ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 9, 2016

தென்னாட்டில் தோன்றிய குழந்தைதான் எந்நாட்டையும் காக்கப்போகின்றது - நாஸ்டர்டாமஸ்

குருநாதர் காட்டிய அருள் வழியில் இந்த மெய் உணர்வைப் பெறும் நிலையாக அடுத்து வரும் சந்ததிகளை நாம் உருவாக்க வேண்டும்.

இந்த உலகைக் காக்கும் நிலைகள் தென்னாட்டிலே தான் இது வளர முடியும். தென்னாட்டிலே தோன்றிய உணர்வுகள் இங்கே படர்கின்றது. அந்த உணர்வின் அலைகள் தான் இங்கே பேசுகின்றது. பேசுவது நான் அல்ல.

உங்கள் வீட்டில் வளரும் சிசுக்களுக்கு அருள் மகரிஷிகளின் பேராற்றல்களைப் பெறச் செய்யுங்கள். இந்த உலகில் இனி வரும் தீமைகளை அகற்ற முற்படுங்கள்.

கருவில் வளரும் குழந்தைக்கு அருள் ஞானத்தைப் போதியுங்கள். இதை நீங்கள் செயல்படுத்துங்கள் என்று வேண்டிக் கொள்கின்றேன்.

இந்தத் தென்னாட்டிலிருந்து தான் உலகைக் காக்கும் சக்திகள் உருப் பெறும் என்று நாஸ்டர்டாமஸ் “மூன்றாவது நிலைகளில்…,” வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தத் தென்னாட்டிலே தோன்றிய அந்தக் குழந்தைதான் எந்நாட்டையும் காத்திடும் நிலையாக வரும்.

உலகில் போர் முறை மறையும் தன்மை வரும் பொழுது உலகுக்கு மெய்ஞானத்தைப் போதித்து மக்களை இரட்சிக்கும் நிலைகளாக இந்தத் தென்னாட்டிலிருந்து தான் தோன்றும்.

தென்னாட்டிலே தோன்றிய நிலைகள் வரும் பொழுதுதான் மெய் உலகமாக வரும். மற்ற நாட்டிலே உள்ளவர்கள் அந்த யூதர்களால் மந்திர ஒலிகளாக மாற்றப்பட்டார்கள்.

ஏனென்றால், யூதர்கள் மந்திர ஒலியால் கவரப்பட்ட நிலைகள் தான் இந்த மனித உடலுக்குள் எடுக்கும் உணர்வுகள் “மந்திரங்களாக…, ஒலிகளாக…,” இன்று உலகெங்கிலும் படர்ந்துள்ளது.

இன்று சீனாவிலும் மற்ற எல்லா நாடுகளுக்கும் இஸ்ரேல் என்ற நாட்டிலிருந்து தான் அது தோன்றியது.

ஆசியக் கண்டமாக இருக்கும் நம்முடைய எல்லைகள் அன்று பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நீர் நிலைகள் இல்லாத நிலையில் ஒருக்கிணைந்த தரை மார்க்கமாக இருந்தது.

அக்காலத்திலே தோன்றிய அகஸ்தியனின் உணர்வின் அலைகள் அவன் கண்டுணர்ந்த பேரண்டத்தின் மெய் உணர்வுகள் இந்த ஆசியக் கண்டத்திலே பரவப்படும் பொழுது அங்கேயும் பரவியது,

ஆனால், அது மந்திர ஒலியாக மாறியதும் மீண்டும் அதனின் நிலைகள் இங்கே திரும்பியது.

உதாரணமாக இன்று இங்கே உற்பத்தி செய்யும் நிலைகள் மேலை நாடுகளுக்குச் சென்று அங்கே புதுப் பொருளாக மாறி இங்கே மீண்டும் வருகின்றது.

அதே போல் இங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான மெய் உணர்வின் அலைகள் மந்திர ஒலியாக மாறி அதனால் உலகின் நிலையே மாற்றமாகிவிட்டது.

அதனின் வளர்ச்சியில் மனிதனுக்கு மனிதன் கொன்று புசிக்கும் உணர்வாகவே இன்று மாறிவிட்டது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும்.

ஆகவே, இந்த உபதேசத்தைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் நம் குருநாதர் காட்டிய அருள் வழியில் உலகைக் காக்கும் மெய்ஞானிகளை நாம் உருவாக்குவோம். உலகைக் காத்திடும் ஞானக் குழந்தைகளை வளரச் செய்வோம்.

உலகில் படர்ந்துள்ள தீமைகளை அகற்றிடும் அரும்தவப்புதல்வர்களாக நாம் வளர்ப்போம் என்ற இந்த உணர்வு கொண்டு மகரிஷிகளின் உணர்வை கருவில் வளரும் சிசுக்களில் மகரிஷிகளாகச் சிருஷ்டிப்போம்.

அது வெளிப்படுத்தும் உணர்வின் அலைகள், அந்த ஞானக் குழந்தைகளின் பேச்சால் மூச்சால் நம்முடைய துன்பங்களைப் போக்கும் அந்தச் சக்திகளைப் பெறுவோம்.