ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 19, 2025

“தன் இனம்” பெருக வேண்டும் என்பதற்குத்தான்… ஞானிகள் தான் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள்

“தன் இனம்” பெருக வேண்டும் என்பதற்குத்தான்… ஞானிகள் தான் கண்ட உண்மைகளை வெளிப்படுத்துகிறார்கள்


விஞ்ஞானிகள் இன்று மண்ணுக்குள் பதிந்திருப்பதை காந்தப் புலனறிவு கொண்ட ஒரு டப்பாவில்” வைக்கின்றான். இது… பூமியில் இருக்கும் இந்த உணர்வுகள் எதனுடன் கலந்ததோ அதன் இனத்தைக் காற்றிலிருப்பதை அது ஈர்க்கும்…”
 
அதைக் கண்டு கொள்வதற்காக மேலே விமானத்திலே பறந்து
1.அதிலிருந்து ணர்வலைகளை ஊடுருவிப் பாய்ச்சப்படும் போது ஈர்க்கும் சக்தியை அதிகமாகின்றது.
2.அதற்குள் இருக்கும் அளவுகோல் மானிகளை இதனுடன் இணையச் செய்து
3.பூமிக்குள் இன்ன இடத்தில் இத்தனை அடி ஆழத்தில் இன்னது இருக்கிறது என்பதை விஞ்ஞானி அறிகின்றான்.
 
ஆனால் அன்று ஆதியிலே அகஸ்தியன் தாய் கருவிலேயே” விஷத்தை அடக்கும் உணர்வுகள் கொண்டு விளைகின்றான். பிரபஞ்சத்தில் உருவாகும் நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றும் நிலை பெற்றான்… துருவன் ஆனான்.
 
1.வாலையும் புவியலையும் உயிரியிலையும் கண்டறிந்த பின் உயிரியலின் ஆற்றலைப் பெருகும் நிலையும்
2.நம் பூமியில் பரவிக் கிடந்த பல கோடித் தாவர இனங்களின் வலிமை கொண்டு அந்த எண்ணங்கள் கொண்டு தன்னை அறியும் ஆற்றலும்
3.இது எந்த வகையில் வந்தது என்று துருவத்தினை நுகரப்படும் பொழுதுதான் விண்ணின் ஆற்றலைத் துருவன் நுகர்கின்றான்.
4.இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவாகிறது…? என்பதையும் காண்கின்றான்
5.இந்தப் பிரபஞ்சத்திற்கு மூல காரணமாக எது எது இயக்குகிறது…? என்று தனக்குள் அறிகின்றான்.
 
அதே சமயத்தில் இந்தப் பேருண்மைகளை நம் குருநாதர் எப்படி அறிந்தார்…?
 
1.துருவத்தைப் பின்பற்றுகின்றார் துருவனின் உணர்வைக் கவர்கின்றார்.
2.கவர்ந்த உணர்வின் தன்மை அவருக்குள் அறியும் ஆற்றலாக வருகின்றது.
 
அதன் உணர்வை வளர்த்துக் கொண்ட நிலை தான் எமது பாலும் அந்த உணர்வின் கருக்களைப் பதியச் செய்து அந்தக் கருவின் வித்தினை நினைவு கொள்ளும் பொழுது அதன் உணவை நானும் நுகர முடிகின்றது அறிய முடிகின்றது.
 
அதிலே  விளைந்த உணர்வின் வித்தை இப்பொழுது சொல்லாகச் சொல்லப்படும் பொழுது
1.அதை நீங்கள் கேட்கும் போது ஊழ்வினை என்ற வித்தாக உங்களுக்குள் பதிவாகின்றது.
2.அந்தப் பதிவினை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வரும் பொழுது உலகை அறிய முடிகின்றது உங்களைக் காக்கும் உணர்வும் வருகின்றது.
3.இந்த இரண்டையும் பிணைத்துத்தான் இப்போது உபதேசமாகக் கொடுக்கின்றோம்.
4.குருநாதர் எமக்குள் எப்படிப் பதிவு செய்தாரோ அதன் வழியே தான் உங்களுக்குள்ளும் பதிவு செய்கின்றேன்.
 
ஏனென்றால்… மனிதனாகப் பிறந்த பின் கார்த்திகேயா பல கோடி உணர்வுகளிலிருந்து எதிரி வருகிறது என்று அந்த உணர்வால் அறிகின்றது… உணர்வின் வலுவை அறிகின்றது… அதனின் உணர்வைத் தனக்குள் கவருகின்றது... விளைந்த பின் அதிலிருந்து தப்பிக்க எண்ணுகின்றது அதன் வலுவும் கூடுகின்றது.
 
இவை அனைத்தும் இணைந்து எதனை உற்றுப் பார்த்துக் கூர்மையானதோ அதனின் வலிமை இதற்குள் விளைகின்றது. இந்த நினைவு ஓங்கி வளர்கின்றது.
 
வலிமையாகி உடலை விட்டுச் சென்ற பின் எதைக் கூர்மையாக எண்ணியதோ அதன் உடலுக்குள் சென்று அதன் வலிமை கொண்டு அதனின் உருவமாக மாறுகின்றது” என்று இதையெல்லாம் காவியங்கள் நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றது.
 
கடவுளின் அவதாரத்தில் கூர்மை அவதாரத்தில் உயிரின் உணர்வுகள் எதைக் கூர்மையாகக் கண்களால் உற்று நோக்கி வலிமையாக்கிக் கொண்டதோ அதன்படி அந்த வலிமை பெறுகிறது என்று வியாசகர் அதை உணர்த்துகின்றார்.
 
கண்ணின் உணர்வுகள் அனைத்துடனும் இணைக்கப்பட்ட நிலையில்
1.அதனின் செயலாக்கங்கள் எவ்வாறு இருக்கின்றது…? என்பதனை நினைவுபடுத்துவதற்குத் தான் வியாசகரைப் பகவான்… என்றார்கள்.
2.காரணம் அதைக் கண்டுபிடித்து உருவாக்கியவன் அவன்.
 
கண்ணைக் கண்ணன் என்றாலும் கண்கள் பெற்ற உணர்வினைத் தனக்குள் நுகர்ந்தறிந்து பரமாத்மா. இந்தப் பரமில் உள்ள அனைத்திலும் கலந்துள்ளது. ஒவ்வொரு உயிரினங்களும் கண்ணின் நினைவாற்றல் கொண்டு கவர்ந்து அந்த உணர்வின் நிலையாக விளையச் செய்து ரமான பூமியில் பரமாத்மாவாகக் கலந்துள்ளது.
 
கண்ணின் செயலாக்கங்கள் உருவாக்கப்பட்டு
1.மீண்டும் இந்தப் பூமியில் படர்ந்திருப்பது மனிதனுக்குள் பரமாத்மாவாக மாறுகின்றது.
2.பூமிக்குப் பரமாத்மாவாக மாறுகின்றது… நமக்குள் பரமாத்மாவாக இயக்குகின்றான்.
 
