ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 17, 2025

ஆன்மாவைத் தூய்மை செய்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுப்பது

ஆன்மாவைத் தூய்மை செய்வதற்குத் தான் இப்பொழுது உங்களுக்கு இந்தச் சக்தியைக் கொடுப்பது


ஒருத்தர் என்னைத் திட்டினார் என்று எண்ணப்படும் பொழுது அவன் நினைவே நமக்குள் வருகின்றது. அவன் நினைவு வரப்படும் பொழுது அவன் உணர்வைத் தான் நமக்குள் வளர்க்கின்றோமே தவிர நல்ல குணங்களை நாம் பாதுகாக்கின்றோமா என்றால் இல்லை.
 
பையன் மேல் பிரியமாக இருக்கின்றோம். அவன் நஷ்டம் ஆகிவிட்டான் என்று எண்ணப்படும் பொழுது அவன் நஷ்டத்தைப் பற்றித் தான் சிந்தித்து
1.“இப்படியே ஆகிக் கொண்டிருக்கின்றதே…” என்று நஷ்டத்தை நமக்குள் வளர்த்து நமக்குள் நோய் ஆக்குகின்றோம்.
2.நமக்குள் விளைந்ததை நம் பையனைப் பற்றித் திரும்ப இப்படியே செய்து கொண்டிருக்கின்றானே…” என்று எண்ணும் போது
3.அவனும் கஷ்டமும் நஷ்டமும் தான் படுவானே தவிர அவனை மீட்டவும் வழியில்லை நமக்குள் மீளவும் வழியில்லை.
 
இப்படித்தான் நமக்குள் அதிகமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றது. நாம் இதைப் போக்க வேண்டுமா இல்லையா…?
 
அதற்குத் தான் காலை துருவ தியானத்தில் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெறுவதற்கு உங்களுக்குள் பதிவாக்குவது. இதை நீங்கள் திரும்பத் திரும்ப எண்ணினால் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் பெருக்கிக் கொள்ள முடியும்.
 
தற்குத்தான் உங்களை ஆயுட்கால மெம்பராகச் சேரச் சொல்வது.
 
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வை நீங்கள் எடுத்து இந்த ஆயுள் முழுவதற்கும்
2.இந்த வாழ்க்கையில் எப்போது துயரங்கள் வருகின்றதோ சங்கடங்கள் வருதோ சலிப்புகள் வருதோ படிக்க முடியாமல் ஞாபக சக்தி குறைகின்றதோ
3.அப்பொழுதெல்லாம் அதை மாற்றிக் கொள்ள முடியும்.
 
பிறருடைய நிலைகளில் தவறு செய்பவரைப் பார்த்தவுடனே அந்த வேதனை என்ற உணர்வாகப் படும்பொழுது பாலில் விஷம் பட்டால் பாதாமிற்குச் சக்தி இல்லாதது போல நாம் நுகர்ந்த வேதனை என்ற உணர்வு நம்மைச் சிந்தனையற்ற நிலைகளும் மறதிகளும் வந்து விடுகின்றது. படிக்கிற குழந்தைகளுக்குப். பிறர் செய்யும் தவறுகளை நுகரப்படும் பொழுது அந்த வழியில் சென்றவுடன் அவர்கள் ஞாபக சக்தி இழக்கப்படுகிறது.
 
இதைப் போன்ற நிலைகள் வரும் பொழுது மீண்டும் அதைத்தான் வளர்த்துக் கொள்கின்றோம். இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் நாமோ எப்படி ரேடியோ டிவிகளில் ஒலிபரப்பாகும் பொழுது எங்கிருந்து ஒலிபரப்பாகின்றதோ எந்த ஸ்டேஷனோ அந்த ஸ்டேஷனில் வைக்கின்றோம். ப்பொழுது அந்த அலைவரிசையில் நாம் பார்க்கின்றோம்.
 
இதைப் போல மனிதனின் வாழ்க்கையில் நமக்கு எப்போது துன்பங்கள் என்று இந்த சந்தர்ப்பத்தில் நமக்குள் தாக்கி இயக்குகின்றதோ அப்பொழுதெல்லாம்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற வேண்டும் என்று நாம் ஏங்கினால்
2.அதன் உணர்வலைகள் நமக்குள் சென்று நமக்குள் தீமையின் நிலைகளை மாற்றிவிடும்..
 
ஆக இப்படி நமது வாழ்க்கை முழுவதுமே கஷ்டம் சங்கடம் நோய் இதைப்போல எத்தகைய விதமான உணர்வுகள் தாக்கினாலும் அது நமக்குள் இயங்காது தடுக்கும் வேண்டும்.
 
இப்பொழுது நமக்கு ஒருவர் தொல்லை கொடுக்கின்றார் என்று வைத்துக் கொள்வோம். அமெரிக்காவில் இருக்கின்றார். அவரை நினைக்கும் பொழுது எனக்குத் துரோகம் செய்தான் அவனெல்லாம் உருப்படுவானா…? என்று எண்ணும் பொழுது நம் காரியம் இங்கேயும் கெடுகின்றது அங்கேயும் தாக்கப்படுகின்றது.
 
