ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2025

கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள்

கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்கள்


யாம் குருநாதர் உரைத்த வண்ணம் ஒரு கிராமத்துப் பக்கம் வந்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் ஒரு நான்கு முனை சந்திப்புள்ள இடத்தில் உள்ள கடையில் என்னை அமரும்படிச் செய்தார் குருநாதர்.
 
அப்பொழுது அந்த இடத்திற்கு ஒரு கார் வந்து நின்றது. அந்தக் காரில் ஆறேழு பேர் சாமியார் வேடம் பூண்டு மிகவும் அற்புதமாக இருந்தனர்.
 
அவர்கள் காரை நிறுத்திவிட்டு யாம் இருந்த கடைக்கு வந்து கடையில் இருப்பவரிடம் டீ கொடுங்கள்என்றனர்.
 
ஆனால் டீ போடும் ஆளுக்குக் காது கேட்கவில்லை. அவர்கள், “அட.. தம்பி….  இங்குவா…” என்றனர். இப்படி இரண்டு முறை கூப்பிட்டும் கேட்காததால் ஜாடையில் காண்பித்து வரச் சொல்லி உனக்குக் காது கேட்கவில்லையா?” என்று கேட்டனர்.
 
டீ கடைக்காரர்எனக்குச் சுத்தமாகக் கேட்காதுஎன்றார்.
 
அதற்குப்பின் சாமியார் வேடம் பூண்டவர்கள்முருகா! ஏன் உன் பிள்ளையை இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்…? உன் பிள்ளைக்குக் காது கேட்கவை முருகாஎன்றனர்.
 
உடனே அவருக்குக் காது கேட்க ஆரம்பித்துவிட்டது. அதன்பின்எனக்கு முதுகுவலி தலைவலி இடுப்புவலிஎன்று ஒவ்வொருவரும் ஒன்றைச் சொல்லிக் கேட்டுக் குணமாகத் தொடங்கியதும் எங்கிருந்து அவ்வளவு கூட்டம்   வந்ததென்று தெரியவில்லை…! அப்படி ஒரு பெருங்கூட்டம் கூடிவிட்டது.
 
அந்தக் கூட்டத்தில் முடக்குவாதம் வந்த ஒருவரைக் கொண்டு வந்துஐயா…! நீங்கள் எத்தனையோ பேருக்கு நல்லது செய்கிறீர்கள். ஐந்தாறு வருடங்களாகக் கட்டிலிலேயே படுத்திருக்கிறார். மல ஜலம் எல்லாம் கட்டிலில் துவாரம் போட்டு எடுக்கின்றோம். இப்படியேதான் படுத்திருக்கின்றார்அவரைக் குணப்படுத்துங்கள்…!என்று கேட்டனர்.
 
சாமியார்களாக வந்தவர்கள் விபரங்களைக் கேட்டுவிட்டுமுருகா! உனக்கு இந்தப் பிள்ளை மேல் கருணை இல்லையா…? இவ்வளவு காலம் வேடிக்கை பார்க்கின்றாயேமுருகா…! அவர் உன்னை நினைக்கவில்லையா…? அய்யா…! நீங்கள் முருகனை நினையுங்கள்என்கின்றனர்.
 
முடமானவரும் முருகனை வேண்டுகின்றார். மீண்டும் அவர்கள் முருகாஉன் பிள்ளையை எழுப்பிவிடப்பாகொஞ்சம் இவர் மேல் கருணை வை…!என்று சொல்கின்றனர்.
 
இப்படிச் சொன்னவுடனே முடமானவரும் சடாரென எழுந்திருக்கின்றார்.
 
முருகா…! இவரை இந்த கல்லைத் தூக்கச் செய்யேன்என்றனர்.
 
