ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 13, 2021

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் வட்டத்திலேயே என்றும் வாழும் ஒரு பக்குவத்திற்கு நாம் வர வேண்டும்

 

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் பெற்ற அந்த அனைத்து ஆற்றல்களையும் நீங்கள் பெறவேண்டும் என்பதற்குத்தான் இதை இப்பொழுது இங்கே உங்களுக்கு உபதேசிக்கின்றோம் (ஞானகுரு).

நமது குருநாதர் பல கோடி ஆண்டுகளுக்கு முன் அவருடைய உயிராத்மா விண்ணிலே சப்தரிஷி மண்டலமாக இணைந்தவர் அதன்வழி, நமது பூமியிலே அந்த உணர்வின் வித்துக்கள் பட்டு, மற்ற உயிர்களிலே அது விளைந்து பல வாறு பல உணர்வின் தன்மையை இங்கே பரப்பிய நிலைகள் கொண்டு அந்தந்த உணர்வுகள் பட்டு, அந்தந்த உடல்கள், அந்த உயிராத்மாக்கள் விண்ணிலே அவருடன் ஐக்கியமாகி அவருடன் விண்ணிலே பெரும் மண்டலங்களாக இதைப் போன்று எத்தனையோ ரிஷிகள் சேர்ந்து, அந்த நிலைகள் கொண்டு அவர்கள் சென்றுள்ளார்கள்.

குரு கவர்ந்த அந்த உணர்வின் சக்தி குரு பக்தி கொண்டு எவர் கவருகின்றாரோ அவர் நினைக்கும் பொழுதெல்லாம குரு, தான் நுகர்ந்த அந்த உணர்வின் சக்தி எளிதில் கிடைக்கும். எளிதில் செயல்படுத்த முடியும். தீமை என்ற நிலைகள், தனக்குள் புகாது தடுத்து நிறுத்த முடியும்.

1. இந்த உலகில் தீமைகள் மறைந்து உண்மைகள் வளரவேண்டும் என்ற அருள் வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
2. பொன்னடி பொருளும் இந்தப் பூமியில் சுகமில்லை.. மின்னலைப் போல் மறையும் மனித வாழ்க்கையில் பேரருளையும் பேரொளியையும் சேர்ப்பதே அழியாச் சொத்து என்று உணர்த்திய ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
3. உயிரே கடவுள் என்று உணர்த்தி உயிருடன் ஒன்றி அவனுடன் இணைந்து அவனாக ஆகி… அவனாக நாம் ஆக வேண்டும்.. அந்த மெய் உலகை எல்லோரும் அடைய வேண்டும் என்று உணர்த்தும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
4. மகரிஷிகளின் அருள் சக்தியை சாமானிய மக்களும் பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்கிய ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
5. இல்லற வாழ்க்கையிலிருந்தே அவரவர்கள் வீட்டிற்குள் இருந்தே அண்டசராசரத்தின் ஆற்றல்களைப் பெறச் செய்யும் ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
6. வரும் தடைகளை எல்லாம் நீக்கி நன்மைகள் செய்யக்கூடிய துணிவைக் கொடுத்து உலகையே காத்திட அருள் வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
7. பரிபாஷைகள் மூலம் மெய் ஞானத்தை உணர்த்தும் சக்திகளையும் விண்ணுலக அதிசயங்களை உணர்த்தும் ஈஸ்வராய குருதேவரின் சூட்சம சக்திகளையும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
8. “பிறரை உயர்த்தித் தான் உயரும் நிலையையும்.. பிறரைக் காத்துத் தன்னைக் காக்கும் நிலையையும்… பிறரை வலுவாக்கித் தன்னை வலுவாக்கிக் கொள்ளும் நிலையையும்…” வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
9. அருள் ஞானப் பசியைத் தீர்க்கும் ரிஷி பிண்டமான ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
10. பல இலட்சம் ஆண்டுக்கு முன் ஆதியிலே தோன்றிய அகஸ்தியரிலிருந்து சமீபத்தில் வாழ்ந்து மெய் உணர்வுகளைப் பெற்று ஒளி சரீரம் பெற்ற திருமூலர் ஆதிசங்கரர் போன்ற எண்ணிலடங்காத மெய் ஞானிகள் வரை அவர்கள் வெளிப்படுத்திய ஒளியான உணர்வுகளைக் காற்றிலிருந்து நம்மை நுகரச் செய்யும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!
11. நம்மையும் ஞானிகளாக ஆக்கி மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழ்ந்திட வழி காட்டும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
12. அகண்ட அண்டத்தின் உணர்வின் தன்மையை ஒளியாகக் கலந்து அதை ஆன்மாவாக வைத்திருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற்று எங்கள் ஆன்மாவும் பேரொளியாகிட அருள்வாய் ஈஸ்வரா.
13. சாக்கடை போன்று இருக்கும் இன்றைய நச்சான காற்று மண்டலத்தைப் பிளந்து மெய் உணர்வுகளை நுகரும் ஆற்றலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
14. உடலை விட்டு எந்த நேரம் யார் பிரிந்தாலும் அந்த ஆன்மா சப்தரிஷி மண்டலம் அடைவதே மனிதனுடைய கடைசி எல்லை என்று உணர்த்தும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
15. பிறரைக் காத்திட வேண்டும் என்று இந்தப் பூமியில் செயல்பட்ட மகான்களை எல்லாம் விண் செலுத்திய ஈஸ்வராய குருதேவரின் ஆற்றலை நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
16. பேரானந்தப் பெருநிலையாக விண்ணுலகில் வாழ்ந்து கொண்டு விண் செல்லும் ஆற்றலையும் விண் செலுத்தும் ஆற்றலையும் கொடுத்துக் கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.
17. கோடி…கோடி…! என்ற நிலையில் ஒளியான உணர்வுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருள் சக்தி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா…!
18. சூட்சம இரகசியங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி தன்னைக் காட்டிலும் எல்லோரும் உயர்ந்த நிலை பெறவேண்டும் என்றும் தன்னை எல்லோரும் முந்திச் செல்ல வேண்டும் என்றும் ஆசி கூறும் ஈஸ்வராய குருதேவரின் தெய்வீகப் பண்புகளை நாங்கள் அனைவரும் பெற அருள்வாய் ஈஸ்வரா
19. நாமெல்லாம் கடவுளாக ஆகவேண்டும் என்று விரும்பி அதனைச் செயல்படுத்த இன்றைய கால கட்டத்தில் அருள் வழி காட்டிக் கொண்டிருக்கும் ஈஸ்வராய குருதேவரின் அருளாசி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா.