாற்றமும் அந்த உணர்வுக்குள் ஒளியின் மகிழ்ச்சியும்
6.அந்த உணர்வின் ஒளி கொண்டு ஒளியாக நீ எவ்வாறு ஆக வேண்டும்…? என்று
7.திருமூலர் பாடிய இந்த ஸ்தலத்தின் உண்மைப் பொருளை நாம் ன்றும் காண முடியாத நிலையில் இருக்கின்றோம்.
 
நம்மை அறியாது ஆட்டிப்படைக்கும் சக்திகளில் இருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசித்துக் கொண்டு வருகின்றோம்.

November 2, 2025

யாம் பாய்ச்சும் சக்திகள் உங்களைப் பின் தொடர்ந்து… உறுதுணையாக இருந்து… உங்களைக் காக்கும்

யாம் பாய்ச்சும் சக்திகள் உங்களைப் பின் தொடர்ந்து… உறுதுணையாக இருந்து… உங்களைக் காக்கும்


1.எல்லோரும் மகரிஷிகளின்ருள் சக்தி பெற வேண்டும்.
2.மகரிஷிகளின் அருள் சக்தியால் அவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணினால்
3.நாம் முதலிலே நலமாக இருக்கின்றோம்.
 
அந்த மெய் ஒளி நமக்குள் வளர்ந்து சொல்லின் தன்மை நமக்கு நல்லதாகின்றது. நம் சொல்லைக் கேட்போர் உள்ளங்களையும் மகிழச் செய்கின்றது.
 
1.அந்த மகிழ்ச்சியின் தொடர் அவர்கள் பக்குவமாக என்னுடன் இணைந்து செயல்படும் தன்மையும்
2.நாம் போகும் நிலைகளுக்குத்டையின்றி வழிப்படுத்துவதும்
3.தடையின்றி வியாபாரம் நடப்பதும் தடையின்றி மகிழ்ச்சி பெறுவதும் தடையற்ற நிலையாக நமக்குள் உருவாகின்றது.
 
ஆகையினால் இதை ஒரு பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
எப்பொழுது துன்பம் வந்தாலும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும். நாங்கள் நலமும் வளமும் பெற வேண்டும். எங்கள் சொல்லுக்குள் இனிமை பெற வேண்டும் எங்கள் செயலெல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று இப்படி வியாபாரத்திற்கோ மற்ற எங்கே சென்றாலும் இதைச் செயல்படுத்துங்கள்.
 
1.யாம் கொடுக்கும் இந்த அருள் உணர்வுகள் எப்பொழுதும் உங்களைப் பின் தொடர்ந்து உறுதுணையாக இருந்து உங்களைக் காக்கும்
2.உங்களுக்குள் உயர்வை ஊட்டும் மெய் ஒளியின் தன்மை எட்டச் செய்யும்.
 
அதை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.
 
ஆகையினால் நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்தும்மைப் பார்க்கும் பொழுது… சாமி…! நீங்கள் சொன்னபடி நாங்கள் எடுத்தோம் நாங்கள் நன்றாக இருக்கின்றோம் எங்கள் உடல் நலமானது என்று நீங்கள் சொல்ல வேண்டும்.
 
அதிலே தான் எனக்கு மகிழ்ச்சி…!
 
காரணம் சதா உங்களைத்தான் நான் பிரார்த்தனை செய்கின்றேன். உங்கள் உயிரைக் கடவுளாக எண்ணி உடலைக் கோவிலாக எண்ணி உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைத் தெய்வமாக எண்ணி
1.அந்தக் கோவிலில் மகிழ்ச்சியான நிலைகள் உருவாக வேண்டும்.
2.அந்தக் கோவிலில் இருந்து வரக்கூடிய மூச்சு எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும் என்று
3. உங்களைத் தான் - நான் பார்த்த கோவில்களை ஒவ்வொருத்தராக நான் தியானம் செய்கின்றேன்…”
 
அதிகாலையில் 4 மணிக்கு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று உங்களைப் பிரார்த்தனை செய்கின்றேன். அந்த நேரத்தில் உங்களைத் தட்டி எழுப்புவது போல் இருக்கும்… மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குக் கிடைக்கும்.
 