வியாசகரால் உணர்த்தப்பட்ட உண்மை இது…!
 
காரணம் ஞானிகள் கொடுத்த காரணப் பெயர்கள் அனைத்துமே தெளிவானதே. தான் கண்டுணர்ந்ததைத் தன் இனங்கள் பெருக வேண்டும் என்று இப்படிக் காட்டுகின்றார்கள்.

September 18, 2025

உடலில் உள்ள “ஒவ்வொரு அணுவிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வை” நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்

உடலில் உள்ள “ஒவ்வொரு அணுவிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வை” நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்


தீமைகளை வென்ற அருள் மகரிஷிகளின் உணர்வுகளைக் கூர்மையாக வலிமை கொண்டு பதிவாக்கி அதைப் பெற வேண்டும் என்று மீண்டும் எண்ணப்படும் பொழுது அது நம் உடலுக்குள் செல்கின்றது.
 
தீமையை வென்றவன் சுக்ரீவன்அவன் வாலியின் சகோதரன் இளையவன்.
 
விஷத்தின் தன்மை கொண்டு வளர்ச்சி பெற்றுத் தான்
1.பல கோடிச் சரீரங்களில் அது எடுத்துக் கொண்ட வலிமை கொண்டு,,, பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக உருவாக்கியது.
2.மனிதனான பின் விஷத்தின் தன்மை ஒடுக்கி அந்த உணர்வினை ஒளியாக மாற்றி விண் சென்றவன் துருவ மகரிஷி.
3.ஆகையினால் பின் தான் இதனுடைய வளர்ச்சியின் தன்மை பெற்றவன் என்றும் சுக்ரீவன் வாலியின் சகோதரன் என்றும் இளையவன் என்றும்
4.பின் வந்த நிலையை நாம் அறிவதற்காக நமக்குக் காட்டியுள்ளார்கள் இராமாயணக் காவியத்தில்.
 
கடும் வேதனைகளை அடக்கியவன் சுக்ரீவன். பல கோடிச் சரீரங்களில் உருவான இந்த உணர்வைத் துருவன் அந்த விண்ணின் ஆற்றலைத் தனக்குள் எடுத்து நஞ்சினை ஒடுக்கி உணர்வினை ஒளியாக மாற்றுகின்றான்.
 
உதாரணமாக ஒரு விஷமான பாம்பு உணவுக்காகத் தனக்குள் விளையும் விஷத்தை மற்ற உயிரினங்கள் மீது பாய்ச்சி அதனை உட்கொள்ளும் பொழுது இந்த விஷமே அந்த உடலைக் கரைக்கும் சக்தியாக மாற்றுகின்றது.
 
துரித நிலைகள் கொண்டு தனக்குப் பாதுகாப்பாக இந்த விஷம் விளைந்தாலும் எதை உட்கொள்கின்றதோ அந்த உடலிலும் விஷம் உண்டு. அந்த விஷத்தையும் தன்னுடன் கலந்து அதை ஜீரணிக்கும் சக்தி வரப்படும் பொழுது
1.மீண்டும் விஷத்தினை வளர்த்து விஷம் உருவாக்கும் அந்தப் பையில் (பாம்பின் உடலில்) அதை நிரப்பும்.
2.பையில் நிரப்பப்படும் பொழுது அதில் சிறுகச் சிறுகச் சேர்த்து வளர்ச்சியின் தன்மை வரும் பொழுது நாகரத்தினமாக மாறுகின்றது.
3.விஷப் பைகளில் வளர்ச்சியின் தன்மை பெறும் பொழுது ஒளியின் சுடராக மாறுகின்றது.
 
அதே போல் தான்
1.ஒவ்வொரு அணுக்களிலும் விஷத்தை ஒடுக்கும் உணர்வினைப் பெற்று ஒளியின் சரீரம் பெற்றவன் துருவ மகரிஷி.
2.அந்தத் துருவ மகரிஷிகள் உணர்வை நாம் நுகர்வோமென்றால் அது உடலுக்குள் சென்று நம்மை அறியாது சேர்ந்த வேதனைகளை அடக்குகின்றது.
 
எந்த உணர்வு நம்மைச் சோர்வடையச் செய்ததோ அந்த உணர்வுகள் விஷத்தின் தன்மையை மீண்டும் நுகர்ந்து சோர்வடையாதபடி அந்தத் துருவனின் உணர்வுகளைச் சேர்க்கப்படும் போது அந்த விஷத்தினை ஒடுக்குகின்றது.
 
அதனால் தான் வாலியை இராமன் சுக்ரீவன் துணை கொண்டு அடக்கினான்…” என்று சொல்வது.
 
நாம் எதை எண்ணுகின்றோமோ அந்த உணர்வே எண்ணங்களாக இயக்குகின்றது என்றும் அருள் ஒளியின் உணர்வாக இயக்கப்பட வேண்டும் என்றும் காட்டுகின்றார்கள்.
 
அதாவது பிராணயாமம் என்று சொல்வார்கள்.
 
ஆனால் மூக்கு வழி கூடிச் சுவாசித்து உணர்வினை உடலுக்குள் செலுத்தி அந்த உணர்வை ஜீவனாக்குவது அல்ல பிராணயாமம்.
 
1.புருவ மத்தியில் உயிருடன் ஒன்றி நினைவினை விண்ணிலே செலுத்தி
2.அந்தத் துருவ மகரிஷியின் உணர்வுகளை நமக்குள் ஊடுருவச் செய்து
3.அந்த உணர்வினை உடலுக்குள் சேர்த்து அதனின் இயக்கமாக நமக்குள் இயக்கச் செய்வதே பிராணயாமம் என்பது.
 
ஏனென்றால் அந்தத் துருவ மகரிஷியின் உணர்வு நம் உடலுக்குள் சென்று அந்த உணர்வின் இயக்கமாகத் தொடரப்படும் பொழுது எதனின் வலுப் பெறுகின்றதோ அதன் இயக்கமாக அது நம்மை ஒளியான நிலைகளாக…” மாற்றி அமைக்கும்.

September 17, 2025

போகன் உருவாக்கிய "மனோசிலை… காயகல்பம்…!"

போகன் உருவாக்கிய "மனோசிலை… காயகல்பம்…!"


மனித உடலில் எடுத்த உணர்வின் ஒலிகளைப் பாய்ச்சி அந்த வலுவைக் கூட்டி மந்திர ஒலிகளால் பதிவான பின் அந்த மனிதன் மடிந்து விட்டால் அந்த உணர்வின் ஒலிகள் கொண்டு பல நிலைகளை அறியலாம்.
 
