ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 29, 2022

ஒரு நொடிக்குள் ஏற்படப் போகும் மாற்றம்...

விஞ்ஞான உலகில் வாழும் அஞ்ஞான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு மெய் ஞான வாழ்க்கையை நாம் தொடர்தல் வேண்டும்.

விஞ்ஞான வாழ்க்கையில் வரும் கடுமையான விஷத்தன்மைகளால் சூரியனின் இயக்கச்சக்தி எத்தனையோ மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.

1.வெயிலின் அழுத்தம் கடுமையாக... இன்று எப்படிச் சுட்டெரிக்கும் வெயிலாக வருகின்றதோ
2.சூரியனின் இயக்கம் ஒரு நொடிக்குள் கரண்ட்டை அதிகமாக உற்பத்தி செய்யும் நிலையாக
3.பூமிக்குள் நிலநடுக்கம் ஏற்படுவது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட கதிரியக்கப் பொறிகள் சூரியனை அணுகும் நிலையாகி விட்டது.

ஒரு எலக்ட்ரிக் வயருடன் இன்னொரு எலக்ட்ரிக் வயர் உராய்ந்தால் அதிகமான மின்சாரம் பாய்ந்து பல்புகள் ஃப்யூஸ் ஆவது போல
1.ஒரு நொடிக்குள் சூரியனுக்குள் தாக்குதல் அதிகமாகி அதிகமான காந்தப்புலன்களை அது உமிழ்த்தி
2.அந்த உணர்வுகள் மனித உயிருக்குள் உராயப்பட்டு அதனின் உணர்வின் தொடராக அதிகமான உணர்ச்சிகளைத் தூண்டி
3.நம் உடலில் உள்ள அணுக்களில் கடுமையான மாற்றங்கள் மாற்றப்பட்டு
4.மனிதனே மனிதனல்லாத நிலைகள் செயல்படுத்தும் உணர்ச்சிகளைத் தூண்டி மனிதனைத் தாக்கிடும் நிலையாக வரும்.

ஒரு நொடி மாற்றத்தின் நிகழ்வுகளிலிருந்து உங்களைக் காக்கவும் உங்கள் சார்புடையவரைக் காக்கவும் இந்த உலகைக் காக்கவும் அருள் ஒளியின் உணர்வை தினமும் காலை துருவ தியானத்தில் கணவனும் மனைவியும் எடுக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

1.மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் நமக்கு உறுதுணையாக இருக்க
2.”நாம் அனைவரும் ஒன்று...” என்ற நிலைகளில் துருவ நட்சத்திரத்தின் சக்தி பெற
3.எங்கிருந்தாலும் துருவ தியானத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தியானித்துப் பழக வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் அழுத்தத்தை நாம் அதிகமாகக் கூட்டி அதை அடர்த்தியாக உலகெங்கிலும் பரவச் செய்து உலக மக்களையும் காக்க முடியும்... அவர்களையும் நாம் நல்லவர்களாக்க முடியும்.

உலக மக்களின் தீமையான உணர்வுகள் நமக்குள் இருந்தாலும் பகைமையான உணர்வை வளர்க்கும் தன்மையிலிருந்து நம்மை மீட்டிக் கொள்ள முடியும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் நமக்கு அருளிய அருள் வழிப்படி இந்த வாழ்க்கையில் வரும் பகைமைகளை மாற்றி நஞ்சினை வென்று... நஞ்சினை வென்றிடும் அருள் உணர்வின் தன்மையை நமக்குள் உருவாக்கிடல் வேண்டும்.

நம் ஆறாவது அறிவைக் கார்த்திகேயா என்றாலும்... தீமைகள் புகாது சேனாதிபதியாக அருள் ஒளியின் உணர்வை எடுத்துத் தீமைகளைத் தடுத்து நிறுத்தி அதனுடைய செயலாக்கங்களை மாற்றிடல் வேண்டும்.

ஞானிகள் காட்டிய அருள் வழிப்படி மெய் உணர்வின் வழிப்படி நாம் வாழ்ந்தோமென்றால் அடுத்து நமக்குப் பிறவி இல்லை. அதை அடைவது தான் மனிதனுடைய கடைசி எல்லை.

1.உயிர் தோன்றி உணர்வின் தன்மை மனிதனாக உருவாக்கிய நிலைகளில்
2.உயிருடன் ஒன்றிய உணர்வின் அறிவாக ஒளியாக மாறுதல் நாம் வேண்டும்.

எத்தகைய அழுக்குப் பட்டாலும் உடலை நாம் தூய்மைப்படுத்துகின்றோம். இந்த உடலிலே ஒரு திரவகமே பட்டு அதனால் தசைகள் வெந்தாலும் நாம் மருந்தைப் போட்டு அதை ஆற்றத் தொடங்குகிறோம்.

இதைப் போன்று
1.கடும் வேதனையான உணர்வுகளை நுகர்ந்தாலும் “அருள் மகரிஷிகள் உணர்வுகளை வைத்து அதை நீக்கிடல் வேண்டும்...”
2.இதுவே வாழ்க்கை என்ற நிலையில் அருள் வாழ்க்கை வாழ்வோம்
3.அருள் ஆற்றலை நாம் பெறுவோம்... அருள் ஆசையுடன் வாழ்வோம்.

இதைப் பேராசை என்று கூடச் சொல்லலாம்...!

அருள் வாழ்க்கை வாழ வேண்டும் என்ற இந்த ஆசை என்றுமே நமக்குள் நிலையானதாக இருக்க வேண்டும். அதன் வழி வளர்ச்சி அடைந்தால் “உடல்” என்ற ஆசையிலிருந்து விடுபடுகின்றோம்.

ஆனால் உடலுக்காக வாழும் போது “எண்ணியபடி நடக்கவில்லை...!” என்று நம்முடைய ஆசைகள் தடைபடும் பொழுது இது பேராசையாக மாறுகின்றது.
1.முதலில் ஒரு பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும் என்று நினைப்போம்
2.அது வந்த பின் அடுத்து ஒரு லட்சம் கிடைத்தால் போதும் என்று நினைப்போம்.
3.முதலில் ஒரு சிறிய வீட்டைக் கட்டி இருப்போம்
4.அடுத்து இதைக் காட்டிலும் விசாலமான வீட்டைக் கட்டினால் நலமாக இருக்கும் என்று ஆசையைக் கூட்டிக் கொண்டே இருப்போம்.
5.சிறிது தடைப்பட்டாலோ வேதனைகள் கூடிவிடும்.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

ஆகவே இருளை அகற்றிடும் அருள் சக்தியைப் பெறுவோம்... மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழ்வோம்... மெய் ஞான வாழ்க்கை வாழ்வோம்

உயிருடன் ஒன்றி நாம் வாழ்வோம்... என்றும் பேரின்பம் பெறுவோம்... பெரு வாழ்க்கை வாழ்வோம். பிறவி இல்லா நிலை அடைவோம்... அருள் ஒளியாக என்றுமே நிலை கொள்வோம்.

1.சூரியனே அழிந்தாலும் அகண்ட அண்டத்தில் என்றுமே நாம் என்றும் பதினாறு என்ற நிலைகளில் ஏகாந்தமாக வாழலாம்
2.வைகுண்ட ஏகாதசி வைகுண்டம் என்றால் அகண்ட அண்டத்திலும் ஏகாந்த வாழ்க்கை வாழக்கூடிய தன்மை.

பகைமை உணர்வுகள் நமக்குள் வளராது அனைவரும் நலம் பெற வேண்டும் என்ற வாழ்க்கையை வாழத் தொடங்கினால் இதுவே வைகுண்ட ஏகாதசி...! என்றும் பகைமைகள் புகாத நிலையாக வருகின்றது.

ஆனால் விஷத்தின் தன்மை அதிகரித்து விட்டால் புவியின் ஈர்ப்புக்குள் நம்மைச் சிக்க வைத்துவிடும். இதிலிருந்து நாம் மீண்டு அருள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்வோம்... ஏகாந்த நிலை பெறுவோம்.

பேரின்பம் பெறுவோம்... ஏகாந்த நிலை பெறுவோம்...! என்று பிரார்த்தித்து நிறைவு செய்கின்றேன் (ஞானகுரு).