அதைப் பெறும் போது உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் தவறு செய்யாமலே உங்களுக்குள் தீங்கு விளைவிக்கும் அந்த நிலைகள் மாறி…து நல்லது செய்யும் ஆற்றலாக வரும்.
 
1.அதைப் பெறச் செய்வதற்கு உங்களுக்கு அந்தத் தகுதியை ஏற்படுத்துகின்றோம்.
2.ஆகையினால் முழு நம்பிக்கையுடன் உங்களை நம்பி நீங்கள் செயல்படுங்கள்.
 
சாமியை நம்புகின்றீர்கள் சாமியாரை நம்புகின்றீர்கள் ஜோசியத்தை நம்புகிறீர்கள் மந்திரத்தை நம்புகின்றீர்கள் ஆனால் உங்களிடம் அத்தனை சக்தியும் இருக்கின்றது…”
 
உங்களுக்கு முன்னாடியே… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி இருக்கின்றது…” அதை எண்ணினால் உங்களுக்குள் அது கூடும். நல்லதைப் பெற முடியும் மெய் ஒளியைக் காண முடியும்
 
மனிதன் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த நிலை.
 
ஆகவே… உங்களை நம்பி இதைச் செயல்படுத்துங்கள்.
1.சாமி சொன்னார் என்று சொல்லி…
2.சாமி சொன்ன சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
சாமி செய்து கொடுப்பார் என்று எண்ண வேண்டியதில்லை.
 
உங்களுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் மகரிஷிகளின் அருளைப் பாய்ச்சுகின்றேன். அது கிடைக்க வேண்டும் என்று உங்களுக்கு உறுதுணையாக இருக்கின்றேன்.
 
சூரியனிலிருந்து காந்த அலைகள் வெளி வருகின்றது. பூமி அதை எடுத்துக் கொண்டால் தான் வளர முடியும். பிரபஞ்சத்தில் காற்றிலே பல சக்திகள் படருகின்றது. போகும் பாதையில் அதை ஈர்த்துக் கொண்டால் தான் பூமி வளர முடியும்.
 
இதைப் போன்று தான் மெய் ஞானிகள் அருள் ஒளி நீங்கள் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோம்.
1.அந்த அருள் ஒளியை நீங்கள் ஈர்த்துக் கொண்டால் உங்களுக்கு நல்லது.
2.அதன் மூலம் நீங்கள் மகிழ்ந்து வாழும் சக்தி பெற முடியும்
3.காற்றிலிருந்து அந்த மகரிஷிலளின் அருள் சக்தியை நீங்கள் வர முடியும்.

November 1, 2025

நாம் குடியிருக்கும் வீடுகளில் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகளவில் படரச் செய்ய வேண்டும்…”

நாம் குடியிருக்கும் வீடுகளில் “துருவ நட்சத்திரத்தின் சக்தியை அதிகளவில் படரச் செய்ய வேண்டும்…”


உங்கள் வாழ்க்கையில் உங்களை அறியாது உள் புகுந்த விஷமான சக்திகளை அதனுடைய வலுவை இழக்கச் செய்வதற்குத் தான் கூட்டு தியானங்களில் யாம் உங்கள் எல்லோர் குரல்களையும் எழுப்பச் சொல்லியது.
 
அவ்வாறு வெளிப்படும் அந்த குரலின் தன்மைகளைக் காந்த புலன்கள் கவர்ந்தாலும்
1.வீட்டிற்குள் புவியின் ஈர்ப்புக்குள் அந்தக் காந்தப் புலன்கள் சங்கடம் சலிப்பு வேதனை இவைகள் பதிந்திருப்பதை
2.மெய் ஒளியின் தன்மை கொண்டு கூட்டு தியானத்தில் எல்லோரும் குரல்களை எழுப்பப்படும் பொழுது
3.அந்தத் துன்ப அலைகளை இது வீழ்த்தி நல்ல உணர்வுகளைப் படரச் செய்வதும்
4.நாம் எடுத்துக் கொண்ட அந்த உயர்ந்த உணர்வுகள் வீட்டுச் சுவர்களில் இருக்கும் காந்தப் புலன்கள் கவர்ந்து
5.வீட்டிற்குள் எப்பொழுதும் உங்களை மகிழ்ச்சியூட்டும் உணர்வாகப் பெறச் செய்யும்.
 
