ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 21, 2021

நம் பிரபஞ்சத்தின் மாற்றம்

 

மனிதர்களாக உருவான பின் வாழ்ந்து... கடைசியில் இறந்த பின் அந்த உடலைப் புதைத்தால் அது கரைந்து விடுகிறது... மற்றொன்றுக்கு இரையாகின்றது. (உடலை மண் தின்கிறது என்று சொல்வோம்).

1.இதைப் போல் தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நம் சூரியன் தன் செயலை இழந்தால் கரைந்துவிடும்.
2.காரணம் நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களும் தனித் தனியாக ஒரு சூரியக் குடும்பமாக மாறும் தருணம் வந்துவிட்டது (உபதேசம் செய்த வருடம் 1992).

கார்த்திகை நட்சத்திரம் நம் சூரியனைப் போல் அதுவும் வளர்ச்சிக்கு வருகிறது. ரேவதி நட்சத்திரமும் அதே போல் சூரியனாக மாறுகிறது. அதே போல் இன்னும் இரண்டு மூன்று நட்சத்திரங்கள் சூரியனாக மாறிக் கொண்டிருக்கின்றது.

இப்படி மாறி விட்டால் நாம் வாழும் இந்தச் சூரியனுக்குக் கிடைக்கக்கூடிய ஆகாரத்தை அது பகிர்ந்து கொள்கிறது. இது முதுமை அடைகிறது.

ஆக இப்படி நம் பிரபஞ்சத்தைச் சேர்ந்த 27 நட்சத்திரங்களில் சரி பகுதி தனித் தனி சூரியக் குடும்பமாக மாறி விட்டால்
1.நம் சூரியனுக்கு இரையில்லை.
2.இந்தச் சுழற்சியின் தன்மை இதனின் (சூரியனின்) ஈர்ப்பு வட்டம் குறையும்.

இந்த ஈர்ப்பு வட்டத்தில் இருக்கும் நம் பூமியோ இதைப் போல் அந்த சுழலுக்குள் சிக்கி இதுவும் சுழற்சியான பின் அதற்குள் போய்க் கரைந்து விடும்... ஆவியாக மாறும்.

மற்ற இந்த 27 நட்சத்திரங்கள் இருக்கிறதல்லவா... இதிலே ஒவ்வொன்றும் சூரியக் குடும்பமாக மாறிப் போகும் உணர்வுகளுக்கு இது உணவாகிவிடும்.

இப்படித் தான் அகண்ட அண்டத்தில் உள்ள இந்த 2000 சூரியக் குடும்பங்களும் ஓர் குடும்பமாக மாறி வளர்ந்து வந்துள்ளது.

அதே சமயத்தில் நம் பிரபஞ்சத்தில் உள்ள 27 நட்சத்திரங்களும் 27 சூரியக் குடும்பமாக மாறிவிட்டால் இது ஒரு வட்டமாகின்றது... பேரண்டம் ஆகிறது.

இதன் வளர்ச்சியில் இதைப் போல் மாறி மாறித் தன் பெருக்கத்தின் நிலைகள் கொண்டு 2000 சூரியக் குடும்பங்களாக வளரும்.

1.நான் (ஞானகுரு) வெறுமனே சொல்லவில்லை... படிக்காதவன் தான் சொல்கிறேன். படித்திருந்தால் தப்பாகத் தான் சொல்லியிருப்பேன்.
2.இந்தப் பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றம் பற்றி அன்றே குருநாதர் எமக்குக் காட்டினார்.

ஆகையினால் குருநாதர் கொடுத்த அந்த மெய் உணர்வின் தன்மைகளை நீங்கள் பெற்று அந்த மகரிஷிகளின் அருள் உணர்வுகளை நுகர்ந்து
1.அகண்ட அண்டத்தையும் அறியலாம்
2.இந்தப் பிண்டத்திற்குள் அதனின் ஆற்றலை எடுத்து வளர்க்கவும் செய்யலாம்.
3.இந்த உடலுக்குப் பின் பிறவி இல்லா நிலையையும் நீங்கள் அடையலாம்.

அதற்குத் தான் இதை எல்லாம் சொல்வது.