அதாவது இப்பொழுது நாம் பேசும் உணர்வுகளைப் போல ஒவ்வொரு உலோகத்திற்கும் தனித்த ஒலியின் நாதங்கள் உண்டு. அதனைத் தனக்குள் எடுத்து அந்த நாதங்களைப் பாய்ச்சி அந்த உணர்வுகளைத் தனக்குள் எந்தெந்த நிலை என்று ஒலியைப் பாய்ச்சி விட்டால்
1.எந்த மனிதன் இறந்தானோ அதனைத் திருப்பி எடுத்து நினைவு கொண்டு
2.பூமிக்கடியில் உள்ள பொருள்களை அறியும் நிலை கொண்டு பாய்ச்சப்படும் பொழுது
3அங்கே அடியில் உள்ள உலோகங்களைக் காண முடிகின்றது.
 
ஏனென்றால் பல கோடி உணர்வின் தன்மை பெற்றவன் மனிதன். இதற்குள் இணை சேர்க்கப்பட்டு உணர்வின் ஒலி அதிர்வுகளைக் கொடுக்கப்படும் பொழுது
1.அதிலிருந்து கிளம்பும் அதிர்வுகளைப் பாய்ச்சியபின் தூரத்தின் தன்மை தனக்குள் கணக்கிடப்பட்டு
2.இந்த இடத்தில் நீர் உள்ளது இந்த இடத்தில் உலோகங்கள் உள்ளது என்று
3.மனிதனின் உணர்வின் துணை கொண்டு அறிந்தார்கள் அக்காலத்தில்.
 
அதன் வழி கொண்டு தான் மனிதனுக்குள் பெற்ற வலிமையின் உணர்வுகள் அதைக் கண்டறியப்படும் பொழுது உலோகக் காலங்களாக மாறுகின்றதுமந்திரக் காலங்கள்.
 
உலோகக் காலங்கள் வரப்படும் பொழுது பூமிக்குள் மறைந்த எதிர்நிலை கொண்ட மண்ணில் விளைந்த மனோசிலை கந்தகம் மற்ற பொருள்களைக் காணுகின்றார்கள்.
 
அதாவதுஅது மண்ணில் விளைந்த உப்புச்சத்து. சூரியனுடைய காந்த சக்தி மண்ணிலே அமிலங்களாகக் கலக்கப்படும் பொழுது ஒரு வெட்கையின் தன்மை வரும்.
1.அதை மீண்டும் வேக வைத்து அந்த உப்பை உறையச் செய்து கந்தகத்துடன் அளவுகோல் கொண்டு இணைக்கச் செய்து
2.மோதும் பொழுது வெடிக்கும் தன்மையாக அதற்குண்டான நிலைகளைச் (வெடி பொருள்களை) சேர்க்கின்றான் அன்று போகன்.
3.மனோதத்துவ ரீதியில் உணர்வின் தன்மையை நீக்குவதற்கு மனோசிலை என்று கொண்டு வந்தான் போகன்
 
வைத்திய ரீதியிலே மருந்துகளை உலோக நிலைகளை எடுத்து விஞ்ஞானிகள் சேர்க்கை சேர்ப்பது போன்று மெய்ஞானியான போகர் பல நிலைகளைத் தனக்குள் உருவாக்கி மனோசிலை என்று உருவாக்குகின்றார்.
1.அதை மனித உணர்வின் எரிபொருளுடன் கலக்கப்படும் பொழுது அது உடலுக்குள் ஊடுருவி வெடிக்கும் தன்மையாக வந்து
2.அந்த அதிர்வால் தீமை செய்யும் அணுக்களை மடியச் செய்தான் அன்று.
 
பாறைகளைப் பிளக்க வேண்டும் என்றால் அதே மனோசிலை வைத்து எதிர் நிலையான நெருப்புகளை உருவாக்கப்படும் பொழுது அந்தப் பாறைகள் தகர்த்து எறியப்படுகின்றது.
 
அதே போல் அந்த மெய்ஞானியான அவன் மனோசிலை கந்தகம் போன்ற பல பொருள்களை அளவுகோல்படி இடப்பட்டு
1.மருந்தின் தன்மையாகக் கொண்டு வரப்படும் பொழுது அழியாத் தன்மையும்
2.வெடித்த பொருள் போகத் தொக்கி நிற்பது தீமையான அணுக்களுக்கு எதிர்நிலையாகிக் கொன்று விடுகின்றது உணர்வின் அதிர்வுகள்.
 
அப்போது நமக்குள் உணரலாம்.
 
ஆகவே இதைக் கண்டுணர்ந்தவன் போகன். இதைப் போல எத்தனையோ வகைகளில் ஒவ்வொரு நிலைகளைப் பெற்றவன் அவன்.
 
போகனைக் கண்டவுடன் குருநாதர் திருடன் திருடன்…” என்று சொல்வார். ஏன் சாமி…? அவனைத் திருடன் என்று சொல்கிறீர்கள் என்று நான் கேட்பேன்.
 
1.அவன் எல்லாவற்றையும் திருடும் சக்தி பெற்றவன்.
2.தாவர இனத்திலிருந்து வரக்கூடிய சத்தை நுகர்வான் அதைத் திருடுவான்.
3.அதைத் தனக்குள் எடுத்து தனக்குச் சாதகமான நிலையை உருவாக்குவான்.
4.இப்படி அவன் எல்லாச் சக்தியையும் திருடுகின்றானப்பா…! என்பார் குருநாதர்.
 
ஒரு தாவர இனச் சத்து என்று இருந்தால் அதை நுகர்வான். அதைத் தன் உடலுடன் போகிக்கின்றான். அதனால் தான் போகர் என்று சொல்வது. அதை மோகிக்கின்றான் போகிக்கின்றான்…” ஒரு பொருளின் சத்தை அறிய வேண்டும் என்று மோகம் கொள்கிறான் அந்த உணர்வின் தன்மை தனக்குள் எடுத்து இரண்டற இணைத்துப் போகிக்கின்றான்.
 
அதனால் தான் போகர்…” என்று அந்தக் காரணப் பெயருக்குண்டான விளக்கத்தைக் குருநாதர் சொல்கிறார்.
 
கரு உருவாக்கப்படும் பொழுது இதனின் உணர்வின் தன்மை உதிரங்கள் நீக்குவதுண்டு. கரு உருவாக்கும் இதற்குத் தடையாக இருக்கும் உணர்வினை நீக்கப்படும் பொழுது கழிவின் தன்மை வருகின்றது.
 
அதனுடைய கருவின் தன்மை உருவாகப்படும் போது இந்த உணர்வின் அணுக்கள் ஹார்மோன் அதிகமாக இருக்கும் பெண்களின் உணர்வுகள் இது விந்தானாலும் அதனுடைய நிலைகள் மனோதத்துவப் பிரகாரம் பெண்களின் உணர்வுகளை இதனுடன் சேர்த்து அணுக்களின் தன்மை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.
 
