ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 12, 2019

ஐய்யய்யோ… என்று பதறுவதற்குப் பதில் “அம்மா…!” என்று தாயை அழைத்து உங்கள் துன்பங்களிலிருந்து விடுபடுங்கள்

மனிதனாகப் பிறப்பதற்கு முன் நாம் பாம்பாகவோ தேளாகவோ இருந்திருப்போம்…! நம்முடைய அம்மா அதை அவர்கள் பார்த்துத் தங்கள் பாதுகாப்பிற்காக அடித்துக் கொன்றிருப்பார்கள்.
1.நம் உயிர் அவர்கள் உடலுக்குள் சென்றிருக்கும்.
2.போனவுடன் இந்த உணர்வை எடுத்துக் குழந்தையாகப் பிறக்கும் தகுதி பெறுகிறது.

தேளாக இருந்தவர்கள் கருவான பிற்பாடு நம் தாய் என்ன செய்கிறது..? மனிதனாக உருவாக்குகிறது…! என்று குருநாதர் எமக்குத் தெளிவாக்குகின்றார்.

ஆகவே நம்மை மனிதனாக உருவாக்கிய கடவுள் யார்..? நம் அம்மா அப்பாவின் உயிர் தான். கடவுளாக இருந்து நம்மை மனிதனாக உருவாக்கியது அவர்கள் தான்.

அப்பொழுது கடவுள் யார்…?

அம்மா அப்பாவை முதலில் தெய்வமாக வணங்கிப் பழக வேண்டும். யாராவது அப்படி நினைக்கின்றோமோ…? என்றால் இல்லை.

தாயைத் திட்டுபவர்கள் நிறையப் பேர் உண்டு. பெண் பிள்ளையாக இருந்தாலும் கூட ஏதாவது எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் தாயைக் கோபித்துத் திட்டுபவர்கள் உண்டு. ஆண்களிலும் தன் அம்மாவைத் திட்டுபவர்கள் நிறைய உண்டு.

இத்தகைய நிலைகளிலிருந்து விடுபட வேண்டும். பத்து மாதம் அந்தத் தாய் சிசுவைச் (நம்மை) சுமக்கின்றது. அந்த உண்மையை உணர வேண்டும்.

இப்பொழுது நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒரு நாளைக்குத் தலையில் கல்லை வைத்துப் பாருங்கள். சுமக்க முடிகின்றதா…?

ஆனால் நம் தாய் நம்மைப் பத்து மாதம் சுமக்கிறது. சுமக்கும் பொழுது தன் குழந்தை நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும்…! என்றும் இந்த உணர்வுகளை எடுக்கின்றது.

இத்தனை அவஸ்தைப் பட்டு நாம் பிறந்த பிற்பாடு தெய்வமாக இருந்து காப்பாற்றுகிறது. பிறந்த நிலையில் நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் குறிப்பறிந்து நம்மைக் காக்கின்றது.

விவரம் தெரிவதற்கு முன்னாடி ஏதாவது நாம் செய்தோம் என்றால்
1.உதாரணமாக ஒரு நெருப்பையே தொடுகின்றோம் என்றால் அடட.. டேய்.. நெருப்புடா…! என்று பதறி
2.நம்மை உடனே அந்தத் தெய்வமாக இருந்து காக்கின்றது.
3.குருவாக இருந்து நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பது நம் தாய் தான்…!

இன்று நாம் எத்தனை பேர் தாயை மதிக்கின்றோம்..? பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கின்றோம்… இப்படி இருந்தாலும் தாயை மதிப்பவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

திடீரென்று ஒரு எதிர்பார்த்தபடி வரவில்லை என்றால் தாயைக் கோபிக்கக்கூடியவர்கள் தான் இருக்கின்றார்கள்.

தாயை நினைத்து வணங்கி..
1.அந்தத் தாய் அருள் வேண்டும்
2.எனக்கு நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் கொஞ்சப் பேர் தான் இருக்கின்றார்கள்.

இத்தகைய நிலைகளை நாம் வளர்த்துக் கொண்டால் எங்கே போவோம்…? என்று சிந்தித்துப் பாருங்கள்.

எத்தனையோ துன்பப்பட்டு என்னை வளர்த்தாய்…! என்ற நிலையில்
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் என் அன்னை தந்தையர் பெறவேண்டும்
2.எனக்காகப் பட்ட துன்பங்கள் எல்லாம் மறைந்திட வேண்டும்
3.மலரைப் போல் மணமும் அந்த மகிழ்ந்து வாழும் சக்தியும் பெறவேண்டும்
4.என்றென்றும் எனக்கு அந்த அருளாசி கொடுத்தருள வேண்டும் என்று தாய் தந்தையை இப்படி வணங்க வேண்டும்.

இந்த மாதிரி எண்ணினீர்கள் என்றால் நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆழமாக நமக்குள் பதிகின்றது.

எவ்வளவு துயரப்பட்டாலும் சரி…
1.அம்மா…! எனக்கு இந்த நோய் நீங்க வேண்டும்
2.அந்த அருள் பெறவேண்டும் என்று எண்ணுங்கள்.

தாய் இதே மாதிரி “என் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும்…!” என்று தான் எண்ணுகிறது.
1.இந்த உணர்வை நீங்கள் நுகர்ந்தீர்கள் என்றால்
2.உடனடியாக அந்தப் பலனைப் பார்க்கலாம்.

சந்தர்ப்பத்தில் ஒரு காட்டுக்குள்ளேயே நீங்கள் போகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு புலியோ யானையோ துரத்தி வருகிறது என்றாலும் “அம்மா…!” என்று நீங்கள் சொன்னால் போதும்.

அந்தப் புலியானாலும் யானையானாலும் உங்களைத் தாக்காது.

என்னைக் (ஞானகுரு) காட்டுக்குள் போகச் சொல்லி தாய்க்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது என்று பரீட்சித்துப் பார்த்தவர் குருநாதர் (ஈஸ்வரபட்டர்).

நான் போய்க் கொண்டேயிருப்பேன். பாதையில் திடீரென்று புலி வந்தது என்றால் ஐய்யய்யோ..! என்று சப்தம் போடுவேன். அப்பொழுது அந்த இடத்தில் உடனடியாக உணர்த்துவார் குருநாதர்.

டேய்… உன் அம்மா எங்கேயடா.. போய்விட்டது…? என்பார். உன் அம்மாவை நினைடா…! என்பார்.

அவர் சொன்னதும் “அம்மா…!” என்று சப்தம் போட்டவுடனே துரத்திக் கொண்டு வருகிற புலி அப்படியே நிற்கிறது. இப்படி… எல்லாவற்றையும் அனுபவத்தில் தான் குருநாதர் கொடுத்தார்.

நீங்களும் உங்கள் தாயை நினைத்து அவர்களின் அருளைப் பெறுங்கள்..
1.மகிழ்ந்து வாழும் அருள் சக்தியும்
2.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும் தகுதியையும் நீங்கள் பெறுவீர்கள்…!