அவனுடைய நிலைகளில் சாப்பிடும் பொழுது பேசினால் புரை ஓடுகின்றது. இதைப்போல பல நிலைகளில் நம்மைத் தொடர்ந்து இயக்கும் இந்த நிலைகளில் இருந்து மீட்டிக் கொள்ளத் தான் உங்களை ஆயுள் காலம் மெம்பராக சேர்த்தது.
 
1.என்னை குருநாதர் எப்படி ஆயுட்கால மெம்பராகச் சேர்த்தாரோ
2.அவர் பெற்று உணர்ந்த உணர்வுகள் கொண்டு அகண்ட அண்டத்தை அறியச் செய்தாரோ
3.அதையெல்லாம் உங்களுக்குள் ஒவ்வொரு உபதேச காலங்களில் பதிவாக்குகின்றோம்.
4.அதை வளர்க்க உங்கள் நினைவு தான் முக்கியமாகத் தேவை.
 
ஆக ஒவ்வொரு நிமிடமும் துயரமான உணர்வைக் கேட்டறியும் பொழுது அதை மறக்கச் செய்ய ஈஸ்வரா என்று உங்கள் உயிரை எண்ணி அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் ஜீவாத்மா பெற வேண்டும் என்று உங்கள் உடலுக்குள் இதைச் சேர்த்து அதைத் தூய்மையாக்கப்படும் பொழுது அந்த இரத்த நாளங்களிலே கலந்த பின்எப்படி தங்கத்தில் திரவத்தை ஊற்றினால் செம்பும் பித்தளையும் ஆவியாக மாறுகின்றதோ இந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை ஏங்கி நம் இரத்த நாளங்களில் அதிகமாகக் கலக்கச் செய்யும் பொழுது இப்பொழுது நமது அணுக்களில் அதைக் குறைக்க உதவும்.

April 16, 2025

ஆயுள் கால மெம்பராக நாம் எதிலே சேர்ந்திருக்கின்றோம்…?

ஆயுள் கால மெம்பராக நாம் எதிலே சேர்ந்திருக்கின்றோம்…?


நாம் எல்லாம் துருவ நட்சத்திரத்துடன் ஆயுட்கால மெம்பராகச் சேர்ந்திருக்கிறோம் என்றால் குருநாதர் என்னை ஆயுட்கால மெம்பராகச் சேர்ப்பதற்கு முன்னாடி இதையெல்லாம் வரிசைப்படுத்தி எனக்குள் உபதேசித்தருளினார். அதாவது
1.நாம் எப்படி வாழ்கின்றோம்…?
2.நம் வாழ்க்கையில் வரும் சந்தர்ப்பம் நம்மை எப்படி எல்லாம் பல இன்னல்களைக் கொடுக்கிறது…?
3.இதிலிருந்து எல்லாம் நாம் எப்படித் தப்ப வேண்டும்…? என்பதை உணர்த்தினார்.
 
அதன் வழிப்படி துருவ நட்சத்திரம் என்பது அகஸ்தியன் துருவனாகி அவர்கள் திருமணமான பின் அவர்கள் இரு மனமும் ஒன்றாகித் துருவத்தின் நிலையை எண்ணி ஏங்கி அந்த ஆற்றலைப் பெற்று அவர்கள் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து சாவித்திரியைப் போன்று இரு மமும் ஒன்றி இரு உயிரும் ஒன்றி அவர்கள் இல்லற வாழ்க்கையில் இருளினை அகற்றி நஞ்சினை வென்று பேரருள் பெற்று
1.எந்தத் துருவத்தின் எல்லையை அது குறியாக வைத்து
2.அதனின்று வரும் உணர்வினைத் தனக்குள் ஒளியாக மாற்றி ஒளியின் சரீரமாக இருக்கின்றனரோ
3.இந்த மனித உடலுக்குப் பின் கடைசி நிலை அது பிறவியில்லா நிலை.
4.தங்கள் உடலில் உள்ள நஞ்சுகளைக் கரைத்து விட்டு
5.எத்தகைய நஞ்சினையும் கரைத்து ஒளியாக மாற்றிடும் சக்தி பெற்றுத் துருவ நட்சத்திரம் ஆனார்கள்.
 
அதிலே தான் நாம் அங்கத்தினராகச் சேர்ந்திருக்கிறோம். இனி பிறவியில்லா நிலை என்ற நிலை அடைவதற்குத் தான் ஆயுட்கால மெம்பராக இணைந்திருக்கின்றோம்.
 
துருவ நட்சத்திரம் எப்படி ஒளியின் சரீரமாக இருக்கின்றதோ அதே போல் நமது வாழ்க்கையில் வரும் இன்னல்களை நீக்கி இந்த வாழ்க்கையிலே துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் பெற்று நமது உடலில் தீமைகள் புகாது பாதுகாத்து
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தி வாய்ந்த அந்த அருளை நமக்குள் பெருக்கி
2.இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைவதுதான் நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இப்போது நாம் தியானிக்கும் முறைகள்.
3.குரு வழி வகுத்த இந்த முறைப்படி நாம் நடந்தோம் என்றால் அடுத்து நமக்குப் பிறவியில்லை.
 
ஆகவே நாம் இதை முழுமையாகக் கடைப்பிடித்தல் வேண்டும். ஆக ஆயுள் கால மெம்பராக எதிலே சேர்த்திருக்கின்றோம்…?
 