அது எவ்வாறு உருவாக்குகிறது…? என்ற நிலையை உணர்ந்தவன் அதைச் சொன்னாண்.
 
கருக்களின் உருக்களில் சீனாவின் பக்கம் நெருங்கப்படும் பொழுது அங்கிருக்கும் சீதோஷ்ண நிலைகளால் அணுக்களின் கருக்கள் மனிதனுக்குள் ஏராளமா உருவாகின்றது.
 
இதைக் கண்டுணர்ந்து
1.அந்த அணுக்களின் மோக உணர்ச்சிகளைத் தூண்டச் செய்து அந்த எண்ணங்களை உருவாக்கும் பொழுது தான் அபின்களைக் கொடுக்கின்றான்.
2.அதைக் கொடுத்துத் தன் நிலையை மறக்கச் செய்து மோகத்தை உருவாக்கப்படும் பொழுது
3.அதனால் ஈர்க்கும் அணுக்களின் தன்மையைத் தாவர இனங்களை அதில் இணையச் செய்கின்றான்.
 
அவன் அன்று செய்தது.
 
சாதாரண அணுக்கள் வந்தது என்றால் மனிதனுக்குள் எடுத்து அது புழுக்களாக எப்படி உருவாகின்றதோ இதைப் போல பல அணுக்களின் தன்மை கொண்டு ஒவ்வொரு குணங்கள் கொண்ட நிலையும் அதற்குத் தக்க பச்சிலைகளை விரிக்கின்றான்.
 
இந்த மோகம் கொண்டு உணர்வின் தன்மை கவரப்படும்போது அதன் உணர்ச்சிக்குத் தக்க பச்சிலைகளில் அது ஒட்டுகின்றது. அந்தப் பச்சிலைகளில் ஒட்டும் பொழுது தான் இந்த உணர்வின் தன்மை ஜீவன் பெறும் தன்மையே வருகின்றது.
1.ஜீவன் வரப்படும் பொழுது தான் நாத விந்துகள் என்று கணக்கிடப்பட்டு
2.அந்த உணர்வினைத் தனக்குள் எடுத்துக் காயகல்பமாக அவன் மாற்றுகின்றான்.
 
அவன் சொன்ன முறைகள் வேறு. அதற்குப் பின் வந்தவர்கள் கற்றுணர்ந்த கவியின் புலமைகள் வேறு. ஒருவன் கற்றுணர்ந்த நிலையில் கற்பனையில் தான் மற்ற நிலைகளைச் செய்தார்களே தவிர அந்தப் போகன் அன்று சொன்ன நிலைகளை இவர்கள் செய்யவில்லை.
 
ஆனால் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அவர் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை கொண்டு எம்மைத் தெளிவாக்கினார்.
 
எதனையும் ஊடுருவித் திருடும் பழக்கம் பெற்றவன் போகன்….! இச்சையின் நிலைகள் கொண்டு ஒரு பொருளைப் பெற வேண்டும் என்று எண்ணினால் அதை எப்படித் திருடுகின்றோமோ இதைப் போலத் தான் போகனும் எதனையும் கண்டுணரப்படும் பொழுது மோகம் கொள்கின்றான்.
 
அந்த உணர்வின் தன்மை கருவின் தன்மை தனக்குள் திருடுகின்றான்.
1.உலகெங்கிலும் பறக்கும் தன்மை கொண்ட அணுக்களைத் தனக்குள் சேமிக்கின்றான்.
2.ஒரு நொடிக்குள் இயக்கப்படும் போது கவன உணர்வின் அணுக்களைத் தனக்குள் வளர்த்துக் கொண்டபின் பறந்து செல்கிறான்…”
 
மந்திரக்கோலை வைத்து எவ்வாறு ஒரு பொருளின் தன்மை இணைத்துக் கொண்ட பின் கரையான் மந்திரம் என்று செயல்படுத்துவார்கள்.
 
கரையான் தன் மலத்தை இட்டபின் இயற்கையில் விளைந்த மரத்தின் சத்தை ஆவியாக மாற்றி உணவாக எடுத்துக் கொள்கின்றது. இயற்கையில் \மண்ணில் விளைந்த மரத்தை மீண்டும் மண்ணாக மாற்றுகின்றது. நம்மால் அவ்வாறு ஒரு மரத்தைச் சீக்கிரம் கரைத்து மண்ணாக மாற்ற முடியுமா…?
 
இதைப் போல உயிரணு அதற்குள் சேர்ந்த அமிலங்கள் இந்த மரத்தைத் துரித நிலை கொண்டு கரைகின்றது.
 
அதில் விளைந்த உயிரணுவையும் தன்னுடன் இணைத்து ஒன்று எளிதில் கரையக்கூடியதும் மற்றொன்றை உருவாக்கும் நிலைகள் பெற்று இவர்கள் உருவாக்கும் நிலைகள்மாந்திரீகமாக மாற்றுகின்றார்கள்.
 
உணர்வின் ஒலிகளை எழுப்பி ஒன்றுடன் இணைக்கச் செய்து அந்த அணுவின் தன்மை உருவாக்கப்பட்டு மீண்டும் அதே ஒலிகள் வரப்படும் பொழுது அது கரைக்கப்படும்.
 
கரையான் மந்திரம் என்பது இதுதான். மனிதன் சில நிலைகளை எவ்வாறு செயல்படுத்துகின்றான் என்று குருநாதர் காட்டுகின்றார்.
 
ஆனால் போகன் கவனக் குளுவின் நிலைகள் கொண்டு எதனதனை உருவாக்கப்பட்டு எந்த எல்லையில் உருவாக்கப்பட்டதோ அதை எடுத்து உணர்வின் ஒலி அலைகள் பாய்வதைத் தனக்குள் இணைத்து நினைவின் ஆற்றலைக் கொண்டு ஜீவணுக்களை உருவாக்கப்படும் பொழுது பறவையின் உணர்வின் தன்மையைத் தனக்குள் கவர்கின்றான்.
1.அந்த உணர்வு வரப்படும் பொழுது எதனின் எண்ணங்களை எடுக்கின்றானோ உடல் எடையற்றதாக மாறுகின்றது.
2.குறித்த இடங்களுக்குச் அந்த எல்லையைச் சென்றடைகின்றான்.
 
அவன் உடலுக்குள் எடுத்துக் கொண்ட சக்திகள்
1.ஒவ்வொரு இடங்களிலும் எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மையை எப்படி வளர்க்க வேண்டும்…?
2.எதனைப் பெருக்க வேண்டும்…? என்று 5000 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தியவன் போகன்.
 
இதைப்போல் ஒவ்வொரு ஞானிகளும் பெற்ற சக்திகளைச் சுட்டிக் காட்டினார் குருநாதர்.