அவரும் உடனே எழுந்து போய் நான்கு பேர் தூக்க முடியாத கல்லைத் தூக்கினார். அங்கே இருந்த அனைவருக்கும் ரொம்ப ஆச்சரியமாகப் போய்விட்டது. முருகனேஅங்கு வந்ததாக அந்தக் கூட்டம் நம்பியது.
 
கடைசியில் சாமியார் வேடம் தரித்தவர்கள்நாங்கள் முருகன் கோயில் கட்ட வேண்டும் என்று எங்களுக்கு முருகன் உத்தரவிட்டு இருக்கின்றார்நீங்களெல்லாம் முருகன் கோயில் கட்டுவதற்கு உதவி செய்ய வேண்டும். எல்லா மக்களையும் முருகன் பெருமையை உணரும்படி செய்ய வேண்டும். ஆகவே உங்களால் இயன்ற பணம் கொடுங்கள் என்று சொன்னார்கள்.
 
டனே, அங்கிருக்கும் கூட்டத்தினர் தாங்கள் போட்டிருக்கும் நகை மற்றும் பணம் ஏராளமாகக் கொடுத்தனர்.
 
சாமியார் வேடம் பூண்டவர்களும் அனைத்தையும் சுருட்டி கட்டிக் கொண்டனர். முருகன் கோயில் கட்டி முடிந்ததும் உங்கள் அனைவருக்கும் அழைப்பு வைக்கின்றோம்அனைவரும் வாருங்கள்…!
 
அங்கு வரும் பொழுது உங்களுக்கு என்ன நோய் இருந்தாலும் முருகனிடம் சொல்லித் தீர்த்து வைக்கின்றோம் என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறிப் போய்விட்டனர்.
 
1.இதையெல்லாம் குருநாதர் பார்க்குமாறு சொல்லியதால் பார்த்துக் கொண்டிருந்தோம். 
2.உலகில் எத்தனை விதமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்…? என்பதைக் கண்டுணரும்படி செய்தார் குருநாதர்.
 
நகைகளையும் பணத்தையும், அள்ளிக் கொண்டு சாமியார் வேடம் பூண்டவர்கள் காரில் ஏறிப்போன பின் 2  அல்லது  3  மணி நேரம் இருக்கும். முடமாகியிருந்தவர் குணமானதாக நம்பிய நிலையில் கட்டிலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
 
எனக்கு முருகனே நேரில் வந்தார் காட்சி கொடுத்தார் குணமாக்கினார்என்று பேசிக் கொண்டிருந்தவர் திடீரென்று ஐயோ அம்மா…!” என்று கத்திக் கட்டிலிலே சுருண்டு படுத்துக் கொண்டார்.
 
காது கேட்காமலிருந்த டீ கடைக்காரருக்கு மறுபடியும் காது கேட்கவில்லை.
 
இது எப்படியென்றால் இவையனைத்தும் ஆவி வேலைகள். இத்தகைய ஆவிகளை ஏவினால் குறிப்பிட்ட நேரம் வரை செயல்படுத்தும்.
 
1.உலகில் உள்ள மக்களை எத்தனையோ வகைகளில்
2.கடவுள் பேரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்ற உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்

அகஸ்தியன் தாய் கருவிலே பெற்ற சக்திகள்


அகஸ்தியன் துருவனாகி துருவ மகரிஷியாகி துருவ நட்சத்திரமாகி இன்றும் ஒளியின் சரீரமாகவே இருக்கின்றான். அவன் ஆரம்பத்திலே எடுத்துக் கொண்ட உணர்வு எது…?
 
அகஸ்தியனின் தாய்
1.கொடூர மிருகங்களிடம் இருந்தும் விஷ ஜெந்துக்களிடமிருந்தும் தன்னைப் பாதுகாக்க வேண்டும் என்று எண்ணி
2.பல பச்சிலைகளையும் மூலிகைகளையும் குகைகளில் பரப்பி வைத்துக் கொள்கின்றார்கள்.
 
