ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 8, 2022

சுவாச நிலை மாறினாலே… அதனின் உந்துதல் உயிர் துடிப்பை மாற்றி உடல் உறுப்புகளின் இயக்கத்தை மாற்றுகிறது

உன்னுள் இருக்கும் எண்ணம் ஒன்றல்ல… இரண்டல்ல… உன் பிறப்பிலிருந்து இன்று வரை உன் ஞாபகத்தில் எல்லாமே எப்படி வருகின்றது.

சிறு குழந்தையில் வளர்ந்த நிலையும் படிப்படியாக உனக்குள் வளர்ந்த நிலைகளும் உனக்கு எப்படிப் புரிகின்றதோ... மூளையில் சுற்றி வைத்திருக்கின்றாயோ... அந்நிலைகளை எல்லாம் ஒரு சிறிதளவு சொல் பார்க்கலாம்.

சுவாச நிலைகள் நாம் இடும் எந்த எண்ண அலைகள் நாம் வெளியிடும் சுவாசத்தைக் கொண்டுதான் சிறு குழந்தையில் நீ செய்த ஒரு வேலை உன் ஞாபகத்துக்கு இப்பொழுது வருகிறது.
1.அவ்வேலை செய்யும் பொழுது நீ விடும் சுவாசம்
2.உன்னைத்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

மிக முக்கியமான ஒரு சம்பவம் நடக்கும் பொழுது அன்று நடந்த நேரம்.. தேதி... இருந்த ஆட்கள்...! எல்லா நினைவுகளும் எப்படி இப்பொழுது நினைவிற்கு வருகிறது...?
1.அன்று நீ விட்ட சுவாச நிலையில் “உள்ள அழுத்தத்தில்”
2.தங்கி விடுகிறது அந்நிலையெல்லாம்.

உன்னுள் இருக்கும் அணுவின் சுழற்சியில் நீ விடும் சுவாசத்தில் உன்னுள்ளேதான் சுற்றிக் கொண்டே இருக்கிறது உன் எண்ண அலைகள்.

நீ நினைக்கிறாய் உன்னைச் சுற்றி இருப்பது (உன்) இப்போது இருக்கும் பிறவி ஒன்று தான் என்று. இல்லையப்பா...! உன் முதல் பிறவியில் நீ வெளியிட்ட எண்ண மூச்சலைகள் எல்லாம் இன்றும் உன்னைச் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது

1.இப்பிறவி மட்டும்தான்...
2.இந்தப் பிறவியில் உடலாக உருவான அணுக்களுடன் கலந்து இருப்பதனால்
3.இப்பிறவியில் விட்ட சுவாசங்கள் அவ்வணுக்களில் கலந்துள்ளன.
4.அதனால் உன் நினைவோட்டத்தில் இப்பிறவியில் நடந்ததைத் தெரிந்து கொள்கிறாய்.

ஆனால் தியான நிலையின் தன்மையில் உன்னைச் சுற்றி உள்ள அணுக்களில் உன் முன் ஜென்மங்களையும் தெரிந்திடலாம். பாட நிலை புரிந்ததா...?

பூமியின் தன்மை எப்படிச் சுற்றிக் கொண்டே வருகின்றதோ அதே போலத்தான் மனிதன் நிலையும். தன்னைத்தானே தன் நினைவு அலைகள் சுற்றிக் கொண்டே வருகிறது.

1.நம் எண்ணத்தில் நாம் விட்ட சுவாச நிலைகள்
2.நம் உயிரினத்தைத் தாக்கும் பொழுது நடந்த நினைவுகள் நமக்குள்ளே வருகின்றன.

நமக்குள் வரும் பொழுது அவ்வொலியின் தன்மையிலே அவ்வுயிரணுவைத் தாக்கும் பொழுது அவ்வுந்தலில் வெளி வருகின்றது அந்நினைவுகள் “சப்த ஒலிகள் அலைகள் நிலையிலே...!” பேசும் பேச்செல்லாம் பல கோடி அணுக்களாகச் சப்த அலைகள் வெளிவருகிறது.

1.அந்த அலையின் ஒலியை
2.எந்த நினைவில் வெளியே கொண்டு வருகின்றோமோ அந்த நிலையில் உயிரணுவைத் தாக்கி
3.சப்த நிலையில் அலைகளின் உதவியால் தொடர்ந்து எண்ணங்கள் நினைவுக்கு வருகின்றன.

நாம் எண்ணும் உயர்ந்த எண்ணம் அவ் இனிமை கலந்த அணுவாக சுவாசத்தின் மூலமாக நம் உயிரினத்திற்குக் கிடைக்கிறது அடைகிறது. அடைந்த பிறகு உயிர்த் துடிப்பு சமநிலைப்படுகிறது.

எந்த நிலையில் தாக்கப் படுகிறதோ அந்நிலையிலேயே நம் உயிரினத்திற்கு அதன் உந்தல் வருகிறது.

1.உயிரின் உண்மை நிலையை உணர்ந்திட்டால்
2.ஒவ்வொரு அணுவின் நிலையையும் உணர்ந்திடுவாய்.

