
எனக்குப் பின்னாடி… நீங்கள் தான் சாமி ஆகின்றீர்கள்… எல்லோரையும் அருளைப் பெறச் செய்யுங்கள்
அருளைப் பெருக்க உங்களுக்குச் சக்தி கொடுக்கின்றேன். அதன் வழியில் துருவ நட்சத்திரத்தின்
உணர்வுகளை நீங்கள் பெறுவீர்கள். அதை ஏங்கிப் பெறுங்கள்.
இதுவரையிலும் உபதேசித்த உணர்வுகள் உங்களிடம் பதிவாகி இருக்கின்றது. குரு அருளை உங்களுக்குள் பதிவாக்கி “அவர் ஒளியான உணர்வுகளை உங்களுக்குள் இணைத்து இணைத்துக் கொடுக்கின்றேன்…” நிச்சயம் நீங்களும் அந்த அருளைப் பெற்று வாழ்க்கையில் வரும் இருளை நீக்கி
மெய்ப்பொருளை நீங்கள் காண முடியும்.
சில பேர் என்ன நினைக்கின்றார்கள்…?
1.சாமி இருக்கின்ற வரையிலும் தபோவனம் இருக்கின்றது.
2.சாமிக்குப் பின் என்ன செய்யப் போகின்றோம்…? என்ற எண்ணங்கள் இருக்கின்றது…!
3.சாமி என்றைக்குமே நீங்கள் தான்…! நீங்கள் சாமி ஆகின்றீர்கள்…!
4.இந்த உணர்வுக்குப் பின்னாடி இந்தச் சக்தியை நீங்கள் பெருக்குகின்றீர்கள்.
5.இந்த உணர்வைப் பதிவு செய்து விடுகின்றேன்.
குருநாதர் உடலுடன் இருக்கும் பொழுது எனக்குள் (அப்படித்தான்) பதிவு செய்தார். இப்பொழுது ஒளியின் உடலாக இருக்கின்றார். அவர் கண்ட
உண்மை எல்லாம் நான் பெற முடிகின்றது.
அந்த உணர்வுகளை எல்லாம் உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்.
1.எனக்குப் பின்னாடி நீங்கள் இதையெல்லாம் எல்லோருக்கும் எடுத்துச் சொல்ல
முடியும்.
2.நான் ஒருத்தன் தான் இத்தனை பேருக்கும் சொன்னேன்.
3.நீங்கள் அத்தனை பேரும் சேர்ந்து உலகத்தின் நிலைகளை இந்த ஸ்தாபனம் மூலம்
4.”உலகத்திற்கே எடுத்துக்காட்டாக” பெரிய ஸ்தாபனமாக இது
அமையும்… அதைப் பார்க்கலாம்.
இதைப் பதிவு செய்வதற்குத் தான் உங்களிடம் தெரியப்படுத்தியது.
ஆகையினால்
1.எப்பொழுதுமே உங்களுக்குள் அருளைப் பெருக்குகின்றீர்கள்.
2.அதை எல்லோருக்குள்ளும் பெருகச் செய்கின்றீர்கள்.
3.எல்லோருக்கும் பெறச் செய்ய வேண்டும் என்பதற்குத்தான் மீண்டும் மீண்டும் யாம்
பதிவு செய்வது.
4.நீங்கள் வளர்ந்தால் உலகத்தில் ஞானங்கள் பெருகுகின்றது.
5.உலகத்தில் ஞானம் பெருகினால் உலகமே அமைதி அடைகின்றது.
அப்படி அடைய வேண்டும் என்றால் இந்தத் தியானத்தை எடுத்து வளர்த்துக் கொள்ளுங்கள். யாருடைய
கஷ்டத்தை நீங்கள் கேட்டாலும் “ஈஸ்வரா…”
என்று சொல்லி உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைச் சேர்த்து உங்கள் தொழில்
நன்றாக இருக்கும் குடும்பம் நன்றாக இருக்கும் வாழ்க்கை நன்றாக இருக்கும் உடல்
நலமாகும் என்று இந்த வாக்கினை அவர்களுக்குச் சொல்லுங்கள்.
1.உங்கள் உணர்வு அவர்களை நல்லவராக்கும்… கஷ்டம் என்ற
சொல் உங்களுக்குள் வராது.
2.இப்படி நீங்கள் ஒவ்வொருவருமே என்னைப்போல வளர வேண்டும்.
3.நான் பார்த்த உடனே உங்கள் நோய் போகின்றது நீங்களும் அந்த அளவிற்கு வளர்ந்து வந்தால் தான் நல்லது.