இப்பொழுது இந்த வாழ்க்கையில் எத்தகைய தீமை ந்தாலும் நாம் இந்தத் தியானத்தில் கொடுத்த சக்தியின் துணை கொண்டு தீமைகளை வராதபடி அதை மாற்றியமைத்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைத் தனக்குள் பெருக்கி இந்த வாழ்க்கையில் நாம் அதை கடைப்பிடித்தோம் என்றால் இந்த உடலுக்குப் பின் நாம் பிறவியில்லா நிலை அடைகின்றோம்.

April 15, 2025

நம்மை வளர்ததவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்கிறோமா…?

நம்மை வளர்ததவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையை நாம் செய்கிறோமா…?


உதாரணமாக நமது குடும்பத்தில் இருப்போர் (மூத்தவர்கள்)) அனைவரும் நமக்கு நன்மை செய்துள்ளார்கள். அந்த நன்மை செய்த பின் நாம் அந்த நன்மை செய்தவரை எண்ணும் பொழுது எப்படி எண்ணுகின்றோம்…?
 
அவரால் நான் பாதுகாக்கப்பட்டேன் எனக்கு எல்லாம் நல்ல வழி வகுத்துக் கொடுத்தார் என்று நாம் ஏங்குகின்றோம். ஆனால் அவர் அந்த உடலை விட்டுப் பிரிந்த பின் நம்முடைய எண்ணங்களை எப்படிச் செலுத்துகின்றோம்…?
 
1.இப்படி எனக்கு எல்லாம் உதவி செய்தார்.
2.நோயோடு வாடும் பொழுது நல்ல மனிதன் இப்படி நோயோடு வாடுகின்றார்…” என்று. இந்த உணர்வைப் பதிவாக்கிக் கொள்கின்றோம்.
3.ஆனால் உடலை விட்டு அவர் பிரியப்படும் பொழுது நல்ல மனிதன் போய் விட்டாரே என்று வேகமாக எண்ணும் பொழுது
4.அவருடைய உணர்வு நமக்குள் வேதனைப்படும் காத்தில் நமக்குள் இருப்பதனால் அந்த ஆன்மா நமக்குள் வந்துவிடுகிறது.
5.நல்லது செய்தார் ஆனால் உடலை விட்டுப் பிரியும் போது அவருடைய பக்குவ நிலையை நாம் இழுக்கப்படும் போது நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
 
ஆனால் அவர் கடைசியில் எந்தக் கஷ்டத்தைப் பட்டாரோ அந்தக் கஷ்டமான உணர்வு நமக்குள் வளர தொடங்கி விடுகின்றது. 
 
ஆகவே அவரை எங்கே இழுக்கின்றோம்…?
 
எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணினாலும்… நமது அறியாமை பண்பும் அன்பும் பரிவுடன் நாம் எண்ணும் பொழுது அவருடைய ஜீவன் பிரியப்படும் பொழுது நம்முடைய வேகமான உணர்வுடன் நம் உடலுக்குள் வந்து விடுகின்றது.
 
1.ஆனால் நம் உடலுக்குள் வந்த பின் நம் உடலில் அது கவரப்பட்டு நமக்கும் அவரின் நோய் வரத் தொடங்கி விடுகின்றது.
2.நோயின் உணர்வு நமக்குள் வரும் பொழுது அவருடைய ஆன்மா நமக்குள் இருந்து விஷத்தை வளர்த்து
3.நாம் இறந்தபின் மனித உடலுக்குள் செல்லாதபடி விஷத்தின் தன்மை கொண்ட மிருக உடல்களுக்குள் அவரை அழைத்துச் சென்று விடுகிறது.
 
மாடு ஆடு என்று இவையெல்லாம் தான் உணவாக உட்கொள்ளும் உணவுக்கு: அதனதன் விகிதாச்சாரப்படி விஷத்தைத் தன் உடலாக எடுத்துக் கொள்கின்றது.
 
மானோ யானையோ மாடோ புலியோ நாயோ நரியோ இவையெல்லாம் அதனதன் உணர்வுக்கொப்ப அதன் விகிதாச்சாரப்படி அந்த உறுப்புகளை எடுத்துக் கொண்ட நிலைக்கொப்ப அந்த விஷத்தின் இயக்கத்தினால் அதன் ரூபங்கள் உருவாகின்றது.
 
உயிரால் உணர்வுக்கொப்ப அந்த உணர்வின் பொறிகள் உருவாக்கப்பட்டு அதன் வழி அந்த உடல்கள் எப்படியெல்லாம் மாறுகின்றது…? என்பதனை குருநாதர் தெளிவாகக் காட்டுகின்றார்.
 
ஆகவே இவ்வழியில் தெளிந்து கொண்ட பின்னும் இப்பொழுது நமக்கு நன்மை செய்தார்கள் என்றால் நமக்காக நன்மை செய்தார். இனி இவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?
 
அவர் நோய்வாய்ப்பட்டு இருக்கும் பொழுது அந்த நோயின் தன்மையால் வேதனைப்படுகின்றாரே…!
1.இதிலிருந்து விடுபட்டு இனி அவர் ஆனந்த நிலை அடைய வேண்டும்.
2.அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் என்று தான் எண்ண வேண்டும்.
 