அன்று வீடு வாசல் கிடையாது… குகைகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். யானைகள் போன்ற கொடூர மிருகங்கள் வந்து விடும் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகக் குகைகளில் படுத்துத் தூங்கியவர்கள்.
 
ப்பொழுதும் நாம் காணுகின்றோம் பாம்பாட்டி கையிலே ஒரு வேரை வைத்துக் கொள்கின்றான். படமெடுக்கும் பாம்பு அப்படியே நின்று விடுகின்றது.
 
தேனை எடுத்துப் பழகியவர்கள் கையிலே ஒரு பச்சிலையைத் தடவிக் கொண்டு செல்கின்றார்கள். சும்மா கையை விட்டுத் தாராளமாகத் தேனை எடுக்கின்றார்கள்.
 
ஆனால் நாம் கையை வைத்தால் கொட்டு கொட்டு…” என்று கொட்டி நம்மைக் கொன்றுவிடும்.
 
அந்தப் பச்சிலை மணம் கண்ட பின் தேனீக்கள் ஒடுங்குகின்றது. தேனை லேசாக எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இந்தப் பச்சிலைகளுக்குச் சில கடுமையான விஷங்கள் ஒடுங்குகின்றது.
 
யானை மிரட்டி என்று ஒரு பச்சிலை இருக்கின்றது. அதைக் கையிலே தேய்த்துக் கொண்டு நாம் சென்றால் இந்த மத்தை கண்டால் யானை பிளிறிக் கொண்டு ஓடும்.
 
காடுகளில் புலையர்கள் பச்சிலையின் நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் கையிலே கசக்கிக் கொண்டு யானைக் கூட்டத்திற்குள் செல்வார்கள். இவர்களைக் கண்டாலே அது ஒதுங்கிவிடும் அருகில் வராது.
 
புலி போன்ற மிருகங்களுக்கும் அதற்கென்று பச்சிலைகளை உபயோகித்தார்கள் என்றால் அதுவும் ஒன்றும் செய்வதில்லை விலகிச் சென்று விடுகின்றது.
 
அகஸ்தியனின் தாய் தந்தையர் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் காலங்களில் கர்ப்பமுறுகின்றார்கள்.
1.விஷத்தை முறிக்கும் மங்களை இவர்கள் உடலில் பூசியது குகைகளில் பரப்பியது இவர்கள் சுவாசத்திலே நுகரப்பட்டு
2.கருவிலிருக்கக்கூடிய அகஸ்தியனுக்குள்ளும் இது பதிவாகின்றது.
3.விஷத்தை முறிக்கக் கூடிய சக்தி அந்தக் குழந்தைக்குத் தாய் கருவிலே வளரும் பொழுதே கிடைக்கின்றது.
4.அந்தப் பச்சிலைகளின் சக்தி அதற்குக் கிடைக்கின்றது.
 
அந்தச் சக்திகள் எல்லாம் விளைந்து தான் அகஸ்தியன் குழந்தையாகப் பிறக்கின்றான். அவன் பிறந்த பின் ஈயோ கொசுவோ தேளோ பாம்போ புலியோ நரியோ யானையோ இவன் மத்தைக் கண்டால் அப்படியே பதும்பி விடுகின்றது. ஒன்றும் செய்வதில்லை.
 
ன்று விஞ்ஞான அறிவில் கூட சில நிலைகளைச் செயல்படுத்துகிறார்கள். காட்டு விலங்குகளுக்கு எதிர்மறையான இன்ஜெக்ஷனைத் தன் உடலில் போட்டுக் கொள்கின்றார்கள். போட்டுக் கொண்டு இவர்கள் காட்டிற்குள் தாராளமாகச் செல்கின்றார்கள்.
 
புலியோ யானையோ இவர்கள் அருகில் வருவதில்லை. ஏனென்றால் அதற்கு எதிர்மறையான மருந்தை உடலில் செலுத்திக் கொள்கின்றார்கள்.
 