September 16, 2025

யாம் உங்களுக்குக் கொடுக்கும் “திருப்புமுனை…”

யாம் உங்களுக்குக் கொடுக்கும் “திருப்புமுனை…”


விஞ்ஞானி ஒரு பொருளைச் செய்கிறான் என்றால்அதிலே இயக்கம் தடைப்படும் பொழுது
1.அந்தத் தடைக்குண்டான காரணத்தைக் கண்டறிவான்.
2.அதை நீக்க முயற்சி எடுப்பான்.
 
ஆனால் தொழில் செய்து கொண்டுள்ளவர்கள் அதைச் சரியாக இயக்கவில்லை என்றால் எல்லாம் போய்விட்டது என்ன செய்வது…?” என்று விட்டு விடுவார்கள். பின் அதைத் தெரிந்தவர்கள் வந்து தான் சரி செய்ய முடியும்.
 
இதைப் போல
1.உங்களுக்குள் அந்த அருள் ஞானத்தின் உணர்வுகளை அறிந்துணர்ந்த உணர்வின் தன்மை பதிவான பின்
2.அந்த நினைவைக் கொண்டு வந்தால்
3.வாழ்க்கையில் வரும் எந்தக் குறைகளோ அதை நீக்கும் ஆற்றல் உங்களுக்குள் பெறுகின்றது.
 
அதைப் பெறச் செய்வதற்குத் தான் இதை எல்லாம் உபதேசிப்பது.
 
குருநாதர் ஒவ்வொரு நிமிடமும் காடு மேடல்லாம் அலையச் செய்து ஒவ்வொன்றும் எப்படி உருவானது…? என்று அந்த அகஸ்தியனைப் பற்றிக் கடைசி வரையிலும் கொண்டு வந்து துருவன் அகண்ட உலகத்தைக் கண்டபின் இந்த உணர்வுகள்
1.“உலகம் எப்படி உருவானது…?” என்ற நிலையைக் காட்டப்படும் பொழுது என் நினைவுகள் இழந்து விட்டது.
2.”விட்டு அடித்தால்” (அந்த நேரத்தில் குருநாதர் எம்மை அடிக்கின்றார்) என் உடலில் ஜிர்ர்ர்ர்…” என்று சுருதி ஏறுகின்றது.
3.அவரின் நினைவுகள் வருகிறது மற்ற தீமைகளை அகற்றும் அந்த உயர்ந்த உணர்வின் தன்மையாக வருகின்றது.
 
இப்பொழுது நீங்கள் கூடச் சொல்லலாம். உங்கள் கஷ்டத்தை என்னிடம் சொல்லும் பொழுது எனக்கு ஜிர்ர்ர்ர்…” என்று கோபம் வரும். அந்த உணர்வு என்ன செய்கிறது…?
 
1.நீங்கள் சொல்லக்கூடிய கஷ்டம் எனக்குள் புகாதபடி முதலிலே தடைப்படுத்துவது.
2.தடைப்படுத்திய பின் அதே உணர்வின் தன்மை தீர்க்கப்படும் பொழுது
3.அவன் அறியாது இடும் சாப அலைகளை உணர்வான் அவன் நொறுங்கிப் போவான் என்ற நிலைகளைச் சொல்வது.
4.இந்த உணர்வுகள் அங்கே தாக்கப்படும் பொழுது கஷ்டம் என்று சொல்பவருடைய உணர்வின் வேகத்தைக் கூட்டுவது.
 
அதாவது
1.கஷ்டமான உணர்வுகளை எனக்குள் வராது தடுப்பதும்
2.உணர்வின் வேகத் துடிப்பு கொண்டு நான் அழுத்தமாகச் சொல்லும் பொழுது
3.எதைக் குறை கூறுகின்றாரோ அவருடைய நினைவைக் கொண்டு அங்கே பாய்ச்சப்படும் பொழுது
4.“இந்த உணர்வுகள் ஆழமாகப் பதியும்…! சொல்வோர் உணர்வுகளில்…!”
5..அடுத்துயாம் சொன்ன முறைப்படி ஆத்ம சுத்தி செய்யும் பொழுது அங்கே  நல்லதாக வளர்ச்சி பெறும்.
 
ஆகவே… “யாம் வெளிப்படுத்தும் இந்த வேகத் துடிப்பு யார் எதைச் செய்தாலும் உடனடியாக அதை நல்லதாக மாற்றும்.
 
ஸொல்வது அர்த்தமாகிறதல்லவா…!
 
ஆனால் இதைப் பார்த்த பின்என்னடா…? சாமிக்குக் கோபம் வராது என்று சொல்கின்றார்கள். சாமிக்கே இங்கே இப்படிக் கோபம் வருகிறது என்று…!”
 
எனது கோபம் எதைத் தடுக்கிறது…? தீமைகள் உங்களுக்குள் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பாக வருகின்றது.
 
ஆனால் உங்களுடைய கோபமோ…”
1.மற்றவர்கள் எந்தத் தீமையைச் செய்தாரோ அந்த தீமையே உங்களுக்குள் விளைந்து
2.அவர்களைப் பொசுக்க வேண்டும் என்ற உணர்வாக வருகின்றது.
 
மீண்டும் தெளிவாக்குகின்றேன்…! தீமை எனக்குள் வராது தடுப்பதும் அந்த நினைவாற்றல் வராதபடி உணர்வின் வேகத் துடிப்பை அருள் மகரிஷிகள் உணர்வுகளைச் சொல்லித் தீமைகள் வராது தீமை செய்வோர் எவரோ அவர்கள் உணர்வார்கள் என்று சொல்லப்படும் போது
1.இந்த உணர்வின் தன்மை வளர்ச்சி அடையப்படும் பொழுது அங்கே திருப்பம் வரும்.
2.எனக்கு இப்படி ஆகிவிட்டதே…! என்ற உணர்வுகள் வரும் பொழுது திரும்பும்.
 
ஆனால் நம்முடைய உணர்வுகள் (தியானம் செய்த) அங்கே பாய்ச்சப்பட்டு அவன் அறியாது வரும் இருள்கள் நீங்க வேண்டும் என்ற வரிசைத் தொடரைச் செய்யப்படும் பொழுது சிறுகச் சிறுகப் போய் அவன் உடலிலே விளையும்.
1.தீமைகளின் பாதிப்பால் திரும்ப நன்மையை எண்ணி ஏங்குவான்.
2.அப்பொழுது நாம் இங்கே எண்ணி அது யாரோ அந்த உணர்வின் தன்மை எடுத்துக் கலந்து வெளியிட்டது அங்கே சென்ற பின்
3.அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக மாறும்.
 
அவர்கள் திரும்பி அதை ஏங்கிப் பெறும் அந்தத் தகுதி ஏற்பட்டால் அங்கே வருகின்றது. இல்லை என்றால் என்னதான் சொன்னாலும் அங்கே எடுபடாது.
 