4.சாமியைப் பார்த்த்தால் என் நோய் போனது… ஆகவே “நான் (சாமி) பெரிது” என்ற எண்ணத்திற்குச்
சென்று விடாதீர்கள்… தவறான வழியில் சென்று விடாதீர்கள்.
5.நோயை நீக்கும் உணர்வுகளும் நோய் உடலுக்குள் புகாத நிலைகளையும் கொண்டு
வாருங்கள்.
இனி இந்த உலகம் எப்படி இருக்கும்…? என்று சொல்ல முடியாது. இந்த 4000
ஆண்டுகளுக்குள் பல சிக்கல்கள் இருக்கின்றது.
ஆகவே கருவில் வளரும் குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானத்தை ஊட்டுங்கள். ரோஜாப்பூ எப்படி நல்ல நறுமணத்தை
எடுத்துக் கொள்கின்றதோ அதே போன்று நாமும் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நமக்குள்
எடுத்து நம் உடலுக்குள் நல்ல அணுக்களைப் பெருக்கிப் பழக வேண்டும்.
அந்தச் சக்தியைப் பெறுவதற்குத் தான் உங்களுக்குச் சக்திகளை கொடுத்துக்
கொண்டிருக்கின்றேன்.
குழம்பு வைக்கும் போது நீங்கள் சங்கடமாக இருந்து பாருங்கள்… குழம்பு ருசியாக இருக்காது… அது கெட்டுவிடும். சந்தோஷமாக இருந்து செய்து
பாருங்கள்… அது நல்ல ருசியாக இருக்கும். ஆக உங்களுடைய உணர்வு தான் அதை ருசியாக மாற்றுகின்றது. பிறருடைய தீமை உங்களுக்குள் புகாது இருக்க வேண்டும்.
உயர்ந்த ஞானம் பெற்று பிறருடைய தீமைகளைப் போக்கும் அருள் சக்தியாக நீங்கள்
மாறியே ஆக வேண்டும். அந்த நிலை
பெறுவதற்குத் தான் அடிக்கடி இந்த உபதேசத்தைக் கொடுப்பது.
1.நாம் அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுடன் குரு அருளையும் பெறப்படும்
போது வசிஷ்டர்.
2.அந்தச் சக்தி உடலிலே பிரம்மம் ஆகும். பிரம்ம
குருவின் மனைவி அருந்ததி.
3.நமது குருவும் துருவ நட்சத்திரமும் எதைச் செய்ததோ அந்தச் சக்தி இணைந்தே
நமக்குள் வாழும்.
4.அதன் வழியே நமக்குள் குருவாக அது வந்து வழிகாட்டும்… பிறருடைய உணர்வுகளில் அதைப் பாய்ச்சப்படும் பொழுது அதுவும் அந்த நிலை
ஆகும்.
5.ஆகையினால் இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும் என்ற ஒன்றை மட்டும் நீங்கள்
சொன்னால் போதுமானது.
6.உலக மக்கள் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்ற உணர்வை உங்களுக்குச்
சொந்தமாக்குங்கள். “வாயில் அல்ல… செயலில்…!”
இந்த உணர்வைக் கூட்டக் கூட்ட காற்று மண்டலத்தில் எத்தகைய தீமைகள் இருப்பினும்
அது நம்மைத் தாக்காது. அருள்
உணர்வுகள் நமக்குள் பெருக நமது சொல் பிறரின் இருளைப் போக்கும்.
அந்த நிலைக்கு நீங்கள் அருள் ஞானிகளாக வளர வேண்டும். நீங்கள் பெருகப் பெருகத் தான்
உலகத்தில் ஞானக் குழந்தைகள் பெருகும். உலக மக்களையும் நலம்
பெறச் செய்யும் சக்தியாக மாறும்.
உங்களுக்குள் அற்புத நிலைகளாக…
1.நமது குரு எங்கெல்லாம் சென்றாரோ அந்த அருளை எல்லாம் நீங்கள் பெறக்கூடிய
தகுதி பெறுகின்றீர்கள்... அதைப்
பதிவாக்குகின்றேன்.
2.குருவை நீங்கள் தரிசனம் செய்யலாம்… அனேகமாக அவர்
உங்களுக்குக் காட்சி தரலாம்… உங்களை அவர் துருவ
நட்சத்திரத்தோடு இணைக்கலாம்.
4.உங்கள் மனதில் எந்த அளவிற்கு ஏக்கம் இருக்கின்றதோ குருவை நீங்கள் பார்க்க
முடியும்.
5.அருளை நீங்கள் பெறலாம்… பேரின்பம் பெறலாம்.