சிலர் இது போன்ற அதிசயமான செயல்களைச் செய்வதாக டிவியில் காண்பிப்பார்கள். காட்டிற்குள் சென்று விஷப் பாம்புகளைக் கையில் சாதாரணமாக எடுத்துக் கொண்டு காண்பிப்பார்கள்.
1.நமக்குப் பார்த்தால் பயமாக இருக்கும்.
2.ஆனால் அந்த இன்ஜெக்ஷனைப் போட்டுக் கொண்டுதான் அதைக் கையில் எடுக்கின்றார்கள்.
3.இந்த வாசனையைக் கண்டு அது ஒன்றும் செய்வதில்லை.
 
விஞ்ஞான அறிவில் இன்று இதைச் செயல்படுத்துகின்றார்கள்.
 
நல்ல பாம்பு அல்லது அதைக் காட்டிலும் கடுமையான விஷம் கொண்ட பாம்புகளைக் கூடப் பிடித்து அதனுடைய விஷங்களைச் சேமித்து எடுக்கின்றார்கள்.
 
ஒரு விஷத்திற்கு ஒரு விஷம் ஆகாது அதை எடுத்து மற்ற மருந்துகளுடன் சேர்த்து நோயை நீக்கும் மருந்தாகப் பயன்படுத்துகின்றார்.
 
பாம்புகளிலேயே ஒரு பாம்புக்கு இன்னொரு பாம்புக்கும் ஆகாது ஒன்று மற்றொன்று விழுங்கி விடும். ஆனால் இந்த விஷம் அதை ஒன்றும் செய்வதில்லை.
 
ஆனால் நல்ல பாம்பு தன் உடலில் தானே கொத்திக் கொண்டால் விஷம் பாய்ந்து அது மரணம் அடைந்து விடும். உடலின் உணர்வுகள் வேறு உடலில் இருக்கக்கூடிய விஷங்கள் வேறு.
 
பாம்பினுடைய பற்களிலே இருக்கக்கூடிய விஷம் தனித் தன்மையாகி எதை உணவாக உட்கொள்ள வேண்டும் என்று அது விரும்புகிறதோ அந்த உயிரினத்தில் இந்த விஷத்தைப் பாய்ச்சுகின்றது.
1.அதைச் சாப்பிட்ட பின் அதற்குச் சீக்கிரம் ஜீரணம் ஆகின்றது.
2.அந்த விஷமே அதற்குப் பாதுகாப்பாகின்றது.
3.ஆனால் அந்தப் பாம்பு தன் உடலில் தானே கடித்துக் கொண்டால் மரணம் அடைந்து விடும்.
 
உடலுக்கும் விஷத்திற்கும் சம்பந்தமில்லை உற்பத்தியாகும் விஷத்தை உணவாக உட்கொண்டால் ஒன்றும் செய்வதில்லை.
 
பாம்பின் விஷத்தை மனிதர்கள் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட பின் யாரையாவது நகத்தால் கிள்ளினால் போதும். இந்த விஷம் அங்கே பாய்ந்து அவர் இறந்து விடுவார்.
 
பாம்பு விஷத்தைக் குடிக்கும் பொழுது உடலுக்குள் புண் இருக்குமானால் நாமும் இறந்து விடுவோம். ஏனென்றால்
1.ஜீரணிக்கக் கூடிய பாதையில் செல்லும் நிலைகள் வேறு
2.நேரடியாக ரத்தத்தில் கலக்கும் நிலைகள் வேறு…!
 
நல்ல பாம்பு கடித்து விட்டது என்றால் டக் என்று வாயிலே உறிஞ்சுவார்கள். உடலுக்குள் மேலே ஏறாதபடி உறிஞ்சித் துப்பி விடுவார்கள். ஆனால் வாயிலே அவர்களுக்குப் புண் இருந்தால் அவர்கள் மரணமடைந்து விடுவார்கள்.
 
