ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 18, 2022

அகஸ்தியனுக்குள் விளைந்த அபூர்வ சக்திகள் உலக மக்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா

அகஸ்தியன் குழந்தையாகப் பிறந்த பின் சிறு குழந்தைப் பருவத்திலேயே மிக மிக சக்தி வாய்ந்த உணர்வுகளைப் பெற்றான்.

அவனுடைய தாய் தந்தையரோ கடவுள் நம்மைக் காக்க வருகின்றான் என்ற எண்ணத்துடன் காலையில் “சூரியனை...” உற்றுப் பார்க்கின்றனர். அவர்கள் சூரியனை உற்றுப் பார்த்து நுகர்ந்த உணர்வுகள் அவர்கள் கருவில் விளைந்த இந்த அகஸ்தியன் என்ற குழந்தையும் அதற்கு ஒன்றும் தெரியவில்லை என்றாலும் சூரியனை அதுவும் உற்றுப் பார்க்கின்றது.

சூரியனை உற்றுப் பார்க்கும் பொழுது அங்கே நடக்கும் நிகழ்ச்சிகளை இந்தக் குழந்தை பார்க்கின்றது. அந்த உணர்வின் அறிவு குழந்தையிடம் விளைகின்றது. அதே சமயத்தில்
1.குழந்தையிடமிருந்து வெளிப்படும் அந்த மூச்சலைகளைச் சூரியனின் காந்த சக்தி எடுத்து வைத்துக் கொள்கின்றது
2.எப்படி எடுக்கிறது… எப்படி விளைகின்றது… இந்த மனித கருவுக்குள் வந்தபின் ஒன்றும் அறியாத நிலையில் இருந்தாலும் இந்த உணர்வலைகள் எப்படி வருகிறது…?
3.அதைச் சூரியன் எப்படி எடுத்து வைத்துக் கொள்கிறது…? என்ற நிலையைத் தெளிவாக்குகிறார் குருநாதர்.

இதை அக்காலத்தில் அவனுடன் வாழ்ந்த மக்களும் அவன் செய்கைகளை உற்றுப் பார்க்கின்றனர் உற்றுப் பார்க்கும் பொழுது இந்த உணர்வுகள் அக்கால மக்களுக்கும் தெரிய வருகின்றது.

இவனின் வளர்ச்சியில் இயற்கையின் உண்மை நிலைகள் அவனுக்குள் விளைந்த பின் அவன் அருகில் வரப்படும் பொழுது இந்த உணர்வின் ஞானத்தை மற்றவரும் பெறுகின்றனர்.

முதலில் அகஸ்தியனின் தாய்
1.விஷத்தை வென்றிடும் பச்சிலைகளை மணங்களையும் மூலிகைகளிண் ஆற்றல்களையும் நுகர்ந்தது.
2.அதனால் விஷத்தின் தன்மைகள் மடிந்தது… கருவிலிருக்கும் குழந்தைக்குள்ளும் அந்தச் சக்திகள் விளைந்தது.
3.அதன் வழிப்படி அகஸ்தியன் பிறந்தபின் அவனைச் சூழ்ந்துள்ளோரும் உற்றுப் பார்க்கப்படும் பொழுது
4.இவனில் விளைந்த தாய் கருவிலே பெற்ற சக்திகளை அவர்களும் நுகர்கின்றனர்… அதன் அறிவாக அவர்களும் விளைகின்றனர்.

இவனைப் போல அந்த உணர்வினை அவர்களும் நுகர்ந்து தாவரங்களின் சக்திகள் எப்படிப்பட்டது…? என்று அறியும் பருவம் அந்தப் பகுதியில் உள்ள மனிதர்களுக்கும் இது தோற்றுவிக்கப்படுகிறது.

இப்படி அகஸ்தியனுக்குள் விளைய வைத்த உணர்வுகள் இன்றும் சூரியனால் கவரப்பட்டு நமக்கு முன் பரவி உள்ளது என்பதைக் குருநாதர் தெளிவாக்கினார்...
1.எனக்குள் (ஞானகுரு) அதைப் பதிவாக்கினார்.
2.அகஸ்தியனின் உணர்வலைகளை நுகரும்படி செய்தார்.
3.காட்டிலே அந்த உணர்வின் தன்மை நுகரப்படும் பொழுது இந்த உண்மைகளை அறிய முடிந்தது

ஏனென்றால் குரு அதை எல்லாம் பெற்றவர். அவர் பெற்ற உணர்வின் தொடர் வரிசையில் வரப்படும் பொழுது
1.எனக்குள் வளர்த்துக் கொள்ளும் ஆற்றலைப் பெற முடிந்தது.
2,அந்த வழிகளிலே தான் உங்களுக்குள்ளும் அந்த அகஸ்தியனின் சக்திகளை இணைக்கின்றேன்.