ஆனால் அதற்கு மாறாக மீண்டும் பிறவிக்கு இழுத்துச் சென்று நமக்குள் அந்த வேதனை உணர்வு உருவாக்கப்பட்டு நாம் இறந்தபின் மனிதனல்லாத உருவை உருவாக்கத்தான் பயன்படுத்த முடிகிறது. அவரைப் பிறவியில்லா நிலை அடையச் செயல்படுத்த முடியவில்லை.
 
மௌனமாக இருந்து அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நமக்குள் பெற வேண்டும் என்று முதலில் வலுவைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
1.அந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா எல்லோருக்கும் நன்மை செய்திருந்தாலும்
2.அவர் கேட்டறிந்த விஷத்தின் தன்மை அந்த உடலிலிருந்தாலும்…
3.உடலை விட்டுப் பிரிந்து சென்ற ஆன்மா அந்த துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் இணைந்து
4.இந்த உடலில் உள்ள நஞ்சுகள் அனைத்தும் கரைந்து பிறவியில்லா நிலை அடைய வேண்டும்
5.இனி துயரமே இல்லாத நிலையாக என்றும் ஏகாந்த நிலை அடைய வேண்டும் என்று அவரை உந்தித் தள்ள வேண்டும்.
6.அது தான் ஞானிகள் காட்டிய முறை.
 
பிறருக்கு உதவி செய்து தன் துயரத்தின் தன்மை தனக்குள் எடுத்து நோயாகிப் பிரிந்து சென்றாலும் இனி அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டுமென்று யாராவது எண்ணுகின்றோமா…? யாரும் எண்ணுவதில்லை.
 
குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பற்றுடன் இருந்தால் ய்யய்யோ இவ்வளவு நாள் எல்லாம் கொடுத்தாயே... இப்படிப்  போய்விட்டாயே இவ்வளவு சொத்தையும் வளர்த்தாயே… என்னைக் கண்காணித்தாயே…!” என்ற நிலையில் அழுகப்படும் பொழுது யார் அதிகமாக எண்ணுகின்றாரோ அவர் உடலில் அந்த ஆன்மா வரும்.
 
அந்த உடலுக்குள் வந்தால் மீண்டும் அந்த உடலை வீழ்த்திவிட்டு அந்த விஷத்தின் தன்மை ஓங்கி வளர்ந்த பின் மீண்டும் பாநிலையான மனிதனல்லாத உடலைப் பெறுகின்றது.
 
இப்படித்தான் நம்மை அறியாதபடி நாம் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம். இதைப் போன்ற நிலைகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். உடலை விட்டுப் பிரிந்தவர்களை விண் செலுத்த வேண்டும். அதற்குத்தான் தெளிவாகச் சொல்வது.

April 14, 2025

புத்தாடை

புத்தாடை


ஒருவன் தீமை செய்வதைக் கண்களால் பார்க்கின்றோம் தீமை செய்பவனைப் பார்க்கப்படும் பொழுது கண்கள் கூர்மையாகப் பார்க்கின்றது. அந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றது. அவன் செய்த தவறின் உணர்வுகள் நமக்குள் வந்து நல்ல குணங்களைக் கொல்கிறது.
 
நமது வாழ்க்கையில் அறிந்து கொள்ள நம் எண்ணங்களைச் செலுத்துகின்றோம். நோயோடு வாடுகின்றான் உற்றுப் பார்க்கின்றோம். கேட்டு உதவி செய்கின்றோம் இதே கண்களால் தான்…!
 
1.கண்கள் கொண்டு பார்த்து உதவி செய்தாலும் தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வந்தே விடுகின்றது.
2.நம் உடலுக்குள் சேர்ந்த பின் பூராம் நரகாசுரனாக மாறி விடுகின்றது.
 
எத்தனையோ கோடி உடல்களைக் கடந்து இன்று பார்த்து உணர்ந்து நுகர்ந்து மற்றவர்களுக்கு உதவி செய்தாலும் நமக்குள் திருடனைப் போன்று அந்த வலிமை புகுந்து நம் நல்ல குணங்களைக் கொன்று குவிக்கின்றது.
 
நரகாசுரனைக் கொன்ற நாள் எது…? தீபாவளி.
 
தீமை என்ற உணர்வைத் தெரிந்து தீமையை நுகர்ந்ததனால் நமக்குள் இத்தனை நோய்கள் வந்தது அதைக் கண்களால் பார்த்தோம்.
1.அதே கண்களால் தீமையை நீக்கிய அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா என்று
2.அந்தக் காலையில் 4 மணிக்கு எண்ணப்படும் பொழுது
3.கண்ணுற்றுப் பார்த்து துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள இரத்த நாளங்களில் கலந்து
4.நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கும் ஜீவணுக்களுக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று பாய்ச்ச வேண்டும்.
 
யாரையெல்லாம் நாம் பார்த்தோமோ அந்தக் குடும்பங்கள் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் தொழில்கள் வளம் வர வேண்டும் அருள் வழி வாழ வேண்டும் அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்று அன்றைக்கு முழுவதுமே இப்படிச் சொல்ல வேண்டும்.
 