அதற்குத்தான் வீடுகள் தோறும் கூட்டுக் குடும்பத் தியானங்களைச் செயல்படுத்தும் படிச் சொல்வது.
 
சூரியன் எப்படிப் பிரபஞ்சத்திற்குள் ஒன்றுடன் ஒன்று மோதி ஒளியின் தன்மையாகத் தனக்குள் எடுத்துச் செயல்படுத்துகின்றதோ அதைப் போல நாம் ஒருங்கிணைந்த நிலையில் செயல்படுத்துவதற்கு அன்றைய ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி குரலை எழுப்பிக் கூட்டுத் தியானத்தைச் செயல்படுத்தும் படிச் சொல்கின்றோம்.
 
காரணம்
1.தனி ஒரு மனிதன் மட்டும் ஒன்றும் செய்து விட முடியாது.
2.பல அலைகளை உணரும்படி செய்து அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு தான்
3.நாம் கூட்டுத் தியானத்தில் எடுக்கக்கூடிய சக்தியின் மூலமாக ஒலிகளைப் பரப்பச் செய்து
4.வரக்கூடிய விஞ்ஞான நச்சுத்தன்மைகள் நம்மை அணுகாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.
 
பூமிக்குள் பிற விஷத்தின் தன்மைகள் உள்ளே புகாது ஓசோன் திரை எப்படி அமைகின்றதோ அதைப் போன்று
1.எத்தகைய நிலைகள் வந்தாலும் உங்களுக்குள்ளும் உங்கள் குடும்பத்திற்குள்ளும் அந்தத் தீமை புகாது பாதுகாப்புக் கவசமாக
2.ஆற்றல்மிக்க உணர்வுகளை உங்கள் ஆன்மாவிலே பெருக்கச் செய்வதற்கே இதைச் செய்கின்றோம்.
 
உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.
 
ஏதோ சாதாரணமாக இது கிடைக்கின்றது சாதாரணமாக விளக்கம் சொல்கின்றார் சாதாரண நிலைகள் பெறுகிறோம் என்று சாதாரணமாக எண்ணி விட்டு விடாதீர்கள்.
 
ஏனென்றால் எவ்வளவோ பணத்தைச் செலவழித்துப் பெற முடியாத  சக்தியை இவர் சாதாரணமாகச் சொல்கின்றார் நாம் அப்படிப் பெற்றுவிட முடியுமா…? என்று நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.
 
நீங்கள் பெற வேண்டும் என்ற இந்த உணர்வில் தான் இதைக் கொண்டு வருகின்றேன். ஆகவே கூட்டுக் குடும்பத் தியானத்தினுடைய அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள். வாரத்தில் ஒரு நாளாவது குடும்பமாகத் தியானியுங்கள்.
 
நாள் முழுவதற்கும் உழைக்கின்றோம்.
1.ஒரு பத்து நிமிடமாவது அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்து உங்களுக்குள் வளர்த்துப் பெருக்கி உங்கள் வீடுகளிலும் பெருக்கி
2.எல்லோரும் அதே போல் கூட்டமைப்பாகப் பெருக்கப்படும் பொழுது மிக உயர்ந்த சக்தியாக மாறுகின்றது.
3.உங்களைக் காக்கின்றீர்கள் குடும்பத்தைக் காக்கின்றீர்கள்
 
இப்படி ஒவ்வொரு குடும்பமும் தங்களைக் காத்துக் கொள்ளும் நிலைக்கே இதை உணர்த்துகின்றேன்.

October 31, 2025

ஓ…ம் என்றால் பிரணவம்… ஜீவன் கொடுப்பது

ஓ…ம் என்றால் பிரணவம்… ஜீவன் கொடுப்பது


ஓம் ஈஸ்வரா குருதேவா என்று அடிக்கடி சொல்கின்றோம். ஏன் இப்படிச் சொல்ல வேண்டும்…? எதனால் இப்படிச் சொல்கின்றோம்…? என்று தெரிந்து கொள்வது நல்லது.
 
ஒவ்வொரு கோவிலிலும் ஓ..ம் போட்டு வைத்திருக்கின்றார்கள்… அங்கே பிரசாதம் வைத்திருக்கின்றார்கள். மற்ற எத்தனையோ நிலைகளைச் சொல்லி வைத்திருக்கின்றார்கள்.
 
