ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 2, 2022

அகஸ்தியனுடன் நேரடித் தொடர்பு (NETWORK)

ரேடியோ டி.வி. நாம் பார்க்கிறோம் என்றால் அது எந்தெந்த ஸ்டேசனிலிருந்து ஒலி பரப்பு செய்கின்றனரோ அந்த ஸ்டேசனைத் திருப்பி வைத்தால் இந்தக் காற்றில் கலந்துள்ள அந்த அலைகளைக் குவித்து அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து பார்க்கின்றீர்கள்… பட வழி கூடி…!

இதைப் போன்று
1.பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அகஸ்தியன் தனக்குள் எடுத்துக் கொண்ட உணர்வினை
2.உங்களுக்குள் இப்போது பதிவு செய்கின்றேன்… இந்த ஸ்டேசனை நீங்கள் வலுவாக்கிக் கொள்ளுங்கள்
3.வெகு தூரத்தில் இருப்பதை நீங்கள் நுகர்ந்தறிய வேண்டும் என்ற எண்ணங்களை ஊடுருவிச் செலுத்தினால்
4.அதனின் கவர்ச்சியாகி அகஸ்தியனின் உணர்வலைகளை நுகர்ந்து அந்த உணர்வலைகளை உங்கள் உயிர் தெரியப்படுத்தும்.

தெரிந்து கொள்வதோடு மட்டுமல்லாதபடி அண்டத்தின் இயக்கமும் தனக்குள் இந்தப் பிண்டத்திற்குள் எப்படி இருக்கிறது…? என்பதையும் அறிய முடியும்.

நீங்கள் எண்ணியதை உயிர் ஈசனாக இருந்து… மோதலில் வெப்பமாக விஷ்ணுவாகி… அந்த உணர்வின் தன்மை தன் உடலுக்குள் பரப்பச் செய்யும்.

விஷ்ணு கையில் என்ன இருக்கிறது…? சங்கு சக்கரம்…!

எண்ணிய உணர்வுகள் உயிரிலே பட்டு அந்த ஒலியின் நாதங்களாகி அந்த நாதங்கள் உடலில் சுழற்சியாக இந்த உணர்வின் தன்மை நமக்குள் இயக்கத் தொடங்கும்.
1.காந்தம் இழுத்து உயிருடன் ஒன்றப்படும் போது சுழன்றாலும்
2.இந்த உணர்வின் தன்மை கருவாகி இரத்தநாளங்களில் அணுக்களாக உறைந்து விடுகிறது.

அகஸ்தியன் கண்ட அண்டத்தின் உணர்வுகளை நினைக்க நினைக்க அதைச் சேர்க்கச் சேர்க்க அந்த உணர்வுகள் அணுக்கருக்களாக நமக்குள் வளர்ச்சி அடையும்.

அவன் வழியில் அவன் கண்டுணர்ந்த உணர்வும் நமக்குள் நினைவுக்கு வரும்.
1.அகஸ்தியன் துருவனாகி… துருவத்தின் ஆற்றலை நுகர்ந்தறிந்தது போல் நமக்கும் அந்த நுகரும் ஆற்றல் கிடைத்து
2.அதே உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை அறியாமலே அங்கே அழைத்துச் செல்லும்.

இப்போது இங்கே உபதேச வாயிலாகக் கொடுக்கும் உணர்வுகள் அனைத்தும் நீங்கள் நுகரும் போது உங்கள் உடலில் கருக்களாக உருவாகும். பின் நாளடைவில் அதனுடைய எண்ணங்கள் வரும் போது கரு வலுவாகும்.

கரு வலுவான பின் இரத்தநாளங்களில் கலந்து எந்த உறுப்புகளில் இணைகின்றதோ அந்தக் குணத்தின் அணுவாக உருவாகி அதனின் உணர்ச்சிகளை உந்தச் செய்து அந்த உணர்வை நாம் மணத்தால் நுகரப்படும் போது உள் நின்று தன்னை வளர்க்கும் அந்த மணத்தின் உணர்ச்சி கொண்டு நமக்குள் அந்த எண்ணங்கள் செயல்படுகிறது.

அகஸ்திய மாமகரிஷிகளின் அருள் உணர்வுகள் பெற வேண்டும் என்று எண்ணும் போது அது அணுக்கருவாகி அணுக்களாக உருவாகி விட்டால் அந்த அருள் ஞானி பெற்ற உணர்வுகள் இங்கே படர்ந்திருப்பதை நீங்கள் எளிதில் கவர முடியும்.

கவரும் நிலையில்… அகஸ்தியன் கணவனும் மனைவியுமாக ஒன்றாகச் சேர்த்து ஒளியின் சரீரமாகத் துருவ நட்சத்திரமாக எப்படி ஆனானோ அந்த உணர்வுகளை
1.நம் உயிர் உடலுக்குள் கடவுளாக நின்று தனக்குள் வளர்க்கப்படும் போது நம் எண்ணமே அங்கே கடவுளாகிறது
2.அந்தக் கடவுளே உள் நின்று இயக்கும் அந்த உணர்வின் குணங்களைப் பாய்ச்சுகின்றது.
3.அதுவே அருள் ஞானத்தின் உணர்ச்சிகளைத் தூண்டி அதனின் செயலாக அங்கங்களை இயக்குகிறது.

நாம் அதை நுகர நுகர… அந்த அருள் ஒளியின் உணர்வைத் தனக்குள் சிறுகச் சிறுகக் மாற்றி நம்மை ஒளியின் சுடராக மாற்றுகின்றது. நம் உணர்வுகள் எல்லாம் ஒளியாக மாறுகிறது.