இப்படி நமக்குள் தீமைகளை மறந்து செயல்பட்டால்
1.நம் ஆன்மாவில் இருக்கும் தீமைகளை காலை 6 மணிக்கெல்ல்லாம் சூரியன் அதை எடுத்துச் சென்று விடுகின்றது.
2.பரமாத்மாவில் உள்ள அசுர குணங்களும் மாற்றப்படுகின்றது.
 
நாம் எடுத்துக் கொண்ட அருள் உணர்வுகள் எல்லோரும் அன்புடன் பண்புடன் இருக்கப்படும் பொழுது நம் ஆன்மாவிலே அன்பு கொண்ட புத்தாடையாகின்றது.
 
தீமைகளை நீக்கி நல்ல உணர்வு கொண்டு நமது வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும்…? என்று தான் இந்த புத்தாடை அணியும் நிலையைக் காட்டுகின்றார்கள்.
 
நாம் துணிகளைப் புதிதாக அணிவதல்ல…!
 
தீமைகளை நீக்கும் துருவ நட்சத்திரத்திண் உணர்வை நம் ஆன்மாவாக மாற்றி நமக்கு அது புத்தாடையாகி பகைமை உணர்வு வராதபடி நம்மை எப்படிக் காத்துக் கொள்ள வேண்டும்…? நாம் எப்படி மற்றவர்களைப் பார்க்க வேண்டும்…? என்பதற்காகத்தான் தத்துவத்தைக் கொடுத்துள்ளார்கள்.
 
நாம் அதை எல்லாம் மறந்திருக்கின்றோம் விஞ்ஞான உலகால் உலகம் அழியும் தருணத்தில் நமது குருநாதர் காட்டிய வழியில் ஞானிகள் காட்டிய நெறிகளைப் பின்பற்றினால் வரும் விஷத் தன்மைகளிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ளலாம்.
 
வருடம்தோறும் ஒவ்வொரு மாதத்திலும் விழாக் காலங்களில் அருள் உணர்வுகளைப் பெருக்கிப் பாருங்கள்.
1.உடலுக்குள் இருக்கும் பகைமைகள் மாறுகின்றது.
2.இந்த காற்று மண்டலத்தில் இருக்கக்கூடிய தீமையான உணர்வுகளும் தூய்மையாக்கப்படுகின்றது
3.எல்லோரும் இதை செயல்படுத்தும் பொழுது பரமாத்மா பரிசுத்தம் அடைகின்றது.

April 13, 2025

உயிரின் இயக்கம்

உயிரின் இயக்கம்


ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் போதெல்லாம் நமது உயிரை ஈசனாக மதித்து உடலுக்குள் இருக்கும் அனைத்து குணங்களுக்கும் உடலுக்கும் உயிரே குரு என்ற நிலையில் மதித்தல் வேண்டும்.
 
ஓம் என்றால்
1.நமது உயிர் ஓ என்று இயங்கிக் கொண்டே உள்ளது.
2.நாம் பார்த்தது கேட்டது நுகர்ந்த்து எல்லாம் நமது உயிரில் மோதும் பொழுது ஓ என்று அந்தக் குணங்கள் இயங்கி
3.அந்தக் குணத்தின் உணர்வுகள் ம் என்று நம் உடலாக மாறிக் கொண்டே உள்ளது.
 
ஆதாவது ஓம் நமச்சிவாய…! நாம் நுகர்ந்த உணர்வுகள் உயிரைப் போன்று ஜீவ அணுவாக மாற்றி அணுவின் மலம் நம் உடலாக சிவமாக மாறுகின்றது.
 
.இப்பொழுது நாம் எத்தனை வகை குங்களை நுகர்ந்து அறிகின்றோமோ அறிய உதவுகின்றது
1.உணர்வு அந்தந்த நிலைக்கொப்ப குணங்களுக்கொப்ப ந்த உணர்ச்சிகள் நம்மை இயக்குகின்றது.
2.அந்த உணர்ச்சிகள் இயக்கினாலும் அந்த உணர்வின் தன்மை அணுவாக அந்தக் குணத்தை வளர்க்கும் சக்தி பெறுகின்றது..
 
ஒரு செடியில் வித்து ருவானால் நிலத்தில் அதை ஊன்றினால் எந்தச் செடியில் அது விளைந்ததோ அந்தச் செடியிலிருந்து வரக்கூடிய சத்தை இந்த வித்து நுகர்ந்து செடியில் விளைந்த வித்தைப் போல பல வித்துக்கள் உருவாகி அதன் செடிகளை உருவாக்கும்.
 
அதைப் போன்று ஒருவன் கோபப்படுகிறான் என்ற உணர்வை உற்றுப் பார்த்தால் நமது கருவிழி ருக்மணி நமது விலா எலும்புகளில் ஊழ் வினை என்ற வித்தாக பதிவாக்கி விடுகின்றது.
 
அதே சமயத்தில் கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ
1.அந்த மனித உடலிலிருந்து வரக்கூடிய உணர்வை நமது ஆன்மாவாக மாற்றி
2.நம் உயிரிலே மோதும் போது அவன் கோப்த்தின் உணர்வு எதுவோ அதே போல அந்தக் கோப உணர்வுகள் நம் உயிரிலே மோதும் போது
3.அந்தக் கோபத்தைச் செயல்படுத்தும் உணர்ச்சிகளாக நம் உடல் முழுவதும் பரவுகின்றது.
4.கோபித்த உணர்ச்சிகள் உமிழ் நீராக மாறி ம் என்று உடலாக அமையும் சந்தர்ப்பம் வருகின்றது.
 