காரணம்
1.விஷத்தால் ஒடுங்கப்படும் பொழுது தப்பிக்கும் உணர்வுகள் வருகின்றது
2.தப்பிக்க ஏங்கும் நிலையில் அவர்கள் உணர்வு நமக்குள் பதிவான நிலையில்
3.”அதிலிருந்து விடுபட வேண்டும் என்ற உணர்வை நாம் கூட்டக் கூட்ட
4.இந்த உணர்வுகள் அங்கே மறைந்திருந்து தன் (அவர்கள்) உணர்வை மாற்றி அது திருப்புமுனையாக மாறும்.
 
அதனால் தான் சில நேரங்களில் உங்களிடம் யாம் கோபமாகப் பேசுவது.
 
ஆனால் வேறு விதமாக இதை எடுத்துக் கொள்கின்றார்கள் சாமிக்கே இப்படிக் கோம் வருகிறது சாமிக்குக் கோபம் வரலாமா…? இப்படிப் பேசுகிறார் என்று…!
 
1.என் கோபம் யாரையும் கெடுதலாக ஆக்காது.
2.தீமையான உணர்வுகள் உள்ளே போகாது தடுக்கும்.
3.இந்த உணர்வின் தன்மை அழுத்தமாகப் பதிவாகி விட்டால் தீமையின் உணர்வுகளை இயக்காது தடைப்படுத்தும்.
 
குருநாதர் அவருக்குக் கோபம் வரும் பொழுதெல்லாம் நான் அடி வாங்க வேண்டி வரும்…” என்னை அடித்த பின் அவர் சிரிப்பார். அப்புறம் விளக்கம் சொல்வார்.
1.உனக்குள் அந்தக் கெட்டது வராமல் இருப்பதற்காகத் தான் நான் கோபித்தேன்
2.என் உணர்வு உனக்குள் புகுந்து கெட்டது நுழைய விடாது பாதுகாக்கும் என்பார்.
 
ஆனால் இப்பொழுது இருக்கக்கூடிய நிலைகளில் (நீங்கள்) கோபமாகப் பதிவு செய்து விட்டால் இந்த உணர்வின் தன்மை எதிரியாகக் கருதி விட்டால் எதிரியின் தன்மையாகத் தான் வரும்.
1.ஆனால் அந்தக் கோபத்தின் தன்மை (சாமியின் கோபம்)
2.தன் இருளை நீக்க உதவும் என்ற எண்ணத்தைக் கொண்டு வந்தால் இருளை நீக்கும்.
 
ஆகவே ஒவ்வொருவரும்
1.எதை இணை சேர்த்து
2.எதனுடன் கொண்டு வந்தால் எதன் நிலை வருகின்றது…? என்று அறிந்து கொள்ள வேண்டும்.
 
உதாரணமாக தீ (நெருப்பு) சுடுகின்றது. அந்தத் தீயை வைத்துத்தான் பல ஆக்கப் பொருள்களைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கின்றோம். அந்த உணவுப் பொருள் சுடச் சுட வெந்து வருகிறது.
 
ஆனாலும் அதை அப்படியே சூடாகச் சாப்பிட வேண்டும் என்று விரும்புகின்றோம் ஆசை வருகின்றது…! கையை வைத்தால் சுரீர் என்று சுடுகின்றது. இருந்தாலும் அதை ஆற்றி ஆற்றி உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு அப்படிச் சாப்பிடுகின்றோம்.
 
இதைப் போன்று தான்
1.அந்த அருள் ஞானிகள் உணர்வை நமக்குள் சேர்க்கப்படும் பொழுது சில மோதல் தன்மை வரும்.
2,அது நன்மை செய்யும் சக்தியாக வருகிறது என்பதை உணர்தல் வேண்டும்.

September 15, 2025

மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் “ஞானப் பாதை” அடைபட்டுவிடும்

மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் “ஞானப் பாதை” அடைபட்டுவிடும்


நட்பாக இருக்கிறோம் என்றால் நம்மிடம் ஆயிரம் கஷ்டத்தைச் சொல்வார்கள். அதையெல்லாம் உம் கொடுத்துக் கேட்டுக் கொண்டே இருப்போம். அது நம் நல்ல அறிவை மூடிவிடும்.
 
1.கஷ்டத்தைக் கேட்டுக் கொண்டிருந்தால் என்றால் அது இருள் சூழ்ந்த நிலைகள்.
2.யாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வுகளை மூடி மறைத்து விடும்நினைவுக்கு வராது.
 
ஆகவேயாம் பதிவு செய்த ஞானிகள் உணர்வு உங்கள் நினைவுக்கு வர வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்…? அதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
அன்று அருள் ஞானியான அகஸ்தியன் தனக்குள் எடுத்த உணர்வின் தன்மை
1.அவன் இருண்ட உலகையும் கண்டான் அது ஒளி பெற்ற உணர்வையும் கண்டான் இந்தப் பிரபஞ்சத்தையும் கண்டான்.
2.அவனில் விளைந்த உணர்வுகள் அந்தந்தத் தொகுதிகளில் இதை இணைத்து விட்டால்
3.அவன் எவ்வாறு தன் தன் தொகுதிகளில் தீமைகளை நீக்கினானோ
4.ஒவ்வொரு வளர்ச்சியின் நிலைகள் ஒன்றோடு இணைக்கப்படும் போது வளராது தடுக்கும் நிலைகளை அவன் அகற்றினானோ
5.தனக்குள் தன்னைக் கண்டு உணர்வின் ஆற்றலாக எப்படிப் பெருக்கினானோ அதை நாமும் பெற முடியும்.
 
அந்த நிலை நீங்கள் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதைத் தெளிவாக்குவது.
 
ஆகமற்றவர்கள் படும் வேதனைகளை நுகரக் கூடாது. மகரிஷிகளின் அருள் ஒளி அவர்கள் பெற வேண்டும். அவர்கள் உயர்ந்த நிலை பெற வேண்டும் அவர்கள் பொருள் காணும் சக்தி பெற வேண்டும் அவர் அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெற வேண்டும் என்று
1.“அவர் பெற வேண்டும் என்று எண்ணினால்
2.இந்த உணர்வுகள் உங்களுக்குள் வளர்ச்சி பெறுகின்றது.
 
பாசத்தால் பரிவால் பண்பால் அதைக் கேட்டறிந்தோம் என்றால் அவர்கள் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்தால் மூச்சே விடாதபடி கஷ்டத்தையே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
 
இந்நேரம் வரை யாம் பதிவு செய்ததை மறந்து விடுவீர்கள். நல்ல அணுக்களின் தன்மையை மாசுபடுத்தி விடும்.
 
குப்பைக்குள் மாணிக்கம் மறைந்திருந்தால் வெளியிலே வெளிச்சம் தெரியுமோ…? காரணம் அந்தக் குப்பை அடர்த்தி ஆகிவிடுகின்றது.
 