கூடுமான வரையிலும் அங்கே சென்று தெய்வத்தை வணங்குகின்றோம். ஏன் வணங்குகின்றோம்…? எதற்காக வணங்குகின்றோம்…? எப்படி வணங்குகின்றோம்…? அப்படி வணங்குவதால் நமக்கு என்ன சக்தி கிடைக்கிறது…? என்பதை யாரும் சொல்லித் தரவில்லை.
1.உனக்குக் கஷ்டம் வந்தால் தெய்வத்திடம் உன் குறையை எல்லாம் முழுவதையும் சொல்லிவிடு.
2.அதைச் சொல்லி மனம் உருகி அழுகும் பொழுது அந்தத் தெய்வம் உதவி செய்யும் என்று தான் சொல்லி வைத்திருக்கின்றனர்.
3.எல்லோரும் அந்த நிலையில் தான் அழுது கொண்டிருக்கிறோம்.
 
ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்கின்றோம். ஈஸ்வரன் என்றால் எங்கேயோ இருக்கின்றான் என்று நினைக்கின்றோம். எங்கேயோ இருந்து நம்மைச் சிருஷ்டித்துக் கொண்டிருக்கின்றார் என்ற எண்ணம் தான் நமக்கு இருக்கின்றதே தவிர அந்த ஈஸ்வரன் யார்…? என்று அறியவில்லை.
 
ஓம் என்பது என்ன…? ஓம் என்றால் பிரணவம் அது தான் ஜீவன் ஜீவன் உள்ளது…” என்று எல்லோரும் வாதிடுகிறார்கள்.
 
உதாரணமாக ஒரு பையன் தவறிக் கீழே விழுந்து அடிபட்டு விடுகின்றான். நான் பாசமாக இருக்கின்றேன் என்னிடம் இருக்கும் நல்ல குணத்தால் அவனைப் பார்க்கும் பொழுது அவன் படக்கூடிய துன்பத்தைக் கண் பார்க்கின்றது
1.அதே சமயத்தில் அவன் வேதனைப்பட்டு வெளிப்படுத்துவதை என் கண் இழுக்கின்றது.
2.அதைச் சுவாசித்த உடனே உயிரிலேட்டு எனக்கும் வேதனை தெரிகின்றது.
 
அவன் கீழே விழுந்தான் உடலில் வேதனையாகின்றது. அவன் வேதனை தாங்காது வெளிப்படுத்திய வேதனையான எண்ணங்களைச் சூரியனிலிருந்து வரக்கூடிய காந்த சக்திகள் அதைத் தனக்குள் கவர்ந்து கொள்கின்றது.
 
அந்தப் பையனை எண்ணி அவன் வேதனைப்படுகின்றானே…” என்று கண்ணிலே பார்த்தவுடனே அந்தக் கண் அதே உணர்வலைகளை எனக்குள் இழுக்கின்றது.
 
நான் இப்பொழுது பேசுகிறேன் என்றால் இந்த மைக்..” நான் எதைப் பேசுகின்றேனோ அதை இழுக்கின்றது. அதே போல் அந்தப் பையன் இடக்கூடிய சப்தத்தை என் காதில் இருக்கக்கூடிய மைக் இழுக்கின்றது… அந்த உணர்வின் ஒலியைத் தட்டுகிறது.
 
கண் பார்க்கின்றது கரு விழி பார்த்தாலும் அந்த அலைகளை இழுக்கின்றது. கரு விழியில் படம் தெரிகின்றது கண்ணுக்குள் இருக்கக்கூடிய காந்தம் அந்த அலைகளைழுக்கின்றது. அதை ழுத்த உடனே நான் சுவாசிக்கிறேன்.
 
நல்ல குணம் கொண்டு நான் போகும் பொழுது இந்தப் பையன் கீழே விழுகின்றான். பார்த்தவுடனே அவன் வேதனைப்படுவது எனக்குத் தெரிகின்றது. வேதனையால் வெளிப்படுத்தும் ஒலியைக் காந்த அலைகள் கவர்ந்து கொள்கிறது. அந்த ஒலியை இழுத்து எனக்குள் கொண்டு வந்து வைக்கின்றது.
 
