ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 24, 2022

கணவனும் மனைவியும் ஒன்றிணைந்து ஒளியாக ஆவதற்குத் தான் திருப்பூட்டும் பழக்கத்தை ஏற்படுத்தினர் ஞானிகள்

கணவன் இறந்தாலும் அவர் உடலிலே விளைந்த உணர்வுகள் மனைவியின் உடலிலே நிலைத்திருக்கின்றது. அந்த உணர்வின் துணை கொண்டு
1.என்றும் என்னுடன் அவர் இருக்கின்றார்... “இருக்க வேண்டும்...!” என்பதற்குத்தான் மாங்கல்யத்தை அணிகின்றனர்.
2.ஞானிகள் காட்டிய அருள் வழியில் மாங்கல்யத்தின் தத்துவமே
3.என்றுமே கணவர் தன்னுடன் உறுதுணையாக இருக்கின்றார் என்று நினைவுபடுத்துவதற்குத் தான்.

மாயவரத்தில் ஒரு கிராமத்தில் அவர் ஒரு டாக்டர். அவருடைய தாயாருக்கு வயது 65 அல்லது 70 இருக்கும். கணவர் உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது.

அந்த ஊரின் சமூகத்தின்படி பொட்டை நீக்கவேண்டும்... தாலியைக் கழட்ட வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்டார்கள்.

நான் (ஞானகுரு) அங்கே மாயவரம் சென்றிருக்கும் பொழுது இந்த உண்மைகளை எடுத்துச் சொல்லும் பொழுது அந்த அம்மா பொட்டையும் கலைக்கவில்லை... தாலியையும் கழட்டவில்லை.

1.கணவர் என்னுடன் தான் இருக்கிறார்... என்னுடன் தான் இருக்கிறார்... என்ற நிலையைச் சொல்லி
2.அவருடைய உணர்வு என்னுடன் உள்ளது
3.சாமி சொன்னபடி அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலத்துடன் இணைய வேண்டும் என்றே செயல்படுத்தியது.

உடலை விட்டு பிரிந்து சென்ற அந்த ஆன்மா அவருடைய உணர்வின் துணை கொண்டு... எங்கள் உடலில் இருப்பதை அதனின் வலுக் கொண்டு தான் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்தோம்.

உடல் பெறும் உணவுகள் அங்கே கரைந்துவிட்டது... ஒளி பெறும் சரீரம் அங்கே நிலைத்திருக்கின்றது.

1.இன்றும் சப்தரிஷி மண்டலத்தில் அவருடன் நான் தொடர்பு கொள்கின்றேன்... காண்கின்றேன்.
2.அந்த உணர்வின் ஒளியின் நிலை கொண்டு எனக்குள் அவ்வப்போது அந்த நினைவாற்றல் வரும் பொழுது
3.இந்தப் புவியில் வரும் இருளை நீக்கும் அருளாற்றல் எனக்குக் கிடைக்கின்றது என்று அந்த அம்மா செயல்படுத்தியது.

இது நடந்த நிகழ்ச்சி...!

ஆனால் சாங்கியங்களைச் செய்து மாங்கல்யத்தைப் பறிப்பதும் பெண்களை அவமதிப்பதிலும் தான் இருக்கின்றார்கள். பெண்களை ஒரு கருவியாகத் தான் மதங்கள் பயன்படுத்தி உள்ளதே தவிர
1.சம உரிமை கொண்டு கணவன் மனைவி ஒன்று சேர்ந்து வாழும் நிலை இல்லை
2.காலப்போக்கில் அவை அனைத்துமே மறைந்து போய்விட்டது.

கணவனும் மனைவியும் என்றும் ஒன்றியிருந்து ஒளியின் உணர்வின் நினைவு கொண்டு சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்கப்படும் பொழுது இந்த உடலை விட்டு முதலில் ஒருவர் சென்று அடுத்து ஒருவர் சென்றாலும் “அங்கே தான் செல்ல முடியும்...”

இப்படிப்பட்ட உணர்வுடன் காலை துருவ தியானத்தில் எடுக்கப்படும் போதெல்லாம் அங்கே ஒளியான கணவன்/மனைவி உணர்வுடன் தொடர்பு கொள்கிறது. அதன் மூலம் அந்தக் குடும்பத்திற்கும் உயர்ந்த உணர்வின் ஞானங்களும் கிடைக்கின்றது.

ஆகவே யாராக இருந்தாலும் உடலை விட்டுப் பிரிந்தால் உடல் தான் செல்கிறது. ஆனால் அவருடன் வாழ்ந்த உணர்வுகள் இவரை (உடலில் பதிந்திருப்பது) விட்டு அகலவில்லை இந்த உணர்வை எப்படிப் போக்குவது...?

பொட்டையும் தாலியையும் நீக்க வேண்டும் என்றால் உறவாடிய உணர்வுகள் உடலில் பதிந்துள்ளது... நினைவுகள் வருகின்றது... சொற்கள் வருகிறது. இதை எப்படி நீக்குவது...?

சாங்கியங்களைச் செய்து கணவன் மனைவி ஒன்றிணைந்து ஒளியாகும் பழக்கங்கள் காலத்தால் அந்த உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது.

ஆகவே
1.திருமணம் ஆகிவிட்டால் கணவனும் மனைவியும்
2.நாங்கள் ஒன்றி வாழ்கிறோம் என்ற இந்த உணர்வுடன் தான் வாழ வேண்டும்.