சூரியனின் ஒளிக் கதிர்கள் வெயில் அடிக்கும் பொழுது தெரிகின்றது. ஆனால் இங்கிருக்கும் தூசிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து அதை மறைத்து விட்டால் சூரியனின் வெளிச்சம் தெரிவதில்லைஇருண்டு விடுகின்றது.
 
இதைப்போல் உயிரால் உணர்வின் ஒலிகள் நமக்குள் வரப்படும் பொழுது பிறர்படும் துயரத்தை அதிகமாகக் கேட்டால் அந்த உணர்வுகள் நமக்குள் தூசி போன்று நம்முடைய ஒளியையும் மங்கச் செய்கின்றது.
 
யாராவது உங்களிடம் கஷ்டத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள் என்றால்
1.அடுத்த கணமே மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள் பெறுவீர்கள்.
2.உங்களுக்குள் பொருள் காணும் சக்தி பெருகும் உங்கள் வாழ்க்கையில் தெளிந்த மனம் பெறுவீர்கள் என்று சொல்லி விடுங்கள்
3.திரும்பத் திரும்பச் சொல்லுங்கள்…. உங்களுடைய உணர்வுகள் தான் அங்கு அதிகமாக வர வேண்டும்,
4.இந்த உணர்வுகள் பதிவானால் அவருடைய இருளைப் போக்க உதவும்.
 
இல்லை என்றால் அந்தக் குப்பை நம்மை மூடி விட்டால் நம்முடைய ஒளியை அது மங்கச் செய்துவிடும்.
 
நான் எவ்வளவு சிரமப்பட்டு உங்களுக்குள் அந்த ஞானிகள் உணர்வைப் பதிவு செய்தாலும் மனித வாழ்க்கையில் வரும் உணர்வுகளை அதிகமாக நுகர்ந்து விட்டால் இப்படி வந்துவிடும்.
 
குடும்பங்களில் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து இருப்பார்கள். சந்தர்ப்பத்தில் அவர்கள் இம்சைப்படுவார்கள். கணவன் அவருடைய சாப அலைகளால் நன்மை ஏற்பட விடாதபடி மனைவிக்குப் பல தீமைகளைச் செய்து கொண்டிருப்பார்கள்.
 
அந்தச் சாப அலைகளின் இயக்கம் வரும் போது பெண்களை மகிழ்ச்சியாக அங்கே வாழ விடாது செய்யும். நாம் கட்டிக் கொடுத்த பெண் அங்கே வேதனைப்பட்டால் நம் நிலை எப்படி இருக்கும்…?
 
அந்த உனர்வின் வேகங்கள் கூடும் போது பொழுது நான் இருளைப் போக்கும் நிலையாக உயர்ந்த சக்தியைக் கொடுத்தாலும் அதை மறைத்து விடும். நல்லதை எடுக்கும் திறன் இழந்து விடுவோம்.
 
நான் செய்தேன்இருந்தாலும் என்னால் எங்கே முடிந்த்து…? எதை எடுப்பது…? என்ன செய்வது…? என்று முடியாத நிலைகள் வந்த பின்அடுத்தாற்போல் என்ன நினைப்பார்கள்…!
 
செத்த பிற்பாடு என்ன ஆகப் போகின்றோம்…? போகட்டும் போ…! என்று இந்த உணர்வின் தன்மை சோர்வடைந்து சிந்திக்கும் திறன் இழந்து விடுகின்றது. ஆகவே இதைப் போன்ற நிலைகள் நம்மை அறியாமலே வருகின்றது.
 
மற்றவரிடத்திலோ நண்பரிடத்திலோ உறவினர்களிடத்திலோ இதைச் சொல்லும் பொழுது இந்த உணர்வின் வேகங்கள் கூடும். அந்த நண்பன் தியான வழியில் இருந்தாலும் இந்த வளர்ச்சி அதிகமாகப் போகும் பொழுது இதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்துவிடும்.
 
இந்நேரம் வரை உபதேசித்த உணர்வின் ஆற்றலை
1.அகண்ட உலகையும் இருண்ட நிலைகளை நீக்கிய உணர்வின் தன்மையைப் பெறும் தகுதியை இவ்வளவு தூரம் உபதேசித்து
2.பல வருடம் யாம் கஷ்டப்பட்டு வளர்த்த உயர்ந்த வித்தை உங்களுக்குள் ஊன்றினாலும் இதை அது மறைத்து விடும்
3.சோர்வும் விரக்தியும் தான் ஏற்படும்.
 
இதைப் போன்ற நிலைகளை மாற்றுவதற்குக் கூடுமானவரை மற்றவருடைய துன்பங்களைக் கேட்டறிவதைத் தவிர்க்க வேண்டும்…”
 
அப்படி அவர்கள் சொன்னாலும் அடுத்த கணமே மகரிஷியின் அருள் ஒளி நீங்கள் பெறுவீர்கள் குடும்பத்தில் இருள் நீங்கும் மெய்ப்பொருள் காணும் சக்தி பெறுவீர்கள் என்ற இந்த உணர்வினைத் திரும்பத் திரும்ப எண்ணி எடுத்தல் வேண்டும்.
1.நாம் எடுத்த நல்ல உணர்வை அவர்கள் உணர்வு மறைத்திடாது
2.நினைவு கொண்டு அதை நாம் மாற்றுதல் வேண்டும்.
 
ஒரு சிலர் கஷ்டம் வந்து விட்டால் அதையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். உங்களுக்குள் அது வரப்படும் போது அதனால் சோர்வடைந்து நீங்கள் போகும் பாதையை தடைப்படுத்தி விடும்.
 
அவ்வாறு ஆகாதபடி தடுப்பதற்குத் தான்
1.யாம் உபதேசம் கொடுக்கப்படும் பொழுது அந்த இருளான நிலைகளை இது மறைக்கும்.
2.அப்படி மறைத்துத் திரும்ப இந்த உயர்ந்த உணர்வுகளை அதனுடன் இணைத்து மீண்டும் இயக்குவது.
3.தீமை உங்களுக்குள் அடைத்திடாது அதை அகற்றும் உணர்வுகளை அடுக்கடுக்காகச் செயல்படுத்திக் கொண்டே வருவது…”
 
இதை எல்லாம் நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொண்டு எம்முடைய உபதேசங்களை அடிக்கடி நீங்கள் கேட்டுப் பதிவாக்கி உங்கள் நல்ல அறிவை எந்த்த் தீமையும் மறைத்திடாது வளர்ச்சியின் பாதையிலே தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதற்குத்தான் திரும்பத் திரும்ப இதை உங்களுக்கு ஞாபகப்படுத்துவது…”

“வேதனை அதிகமாக இருக்கும் நேரத்தில் தான்” பேராற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்க முடியும்

“வேதனை அதிகமாக இருக்கும் நேரத்தில் தான்” பேராற்றல் மிக்க சக்தியை நாம் எடுக்க முடியும்


அன்று மெய் ஞானியான அகஸ்தியன் மனித உடல் அது எப்படி உருப்பெற்றது…? என்பதனைத் தாய் கருவிலே பெற்ற நஞ்சினை வென்றிடும் ஆற்றல் கொண்டு ஒவ்வொன்றாகத் தனக்குள் வளர்ச்சியாகித் தன்னை அறிந்தான்…” தனக்குள் விளைந்த உணர்வின் வலுக் கொண்டு அகண்ட பேரண்டத்தையும் அறிந்தான்…”
 
அவனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் நம் பூமியில் பரவி உள்ளது. அதனை உங்களுக்குள் பதிவாக்கப்படும் பொழுது இயற்கையின் உண்மையின் வளர்ச்சியை உங்களுக்குள் வலுவாக்கி அதன் உணர்வால் உருவாக்கும் ஆற்றலை நீங்கள் பெறுகின்றீர்கள்.
 