இன்றைய உலகில் அணுவின் தன்மையை ஆராய்ச்சியின் மூலமாகக் கண்டுபிடித்துச் சிவப்பு அணு வெள்ளை அணு அது போல் இன்னும் சில வகைகள் தான் மனிதனுக்கு உள்ளது என்கின்றார்கள்.

சில வகை அணுக்கள் மட்டும் மனிதனுள்ளே இல்லை. பல கோடி அணுக்கள் பல நிலையில் மனிதனுக்குள் சுற்றிக் கொண்டு உள்ளன.
1.மனிதனின் ஆசைக்கு
2.”அவ்வாசை அணுக்களின் உந்தலினால்தான்...!” அடிபணிகின்றான் அம்மனிதன்.
3.மனதில் ஆசை... என்று எண்ணுகின்றான்.
4.மனதில் தான்... கோபம் ஆசை நடைமுறை எல்லாமே இருக்கின்றது என்று எண்ணுகின்றான்.
5.மன நிலையை அடக்கிட முடியவில்லை... என்கின்றான்.

மன நிலை... என்று “தனி நிலை இல்லையப்பா...!” மனிதனின் உள் சுற்றிக் கொண்டே இருக்கும் அணுக்களின் நிலைதான் எல்லாமே. மனித உடலில் உள்ள உறுப்புக்கள் எல்லாமே எண்ணத்தைக் கலந்ததுதான்.

மனிதன் நினைக்கின்றான் காலில் வலி வந்தால் அவ்வெண்ணத்தில் பதிகின்றது என்று. அக்காலிலேயே எண்ணம் உள்ளது என்று தெரிவதில்லை.

அவ்வணுவின் சுற்றல் அக்காலிலும் உள்ளது. மயிர்க்காலிலும் உள்ளது. ஒரு முடியை இழுத்திட்டால் வலிக்கும் வலி அவ்வெண்ணத்திற்குத்தான் தெரியுமா...?

நெஞ்சில் உள்ளது அவ்வெண்ணம் என்று எண்ணுகின்றாய். உடலைச் சுற்றியுள்ள அவ்வணுக்களின் எண்ணத்தை எண்ணுகின்றாய் நெஞ்சில் உள்ளது என்று.

இருதயம் என்பது அணுக்களைச் சுவாசத்தின் காற்றின் மூலமாகச் சுத்தப்படுத்தியும் உடல் பூராவும் பரவச் செய்யவும் ஏற்பட்ட “ஒரு கருவிதான்...!” அந்த இருதயக் கருவியில் மட்டும்தான் எண்ண அலைகள் தங்கி உள்ளன என்பது சரியில்லை.

மனிதனுடைய நினைவலைகள் சுவாசம் எண்ணமெல்லாம் அவனைத் தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கின்றன. அவ்வெண்ண நினைவலைகள் எல்லாம்
1.அச்சுவாச நிலையில் ஒன்றுபோல் வரும்பொழுது மனித நிலையும் ஒரு நிலையிலேயே உள்ளது
2.எண்ணத்தின் உந்தலில் சுவாச நிலையை மாற்றிக் கொள்ளும் பொழுது அவ்வுந்தலின் தன்மை துரிதமாகின்றது.
3.அவ்வொலியின் தன்மை அச்சுவாச நிலையில் தாக்கி உயிர்த் துடிப்பிற்குத் தாக்கி
4.அந்நிலையில் அக்கருவி (இருதயம்) வேலைப் பளு அதிகமாகின்றது.
5.அந்நிலையில் வருவதுதான் உடலில் உள்ள குறைபாடுகள் வியாதிகள் எல்லாம்.
6.மனிதன் விட்ட சுவாச நிலையில் இருந்துதான் அவனுக்கு வரும் வியாதிகள் எல்லாம்.

மனிதன் எண்ணத்தைக் கொண்டுதான் வியாதிகளே அமைகின்றது. வேலைப் பளுவை “வேலைப் பளு...!” என்று எண்ணும்பொழுது அப்பளு உன்னை அழுத்துகிறது.

அந்நிலையில் வரும் சுவாச நிலையினால் வரும் சோர்வெல்லாம் மனிதனை துவளச் செய்கின்றது. அந்நிலையில்
1.இதுவென்ன வேலை...?
2.ஊதி விடலாம்...! என்று எண்ணி விட்டால் அச்சுவாச நிலை மாறுவதில்லை.
3.அச்சுவாச நிலையிலேயே மனிதன் உடலைப் புனிதப்படுத்துகிறது.

மனநிலையில் சோர்வும் சோகையும் வருவது சுவாச நிலையில்தான். புரிந்ததா...?
1.உயிரின் உண்மையை உணர்ந்து கொள்.
2.உன் எண்ணத்தின் தன்மையை எண்ணிக் கொள்.
3.தியானத்தில் சுவாச நிலையை ஒரு நிலைப்படுத்திக் கொள்.
4.உன் நிலைக்கு ஜெப நிலை கைகூடும்...! பாட நிலை புரிந்ததா...?