ரேடியோ ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்புச் செய்கின்றார்கள் வெப்ப காந்தங்கள் அதைக் கவர்கின்றது. இங்கே நாம் வீட்டிலே அதே ஸ்டேஷனைத் திருப்பி வைக்கப்படும் பொழுது அங்கே வெளிப்படுத்தக்கூடிய ஒலி அலைகளை பாடல்களை இங்கே ரேடியோவில் பாடுகின்றது… நாம் கேட்கின்றோம்.
 
இது விஞ்ஞானம் செயற்கையில் செய்தது. அதற்கு ஜீவன் இல்லை ஒலி அலைகளை மட்டும் எடுத்துக் கொள்கின்றது.
 
1.ஆனால் நான் பார்த்த அந்த வேதனையான உணர்வலைகள் உயிரிலே படுகின்றது.
2.சுவாசித்து இழுத்து உயிரிலே பட்ட பின் அவனிடமிருந்து வெளிப்பட்ட
3.வேதனையானணர்வின் சக்தி என் உயிரிலே பட்ட பின் ஜீவன்…” பெறுகின்றது.
4.அதற்குப் பெயர் தான் ஓ என்று சொல்வது.
 
ஒரு பாத்திரத்தில் நீரை ற்றி அடுப்பை மூட்டி வைத்தால் தண்ணீர் சூடாகிக் கொதித்து த… புதா…” என்று சத்தம் போட ஆரம்பிக்கின்றது.
 
காரணம் அது கொதிக்கும் பொழுது அதற்குள் இருக்கக்கூடிய காந்தமும் வெளியிலே படர்ந்து கொண்டிருக்கும் காந்தமும் அதிலே பட்ட பின் ழுத்து அந்தச் சப்தத்தைக் கொண்டு வருகின்றது. இது இயற்கை…!
 
தண்ணீர் தான்… ஆனால் “தத புதா…” என்று சத்தம் போடுகின்றது. அப்படிக் கொதிக்கும் நேரத்தில் நாம் எந்தப் பொருளை (பலசரக்கை) அதனுடன் இணைக்கின்றோமோ அந்த வாசனை வெளி வருகின்றது.
 
ஏனென்றால்
1.கொதிக்கும் பொழுது கலந்து ஆவியாக வெளியே அனுப்பும்போது அதைச் சூரியனின் காந்த சக்தி தனக்குள்வர்ந்து கொண்டு வருகின்றது.
2.என் கண்ணிலே பார்த்தவுடனே… சத்தியபாமா உண்மையை எடுத்து இழுத்து எனக்குள் உணர்த்துகின்றது.
3.என் உயிருக்குள் பட்ட உடனே அது பிரணவம் ஜீவன் பெறுகின்றது.
4.ஆக… உயிர் அங்கே எப்படி இயங்குகின்றது…? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் உயிர் நெருப்பு.
 
விஞ்ஞானம் எப்படி இருக்கிறது…? மெய் ஞானம் எப்படி இருக்கின்றது…? இயற்கை எப்படி விளைகிறது…? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

October 30, 2025

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை

துன்பத்திலிருந்து விடுபட… குரு வழியில் யாம் உங்களுக்குச் செய்யும் சேவை


மரத்திற்கு வேண்டிய உரத்தைப் போடுகின்றோம். அதை ஏற்றுக் கொண்டு நல்ல சக்திகளை எடுத்துக் கொள்கின்றது.
 
அதே சமயத்தில் சில நச்சுத்தன்மைகள் அந்த மரத்தினுடைய வேரிலே பட்டு அது ஊடுருவி விட்டால் அந்த விழுதிலே நஞ்சு கலந்து மரம் கெட்டு விடுகிறது.
 
இதைப் போல
1.நம்மை அறியாமல் இருளான உணர்வுகளைச் சுவாசிக்க நேரும் பொழுது
2.அதிலிருந்து நம்மை மீட்டிக் கொள்வதற்கு ஞானிகள் இட்ட அந்த உணர்வின் சத்தான நிலைகள் உண்டு.
3.அந்தச் சத்தைத்தான் உங்கள் உணர்வுகளுக்குள் ஏற்றிக் கொடுக்கின்றோம்.
 