ஆனால் விஷத்தை விழுங்கினாலும் ஒன்றும் செய்யாது. அதை ஜீரணிக்கக் கூடிய நிலையாக வந்து விடும். இயற்கையின் நிலைகள் இப்படி எத்தனையோ வித்தியாசமான நிலைகள் வருகின்றது.
 
1.தை எல்லாம் எதற்குச் சொல்கிறோம் என்றால்
2.கருவிலேயே விஷத்தை முறித்திடும் சக்தியாக வந்தவன் தான் அந்த அகஸ்தியன்.
 
ஒரு தாய் இங்கே வந்திருந்தார். அந்த அம்மாவிற்கு இரண்டு குழந்தைகள். அவர் குடும்பத்திலே யாருக்கும் சர்க்கரை வியாதி கிடையாது. ஆனால் அவரின் சொந்தக்காரருக்குச் சர்க்கரை நோய் இருந்தது,
 
இரண்டாவது குழந்தை அதன் கருவில் இருக்கப்படும் பொழுது அந்தச் சர்க்கரை நோயாளிக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் அந்தத் தாய் செய்கின்றது.
1.பரிதாபப்பட்டு அந்த நோயாளியின் உணர்வுகளை இது நுகர்கின்றது.
2.நுகர்ந்த பின்கருவிலிருக்கும் குழந்தைக்கு அந்த உணர்வுகள் இணைந்து
3.பிறந்த பின்பு பார்த்தால் சர்க்கரை நோய் வந்து விட்டது.
 
மூன்று வயதிலேயே சர்க்கரை நோயால் மிகவும் அவதிப்படுகின்றது. இரண்டு நேரம் இன்சுலின் ஊசி போட வேண்டும். போடவில்லை என்றால் ஒன்றும் ஆவதில்லை. திடீரென்று அந்தக் குழந்தைக்குப் பசி எடுக்கும்.
 
குழந்தை தவறு செய்ததா…? இல்லை. சர்க்கரைச் சத்து உள்ள நோயாளியைத் தாய் உற்றுப் பார்த்து நுகர்ந்தது. கருவிலே பூர்வ புண்ணியமாகக் குழந்தைக்கு அது சேர்கின்றது.
 
தாய்க்கு ஊழ்வினை என்ற பதிவாகிறது. என் பிள்ளைக்கு இப்படி ஆகிவிட்டதே இப்படி ஆகிவிட்டதே என்று அது வேதனைப்படுகின்றது. பின் அதற்கும் அந்தச் சர்க்கரை நோய் வரும்.
 
தாய்க்கு முதலில் வரவில்லை… குழந்தைக்குத் தான் வந்தது. ஆனால் நாளடைவில் பையனுக்கு இப்படி ருக்கிறது என்று தனக்குள் எண்ணி அது வளர்ச்சியாகும் போது தாய்க்கும் அந்த நோய் வருகிறது.
 
சில குடும்பங்களில் இயற்கையில் ப்படி நடக்கும் பொழுது இது பரம்பரை நோய்…” என்று சொல்வார்கள். வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அதே எண்ணினால் எல்லோருக்கும் சாடத் தொடங்கி விடுகிறது.
 
இங்கே யார் தவறு செய்தது…?
 
1.கர்ப்பமாக இருக்கக்கூடிய தாய் எந்தெந்த உணர்வுகளை ஒன்றிலிருந்து தொண்ணூறு நாட்கள் உற்று நோக்கி
2.தனக்குள் கூர்மையாகப் பதிவு செய்கின்றதோ அதற்கொப்பத்தான் குழந்தையினுடைய குணாதிசயங்களும் உடல் நலமும் மற்ற எல்லாமே…!
3.அதைத் தான் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள்.

December 18, 2025

அன்றாட வாழ்க்கையில் “சந்தர்ப்பவசத்தால்…” நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது…?