காரணம் அது உமிழ் நீராக மாறும் பொழுது நாம் உணவாக உட்கொள்ளும் உணவுடன் கலக்கப்படும் பொழுது
1.அவன் எப்படிக் கோபித்தானோ அதே போல நாம் ஆகாரத்திற்குள் கார உணர்ச்சிகளை உருவாக்கி அதன் உணர்வுகள் இரத்தமாக மாறுகின்றது…”
2.இப்படித்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நம் உயிர் நம் சுவாசித்ததை எல்லாம் இரத்தமாக அணுக்களாக உடலாக மாற்றிக் கொண்டே வருகிறது.

April 12, 2025

ஞானக்கனி


ஞானக்கனி
 
நாரதர் சிவனிடம் வருகின்றார் கனியைக் கொண்டு வந்து கொடுக்கின்றார். உலகை யார் முதலில் வலம் வருகின்றார்களோ அவர்களுக்கே அந்தக் கனி.
 
முருகனின் வாகனம் மயில் ஆற்றல் மிக்கதாக இருப்பதால் ஏறி உட்கார்ந்தால் ஒரு நொடியில் உலகை சுற்றிச் வரலாம் என்று அவருடைய உணர்வு வேகம் செல்கின்றது.
 
ஆனால் விநாயகன் இருந்த இடத்திலிருந்தேஅதாவது
1.புழுவில் இருந்து மனிதனாக வளர்ச்சி பெற்ற நிலையில்
2.பல உணர்வின் சத்துக்களை எடுத்துச் சேர்த்துக் கொண்ட வினைக்கு நாயகனாக
3.மனித உடல் பெற்ற இந்த உடல் அது இருந்த இடத்திலேயே இருக்கின்றது.
 
இருந்தாலும்இந்த உணர்வின் எண்ண அலைகள் ஊடுருவிச் செயல்படும் நிலைகள் அந்த எண்ணத்தைப் பாய்ச்சி அங்கே செல்கின்றது (முருகன்).
 
விநாயகன் இருந்த இடத்திலிருந்து உணர்வின் சக்தியைத் தனக்குள் எடுத்து வினையாகச் சேர்த்து வினையின் ரூபமாகச் சேர்க்கப்பட்டது.
 
உடல் பெற்ற நிலையில் தாய் தந்தையருடைய நிலைகள் என்பது பேரண்டமும் பேருலகமும்என்று (அதனின் சக்தியைத்) தனக்குள் எடுத்துக் கொண்டது. இருந்த இடத்திலிருந்து தன் உணர்வின் சக்தியை எடுத்துக் கருவாக எடுத்துச் சிசுவாக விளைய வைத்தது.
 
ஆகவே
1.ஒரு மரம்…! அது பல அலைகளின் தொடர் கொண்டு
2.தனக்குள் எடுத்துக் கொண்ட மணத்தின் நிலைகள் கொண்டு இந்த சத்துக்குள் விளைந்தது கனி (மாங்கனி)
3.அது போல் அன்னை தந்தையருக்குள் விளைந்ததே இந்த உணர்வின் வித்து… (மனித உடல்)
4.இந்த வித்தின் தன்மையே உயிரான அந்தச் சத்து…!”
 
இந்த உடலிள் வினையாகச் சேர்த்துக் கொண்ட அந்த நிலையான நிலைகள் கொண்டு இந்தச் சத்தின் தன்மையைப் பெறக்கூடிய தகுதியாக
1.உயிர் எப்படி ஒளியாக ஆனதோ
2.அதைப் போல உயிரின் (ஒளியின்) தன்மை தனக்குள் எடுப்பது.
 
மாங்கனி அது வித்தாகி மரமாகி மீண்டும் தனக்குள் வித்தின் சத்தாகச் சேர்ப்பது போன்று
1.தன் இனத்தின் சத்தின் தன்மையை
2.ஒளியின் சுடராக வளரும் பக்குவ நிலைகள் பெறுகின்றது.
(சொல்வது அர்த்தமாகிறதல்லவா)
 
அந்தப் பக்குவ நிலையைக் காட்டுவதற்குத் தான் (நாரதன் கொடுப்பதாக) கனியைக் காட்டி
1.தாய் தந்தையருடைய பாசத்தால் தான் நாம் வளர்கின்றோம்
2.பாசத்தால் வளர்க்கப்படும் பொழுது அந்த ஞானி காட்டிய உணர்வின் எண்ண அலைகளை நீ எடு
3.அவன் வழியில் நீ செல்…!
 
அன்று வான்மீகி வானை நோக்கி ஏகினான் துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெற்றான்…! துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படக்கூடிய அணு தான் நாரதன். ஆகவே அந்த உணர்வின் தன்மை தான் வான்மீகிக்குள் ஈர்க்கப்பட்டது என்பதைநாரதன் வான்மீகிக்கு ஓதினான் என்றார்கள்…”
 
ஏனென்றால் அது விளைந்து முதிர்ந்த கனி…!” கனியிலிருந்து வரும் மணம் சுவையானதுஇனிமை கொண்டது. நாரதனிடம் இருப்பது சுருதி ஏழு சரஸ்வதியிடம் இருப்பது சுருதி ஏழு..! என்று இவ்வளவையும் படத்தைப் போட்டுப் பல உணர்வின் தன்மை அறிவதற்குக் காட்டுகின்றார்கள் மெய் ஞானிகள்.
 