உங்கள் வாழ்க்கையில் எது எல்லாம் உங்களுக்குள் தேய்மானம் ஆகிச் சிந்திக்க முடியாமல் இருந்ததோ சிந்தித்துச் செயல்பட முடியாமல் இருந்ததோ
1.அதை மாற்றியமைக்க மெய் ஞானிகளின் ஆற்றல்மிக்க நிலைகளை
2.செவிப்புலன் கொண்டு கேட்கச் செய்கின்றோம்.
 
எனக்கு என் குருநாதர் எப்படி உண்மைகளைக் காட்டினாரோ தைப் போன்று தான் உங்களுக்கும் சொல்கிறோம்.
 
எந்தெந்த நல்ல மனதுடன் எல்லோருக்கும் நன்மைகளைச் செய்தீர்களோ பிறருடைய துன்பத்தை இழுத்து உங்கள் நல்ல குணத்தைச் செயல்பட முடியாதபடி உங்கள் உடலுக்குள் தொல்லையும் துன்பமும் ஏற்படுத்திக் கொண்டிருந்ததோ
1.அந்தத் துன்பத்தை நீக்க நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழிப்படி உங்களை இந்த அருள் உணர்வைக் கேட்கும்படி செய்து
2.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்தச் சக்தி பெற வேண்டும் என்ற உணர்ச்சியின் தன்மையைத் தட்டி எழுப்பி
3.அந்த உணர்வாலே சுழன்று கொண்டிருந்த விஷத்தின் தன்மை நீங்கி
4.மெய் ஒளியின் தன்மையை இந்தக் காற்றிலிருந்து நீங்கள் இழுத்துச் சுவாசித்து
5.அந்தச் சத்தான நிலைகள் பெற்று உயிரின் நிலைகள் ஒளியாக மாற்றி
6.குருநாதர் எப்படி ஒளியின் சரீரமாகச் சென்று விஷம் தனக்குள் எதுவும் அணுகாத நிலை பெற்றாரோ
7.எனக்கு குருநாதர் காட்டிய அந்த நிலையை நீங்களும் பெற வேண்டும் என்பதற்குத் தான் இதை உபதேசிக்கின்றேன்.
 
காரணம் நமக்குள் எதைப் பதிவு செய்து கொள்கின்றோமோ நாம் நல்லதைப் பெற வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம். ஆனால் நாம் அறியாதபடி அந்த உணர்வுக்குள் விஷம் பட்டு விஷத்திலிருந்து எழ முடியாத நிலைகள் வந்து விடுகின்றது.
 
அந்த விஷத்தை நீக்கும் ஆற்றல்மிக்க அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நீங்கள் பெற வேண்டும் என்ற ஆவலில் தான் உங்களுக்கு உபதேசிக்கின்றேன்.
 
அந்த ஆற்றல் மிக்க சக்தியைப் பெறச் செய்வதற்குத் தியானத்தின் முறையை குருநாதர் எனக்கு எப்படி வழி காட்டினாரோ அதே வழியில் நீங்களும் தியானத்தைச் செய்து கொண்டால் இந்த காற்றிலிருந்து மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெற முடியும்.
 
மரத்திற்கு உரமான சத்தைக் காட்டிய பின் அது புவியின் ஈர்ப்பின் துணை கொண்டு காற்றில் மறைந்திருக்கும் தன் சத்தினை எடுத்துத் தான் எப்படி வளர்த்துக் கொள்கின்றதோ இதைப் போன்றே
1.உங்கள் நல்ல உணர்வின் தன்மையைக் காக்க மெய் ஞானிகளுடைய அருள் சக்திகளை நீங்கள் சுவாசித்து
2.உங்களுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களைக் காத்து உங்கள் சொல்லுக்குள் இனிமையும் உங்கள் மூச்சுக்குள் உடலுக்குள் நலமும்
3.உங்கள் பேச்சும் மூச்சும் பிறர் துன்பத்தைப் போக்கும் நிலையும் ஆற்றல்மிக்க சக்தியை நீங்கள் பெறும் நிலையும்
4.இந்த உடலிலிருந்தே உயிரின் தன்மை உணர்வுகள் ஒளியாக மாறி
5.என்றும் பதினாறு என்ற ஒளியின் சரீரமாகப் பெறும் தகுதியை நீங்களும் பெற முடியும்.
 