அன்றாட வாழ்க்கையில் “சந்தர்ப்பவசத்தால்…” நமக்குள் எப்படித் தீமைகள் வருகின்றது…?


குடும்பத்துடன் சந்தோசமாக வாழும் காலத்தில் நாம் ஒரு காரில் பயணம் செய்கின்றோம் என்றால் நமது காருக்குக் குறுக்கே ஒருவர் திடீரென்று வந்து விட்டால் சடாரென்று காரை நிறுத்திக் குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பு கொண்டு அவரைத் திட்டுகின்றோம்.
 
இப்படிக் காரின் குறுக்கே வந்தவரைப் பார்த்து வெறுப்பதுடன் மட்டுமல்லாமல் ஒருவேளை அவர் காரில் அடிபட்டிருந்தால் என்னாவது…? என்ற பயமும் நமக்குள் வருகின்றது.
 
இது சமயம் காரினுடைய டிரைவரும் சரி மற்றும் காருக்குள் இருக்கும் மற்றவர்களும் சரி இதனின் உணர்வுகளை நுகர நேருகின்றது.
 
காரின் குறுக்கே வந்தவருக்கு ஏதேனும் ஆபத்து வரக்கூடாது என்று எண்ணுகின்றனர். ஆனால் பயத்தின் உணர்வுகளை அவர்கள் நுகர்ந்ததனால் பயத்தின் உணர்வுகள் அவர்களிடத்தில் ஓம் நமச்சிவாயாஎன்று உடலாக மாறி விடுகின்றது.
1.நமது மனித உடலில் பயத்தின் உணர்வுகளும் அதிர்ச்சியின் உணர்வுகளும் இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது
2,அதிர்ச்சியான உணர்வுகளைத் தூண்டும் உணர்வுகள் நல்ல அணுக்களில் ஊடுருவி நமது உடலையே நடுங்கச்  செய்கின்றது. 
 
அது சமயம் நாம் எதைச் செய்வது…? என்ற சிந்தனை இல்லாதபடி பிரமை பிடித்தது…” போன்று ஆகி விடுகின்றோம்.
 
ஆனால் ஒருவர் தான் அறியாது திடீரென்று ஒரு காரின் குறுக்கே வருவதன் காரணம் எதுவென்றால்அவருடைய குடும்பத்தில் எத்தனையோ பிரச்னைகள் வியாபாரத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் தனக்குத் திரும்பக் கொடுக்க முடியாத நிலைமை அதனால் சஞ்சலமும் சோர்வும் ஏற்பட்டுக் கடன் கொடுத்தவருக்கு நாம் எப்படி நல்லவராக நடந்து கொள்வது…? என்ற சிந்தனையில் செல்வோரும் உண்டு.
 
அதே சமயத்தில் நம்முடைய வருமானம் இவ்வளவுதான்…! ஆனால் குழந்தைகளுக்குப் பள்ளிக்கு மாத கட்டணம் செலுத்த வேண்டும், அவர்களுக்கு உடை எடுக்க வேண்டும் நாளை என்ன செய்வது? என்ற நிலையில் குடும்பத்தைக் காக்கும் உணர்வுடன் அவருடைய எண்ணங்கள் சென்று அதே சிந்தனையில் செல்லப்படும் பொழுது
1.எதிரே வரும் வாகனத்தையோ எதிரே வரும் மனிதரையோ அல்லது
2.எதிரே இருக்கும் பள்ளத்தையோ பார்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
 
இப்படித் திடீரென்று குறுக்கே வரும் மனிதரைக் கண்டதும் காரின் டிரைவர் ஒலியை எழுப்பிச் சடாரென்று பிரேக் பிடிக்கின்றார். இதனால் காருக்குள் இருக்கும் அனைவருக்கும் அதிர்ச்சி ஆகின்றது.
 
