ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 4, 2019

உலக மக்கள் அனைவரும் “பேரின்பப் பெருவாழ்வு பெறவேண்டும்…” என்பதற்காக வேண்டி இதைச் சொல்கிறேன்


27 நட்சத்திரங்களிலிருந்து வெளிப்படும் உணர்வுகள் ஒவ்வொன்றும் அது கலவையாகும் பொழுது அது எப்படி எல்லாம் மாறுகின்றது…? அதிலே ஒளிக் கதிர்களாக இருப்பது தங்கமாக எப்படி மாறுகிறது..? என்று இதை எல்லாம் வரிசைப்படுத்திக் காட்டினார் குருநாதர்.

27 நட்சத்திரத்தின் சக்திகளை ஒவ்வொரு கோள்களும் எப்படி எடுக்கிறது…? அதற்குள் எனென்ன மாற்றங்கள் ஆகிறது…? என்று ஒவ்வொன்றாகக் காட்டினார்.

செவ்வாய்க் கோளை எடுத்துக் கொண்டால் சிவப்பு நிறமான நிலைகளும்… அதிலிருந்து வருவதும்… எப்படி இருக்கின்றது…?

புதன் கோளை எடுத்துக் கொண்டால் மஞ்சள் நிறமாக எப்படி வருகிறது…? 27 நட்சத்திரங்களின் சக்திகள் இதனுடன் கலவையாகப்படும் பொழுது புதன் கோள் எடுத்து எத்தனையோ வகையான உலோகத் தன்மை கொண்டதாக எப்படி மாறிக் கொண்டிருக்கின்றது..?

அதே சமயத்தில்
1.வியாழன் கோள் எடுக்கும் பொழுது
2.அந்த நட்சத்திரங்களின் கதிர்வீச்சின் தன்மையைத் தனக்குள் அடக்கி
3.ஒரு பொருளுக்குள் ஊடுருவி “இணைக்கும் சக்தியை” எப்படிக் கொடுக்கின்றது…?

இதிலே ஆவித் தன்மையாக ஆன பின் சனிக்கோள் எப்படி அந்த ஆவியான நிலைகளை எடுத்து நீராக எப்படி மாற்றுகின்றது…? இதை எல்லாம் நமது குருநாதர் தெளிவாகக் கொடுக்கின்றார்.

ஒவ்வொரு கோளும் தனக்கென்று உபகோள்களாக வளர்க்கப்பட்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக எடுத்து வளர்கிறது. ஒவ்வொரு கோளுக்கும் எட்டுக் கோள் பத்துக் கோள் பன்னிரெண்டு கோள் என்று உப கோள்கள் உண்டு.

வியாழன் கோளுக்கு 27 உபகோள்கள் உண்டு. அந்த 27 கோள்களும் 27 நட்சத்திரத்தின் சக்திகளைக் கவர்ந்து தனக்குள் எடுத்துப் பல கலவைகளாக மாற்றுகின்றது.

அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான நிலைகளில் வரும்.

வியாழனின் உபகோள்களிலேயே
1.ஒன்று இந்தப் பக்கம் சுற்றும்
2.ஒன்று அப்படியே மாற்றிச் சுற்றி வரும்.
3.விஞ்ஞானிகள் இதைக் கண்டு கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றார்கள்.
4.அது மாறி வரும் பொழுது வேறு ஒரு திசையிலிருந்து வருகிறதா…!
5.இது என்ன…? என்கிற வகையில் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டு தான் உள்ளார்கள்.

அந்த 27 உபகோள்களும் அது சுழன்று கொண்டு தான் இருக்கிறது. 27 நட்சத்திரங்களின் சக்திகளை அது கவர்ந்து இதற்குள் அதை எல்லாம் சேர்த்து ஒரு கலவையாகி இந்த உணர்வின் தன்மை “ஒரு புதுவிதமான கதிரியக்கமாக…” மாற்றுகின்றது.

சனிக்கோள் எப்படி அது உறைபனியாக மாற்றுகின்றதோ இதைப் போல வியாழன் கோள் உறையும் பனியாக மாற்றுகின்றது. இன்றும் அவ்வாறு ஆக்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்
1.எதிர் காலத்தில் இந்த உண்மைகளை நீங்களும் அறிய வேண்டும்.
2.நான் மட்டும் தெரிந்தால் போறாது… எத்தனை காலம் இந்த உடலில் இருக்கப் போகின்றேன்…!

ஆகவே அந்தப் பேருண்மைகளை நீங்கள் எல்லோரும் உணர்ந்து… நீங்களும் தெளிந்து… “இந்த உலகில் வரும் இருளை மாய்க்கக்கூடிய சக்தியாக வரவேண்டும்…!”

அதுவே என்னுடைய (ஞானகுரு) தவம்.