தாய் தந்தை இறந்த பின் பாசத்தினால் இங்கு (பிள்ளைகளின் ஈர்ப்புக்குள்) வந்தாலும்
1.மெய் ஒளியின் தன்மை நாரதன் காட்டிய அந்த உணர்வின் எண்ணத்தை எடுத்து
2.எண்ணத்தாலே தாய் எப்படி நம்மைக் (தன் பிள்ளைகளை) கருவாகக் கூட்டியதோ
3.அதே போல பேரண்டமும் பெரு உலகமும் உன் அன்னை தந்தை தான் அதற்குள் இருந்து தான் நீ ஜெனித்தாய்…! என்ற
4.இந்தப் பேருண்மையைக் காட்டி அது தான் உன்னை முதல் தெய்வமாக உருவாக்கியது
5.அதனுடன் நேசித்து நீ வளர வேண்டும் என்று தெளிவாக்குகின்றார்கள்.
 
ஏனென்றால் மரத்துடன் ஒன்றிய காய் அது கனியாகும்…!”
 
காயாக (மரத்திலிருந்து) விழுந்து விட்டால் சுவை இருக்காது இயக்கம் புளிப்பாகும். அதை எல்லாம் அன்று அந்த அகத்தின் இயக்கத்தின் தன்மையைத் தெளிவுற உணர்த்தப்பட்டது.
 
தாய் எப்பொழுதுமே தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனே வாழ்கிறது. அதே வழியில் நாமும் நம் தாய் தந்தை உயர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணத்தைச் செலுத்தி அந்தப் பாசத்துடன் ஒன்றி அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் செயல்படுத்தி அந்தச் சக்தியை வளர்த்திட வேண்டும்.
 
1.இப்படி இதன் வழியிலே வளர்ந்தவர்கள் தான் விண் சென்றார்கள் கனியாக ஆனார்கள்…! என்று கனியைக் கொடுத்து (நாரதன் கொடுக்கும் கனி)
2.மக்களுக்கு விளக்கம் சொல்வதற்கு இப்படிக் கதையாகக் காட்டிப் பேருண்மையை உணர்த்திச் சென்றார்கள்.

April 10, 2025

தீமைகள் எது வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

தீமைகள் எது வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்

 
தீமையிலிருந்து விடுபடுவதற்கு உபாயம் என்ன…? இந்த ஆறாவது அறிவு தீமை என்று அறிந்து கொள்கின்றது கார்த்திகேயா.
1.தீமைகளை நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ நட்சத்திரம்.
2.அதை வழிநடத்தி அதனின் உண்மையின் உணர்வை அறிவதற்காக இதைச் செய்கின்றேன்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்களால் ங்கி வானை நோக்கி அதன் உணர்வு பெற வேண்டும் என்று ஏக்கத்தால் எண்ணி அதே கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் செலுத்தப்படும் பொழுது கண்ணால் பார்த்து உயிரிலே படும் பொழுது தான் உணர்வால் அறிகின்றோம்.
 
ஆனால் அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வைக் கண்களால் நுர்ந்தோம் உயிரின் காந்தம் நுகர்ந்து அந்த உணர்வை அறியச் செய்கின்றது கண்ணால் பார்க்கின்றோம் உயிரால் உணர்கின்றோம்.
 
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவைப் புருவ மத்தியில வைக்கப்படும் பொழுது அது வலிமையாகி விடுகின்றது.
 
ஏனென்றால் வேதனைப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்றோம் கேட்டு அறிந்து. ஆனால் அடுத்த கணம் துருவ நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் புருவ மத்தியில எண்ணி அதைப் பெற வேண்டும் என்று ஆறாவது அறிவின் துணை கொண்டு கட்டளையிட வேண்டும் சேனாதிபதி.
 
தீமையான உர்வை நுகர்ந்திருந்தாலும் முதலிலேயே அது சிறிதளவு போய்விட்டது அது புகாதபடி தடுக்க வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு கண்ணின் நினைவைப் புருவ மத்தியில் எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இணைக்கும் போது உள்ளே போகாதபடி தடைப்படுத்துகின்றது.
 
தடைப்படுத்துவது மட்டுமல்ல நம் உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உள்ளே செலுத்துதல் வேண்டும்.
 
இதை ஆணையிடுகின்றது… ஆறாவது அறிவு சேனாதிபதி கார்த்திகேயா. இந்த உணர்வு கொண்டு உடல் உறுப்புகளை உருவாக்கி அணுக்களுக்கு இப்படிச் செலுத்தப்படும் பொழுது அவை வீரியமடைகின்றது.
 
நாம் எண்ணியபடி அந்தத் தீமை வராதபடி உஷாராகின்றது.
 
நுகர்ந்து சிறிதளவு போன நிலையும் இந்த உணர்வுகள் சேர்த்து
1.இது உமிழ் நீராக மாறி உள்ளே சேர்க்கப்படும் பொழுது அந்த விஷத்தை அடக்கும் சக்தியாக
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் தீமை நுகராது தடுத்த பின் சிறுத்து விடுகின்றது.
 
துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி உமிழ் நீராக மாறும் பொழுது அது சிறுக்கப்படுகின்றது. இதன் வழி கொண்டு எத்தகைய தீமையின் உணர்வை நுகந்தாலும் நம்மால் மாற்றிக் கொள்ள முடியும்.
 
அந்தச் சக்தியை எடுத்து நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் பதிவாக்கி நினைவாக்கி நீங்கள் தீமையிலிருந்து விடுபட முடியும்.
 
தீமையில் இருந்து விடுபட முடியாதபடி நன்மை செய்தோர் அனைவரும் தீமையில் சிக்குண்டு… நான் எல்லோருக்கும் நல்லது செய்தேனே என்னை இப்படி ஆண்டவன் சோதிக்கின்றானே…!” என்று எண்ணுகின்றார்கள்.
 
நாம் எண்ணியதை உணர்த்துவதும் உணர்வின் தன்மை உடலாக்குவதும் உடலாக்கிய பின் இதை ஆள்வதும் ஆண்டவனாக இருக்கின்றான் நமது உயிர். எண்ணியதை இயக்குகின்றான். ஆக யாரைப் பழி போடுவது…?
1.எங்கேயோ ஆண்டவன் இல்லை நமக்குள் எண்ணுவதைத் தான் உருவாக்குகின்றான்.
2.அந்த உணர்வு வழி தான் நம்மை வழி நடத்துகின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
மனிதனுடைய ஆறாவது அறிவு சேனாதிபதி. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எடுத்து கண்ணின் நினைவை இங்கே தடைப்படுத்தினால் உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
1.அதைச் செலுத்தப்படும் பொழுது அணுக்கள் அனைத்தும் ஒன்று சேர்த்து அந்தப் படைகன் தீமைகளை எதிர்க்கும் சக்தியாக பெறுகின்றது.
2.மனிதன் ஒருவனால் தான் இதைச் செயல்படுத்த முடியும்.
3.தீமைகள் எது வந்தாலும் மாற்றிக் கொள்ள முடியும்
 
உங்களை நீங்கள் நம்புங்கள்…!

April 9, 2025

நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்

நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்


நாம் நமது வாழ்க்கையில் இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம். எத்தனையோ ஆண்டு வாழ்கிறோம் என்று இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தைப் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது.
2.வேதனை என்ற உணர்வு வளர்ந்தால் தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் சக்தியும் இழக்கப்படுகிறது.
3.பாதுக்க்கும் தன்மை இழந்து விட்டால் நம் உடலில் நோய் உருவாகின்றது.
4.நோய் உருவானால் இதுவே நாம் தேடிய செல்வமாக மாறிவிடுகின்றது.
5.நோயின் உணர்வுகள் விளைந்தால் அந்தச் செல்வத்தின் வழியே உயிர் அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்த உடலை உருவாக்கி விடுகின்றது.
 
ஆகவே தேடிய செல்வங்கள் நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை. வேதனை வெறுப்பு என்ற உணர்வைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடும். கோபம் குரோதம் என்ற நிலையானால் அதன் வழி அடுத்த உடலை உருவாக்கி விடுகிறது.
 
ஒரு நிலம் சரி இல்லை என்றால் அதைப்ண்படுத்துகின்றோம். ஒரு வீடு கட்டினால் அது சரியில்லை என்றால் அதைக் காட்டிலும் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகின்றோம்.
 
இதைப் போல தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது உயிர். ஆனால் அதைப் போன்ற உடலின் தன்மை வரும் பொழுது அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது.
 
1.அத்தகைய வேதனைகளை உருவாக்குவதற்கு மாறாக
2.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றைக்கும் நிலையான சரீரமாக வாழும் நிலையை
3.பேரருள் பெற்ற உணர்வினைச் செல்வமாக்கி பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கிப் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.
 
அதைத் தான் இராமேஸ்வரத்தில் ராமன் நேரமாகிவிட்டது என்று உணர்வின் தன்மை கூட்டி பூஜிக்கத் தொடங்கினான் என்று காட்டியுள்ளார்கள்.
 
இதைப் போலத் தான்
1.அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும்கைமையற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் உணர்வினை ஒன்று சேர்த்துக் கூட்டி
2.அந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாகி ஒன்றாகி ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வுகளைப் பெருக்கி நீங்கள்ண்ணும் பொழுது
3.அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஒளியாக மாறி அருள் ஒளி என்ற நிலைகள் பெறும் தன்மை வரும்.
 
ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றேன்.
 
இந்த உடலின் நிலைகள் நாளடைவில் கரையும் தன்மை தான் வளரும். அதாவது வளரும் தன்மையில் உடல் கரையும்… ஆனால் உணர்வுகள் வளரும்.
 
1.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… ஆக அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்
2.அந்த அருள் ஒளியை நாம் பெறுவதற்கே நாம் முயற்சிப்போம்.
 
செல்வமும் இந்த உடலும் நம்முடன் வருவதில்லை. அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளரும் பருவத்தினை ஏற்படுத்தி வளர்த்திடும் நிலையும் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியில் நாம் செல்வோம் என்று பிரார்த்திக்கின்றேன்.