அது சமயம் காரின் குறுக்கே வந்தவரை எண்ணும் பொழுது
1,நமது உயிரான ஈசன் அந்த உணர்ச்சிகளை நமது உடல் முழுவதும் சுழலச் செய்து அதன் வழி நம்மை இயக்குகிறது. 
2.இதனின் உணர்வின் தன்மை நமது நல்ல அணுக்களின் வலுவை இழக்கச் செய்கின்றது.
 
நன்கு வசதியுள்ள வேதனையை அறிந்திராத செல்வந்தர்கள் இத்தகைய அதிர்ச்சியான சம்பவங்களைக் காண நேரிடும் பொழுது இதனின் உணர்வுகள் அவர்களிடம் ஆழப்பதிந்து விட்டபின் என்ன ஆகிறது…?
 
இதனின் உணர்வுகளை மற்றவர்களுடன் உரையாடலில் பகிர்ந்து இதையே எண்ணி இதனின் உணர்வுகளை வளர்ப்பதனால்
1.அவருடைய உடலில் பலவிதமான நோய்களும் உடலில் நடுக்க வாதமும்
2.சிந்திக்கும் தன்மையை இழப்பதும் இனம் புரியாத கோபம் வருவதும்
3.இனம் புரியாத பயம் உருவாவதும் போன்ற நிலைகள் அவரிடத்தில் ஏற்படுகின்றது.
 
இதே போன்று வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிரே ஒரு வாகனம் வந்து கொண்டிருக்கும். அதே சமயத்தில் இன்னொரு பக்கம் இருந்து ஆடோ மாடோ நாயோ ஏதோ ஒன்று குறுக்கே வரும்.
 
இதன் மீது மோதாமலிருக்க எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது மறு பக்கம் திருப்பும் பொழுது வாகனம் இரண்டும் எதிர்பாராது மோதலாகின்றது.
 
ஒரு நாயோ பூனையோ காரின் குறுக்கே வந்துவிட்டால் அதைக் காப்பாற்ற எண்ணிச் சிந்தனையை அதன்   மேல் செலுத்தி எதிரே வரும் வாகனத்தைக் கவனிக்காது திடீரென்று வண்டியைத் திருப்புவதால் எதிரே வந்த வாகனமும் இவருடைய வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகின்றது.
 
இத்தகைய விபத்தில் சந்தர்ப்பவசமாகச் சில காயங்களுடன் உயிர் பிழைத்துக் கொள்ளுகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
 
செல்வந்தராக இருந்து செல்வத்தால் மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் இந்த விபத்தால் பயம் கலந்த வேதனையும் அதிர்ச்சியும் அவருள் சேர்ந்து அவரிடத்தில் மன நோயாக…” மாறிவிடுகின்றது.
 
இதனால் சிந்தனை செய்யும் பொழுது பலவீனமும் தம் குழந்தைகள் தம் சொல்லைக் கேட்க மறுக்கும் பொழுது அதிர்ச்சியும் பலவீனமான நிலையில் பயமும் தன்னிடத்தில் வேலை செய்பவர்கள் தவறு செய்வதால் அதிர்ச்சியும் பயமும் வருகின்றது. 
 
இதன் தொடர் கொண்டு பலவித நோய்களும் வருகின்றது.
 
பண வசதி படைத்திருப்பதினால் மனோத்தத்துவ டாக்டரிடம் செல்கின்றனர். ஆனால் மன நோயினால் உணர்வின் தன்மை உடலில் நோயாகின்றது. பின்னர் இதற்கு வேண்டிய மருத்துவமும் பயிற்சியும் செய்கின்றனர்.
 
1.வாழ்க்கையில் எவ்வளவுதான் செல்வம் படைத்திருந்தாலும்
2.இது போன்று எதிர்பாராத சம்பவங்களால் நுகர்ந்த உணர்வுகள் உடலில் தீமைகளை விளைவிக்கும் நிலையாக விளைந்து விடுகின்றது. 
 