அன்றைய மெய் ஞானிகள் எவ்வாறு விண் சென்றார்களோ அதே போன்று நீங்களும் அந்த மெய் ஒளியின் சுடரின் நிலைகள் கொண்டு அந்த மெய் வழியில் செல்லக்கூடிய தகுதியைப் பெறுவீர்கள்.
 
குருநாதர் காட்டிய வழியில் தான் யாம் உங்களுக்கு அடிக்கடி இதைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.

October 29, 2025

உடலில் எடுக்கக்கூடிய “மெய் ஒளியைத் தான் நான் சிந்தித்தேன்…” என்றார் குருநாதர்

உடலில் எடுக்கக்கூடிய “மெய் ஒளியைத் தான் நான் சிந்தித்தேன்…” என்றார் குருநாதர்


வைகுண்ட ஏகாதசி அன்றுதான் என் குருநாதர் உடலை விட்டு வெளியே சென்று ஒளியாகப் போனார். குருநாதர் எனக்குக் காட்டி உணர்த்தியது…
1.இந்த உடலிலே நான் எப்படி ஒளியாக மாறி வெளியே செல்கின்றேன்…?
2.வெளியில் சென்றபின் மற்ற மனிதர்களுடைய உணர்வுகள் எப்படி எல்லாம் கவருகின்றது…?
3.அப்படிக் கவரும் பொழுது உயிரான்மா அதனுடைய சுழற்சியின் நிலைகள் என்ன செய்கின்றது…?
4.தன்னை அணுக விடாதபடி சுழற்சியின் நிலைகள் கொண்டு விலகுகின்றது…!
 
விஷத்தைக் கழித்து விட்டு நல்ல உடலாக மாற்றிக் கெட்டதை நீக்கக்கூடிய எண்ணத்தின் நிலைகள் சிருஷ்டிக்கும் தன்மை கொடுத்த இந்த மனித உடலில் அதைப் பெறுவதற்கு குருநாதர் காட்டிய நிலைகள் இது.
 
குருநாதர் அவர் உடலுடன் வாழ்ந்த காலத்தில் வெறும் துண்டைத்தான் கட்டியிருப்பார். “டிச்சியின்…” அருகில் தான் படுத்திருப்பார்.
 
குளிர்காலம் என்று நல்ல வேஷ்டியை கொடுத்துக் கட்டச் சொன்னால் அதை எல்லாம் கிழித்து கையிலும் காலிலும் கட்டிக்கொண்டு பாருடா எவனோ கிழித்து விட்டுச் சென்றான்…! என்பார்.
 
என்ன சாமி…? இப்படிச் சொல்கிறீர்கள்…! என்றால் கிழித்து விட்டுச் சென்றான் நான் என்ன செய்வது…? நான் படுத்திருந்தேன் அவன் கிழித்து விட்டுச் சென்றான் என்பார்.
 
1.அசூசையைப் பற்றி அவர் நினைக்கவில்லை.
2.இந்த உடலுக்குள் எடுக்கக்கூடிய மெய் ஒளியைப் பற்றித் தான் அவர் சிந்தித்தார்.
 
பைத்தியக்காரர் போன்ற நிலையில் நான் அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அய்யய்யோ பெரிய தொல்லையாக இருக்கின்றது இவரிடம் சிக்கிவிட்டோமே…!” என்று தான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
 
ஏனென்றால் அவருடைய செயல்களைப் பார்க்கும் பொழுது அப்படித்தான் என்னால் எண்ண முடிந்தது.
 
ஆனால் உடலை விட்டுச் செல்லும் போது… குருநாதர்… நான் எதை எதையெல்லாம் எண்ணினேனோ இந்த உணர்வின் அலைகள் இங்கே கவர்ந்திருக்கப்படும் பொழுது பளீர்.ர்ர்பளீர்.ர்என்று மற்ற எல்லாவற்றையும் தள்ளி விட்டு விண்ணுக்கு எப்படிப் போகின்றது…? அப்படிச் சென்றாலும் இந்தப் பூமியின் பிடிப்பலைகளில் அந்த உயிரான்மா என்ன செய்கின்றது…? பார்…!
 
அதற்கு முன்பே எனக்கு அதைச் சொல்லிக் கொடுத்துவிட்டார்.
 