1.நமது குருநாதர் அவர் உருவாக்கியது போல அவர் நமக்குள் உருவாக்கிட
2.அவரைப் போன்றே நினைவினை நான் செலுத்தப்படும் பொழுது
3.அந்த உணர்வின் தன்மை கருவாக்கி உருவாக்கும் அந்த வலிமை பெறுகின்றது.
4.அதே வலிமையின் உணர்வுகளை உங்களுக்குள் இந்த உபதேச வாயிலாகச் சொல்லப்படும் பொழுது
4.நீங்கள் கூர்மையாகக் கவனித்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி இந்த நினைவினை உங்களுக்குள் வளர்க்க இது உதவும்.
5.ஆகவேநம்முடைய நினைவாற்றல் குருநாதர் காட்டிய வழியில் அந்தத் துருவன் வழி செல்ல வேண்டும்.
 
நம்முடைய எல்லை எது…?
 
துருவன் பெற்ற அந்த எல்லையை அடைய வேண்டும் என்ற நினைவைக் கூட்டினால் இதனின் வரிசைத் தொடரில் அது வளர்ச்சியாகி பிறவி இல்லாத நிலை அடைந்து அந்த எல்லையை நாம் அடைகின்றோம்.
 
இல்லை…! என்னை இப்படிப் பேசினான் அப்படிச் செய்தான்…! என்ற இந்த உணர்வினை வளர்த்துக் கொண்டால் இதனின் உணர்வுகள் வளர்ச்சியாகி இந்த வேதனை நம்மை மீண்டும் கீழான நிலைகளுக்கு அழைத்துச் சென்றுவிடும்.
 
இதனின் வளர்ச்சி அதிகமாகி விட்டால் இப்போது உபதேசித்த இந்த உணர்வுகளை அது மேலே மூடிவிடும்.
 
ஆகஅப்படி ஆகாதபடி ஊழ் வினையாக இந்த உபதேச வாயிலாக அதை அமுக்கச் செய்து இந்த உணர்வினை அணுவாக்கப்படும் பொழுது உங்களுடைய நினைவின் ஆற்றல் அந்த மெய் ஞானி சென்ற பாதையில் செல்லும்.
 
இந்தக் காற்று மண்டலத்தில் மனிதனின் இச்சை கொண்ட உணர்வுகள் அதிகரிக்கப்படும் பொழுது
1.துருவ நட்சத்திரத்தினை நினைவுக்குக் கொண்டு வந்தால்
2.உங்கள் உடலுக்குள் தீமை இயக்காது அதை இது மறைத்துவிடும்.
 
குப்பைக்குள் ஒரு மாணிக்கம் கிடந்தால் மாணிக்கம் இருக்கிறது என்று கண்களுக்குத் தெரியுமா…? அந்தக் குப்பையை நீக்கி விலக்கிப் பார்த்தால் தான் அதற்குள் இருக்கும் ஒளிகளை நாம் காண முடியும்.
 
இதே போல இப்பொழுது உபதேச வாயிலாகப் பதிவு செய்யும் அருள் ஒளியின் உணர்வுகளை
1.குப்பையைப் போன்று வாழ்க்கையில் அதனைக் கொண்டு மூடி மறைத்து விட்டால்
2.அந்த ஒளியின் தன்மை மின்னும் நிலையோ அதன் உணர்வின் தன்மை பளிச்சிடும் நிலையில்
3.அதன் அருகில் இருக்கக்கூடிய பொருளைக் காணும் நிலையோ தடுக்கப்படுகின்றது காண முடியாது.
 
ஆகவே அதைக் காணும் ஆற்றல் கொண்ட ஞானிகள் உணர்வினை இப்பொழுது பதிவாக்கி அகண்ட பேரண்டத்தின் நிலைகளையும் துருவன் கண்ட நிலைகளையும் அவனில் அறிந்துணர்ந்ததையும் பெற்று இனி எந்த இருளிலும் சிக்காது ஒளியின் தன்மையாக மாற்றிய உணர்வுகள் உங்களில் விளைய வேண்டும் என்பதற்குத் தான் உபதேசிக்கின்றேன்.
 
குருநாதர் எமக்குள் அதனை உருவாக்கினார் அதை வளர்த்துக் கொண்டே இருக்கிறேன்.
1.அதையெல்லாம் நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருக்கின்றேன்.
2.நான் பெற வேண்டும் என்று அல்ல நீங்கள் பெற வேண்டும் என்று…!
 
அந்த உணர்வின் ஒளியாக நீங்கள் பெற வேண்டும் என்று ஏங்கப்படும் பொழுது
1.உங்களிடம் இருக்கக்கூடிய தீமைகளை நான் எண்ணுவதில்லை.
2.உங்களை அறியாது இயக்கும் கஷ்டங்களை நான் எண்ணுவதில்லை.
3.உங்களை அறியாத வந்த நோய்களை நான் எண்ணுவதில்லை.
 
யாம் உபதேசித்த வழியில் நீங்கள் அந்த அருள் ஞானத்தைப் பெற்றால் அந்தத் தீமைகள் அனைத்தும் அகன்று ஓடிவிடும்.
 
1.உங்களுக்குள் இருக்கும் கஷ்டத்தையும் துன்பத்தையும் நான் அறிய முற்பட்டு அதை அறிந்து கொண்டிருந்தால்
2.இந்த உணர்வின் தன்மை எனக்குள் இது தான் அதிகமாக வளரும்.
 
ஆகவே நாம் எண்ண வேண்டியது என்ன…? தனக்குள் நோய் வந்தாலும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்று அதை வளர்த்தல் வேண்டும்.
 
அதே சமயத்தில்
1.எது எவ்வளவு வேதனையாகின்றதோ அந்த நேரத்திலே
2.அருள் ஒளி எனக்குள் பெற வேண்டும்
3.இருளாக்கும் தீய வினைகள் நீங்க வேண்டும்
4.மெய்ப்பொருள் காணும் உணர்வுகள் தனக்குள் வளர வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.