இவ்வாறு சந்தர்ப்பத்தால் நமக்குள் அறியாது சேரும் தீமைகளை எப்படித் துடைப்பது?
 
துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வுகளை நம்முள் இணைத்திடல் வேண்டும். ஏனென்றால் மனிதனாகப் பிறந்து தமது வாழ்க்கையில் நஞ்சினை வென்று தீமை தரும் சந்தர்ப்பங்களை மாற்றியமைத்து ஒளியின் சரீரம் பெற்றவர்கள் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றார்கள்.
 
துருவ நட்சத்திரத்திலிருந்து வரும் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நமக்குள் கவர்ந்து நம்மை நாம் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 
1.தங்கத்தில் திராவகத்தை ஊற்றியதும் தங்கத்தில் கலந்துள்ள செம்பும் பித்தளையும் ஆவியாகி விடுவதைப் போன்று
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நம்முள் இணையும் பொழுது நம்முள் உள்ள தீமையின் உணர்வுகள் ஒடுக்கப்படுகின்றது.
 
 துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் ங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் ங்கள் உடலில் உள்ள ஜீவான்மாக்கள் ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும்என்ற உணர்வுகளை நமது உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
இவ்வாறு நம்மைச் சுத்தப்படுத்திக் கொண்ட பின்… யார் தவறு செய்தாரோ அவர் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் அவர்கள் நன்மை செய்யும் பண்புகள் பெற வேண்டும் என்று இதனின் உணர்வுகளை நமக்குள் சேர்க்கும் பொழுது இவை அனைத்தும் நமக்குள் கலவையாகி நமக்குள் இரத்த நாளங்களில் கலக்கச் செய்கின்றது.
1.இதனின் உணர்வுகளை நமது உடலில் உள்ள அணுக்கள் உணவாக எடுத்து
2.மகிழ்ச்சி பெறும் உணர்வின் அணுக்களாக மாறுகின்றது.
 
ஒருவர் நல்லவராக வேண்டும்என்ற உணர்வை நாம் எண்ணும் பொழுது இதனின் உணர்வுகள் நாம் எண்ணியவரின் உடலில் படர்கின்றது.
 
அதே சமயம் நாம் நுகர்ந்த உயர்ந்த உணர்வின் உணர்ச்சிகள் நமது உடலில் சேரப்படும் பொழுது நமது உடலிலுள்ள நல்ல அணுக்கள்  அதனை அதிகமாகத் தன்னுள் பெறுகின்றன.
 
இது போன்று நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை நமக்குள் வலு சேர்க்கச் சேர்க்க நமக்குள் மனத் தூய்மையும் சிந்தித்துச் செயல்படும் தன்மையும் பிறவியில்லா நிலை பெறச் செய்யும் அருளுணர்வுகளும் நம்முள் உருவாகின்றது.
 
இவ்வுண்மைகள் அனைத்தும் அருள் ஞானிகள் நமக்கு உணர்த்தியவைகள்.
 
இவைகளைத் தம்முள் அறிந்துணர்ந்து நமது வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கும் நிலையாகவும் பிறவியில்லாப் பெரு நிலை பெரும் நிலையாகவும் தாம் அருள் ஞான நெறி துணை கொண்டு தம்முள் பேரருள் உணர்வுகளைச் சேர்த்து வரும் அன்பர்கள் அனைவரும்
1.தம்முள் அறியாது சேர்ந்த தீயவினைகள் சாபவினைகள் பாவவினைகள் பூர்வ ஜென்ம வினைகளை அகற்றி
2.மெய்பொருள் காணும் திறன் பெற்று
3.இவ்வாழ்க்கையில் பிறவியில்லா நிலை பெறும் சக்தி பெற்று
4.பெருவீடு பெருநிலை அடையும் நிலையாகப் பேரின்பப் பெருவாழ்வாக வாழ்ந்து வளர்ந்திட எமது அருளாசிகள்.