உயிராத்மா இங்கேயிருந்தாலும் அன்று வாழ்ந்த மகரிஷிகள் ஞானிகள் எந்தெந்த நிலையில் செயல்பட்டார்கள்…? செயல்பட்ட பின் ஆத்மா வெளியிலே போனாலும் பிறிதொரு ஈர்ப்புக்கு வராது தடுத்தாலும்
1.இந்த உணர்வுக்கு ஒத்த விழுது இந்தப் பூமியிலிருந்து உந்தி ஆன்மாவை மேலே தள்ள வேண்டும்.
2.அதனால் தான் எவ்வளவு பெரிய ஆற்றல் பெற்றிருந்தாலும் சாதாரண மனிதனிடத்தில் வருகின்றார்கள்.
3.அவனுக்குள் இருக்கக்கூடிய இருளான துன்பத்தை நீக்கிவிட்டு உடலுக்குள் மகிழ்ச்சியை ஊட்டி
4.அவனிடமிருந்து வரக்கூடிய மூச்சைத் தன் உடலுக்குள் சேர்த்து அந்தச் சந்தோசமான உணர்வை நுகர்ந்து தான் விண் சென்றார்கள்.
 
குருநாதர் அதை எல்லாம் காட்டும் பொழுது
1.உயிராத்மா வெளியிலே சென்ற பின் எவ்வாறு…? எதன் நிலை கொண்டு என்ன செய்கின்றேன்…?
2.உடலில் இருக்கும் பொழுது எதைச் செய்தேன்…?
3.உடலை விட்டு அகன்ற பின் அதிலே வளர்த்துக் கொண்ட உணர்வின் இயக்கங்கள் எப்படி…? என்று காட்டினார்.
அவர் காட்டிய உண்மையைத் தான் உங்களுக்குச் சொல்லி நீங்களும் அதைப் பெற முடியும் என்ற இந்த உணர்வினை உங்களுக்குள் செல்களாகப் பதிவு செய்கின்றேன்…”
 
மெய் ஒளியின் தன்மைஇயற்கையில் எப்படி ஒன்றுடன் ஒன்று இணைந்து உணர்வின் இயக்கமாக மாறி மனிதன் வரை ஏப்படி வந்தது…? என்று எனது குருநாதர் காட்டினார்.
 
மனிதனிலிருந்து அவன் ஒளியின் சரீரமாகப் பெற்றுச் சப்தரிஷி சிருஷ்டிக்கும் தன்மையாகப்
1.பேரண்டத்திலிருந்து எத்தகைய விஷம் வந்தாலும் அதை தனக்குள் ஒளியாக மாற்றி
2.உணர்வின் தன்மை மகிழ்ச்சியாக நின்று சப்தரிஷி மண்டலத்திலிருந்து வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.
 
ஆனால் நமது சாஸ்திர விதிகள் அம்மி மிதித்து அருந்ததியைப் பார்..!” என்று கல்யாணக் காலங்களில் சொல்லிக் காட்டுகின்றார்கள். ஆனால் எதற்காகப் பார்க்கச் சொன்னார்கள்..,? ஏன் பார்க்கச் சொல்கின்றார்கள்…? என்று தெரியாது.
 
கணவனும் மனைவியும் ஒன்று சேர்த்த நிலையில் தனக்குள் எடுத்துக் கொண்டதை உருவாக்கச் செய்யும்.
 
கணவன் மனைவி என்பதே
1.உயிர் கணவன் ஆகின்றது
2.தான் எடுத்துக் கொண்ட சக்தியின் தன்மை தான் அது மனைவியாகின்றது.
 
எந்தச் சக்தியின் தன்மை கொண்டு இந்த உயிர் தாவர இனச் சத்தைத் தனக்குள் எடுத்து அந்த உணர்வின் சத்தை அணுத் திசுக்களாக மாற்றி அந்தச் சத்திற்குள் இருந்த உயிரின் துடிப்புஅந்த உணர்வின் மலமாகித் தான் அது உடல் பெறுகின்றது.
 
அதைப் போல கடந்த கால ஞானிகள் சொன்ன முறைப்படி கணவன் மனைவி இருவருமே ஒன்றிய நிலைகள் கொண்டு
1.ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் மெய் ஒளியை எடுத்துக் கொண்டால்
2.அந்த இரு சக்தியும் ஒன்று சேர்ந்து விண்ணிலே சப்தரிஷி மண்டலங்களாக அது உருப் பெறுகின்றது.