ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2022

பிறவியில்லா நிலை அடைவதற்கு ஓசான் திரையின் முக்கியத்துவம் என்ன…?

அதிகாலை துருவ தியானத்தில் நாம் சக்தி ஏற்றிக் கொண்ட பின்… நாம் எதைத் தியானித்தோமோ அந்த வலுவின் தன்மை கொண்டு நம் குடும்பத்தைச் சேர்ந்த உடலை விட்டுப் பிரிந்து சென்ற உயிரான்மாக்களை எளிதில் விண் செலுத்த முடியும்.

துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்துடன் உயிரான்மாக்களை இணையச் செய்தபின் இந்த உணர்வுகள் பட்டு அவர்கள் உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து விடுகின்றது. “ஏனென்றால் அவர்கள் உடல் பெறும் உணர்வைக் கரைத்தவர்கள்…”

இதைக் கரைத்து வெளி வருவது என்றால் அடுத்து காலை சூரிய உதயம் வருகின்றது. அது வரப்படும் பொழுது
1.இந்த உடலிலிருந்து பிரிந்து சென்ற இந்த உணர்வுகளை
2.அந்த விஷத்தை அது கவர்ந்து சென்று விடுகின்றது… ஏனென்றால் இதிலே பிரித்தது.

உதாரணமாக கருணைக் கிழங்கை நாம் வேக வைக்கின்றோம். விஷத்தின் தன்மை பிரிந்து சென்ற பின் இதே சூரியனின் காந்த சக்தி அதைக் கவர்ந்து வைத்துக் கொள்கின்றது.

ஆனால் இது இயற்கையில் விளைந்த உணர்வாக இருந்தாலும் “வேக வைத்து நாம் நீக்கினாலும்…”
1.எதன் கலவையுடன் இந்த உணர்வினை வெளிப்படுத்துகின்றோமோ
2.இந்த உணர்வின் அலைகள் வெளிப்படுத்தி நாம் அதை உணவாக உட்கொண்டால்
3.அந்த உணர்வின் தன்மை இழுத்து வைத்திருப்பதை நம் உணர்வின் அணுக்கள் ஆக்கப்படும் பொழுது
4.இந்த உணர்வுகள் இதிலிருந்து வெளிப்பட்ட உணர்வை ஈர்த்து நமக்குள் அதை வளர்க்கின்றது.

எந்தப் பொருளானாலும் நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது அந்த உணர்வின் தன்மை கொண்டு நாம் அணுக்களாக்கப்படும் போது அதை நமக்குள் உருவாக்கி
1.அந்த அணுக்களில் எந்த உயர்ந்த குணத்தைப் பதிவு செய்கின்றோமோ
2.அந்தப் பதிவின் நிலைகொண்டு அந்த அணுக்கள் மாற்றமடைகின்றது.

இதை நாம் செயல்படுத்துதல் வேண்டும்.

இதைப் போல நாம் எடுக்கும் ஒவ்வொரு உணர்வுகளையும் சூரியனுடைய காந்த சக்தி இங்கே எடுத்துக் கொள்கின்றது. ஆனால் பூமியின் ஈர்ப்பைக் கடந்து வெளியிலே செலுத்தப்படும் பொழுது அந்தக் காலை சூரிய உதயத்தில் அது வரப்படும் பொழுது ஓசோன் திரை அதைக் கவர்ந்து கொள்கிறது.

காரணம் ஓசோன் திரை என்பதே “விஷத்தின் அடர்த்தியாகி… தன்னுடன் விஷத்தை இணைத்துக் கொள்வது தான்…!”

சூரியனிலிருந்து மற்ற பிரபஞ்சத்திலிருந்து வரக்கூடியது எல்லாம் பூமியின் சுழற்சி வட்டத்தில் ஒரு அடர்த்தியான பின் தான் விஷத்தன்மை உட்புகாது தடுக்கப்படுகின்றது… அதுதான் ஓசோன் திரை.

சூரியனிலிருந்து வரக்கூடியது அல்ட்ரா வைலட்… அதுவும் விஷத்தின் தன்மை கொண்டது தான். அது அடித்துப் பிசைந்து வெளிவரப்படும் பொழுது அதனுடைய ஒளிக்கதிர்கள் வெகு தூரத்தில் இருப்பதையும் நெருப்பின் தன்மையாக மாற்றுகின்றது.

நெருப்பின் தன்மையாக மாறினாலும் விஷத் தன்மைகள் பிரிகின்றது. ஆனாலும் இந்த மோதலில் (வெப்ப) மின் அணு போன்று ஆகும்பொழுது ஈர்த்துத் தனக்குள் இந்த விஷத்தின் தன்மை கொண்டு ஒரு அணுவின் தன்மையை அடைகின்றது.

இயற்கையின் நிலைகளில் இவ்வாறு நிகழ்ந்து வரும் நிலைகளில் பூமிக்கு இத்தகைய விஷத்தின் தன்மை அடர்த்தியாக (ஓசான்) ஆனபின் நம் பூமியில் ஜீவ அணுக்கள் மற்ற உயிரினங்கள் வாழும் தகுதி பெறுகின்றது.
1.நஞ்சினை அது கவர்ந்து கொள்ளும் நிலையும்
2.தனக்குள் அடக்க சக்தியாகக் கொண்டு வரும் நிலையும் வருகின்றது.

இதைப் போன்றுதான் இதனின் உணர்வுகள்… இந்த பிரபஞ்சத்தை விட்டு உயிரான்மா வெளி சென்றபின்
1.உடல் பெறும் உணர்வுகள் அந்த ஓசான் திரையுடன்… அதனுடைய அடர்த்தியில் கலந்து விடுகின்றது.
2.இந்த மனித உடலில் விளைந்தது அங்கே செல்லவில்லை என்றால் (விஷம் வடிகட்டப்படவில்லை என்றால்)
3.மீண்டும் இந்த உயிரின் தன்மை அதனின் உணர்வு தொடர் கொண்ட உடலைத்தான் உருவாக்கும்.

அதாவது… இந்த உடலில் எத்தகைய உணர்வை எடுத்துக் கொண்டதோ அந்த உணர்வுக்கொப்ப உடலைத் தேடிச் சென்று அந்த உடலாகத் தான் மீண்டும் உருவாக்கும். பிறவா நிலை பெறுவதில்லை.